என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • டீசரின் படி புதிய Z9s மாடல் ஐகூ 12 போன்ற கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.
    • வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    கடந்த வாரம் Z9 லைட் அறிமுகத்தை தொடர்ந்து புதிய ஐகூ Z9s வெளியீட்டை ஐகூ உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஐகூ இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நிபுன் மர்யா வெளியிட்டுள்ளார்.

    இதனை சீரிஸ் என்று ஐகூ குறிப்பிட்டுள்ளதை தொடர்ந்து, Z9s வரிசையில் Z9s Pro மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. டீசரின் படி புதிய Z9s மாடல் ஐகூ 12 போன்ற கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

    இதில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் மற்றும் ரிங் எல்இடி பிளாஷ் ஆகியவை இடம்பெற்றுள்ளது. ஐகூ Z9 ப்ரோ சமீபத்தில் BIS சான்றிதழைப் பெற்றுள்ளதால், இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் Z9 சீரிசில் விரைவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும் 12GB + 256GB மெமரி ஆப்ஷன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 50MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது.

    வரும் வாரங்களில் புதிய ஐகூ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உட்பட கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படும்.

    • இரட்டை மாத்திரை வடிவ கேமரா கட்அவுட்களுடன் கூடிய அசத்தலான வடிவமைப்பை காட்டுகிறது.
    • பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மாடல் கூகுள் பிக்சல் 8 ப்ரோவின் வடிவமைப்பை ஒத்திருக்கிறது.

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மற்றும் பிக்சல் 9 ப்ரோவின் வெளியீட்டு விவரங்களை கூகுள் ஒருவழியாக வெளியிட்டது. கூகுள் நிறுவனம் பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன்களை ஆகஸ்ட் 13-ந் தேதி வெளியிட உள்ளது.

    கூகுள் எக்ஸ் தளத்தில், வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டது. டீஸர்களின் படி புது சாதனங்கள் ஜெமினி ஏஐ வசதி கொண்டிருக்கும் என்பதை காட்டுகிறது.

    அதிகாரப்பூர்வ டீசர்களின் படி இரட்டை மாத்திரை வடிவ கேமரா கட்அவுட்களுடன் கூடிய அசத்தலான வடிவமைப்பை காட்டுகிறது. கேமராக்கள் பின்புற பேனலின் மேல்-இடது மூலையில் செவ்வக வடிவம் கொண்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிகழ்வானது இந்திய நேரப்படி ஆகஸ்ட் 13 ஆம் தேதி இரவு 10.30-க்கு நடைபெற உள்ளது. இந்த தகவலைத் தவிர, வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பற்றிய வேறு எந்த தகவலையும் கூகுள் வெளியிடவில்லை. இருப்பினும், ஆன்லைனில் புது சாதனங்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

    டீசரில் ஸ்மார்ட்போனின் உள்பக்க திரையில் கேமராவை வெளிப்படுத்தவில்லை. என்றாலும், திரையின் இடது பக்கத்தில் பஞ்ச்-ஹோல் ரக செல்பி கேமராவைக் கொண்டிருக்கும் என்று கூறப்பிடுகிறது.

    பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மாடல் அப்சிடியன் (Obsidian) மற்றும் போர்சிலைன் (Porcelain) கலர்களில் கிடைக்கிறது. இதன் எதிர்பார்க்கப்படும் விலை 256 GB மாடலுக்கு EUR1,899 (தோராயமாக ரூ. 1,68,900) மற்றும் 512 GB மாடலுக்கு EUR 2,029 (தோராயமாக ரூ. 1,80,500) ஆகும்.

    பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மாடல் கூகுள் பிக்சல் 8 ப்ரோவின் வடிவமைப்பை ஒத்திருக்கிறது. இதன் பேனலில் டிரிபிள் ரியர் கேமராக்கள், ஃபிளாஷ் மற்றும் லேசர் ஆட்டோஃபோகஸ் கொண்ட சிறிய கேமரா உள்ளது.

    வரவிருக்கும் பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ XL ஆகியவை ஒரே மாதிரியான மூன்று 50MP பின்புற கேமரா அமைப்பை பகிர்ந்து கொள்ளும். ஆனால் திரை அளவு மற்றும் பேட்டரி திறன் ஆகியவற்றில் வேறுபடும். இது பயனர்களுக்கு நிலையான மற்றும் பெரிய மாடலுக்கு இடையே தேர்வை வழங்குகிறது.

    பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் அப்சிடியன் (Obsidian), போர்சிலைன் (Porcelain), ஹசல் (Hazel) சேஜ் கிரீன், (sage green) மற்றும் பின்ர் (Pink) போன்ற கலர்களில் கிடைக்கிறது.

