search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிஷப்பண்ட்"

    • விபத்து காரணமாக அவர் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
    • நான் அதிர்ஷ்ட்சாலி. காயம் மிகவும் தீவிரமாக ஏற்படவில்லை.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரிஷப்பண்ட். விக்கெட் கீப்பரான இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்துக்கு தனது சொகுசு காரில் சென்ற போது அவர் படுகாயம் அடைந்தார்.

    பல மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு ரிஷப்பண்ட் முழுமையாக குணமடைந்தார். இந்த விபத்து காரணமாக அவர் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ரிஷப்பண்ட் விளையாட இருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக பணியாற்றுகிறார்.

    இந்த நிலையில் கார் விபத்து குறித்து ரிஷப்பண்ட் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியதாவது:-

    என் வாழ்நாளில் முதல் முறையாக இந்த உலகின் நேரம் முடிந்துவிட்டது போல் உணர்ந்தேன். விபத்தின் போது காயங்கள் பற்றி நான் அறிந்தேன். ஆனால் நான் அதிர்ஷ்ட்சாலி. காயம் மிகவும் தீவிரமாக ஏற்படவில்லை. யாரோ என்னை காப்பாற்றியதாக உணர்ந்தேன். காயம் குணமாக 16 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்று டாக்டரிடம் கேட்ட போது கூறினர். விரைவில் குணம் அடைய நான் கடினமாக உழைக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியும்.

    இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.

    • காயம் அடைந்த தசைதார்கள் இயற்கையாக குணமாகுகிறாதா? என்று டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
    • அவர் மீண்டும் விளையாட 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் டெல்லியில் இருந்து உத்தரகாண்டுக்கு சொகுசு காரில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து 10 நாட்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் 2 வாரங்களில் ரிஷப்பண்ட் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    காயம் அடைந்த தசைதார்கள் இயற்கையாக குணமாகுகிறாதா? என்று டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். இதற்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகும். மேலும் அவர் மீண்டும் விளையாட 6 மாதங்கள் வரை ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலை காயங்களுக்கு கட்டு போடப்பட்டுள்ளது.
    • ரிஷப்பண்ட், கார் விபத்தில் சிக்கியதை அறிந்ததும் இந்திய வீரர்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப்பண்ட் இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார்.

    டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது.

    இதில் சாலை தடுப்புகளை உடைத்து கொண்டு கார் சில அடி தூரம் சென்று நின்றது. இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது.

    சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது. உடனே ரிஷப் பண்ட் காரில் இருந்து வெளியேற முயற்சித்தார். கார் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்தார். காரில் தீப்பிடித்ததால் முற்றிலும் எரிந்து நாசமானது. காரில் இருந்து ரிஷப்பண்ட் உடனே வெளியேறியதால் காயத்துடன் தப்பினார்.

    விபத்து குறித்த தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ரிஷப் பண்டை மீட்டு அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலை காயங்களுக்கு கட்டு போடப்பட்டுள்ளது.

    அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. அசோக் குமார் கூறும்போது, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் இன்று அதிகாலை 5.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.

    ரூர்க்கி அருகே முகமது பூர் ஜாட் என்ற இடத்தில் விபத்து நடந்துள்ளது. கார் சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்தது. விபத்து தொடர்பாக ரிஷப்பண்ட் போலீசாரிடம் கூறும்போது, 'தான் சிறிது தூக்கக் கலக்கத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

    காயம் அடைந்து ரிஷப்பண்ட் டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.

    சமீபத்தில் இலங்கைக்கு எதிரான 20 ஓவர போட்டி தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. பிப்ரவரியில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு ரிஷப்பண்ட் செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரிஷப்பண்ட், கார் விபத்தில் சிக்கியதை அறிந்ததும் இந்திய வீரர்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். ரிஷப்பண்ட் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

    • என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான நேரங்களில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட முயற்சிக்கிறேன்.
    • ஸ்ரேயாஸ் அய்யர் என்னுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சிக்கலில் இருந்து மீட்டது மகிழ்ச்சி அளித்தது.

