search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருப்ப மனு"

    • 85 வயது கடந்த முதியவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
    • பணிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் 85 வயது முதல் 99 வயது வரையிலான முதியவர்கள் 23 ஆயிரத்து 100 பேரும், 100 வயதை கடந்தவர்கள் 795 பேரும் உள்ளனர்.

    இதில் 85 வயது கடந்த முதியவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    அதனடிப்படையில் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் வீடுகளிலேயே இருந்தவாறு வாக்களிக்கும் வகையிலான 12டி விண்ணப்பம் வாக்குச்சாவடி அலுவலர்களால் முதியவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மேலப் பாளையம் சிவராஜபுரம் பகுதியில் வசிக்கும் 90 வயது மூதாட்டியான வள்ளியம்மாளிடம் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அனந்த ராமகிருஷ்ணன், வீட்டில் இருந்து வாக்களிக்கும் வகையிலான விண்ணப்பத்தை வழங்கி உள்ளார்.

    அப்போது ஓட்டு கேட்டு வேட்பாளர்கள் தான் யாரோ வந்திருக்கிறார்கள் என்று நினைத்த மூதாட்டி வள்ளியம்மாள், அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு என் ஓட்டு உனக்குதான் பா, உனக்குத்தான் என் ஓட்டு என்று கூறியுள்ளார். உடனே கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலகலவென சிரித்து விட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதல் நாளான நேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து விருப்ப மனுக்களை வணங்கி விட்டு கட்சியினரிடம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
    • அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல் நாளான நேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து விருப்ப மனுக்களை வணங்கி விட்டு கட்சியினரிடம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். விருப்ப மனுவை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் விஜய பிரபாகரன் வழங்கினார்.

    முன்னதாக, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.
    • போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 21.03.2024 வியாழக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும்

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பாராளுமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை 19.03.2024 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11.00 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 20.03.2024 புதன்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர். மேலும், பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

    பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 21.03.2024 வியாழக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

    • தமிழ்நாட்டில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
    • விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து திங்கட்கிழமை முதல் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் போட்டியிடும் இடங்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இந்த பட்டியல் இன்று (சனிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 3 அல்லது 4 நாட்கள் வினியோகிக்கப்படும் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து திங்கட்கிழமை முதல் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

    அதைத்தொடர்ந்து வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க. வும், அ.தி.மு.க.வும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
    • அண்ணா அறிவாலயத்திலும், அ.தி.மு.க. தலைமை கழகத்திலும் நேர்காணலுக்காக கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி வருகிறது.

    இதில் தி.மு.க. கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் முடிந்து ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள் என்று முடிவாகிவிட்டது.

    அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ்-10, இந்திய கம்யூனிஸ்டு-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-2, ம.தி.மு.க.-1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1, கொ.ம.தே.க.-1 ஆகிய இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 1-ந்தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அண்ணா அறிவாலயத்தில் கொடுத்தனர்.

    இதில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு, நீலகிரியில் ஆ.ராசா, வேலூரில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

    இதே போல் அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் பெரம்பலூர் தொகுதிக்கும், சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ், பாரத் ஸ்கேன்ஸ் அதிபர் இம்மானுவேல், முக்கூடல் பேரூராட்சித் தலைவர் லெட்சுமணன் ஆகியோர் நெல்லை தொகுதிக்கும் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

    இதில் கனிமொழி, தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பெயரில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் பணம் கட்டி மனு செய்திருந்தனர்.


    அந்த வகையில் 40 தொகுதிகளுக்கும் மொத்தம் 2 ஆயிரத்து 984 பேர் விருப்ப மனுக்கள் அளித்திருந்தனர்.

    விருப்ப மனு அளித்தவர்கள் அனைவரையும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. நேர்காணலுக்கு வருபவர்கள் தங்களது ஆதரவாளர்கள், பரிந்துரைத்தவர்களை அழைத்து வரக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டிருந்தது.

    நேர்காணலுக்காக வெளிமாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் நேற்றிரவு சென்னை வந்துவிட்டனர். இன்று காலையில் அண்ணா அறிவாலயத்தில் 8 மணியில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் நேர்காணலுக்காக வந்து காத்திருந்தனர்.

    இவர்கள் அமருவதற்காக அண்ணா அறிவாலயத்தில் சாமியானா பந்தல் போடப்பட்டு நாற்காலிகளும் நிறைய போடப்பட்டிருந்தது.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.45 மணிக்கு அறிவாலயம் வந்ததும் அவரது அறையில் நேர்காணல் தொடங்கியது.

    முதலில் கன்னியாகுமரி தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்தவர்களை முதலில் அழைக்கப்பட்டனர்.

    ஒவ்வொருவரிடமும் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, கட்சியில் எத்தனை ஆண்டுகாலம் பணியாற்றுகிறீர்கள், எவ்வளவு செலவு செய்ய முடியும்? என்பது போன்ற கேள்விகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். நேர்காணலின் போது பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    கன்னியாகுமரியை தொடர்ந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட ஒவ்வொரு தொகுதிக்கான நேர்காணல் நடந்தது.

