search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் மாநாடு"

    • இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு காவல்துறையில் இடமளிக்கப்பட்டது.
    • மத்திய பாஜக ஆட்சியில் குடியரசு தலைவராக இருக்கட்டும்.

    சென்னை:

    திமுக மகளிர் உரிமை மாநாட்டில் அவர் பேசிவருவதாவது:-

    பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் மகளிர் இட ஒதுக்கீடை பாஜக நடைமுறைபடுத்தாது . புதுச்சேரியில் பட்டியல் இன பெண் என்பதால் அமைச்சரே ராஜினாமா செய்யும் நிலை உள்ளது. மேலும் பாஜக கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வராது.

    மத்தியரசின் கொள்கை முடிவுகளில் மகளிருக்கு இடமில்லை. இந்த மாநாட்டில் அறிவொளி பெற்ற தீபங்களாக மகளிர் அணியினர் பங்கேற்று உள்ளனர். ஒடுக்கப்பட்ட சமூக பெண் என்பதால் குடியரசு தலைவரும் அவமதிக்கப்படுகிறார். மணிப்பூரில் பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் கொடுமைகள் நடந்துள்ளன. மேலும் டெல்லியில் போராடிய விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த மத்திய பாஜக ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை.

    மேலும் பேசிய அவர், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு காவல்துறையில் இடமளிக்கப்பட்டது. மேலும் படிக்கும் ஆர்வமுள்ள பெண்களை கைதூக்கி விட நிதியுதவி அளித்து வருகிறது திமுக அரசு. மேலும் பெண்கள் முன்னேற்றத்திற்காக மகளிர் உரிமை தொகை வழங்கியுள்ளது, இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழ்நாட்டில்தான் 11 பெண் மேயர்கள் உள்ளனர்,

    மத்திய பாஜக ஆட்சியில் குடியரசு தலைவராக இருக்கட்டும், விளையாட்டு வீராங்கனைகளாக இருக்கட்டும், சாமானிய பெண்களாக இருக்கட்டும் எந்த நிலை பெண்களுக்கும் நீதி கிடைக்காது, என்றும் அவர் பேசினார்.

    • தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
    • இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படும்.

    சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிரணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது. இதில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

    இந்த மாநாட்டில் "இந்தியா" கூட்டணியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியின் மகளிர் தலைமைகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பாஜகவை முற்றிலுமாக வீழ்த்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற எண்ணத்தில் பிரதமர் செயல்படுகிறார்.

    உண்மையான அக்கறையுடன் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படவில்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக செயல்படுத்தி இருந்தால் பாராட்டி இருக்கலாம்.

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    2024க்கு பிறகு பாஜகவின் ஆட்சி இருக்காது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    சமூக நீதியை எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்கக்கூடாது. இந்தியா கூட்டணைி கொள்கை கூட்டணி. இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படும்.

    இந்த மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை இன்றே வந்துவிடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
    • போராடி பெற்ற சமூக நீதியை பாஜக அழித்து வருகிறது.

    சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிரணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது. இதில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

    இந்த மாநாட்டில் "இந்தியா" கூட்டணியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஏழை எளிய மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி. மாநில சமத்துவத்துக்கு குரல் கொடுத்தவர் கருணாநிதி.

    மொழி, சாதி, மதம் கடந்து சிந்தித்து உழைத்தவர் கருணாநிதி. ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக ஈடுபட்டவர் கருணாநிதி.

    பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். பெண்களுக்கான உரிமையை பெறுவது நீண்ட பயணம்.

    காந்தி, நேரு போன்றவர்கள் அனைவருக்கும் ஓட்டு உரிமை என்பபைத உறுதிபடுத்தினர். பெண்கள் பல்வேறு தடைகளை தாண்டி தான் சமத்துவத்தை பெற் வேண்டிய நிலை உள்ளது. தடைகளை தாண்டி பெண்கள் உரிமையை நிலைநாட்ட முடியும்.

