search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் விலை உயர்வு"

    • காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகு, 800-க்கும் மேற்படட பைபர்படகுகளில் மீனவர்கள் மீன்படி தொழில் செய்து வருகின்றனர்.
    • விசைப்படகில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்க குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் வரை செலவாகும்.

    ராயபுரம்:

    தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜுன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் ஆண்டுதோறும் இருந்து வருகிறது. இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் இன்றுடன் (14-ந்தேதி) முடிவடைகிறது.

    இதைத்தொடர்ந்து ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தயாராகி வருகிறார்கள்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகு, 800-க்கும் மேற்படட பைபர்படகுகளில் மீனவர்கள் மீன்படி தொழில் செய்து வருகின்றனர். மீன்பிடி தடைகாலத்தையொட்டி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை சரிபார்ப்பது, வர்ணம் பூசுவது, வலைகளை சரி பார்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிவதால் இன்று நள்ளிரவு முதல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப் படகுகளில் மீனவர்கள் செல்ல தயார் நிலையில் உள்ளனர்.

    ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன் பிடித்து வருவவது வழக்கம். இதனால்மீனவர்கள் தங்களுக்கு தேவையான டீசல், ஐஸ் கட்டிகள், ரேஷன் பொருட்கள், தண்ணீர் கேன்கள் உள்ளிட்டவற்றை விசைப்படகுகளில் ஏற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    டீசல் விலை உயர்வு காரணமாக காசிமேட்டில் இருந்து 25 சதவீத விசைப்படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள் என்று தெரிகிறது. 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையே விசைப்படகுகளில் கொண்டு செல்லும் ஐஸ்கட்டிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    விசைப்படகில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்க குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் வரை செலவாகும். கடுமையான டீசல் விலை உயர்வால் தொடர்ந்து இந்த தொழிலை நடத்துவதற்கு சிரமமாக உள்ளது. எதிர்பார்த்த அளவு மீன் சிக்க வில்லை என்றால் அதிக நஷ்டத்தை சந்திக்க வேண்டும். இதனால் பெரும்பாலான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. 25 சதவீதம் அளவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மட்டும் இன்று கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றன என்றார்.

    மீன்பிடி தடைகாலத்தில் மீன்விலை அதிகஅளவு உயர்ந்து இருந்தது. தற்போது விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல உள்ளதால் அடுத்த வாரம் முதல் மீன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • குறைந்த கட்டணம், இலவச பயணம் போன்றவற்றால் மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 25 லட்சமாக உயர்ந்தது.
    • ஏ.சி. பஸ்கள் முழு அளவில் தற்போது இயக்கப்படுகிறது. கூடுதலாக இயக்க வேண்டும் என்று பொது மக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 3,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனாவிற்கு முன்பு வரை தினமும் 32 லட்சம் பயணிகள் தினமும் மாநகர பஸ்களில் பயணித்தனர்.

    கொரோனா காலத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்கு சரிந்தது. 10 லட்சமாக குறைந்த பயணிகள் எண்ணிக்கை பின்னர் படிப்படியாக உயரத் தொடங்கியது.

    கடந்த சில மாதங்களாக 25 லட்சம் வரை உயர்ந்தது. மாநகர பஸ்களில் இலவசமாக பெண்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மேஜிக் வேன் போன்றவற்றில் கட்டணம் அதிகரித்தது.

    இதனால் அரசு பஸ்களை மக்கள் தற்போது நாடி வருகிறார்கள். குறைந்த கட்டணம், இலவச பயணம் போன்றவற்றால் மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 25 லட்சமாக உயர்ந்தது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, 'சென்னையில் மாநகர பஸ்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் பழைய நிலைக்கு திரும்பவில்லை. கொரோனா காலத்தில் பலர் பஸ் பயணத்தை தவிர்த்து மாற்று பயணத்திற்கு மாறினார்கள். இரு சக்கரம், கார் போன்ற வாகனங்களுக்கு மாறி விட்டனர்.

    இதனால் கொரோனாவுக்கு முந்தைய பயணிகள் அளவு வரவில்லை. ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பஸ் பயணத்திற்கு மக்கள் மாறி வருகிறார்கள். இன்னும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    ஏ.சி. பஸ்கள் முழு அளவில் தற்போது இயக்கப்படுகிறது. கூடுதலாக இயக்க வேண்டும் என்று பொது மக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. ஆனால் புதிதாக பேருந்துகள் வாங்கும் போது அதனை நிறைவேற்ற முடியும் என்றனர்.

    ×