    வங்காள தேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அபாரமாக ஆடினார்.

    சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 93 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் அவர் 6-வது சதத்தை தவற விட்டார். ரிஷப்பண்ட் 6-வது முறையாக 90 ரன்னுக்கு மேல் அவுட் ஆகி உள்ளார்.

    இந்த நிலையில் சதம் அடிக்க இயலாமல் போனது தனக்கு எந்தவித வருத்தத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தனிப்பட்ட வீரராக நான் சாதனைகள் பற்றி சிந்திப்பது இல்லை. 3 இலக்கம் என்பது வெறும் நம்பர்தான். என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான நேரங்களில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட முயற்சிக்கிறேன்.

    சதம் அடித்து இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அப்படி நடக்காவிட்டாலும் ஒன்றுமில்லை. அதற்காக வருத்தமும் படமாட்டேன். எனது பேட்டிங் நன்றாக அமைந்தது.

    ஸ்ரேயாஸ் அய்யர் என்னுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சிக்கலில் இருந்து மீட்டது மகிழ்ச்சி அளித்தது.

    இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.

    • இங்கிலாந்தில் விளையாடுவதை நான் ரசிக்கிறேன்.
    • இந்த தொடர் மட்டுமில்லை. இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.

    மான்செஸ்டரில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 45. 5 ஓவர்களில் 259 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    கேப்டன் ஜாஸ் பட்லர் 60 ரன்னும் ( 3 பவுண்டரி, 2 சிக்சர் ), ஜேசன் ராய் 31 பந்தில் 41 ரன்னும் ( 7 பவுண்டரி ) எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா 24 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.யசுவேந்திர சாஹல் 3 விக்கெட்டும் , முகமது சிராஜ் 2 விக்கெட்டும் , ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றி னார்கள்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ரிஷப்பண்ட் ஒருநாள் போட்டியில் முதல் முறையாக சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவரது ஆட்டம் அதிரடியாக இருந்தது. ரிஷப்பண்ட் 113 பந்தில் 125 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 16 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். ஹர்திக் பாண்ட்யா 55 பந்தில் 71 ரன் (10 பவுண்டரி) எடுத்தார். இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்தது முக்கியமான தாகும்.

    ரீஸ் டாப்லே 3 விக்கெட்டும், கார்சே, ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்கள்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 100 ரன்னில் வெற்றி பெற்றது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தற்போது ஒரு நாள் தொடரையும் வென்று முத்திரை பதித்தது.

    ஒருநாள் தொடரை வெல்ல காரணமாக இருந்த ரிஷப்பண்ட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒருநாள் போட்டியில் முதல் சதத்தை அடித்து இருக்கிறேன். இதை என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் என்று நம்புகிறேன். களத்தில் இருந்த போது பந்தில் மட்டுமே எனது கவனம் இருந்தது. இங்கிலாந்தில் விளையாடுவதை நான் ரசிக்கிறேன். அதிகமான போட்டிகளில் விளையாடும் போதுதான் அனுபவம் கிடைக்கிறது.

    இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு ஏற்ற வகையில் இருந்தது. எனவே இங்கிலாந்தை 259 ரன்னில் ஆல் அவுட் செய்ததற்காக பந்து வீச்சாளர்களை பாராட்டுகிறேன். இந்த தொடர் மட்டுமில்லை. இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த தொடரில் 100 ரன்கள் எடுத்து 6 விக்கெட் கைப்பற்றிய ஹர்திக் பாண்ட்யா தொடர் நாயகன் விருதை பெற்றார்.

    • ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் குவித்து இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்தது.
    • 298 ரன்கள் எடுத்து அசாருதீன்-வெங்சர்க்கார் ஜோடி முதல் இடத்தில் உள்ளது.

    எட்ஜ்பஸ்டன்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்திய அணி 98 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்தது.