    இதன் எதிர்பார்க்கப்படும் விலைகள் 128 ஜிபிக்கு EUR1,099 (தோராயமாக ரூ. 97,500), 256 ஜிபிக்கு EUR1,199 (தோராயமாக ரூ. 1,06,400), மற்றும் 256 ஜிபிக்கு EUR1,329 (தோராயமாக ரூ. 1,18,000). இதுதொடர்பான விரிவான தகவல்கள் வெளியீட்டின்போது, கூகுள் பிக்சல் வாட்ச் 3 ஐ வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நத்திங் போன் 2a போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும்.
    • இந்த மாடலிலும் க்ளிம்ப் இன்டர்பேஸ் வழங்கப்படும்.

    நத்திங் நிறுவனம் விரைவில் தனது புது ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. நத்திங் போன் 2a பிளஸ் என அழைக்கப்படும் புது மாடல் வருகிற 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புது ஸ்மார்ட்போன் வெளியீடு தொடர்பான டீசர்களை நத்திங் நிறுவனம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் டீசர்களில் புதிய நத்திங் போன் 2a பிளஸ் மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் நத்திங் போன் 2a போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    தோற்றத்தில் ஒரே மாதிரி காட்சியளிக்கும் நிலையில், நத்திங் போன் 2a பிளஸ் மாடலில் டிமென்சிட்டி 8300 அல்லது ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் என இரண்டில் ஒன்று வழங்கப்படும் என்று தெரிகிறது. ஒரே டிசைன் தவிர நத்திங் போன் 2a பிளஸ் அளவில் சற்று பெரியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாடலிலும் க்ளிம்ப் இன்டர்பேஸ் வழங்கப்பட்டு இருக்கும்.

    புதிய பிளஸ் ரக மாடல் நத்திங் போன் 2 மற்றும் மிட் ரேஞ்ச் போன் 2a மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

    • அமேசன் நிறுவனம் இன்றும் முதல் நாளை வரை மிகப்பெரிய அளவிலான தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.
    • அமேசான் 11,101 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது.

    அமேசான் நிறுவனம் இன்றும் முதல் நாளை வரை மிகப்பெரிய அளவிலான தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. அமேசான் "பிரைம் டே" என பெயரிட்டு தள்ளுபடியை அறிவித்துள்ளது. அமேசான் சந்தாதாரரர்கள் இந்த சலுகையை பெற முடியும்.

    ஐ-போன் 13 அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் 59,900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அமேசான் 11,101 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. இதனால் 48799 ரூபாய்க்கு அமேசானில் வாங்க முடியும். எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ கார்டுகள் வைத்திருப்பவர்கள் மேலும் 750 ரூபாய் வரை சலுகை பெறலாம். 128GB ஸ்டோரேஜ், ஏ15 பயோனிக் சிப் பிராசரர், 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிளே வசதி கொண்டதாகும்.

    • கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் பாதிப்பு.
    • பாதிப்புக்கான காரணம் குறித்து ஆய்வு.

    விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்கள் புளூ ஸ்கிரீன் (Blue Screen of Death) பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த பாதிப்பு விண்டோஸ் இயங்குதளத்தின் கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் ஏற்பட்டுள்ளது முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.

    மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் உறுதிப்படுத்தி இருக்கிறது. பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது. மேலும், இந்த பாதிப்பு ஏற்பட என்ன காரணம் என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    பாதிப்பை பயனர்கள் தாங்களாகவே சரி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளில் கிரவுட்ஸ்டிரைக் ஈடுபட்டுள்ளது. பாதிப்பு சரி செய்வது தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • டேட்டா பூஸ்டர் பேக் சலுகைகள் அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா வழங்குகின்றன.
    • அதிக டேட்டா வழங்கும் சலுகைகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    ஏர்டெல் நிறுவனம் புதிதாக டேட்டா பூஸ்டர் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை பயனர்களுக்கு அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா வழங்குகிறது.

    ஏற்கனவே 5ஜி டேட்டா சலுகையை பெறாதவர்கள் கூட அன்லிமிட்டெட் 5ஜி கனெக்டிவிட்டி பெற செய்யும் வகையில், இந்த பூஸ்டர் பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. புது டேட்டா பூஸ்டர் பேக் சலுகைகள் 5ஜி மட்டுமின்றி கூடுதலாக 4ஜி டேட்டா வழங்குகின்றன.