    தூத்துக்குடி தொகுதி நேர்காணலின் போது கனிமொழி எம்.பி. வந்திருந்து வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கி சொன்னார். இதே போல் ஒவ்வொரு தொகுதிக்கும் நேர்காணல் வேகமாக நடைபெற்றது.

    இதே போல் அ.தி.மு.க. கட்சியிலும் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரிய 2 ஆயிரத்து 475 பேருக்கும் நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

    அதில் இன்று காலை சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கும், பிற்பகலில் திருவண்ணாமலை, ஆரணி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழகத்தில் நேர்காணலை நடத்தினார். அவருடன் தலைமைக் கழக மூத்த நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்களும் நேர்காணலில் அமர்ந்திருந்தனர்.

    விருப்ப மனுவின் போது பணம் கட்டிய அசல் ரசீதுடன் வந்தவர்களை சரி பார்த்து ஒவ்வொருவரையும் நேர்காணலுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நேர்காணலின் போது ஒவ்வொரு தொகுதியிலும் 'சீட்' கேட்டு வந்தவர்கள் கட்சியில் எத்தனை ஆண்டுகாலம் இருக்கிறீர்கள்? என்ன தொழில் செய்கிறீர்கள்? இதற்கு முன் தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறீர்களா? எவ்வளவு பணம் செலவிழக்க முடியும்? உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எந்த அளவு உள்ளது? என்பது போன்ற விவரங்களை எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

    இன்றைக்கு 20 தொகுதிக்கு நேர்காணல் நடப்பது போல் நாளைக்கும் பொள்ளாச்சி, திண்டுக்கல், கருர், புதுச்சேரி உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது.

    பாராளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தி.மு.க. வும், அ.தி.மு.க.வும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    அண்ணா அறிவாலயத்திலும், அ.தி.மு.க. தலைமை கழகத்திலும் நேர்காணலுக்காக கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர். இவர்களது ஆதரவாளர்களும் கட்சி அலுவலகத்துக்கு வந்துள்ளதால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது போல் காட்சி அளிக்கிறது.

    ஒவ்வொரு நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தபடி புன்னகை ததும்ப நேர்காணலுக்கு வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு வழங்கலாம் என அறிவித்தது.
    • தொண்டர்களும், நிர்வாகிகளும் விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.

    அ.தி.மு.க.வில் தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு வழங்கலாம் என அறிவித்தது. அதன்படி தொண்டர்களும், நிர்வாகிகளும் விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.

    இந்நிலையில், விருப்பமனு அளித்தவர்களிடம் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய கட்சிகள் இன்று நேர்காணலை நடத்துகிறது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்துகிறார்.

    அதே போல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தோரிடம் இன்றும், நாளையும் நேர்காணல் நடைபெற உள்ளது.

    • வரும் 7-ந்தேதி மாலை 6 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக தலைமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கனிமொழி பெயரில் 70க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் விநியோகம் கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

    போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனு மார்ச் 1-ந்தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வரும் 7-ந்தேதி மாலை 6 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக தலைமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி. கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்தார்.

    ஏற்கனவே கனிமொழி பெயரில் 70க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

    2019 தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி, மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விருப்ப மனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில்,

    * தூத்துக்குடி தொகுதியில் 5 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன்.

    * மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு உள்ளேன்.

    * மறுபடியும் அங்கு பணியாற்ற வாய்ப்பு கேட்டு உள்ளேன்.

    * வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அடுத்த 5 ஆண்டுக்கான திட்டங்களை தெரிவிப்பேன் என்று கூறினார்.

    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்பமனு அளித்து வருகின்றனர்.
    • 2 நாட்களாக 100-க்கும் மேலானவர்கள் ஆர்வத்துடன் மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க.வை கழற்றி விட்டு விட்டு தனி அணியாக போட்டியிட திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

    கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் கடந்த 21-ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்படுகிறது.

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்பமனு அளித்து வருகின்றனர். 2 நாட்களாக 100-க்கும் மேலானவர்கள் ஆர்வத்துடன் மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    இன்று காலையில் இருந்து தலைமை கழகத்தில் தொண்டர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. விண்ணப்பப் படிவங்களை வாங்கவும், சமர்ப்பிக்கவும் வரிசையில் நின்றனர்.

    காலை நிலவரப்படி 1,500 பேர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்து இருந்தனர். விருப்ப மனுவுடன் வேட்பாளர் கட்டணமாக ரூ.20 ஆயிரம் செலுத்துவதால் இதுவரை ரூ.3 கோடிக்கு மேல் பெறப்பட்டதாக தெரிகிறது. தலைமை கழக நிர்வாகிகள் விருப்ப மனுக்களை தொகுதிகள் வாரியாக பிரித்து ஒழுங்கு செய்கிறார்கள்.

    சென்னையில் இருந்து இன்று ஏராளமான நிர்வாகிகள் விருப்பமனு கொடுத்தனர். அ.தி.மு.க.வுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி வைக்கிறது என்பது இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் விருப்ப மனுக்களை கொடுப்பதில் தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.