    சுப்மன் கில் (17 ரன்), புஜாரா (13), ஸ்ரேயாஸ் அய்யர் (15) ஆகியோர் ஆண்டர்சன் பந்திலும் , விஹாரி (20), விராட் கோலி (11) ஆகியோர் மேத்யூ பாட்ஸ் பந்திலும் வெளியேறினார்கள். 6-வது விக்கெட்டான ரிஷப்பண்ட்-ரவீந்திர ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

    குறிப்பாக ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 89 பந்தில் சதம் அடித்து 5-வது செஞ்சூரியை பதிவு செய்தார். ரிஷப் பண்ட் 111 பந்தில் 146 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 19 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். அவரும், ஜடேஜாவும் 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் குவித்தது மிகவும் முக்கியமானதாகும்.

    அடுத்து வந்த ஷர்துல் தாகூர் ஒரு ரன்னில் பென்ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் இருந்த ஜடேஜா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

    ஜடேஜா 83 ரன்னிலும் (10 பவுண்டரி) முகமது ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

    ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் குவித்து இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்தது. 1997-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுன் மைதானத்தில் அசாருதீன்-தெண்டுல்கர் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் எடுத்தனர். இதனை ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி சமன் செய்தது.

    298 ரன்கள் எடுத்து அசாருதீன்-வெங்சர்க்கார் ஜோடி முதல் இடத்தில் உள்ளது. 272 ரன்கள் எடுத்து அசாருதீன் - கபில் தேவ் ஜோடி 2-வது இடத்திலும் டோனி-டிராவிட் ஜோடி 224 ரன்கள் எடுத்து 3-வது இடத்திலும் உள்ளது.

    • ரிஷப்பண்ட் அதிக எடையுடன் இருப்பதால் விரைவாக செயல்பட முடியவில்லை.
    • ரிஷப்பண்ட் தனது பேட்டிங் ஸ்டைலையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

    கராச்சி:

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கு 24 வயதான ரிஷப்பண்ட் கேப்டனாக பொறுப்பு வகித்தார். இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    முதல் 2 போட்டியிலும் தோற்றதால் இந்திய அணி தொடரை இழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் 3-வது மற்றும் 4-வது போட்டியில் தொடர்ந்து இழப்பில் இருந்து தப்பியது.

    தொடரை இழக்காமல் ரிஷப்பண்ட் விமர்சனத்தில் இருந்து தப்பினார். அதே நேரத்தில் அவரது பேட்டிங் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் 5 ஆட்டத்தில் 58 ரன்களை எடுத்தார். அவரது சராசரி 14.50 ஆகும்.

    இந்த மோசமான பேட்டிங்கால் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப்பண்டின் இடம் குறிந்து முன்னாள் வீரர்கள் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    இந்த நிலையில் ரிஷப் பண்ட் அதிக உடல் எடையுடன் இருப்பதால் விக்கெட் கீப்பிங் செய்வது பிரச்சினையாக இருக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கால்பந்து வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



                                                                                                        டேனிஷ் கனேரியா

     ரிஷப்பண்டின் கீப்பிங் குறித்து பேச உள்ளேன். வேகப்பந்து வீரர்கள் பந்து வீசும் போது அவர் குனியாமல் நின்றுகொண்டே இருக்கிறார். அவர் அதிக எடையுடன் இருப்பதால் விரைவாக செயல்பட முடியவில்லை. அவரது உடல்நலத்தில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். முதலில் அவர் உடல் தகுதியுடன் இருக்கிறாரா?

    ரிஷப்பண்ட் தனது பேட்டிங் ஸ்டைலையும் மாற்றிக்கொள்ள வேண்டும். அவருக்கு பதிலாக கே.எஸ். பரத் அல்லது விர்த்திமான் சஹாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். ரிஷப்பண்டுக்கு ஓய்வு கொடுக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பேட்டிங்கின் நடுவரிசையில் சிறப்பாக நாங்கள் செயல்படவில்லை.
    • இந்தியாவில் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று இரவு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 179 ரன் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா 19.1 ஓவரில் 131 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் சாகல் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரிஷப்பண்ட் கூறியதாவது:-

    திட்டங்களை செயல்படுத்துவதை பற்றி பேசி இருந்தேன். அதை பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களிடம் இருந்து நாம் பார்த்தோம்.