    சமீபத்தில் ஏர்டெல் நிறுவன சலுகைகளின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், புதிய டேட்டா பூஸ்டர் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விலை உயர்வு காரணமாக ஏர்டெல் அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா தினமும் 2 ஜிபி மற்றும் அதற்கும் அதிக டேட்டா வழங்கும் சலுகைகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    புதிய டேட்டா பேக் மூலம், தினமும் 1 ஜிபி அல்லது 1.5 ஜிபி டேட்டா வழங்கும் சலுகைகளில் ரீசார்ஜ் செய்துள்ளவர்கள் ரூ. 51 விலையில் துவங்கும் டேட்டா பூஸ்டர் சலுகைகளை ரீசார்ஜ் செய்து அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா பெறலாம். புதிய சலுகைகளின் விலை ரூ. 51, ரூ. 101 மற்றும் ரூ. 151 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

    இவற்றில் கூடுதலாக 3ஜிபி, 6ஜிபி மற்றும் 9ஜிபி வரை 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த பூஸ்டர் பேக் சலுகைகளின் வேலிடிட்டி, பயனர்கள் ஏற்கனவே ரீசார்ஜ் செய்துள்ள சலுகைகள் முடியும் வரை பொருந்தும். 

    • பிக்சல் 8 ஸ்மார்ட்போனுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • ப்ளிப்கார்ட் தளத்தில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டதை விட தற்போது ரூ. 14 ஆயிரம் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    விலை குறைப்பு மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் வங்கி சார்ந்த சலுகைகள் பயன்படுத்தும் போது கூடுதல் பலன்கள் பெற முடியும். தற்போது பிக்சல் 8 ஸ்மார்ட்போனுக்கு மட்டுமே இத்தகைய சலுகைகள் வழங்கப்படுகின்றன.

     


    சலுகை விவரங்கள்:

    இந்தியாவில் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் ரூ. 75 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ரூ. 14 ஆயிரம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பயனர்கள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனை ரூ. 61 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

    பிக்சல் 8 ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 4 ஆயிரம் வரை கூடுதல் பலன் பெற முடியும். இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனின் விலை ரூ. 57 ஆயிரத்து 999 என மாறிவிடும்.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக்சல் 8 ஸ்மார்ட்போனிற்கு எவ்வளவு காலம் வரை இந்த விலை குறைப்பு வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    • 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
    • டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் இந்த ராக்கெட் சோதனை தலமான ஸ்டார்பேஸ் Starbase பகுதிக்கு மாற்றம் செய்யப்படும்

    அமெரிக்காவைச் சேர்ந்த  உலக பணக்காரரும் முன்னணி தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்] ஆகியவற்றின் தலைமையிடங்களை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.

    விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சமீபத்தில் அவர் சொந்தமாக்கிக்கொண்ட சமூக வலைதளமான எக்ஸ் [ட்விட்டர்] ஆகியவை தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எக்ஸ் -இல் அவர் அளித்த பேட்டியில் தனது இந்த 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை மற்றொரு அமெரிக்க மாகாணமான டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

     

     

    கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு சட்டத்தின்படி, பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களின் பாலினம் மற்றும் பெயரை பள்ளித் தரவுகளில் மாற்றினால் அதை ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தெரிவிக்கக்கூடாது. இது LGBTQ+ மாணவர்களுக்கான தனியுரிமையாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்தாலும், இதற்கு முன்பு சமீப காலங்களாக கொண்டுவரப்பட்ட வெவ்வேறு சட்டங்களாலும் குடும்பங்களும் நிறுவனங்களும்  பெறும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதுவதால் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாக மஸ்க் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    அதன்படி தற்போது கலிபோர்னியாவின் ஹாத்ரோன் [HAWTHRONE] பகுதியில் செயல்பட்டு வரும் இரு நிறுவனங்களும் டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் இந்த ராக்கெட் சோதனை  தலமான ஸ்டார்பேஸ் Starbase பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. அமெரிக்காவில் மாகாணங்கள் சுயாட்சி பெற்று இயங்கிவருவது  குறிப்பிடத்தக்கது.

     

    • ஆறு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நார்டு 4 என அழைக்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு 4 மாடலில் 6.74 இன்ச் curved AMOLED ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் மற்றும் ப்ரோ XDR வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 14 உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 4 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களும், ஆறு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இடதுபுறம் அலெர்ட் ஸ்லைடர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை 28 நிமிடங்களில் முழு சார்ஜ் ஏற்றிவிடும்.