    தலைமைத்துவத்திற்கு இந்திரா காந்தியை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.

    ஒரு பெண் படித்தால் குடும்பமே படித்ததுபோல் மாறிவிடும். பெண்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டால் நாடு வலிமை பெறும்.

    பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா எப்போது வரும் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்தியா கூட்டணி வந்து தான் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி தரும்.

    பாராளுமன்றத்தில் நாங்கள் கொண்டு வந்த பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறாமல் போனது. இந்தியாவில் தமிழகம் பெண்களுக்கான ஒளி விளக்காக உள்ளது.

    பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. தமிழக காவல் துறையில் நான்கில் ஒரு பங்காக பெண்கள் உள்ளனர். அரசு பணிகளில் பெண்களுக்கான பணியிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி உள்ளார்.

    தாய் சேய் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. பெற்று தந்த உரிமைகளை எல்லாம் சீரழிக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது. போராடி பெற்ற சமூக நீதியை பாஜக அழித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்களின் செயல்திறனே தேசத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும்.
    • பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள கூடாது.

    சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிரணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது. இதில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

    இந்த மாநாட்டில் "இந்தியா" கூட்டணியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இறந்த எனது தந்தையின் உடலை பெற முதல் முறையாக தமிழகம் வந்தேன். நீங்கள் தான் என் தாய், நீங்கள் தான் என் சகோதரி. உங்களுடன் இருப்பதை பெருமையாக கருதுகிறேன்.

    பெண்களே இந்தியாவின் தூண்கள். சமூக மாற்றத்திற்கான புரட்சி இங்கே தான் உருவானது. பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் எழுதி உள்ளார்.

    பெண்களின் செயல்திறனே தேசத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும். பெண்களை மையமாக வைத்துதான் குடும்பம் என்பது கட்டமைப்படுகிறது.

    100 ஆண்டுகள் கழித்தும் பெரியார் கேட்ட அதே கேள்வியை தான் இன்றும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

    இன்றும் பெண்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. மாற்றத்திற்கான சரியான தருணத்தில் இருக்கிறோம்.

    பெண்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உரிமைக்காக பெண்கள் இனியும் காத்திருக்க கூடாது.

    மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சவுராஷ்டிரா மகளிர் மாநாடு நடந்தது.
    • சவுராஷ்டிரா பள்ளிகளில் சவுராஷ்டிரா மொழியை வளர்க்க விருப்ப பாடமாக நடத்த அனுமதிக்க வேண்டும்

    பரமக்குடி

    பரமக்குடி நகர் எமனேசுவரத்தில் சவுராஷ்டிரா சமூக நலச் சங்கம் சார்பில் சவுராஷ்டிரா மகளிர் மாநாடு நடந்தது. சங்க தலைவர் மாருதி ராமன் தலைமை தாங்கினார். எமனேசுவரம் சவுராஷ்டிரா சபை தலைவர் சேசைய்யன், பரமக்குடி சபை தலைவர் மாதவன், சங்க முன்னாள் தலைவர்கள் ராஜன், யோகையன், முன்னாள் பொதுச் செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தனர்.

    துணைத் தலைவர்கள் கோவிந்தன், கங்காதரன் வரவேற்றனர்.பொதுச் செயலாளர் ரமேஷ்பாபு தீர்மானத்தை முன்மொழிந்தார். மதுரை சவுபாக்கியா தொழில் முனைவோர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் மகாலட்சுமி சிறப்புரையாற்றினார். இதில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சவுராஷ்டிரா சமூகத்திற்கு மொழி வாரி சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அரசு பணியில் 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

    சவுராஷ்டிரா பள்ளிகளில் சவுராஷ்டிரா மொழியை வளர்க்க விருப்ப பாடமாக நடத்த அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் ரமேஷ் பாபு நன்றி கூறினார்.

    ×