    நாங்கள் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைத்தோம். ஆனால் அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை. பந்து வீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர். குறிப்பாக இந்தியாவில் மிடில் ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

    இதனால் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தம் உள்ளது. இதுபோன்ற போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும்போது வெற்றி கிடைக்கும்.

    பேட்டிங்கின் நடுவரிசையில் சிறப்பாக நாங்கள் செயல்படவில்லை. ஆனால் ஒரு நல்ல தொடக்கத்துக்கு பிறகு புதிய பேட்ஸ்மேன்கள் உடனே அதிரடியாக விளை யாடுவது கடினம். இதில் அடுத்த போட்டியில் முன்னேற முயற்சிப்போம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா கூறும் போது, "நாங்கள் எங்களது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்திய பந்து வீச்சாளர்கள் எங்களை அழுத்தத்துக்கு உள்ளாக்கினர். பார்ட்னர் ஷிப் அல்லது உத்வேகத்தை பெற முடியவில்லை.

    நாங்கள் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக இருக்கிறோம். ஆனால் இந்தபோட்டியை மட்டும் வைத்து கொண்டு எங்களை நான் மதிப்பிட மாட்டேன். தொடக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது என்றார்.

    5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் மற்றும் 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனால் 2-1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. 4-வது 20 ஓவர் போட்டி வருகிற 17-ந்தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது.

    • 2-வது இன்னிங்சில் ஆடுகளம் பேட்டிங்குக்கு உதவியது என இந்திய அணியின் கேப்டன் ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.
    • 5 ஆட்டம் கொண்ட இத்தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதலாவது 20 ஓவர் போட்டி நேற்று இரவு டெல்லியில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 4. விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்தது.

    இஷான் கிஷன் 76 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்னும், ஹர்த்திக் பாண்ட்யா 31 ரன்னும் எடுத்தனர். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டிகாக் 22 ரன்னிலும், பவுமா 10 ரன்னிலும், பிரிட்டோரியஸ் 29 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அந்த அணி 81 ரன்னில் 3 விக்கெட்டை (8.4 ஓவர்) இழந்தது.

    அதன்பின் வான்டெர் துஸ்சென்- டேவிட் மில்லர் ஜோடி, அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. தென் ஆப்பிரிக்கா 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    இந்தியா 211 ரன் குவித்தும் பந்துவீச்சு எடுபடாததால் தோல்வியை சந்தித்தது. தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரிஷப்பண்ட் கூறியதாவது:-

    நாங்கள் போதுமான ரன்களை எடுத்தோம். ஆனால் பந்துவீச்சின் போது எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த தவறிவிட்டோம் என்று நினைக்கிறேன். சில சமயங்களில் எதிரணிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். டேவிட் மில்லர், வான்டெர் துஸ்சென் நன்றாக பேட்டிங் செய்தனர்.

    நாங்கள் பேட்டிங் செய்தபோது மெதுவான பந்துகள் நன்றாக செயல்பட்டன. ஆனால் 2-வது இன்னிங்சில் ஆடுகளம் பேட்டிங்குக்கு மேலும் உதவியது. பெரும்பாலும் நாங்கள் எங்கள் திட்டங்களை டேவிட் மில்லருக்கு செயல்படுத்தினோம். ஆனால் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக, சிறப்பாக இருந்தது. மொத்தத்தில் ரன்களை குவித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். அடுத்த முறை இதேபோன்ற சூழ்நிலையில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    5 ஆட்டம் கொண்ட இத்தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி நாளை மறுநாள் கட்டாக்கில் நடக்கிறது.

    ×