    ஒன்பிளஸ் நார்டு 4 ஸ்மார்ட்போன் மெர்குரியல் சில்வர், அப்சிடியன் மிட்நைட் மற்றும் ஓயாசிஸ் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • தனிநபர் ஒருவர் 9 சிம் கார்டு வரை வைத்திருக்க அனுமதி உண்டு.
    • 10 சிம் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒருவர் பல சிம் கார்டுகளை வைத்திருப்பது இயல்பாகி விட்டது. ஆனால் அதிக சிம் கார்டுகளை ஒருவர் வைத்திருப்பது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கு தெரியவில்லை.

    2023 ஆம் ஆண்டின் இந்தியத் தொலைத்தொடர்பு சட்டம் ஒரு நபர் எத்தனை சிம் கார்டுகளை வைத்திருக்கலாம் என்ற விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. அதன்படி தனிநபர் ஒருவர் 9 சிம் கார்டு வரை வைத்திருக்க அனுமதி உண்டு. ஆனால் அதற்கு மேல் சிம் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் அல்லது சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

    அதே சமயம் ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஒரு நபர் 6 சிம் வைத்திருக்க மட்டுமே அனுமதி உண்டு.

    உங்கள் பெயரில் உள்ள சிம் எண்களைத் தெரிந்துகொள்ள TAFCOP இணையதளத்தில் மொபைல் எண்ணை பதிவுசெய்து, உங்களது பெயரில் உள்ள எண்களை சரிபார்க்க முடியும். மேலும், அதில் உள்ள எண்களை நீக்கவும், தொடரவும் முடியும்.

    • போக்கோ C61 ஸ்மார்ட்போன் 10 வாட் சார்சிங் வசதி கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    போக்கோ நிறுவனத்தின் C61 ஏர்டெல் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் வெளியிட போக்கோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன.

    புதிய போக்கோ C61 மாடலில் 6.71 இன்ச் HD+ டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி வரையிலான மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த MIUI ஓ.எஸ். கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா மற்றும் 5MP முன்புற கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் போக்கோ C61 ஸ்மார்ட்போன் 10 வாட் சார்சிங் வசதி கொண்டுள்ளது.

     


    போக்கோ மற்றும் ஏர்டெல் கூட்டணி காரணமாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் 50 ஜிபி வரை இலவச டேட்டா பெற முடியும். இத்துடன் ரூ. 750 வரை கூடுதல் தள்ளுபடி பெறலாம். மேலும் ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கார்டு பயன்படுத்தும் போது 5 சதவீதம் தள்ளுபடி பெற முடியும். இந்த ஸ்மார்ட்போனை வாங்கிய முதல் 18 மாதங்களுக்கு ஏர்டெல் சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும்.

    இந்திய சந்தையில் போக்கோ C61 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என்று நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், பயனர்கள் இந்த ஸ்மார்ட்போன் வாங்க ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். அதன்படி இதன் விலை ரூ. 5 ஆயிரத்து 999 என மாறிவிடும்.

    போக்கோ C61 ரெகுலர் வெர்ஷன் விலை ரூ. 6 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் டைமண்ட் டஸ்ட் பிளாக், எதிரியல் புளூ மற்றும் மிஸ்டிக்கல் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஏர்டெல் எடிஷன் விற்பனை நாளை (ஜூலை 17) மதியம் துவங்குகிறது.

    • ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் போன்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • இதனைத் தொடர்ந்து இரண்டு வகையிலான போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் ரியல்மி நிறுவனம் ரியல்மி 13 ப்ரோ, ரியல்மி 13 ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டு செல்போன்களை வருகிற 30-ந்தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

    தற்போது விற்பனையில் இருந்து வரும் ரியல்மி 12 ப்ரோ சீரிஸை தொடர்ந்து இந்த இரண்டு வகை செல்போன்களை வெளியிட இருக்கிறது.

    ரியல்மி 12 ப்ரோ பிளஸ் போன் பின்பக்கம் இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும். Optical Image Stabilization உடன் 50MP சோனி லைஒய்டி 701 சென்சார் மற்றும் 3x optical zoom உடன் 50MP சோனி எல்ஒய்டி 600 சென்சார் அடங்கிய கேமரவாக இருக்கும். இந்த கேமரா மூலம் எடுக்கப்படும் போட்டோக்கள் ஹை-குவாலியாட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இரண்டு வெகை செல்போன்களில் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும். ஏஐ வசதியுடன படங்களை மாற்றியமைக்கும் வசதி உள்ளது.

    ரியல்மி ப்ரோ பிளஸ் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் பிராசசரை கொண்டதாக இருக்கும். 8GB RAM/128GB storage, 8GB RAM/256GB storage, 12GB RAM/256GB storage, 12GB RAM/512GB storage ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கும். ரியல்மி 13 ப்ரோ ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 பிராசசர் கொண்டதாகும்.

    ×