    இந்நிலையில், விருப்ப மனு பெறும் கால அவகாசம் இன்று மாலையுடன் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6-ம் தேதி வரை நீட்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    • அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் வினியோகம் தொடங்கியது.
    • விருப்ப மனுவை பூர்த்தி செய்து கொடுக்கும்போது கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு தொடங்கியது. தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து உள்ளது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் இன்று முதல் வழங்கப்படும் என்று பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்து இருந்தார்.

    அதன்படி இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் வினியோகம் தொடங்கியது. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இணை செயலாளர் அன்பகம்கலை, துணை செயலாளர் ஆஸ்டின் ஆகியோர் விருப்ப மனு வினியோக பணியில் ஈடுபட்டனர்.

    முதல் நாளான இன்று திருநெல்வேலி, தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க.வினர் 20 பேர் விருப்ப மனுக்கள் வாங்க வந்திருந்தனர். பகல் 12 மணிக்கு மேல் அவர்கள் ஒவ்வொருவராக விருப்ப படிவத்தினை ரூ.2 ஆயிரம் செலுத்தி வாங்கிச் சென்றனர்.

    விருப்ப மனுவை பூர்த்தி செய்து கொடுக்கும்போது கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும். விருப்ப மனுக்களை மார்ச் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி மாலை 6 மணிக்குள் தலைமை கழகத்தில் கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • 7 வார்டுகளின் உறுப்பினர்கள் பொறுப்பிற்கு வருகிற ஏப்ரல் 30-ந் தேதி நடைபெற உள்ளது.
    • 70-க்கும் மேற்பட்ட கழகத்தினர் தங்கள் விருப்பமனுக்களை வழங்கினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்திலுள்ள வெலிங்டன் கண் டோன்மென்ட் நகரியத்தில் உள்ள 7 வார்டுகளின் உறுப்பினர்கள் பொறுப்பிற்கு வருகிற ஏப்ரல் 30-ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் இருந்து விருப்பமனுக்கள் பெறும் நிகழ்ச்சி மாவட்ட திமுக அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது. தி.மு.க சார்பில் போட்டியிட விரும்பி 70-க்கும் மேற்பட்ட கழகத்தினர் தங்கள் விருப்பமனுக்களை மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக்-இடம் வழங்கினர். குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்செல்வன், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, பில்லன், தொரை, ஜெகதளா பேரூராட்சி செயலாளர் சஞ்சீவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி முடிவில் கண்டோன்மென்ட் நகரிய செயலாளர் மார்டின் நன்றி கூறினார்.

    • தி.மு.க. தலைமை கழக அறிவிப்பின்படி கட்சியின் 15-வது பொது தேர்தல் நடந்து வருகிறது.
    • விருப்பமனு மற்றும் மனு கொடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    திருமங்கலம்

    தி.மு.க. தலைமை கழக அறிவிப்பின்படி கட்சியின் 15-வது பொது தேர்தல் நடந்து வருகிறது. இதில் பகுதிகழக தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினர் விருப்பமனுபெறுதல் மற்றும் மனு தாக்கல்செய்தல் நேற்று தொடங்கியது. மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் வடக்கு, தெற்கு, அவனியாபுரம் கிழக்கு, மேற்கு பகுதிகளுக்கான விருப்பமனு மற்றும் மனு கொடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. தெற்குமாவட்ட செயலாளர் மணிமாறன், தேர்தல் ஆணையாளர் ராசாஅருண்மொழி ஆகியோர் கட்சியினரிடம் இருந்து மனுக்களை கொடுத்தனர். திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் மனுக்களை பெற்று கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், அணி அமைப்பாளர்கள் மதன்குமார், பாசபிரபு, விமல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுவாமி நாதன், முத்துராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், நகரசெயலாளர் ஸ்ரீதர், பகுதி செயலாளர்கள் கிருஷ்ணபாண்டி, ஈஸ்வரன், சிவா, செந்தாமரைகண்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆதிமூலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் கட்சியில் உள்ள சுமார் 300 பதவிகளுக்கான தேர்தல் என்பதால் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கினர்.
    • வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், அவிநாசி, காங்கயம், அன்னூர், சென்னிமலை ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை வழங்கினர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உட்கட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் நபர்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி பார்க் சாலையில் உள்ள ஐஎன்டியுசி. அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தலைவர்.கோபி தலைமையில் நடைபெற்றது.

    காங்கிரஸ் கட்சியில் உள்ள சுமார் 300 பதவிகளுக்கான தேர்தல் என்பதால் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும்,பாலக்காடு முன்னாள் சேர்மனுமான.பி.வி.ராஜேஷ்,வட்டார தேர்தல் அதிகாரிகள் சுப்பிரமணியம்,தீபக் ஆகியோரிடம் தொண்டர்கள் வழங்கினர்.

    மேலும் இதே போன்று வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம்,அவிநாசி,காங்கயம்,அன்னூர்,சென்னிமலை ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை ஆர்வத்துடன் வழங்கி வருகின்றனர்.

    ×