என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பஸ் கண்டக்டர்"
- பயணிகளை ஏற்றிச் செல்வதில் தகராறு
- வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் காமரா ஜபுரம் மர்ச்சினிவிளை புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் சகாயஜோஸ் (வயது 24), மினி பஸ் கண்டக்டர்.
இவர் வடசேரி பஸ்நிலை யத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு இருந்த போது அங்கு வந்த மற்றொரு மினி பஸ்சின் கண்டக்டர் மற்றும் உரிமையாளர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
இதுபற்றி வடசேரி போலீசில் சகாய ஜோஸ் புகார் செய்தார். அதில் சம்பவத்தன்று தான் பணியில் இருந்து பயணிகளை ஏற்றிய போது, அங்கு மற்றொரு மினிபஸ்சின் உரிமையாளர் கோவிந்தன், கண்டக்டர் ஆஸ்வின் ஜெனிஸ் சாமுவேல் ஆகியோர் வந்தனர்.
அவர்கள் என்னிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆஸ்வின் ஜெனிஸ் சாமுவேல், கொலை மிரட்டலும் விடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவி, கண்டக்டரிடம் பாக்கி சில்லறையை தருமாறு கேட்டபடி இருந்தார்.
- சம்பவ இடத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று மாணவி தனது வீட்டை அடைந்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது நெடுமங்காடு. இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு வருவதற்காக நெடுமங்காடு டெப்போவில் இருந்த அரசு பஸ்சில் ஏறினார்.
பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, மாணவி தன்னிடம் இருந்த 100 ரூபாயை கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். மாணவியிடம் டிக்கெட்டை கொடுத்த கண்டக்டர், கட்டணம் போக மீதி தொகையை திருப்பி கொடுக்கவில்லை. சற்று நேரத்தில் தருவதாக கூறி இருக்கிறார்.
ஆனால் கண்டக்டர் சில்லறை பாக்கியை தரவில்லை. இதனால் மாணவி, கண்டக்டரிடம் பாக்கி சில்லறையை தருமாறு கேட்டபடி இருந்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த கண்டக்டர், மாணவியை திட்டி அவமானப்படுத்தி இருக்கிறார்.
மேலும் பாக்கி சில்லறையை கொடுக்காமல், அந்த மாணவியை நடுவழியிலேயே பஸ்சில் இருந்து வலுக்கட்டாயமாக இறங்க செய்தார். மாணவியிடம் வேறு பணம் இல்லாததால், வேறு பஸ்சில் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தார். அவர், கண்ணீர் வடிந்தபடியே தனது வீட்டிற்கு நடந்து சென்றார்.
சம்பவ இடத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று தனது வீட்டை அடைந்தார். தன்னிடம் அரசு பஸ் கண்டக்டர் நடந்த விதம் குறித்து தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதையடுத்து மாணவியின் தந்தை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போவுக்கு சென்று, மாணவியை நடுவழியில் இறக்கி விட்ட கண்டக்டரை சந்தித்து தட்டிக்கேட்டார். அப்போது மாணவியின் தந்தையையும் அந்த கண்டக்டர் தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் செய்ய மாணவியின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
- ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து வாசுதேவனை கல்லால் தாக்கினர்.
- தலையில் காயத்துடன் மயங்கி கிடந்த வாசுதேவனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள நந்திவாடி கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் மாநகர பேருந்தில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். திருவான்மியூர் பணிமனையில் இவருக்கு பணி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் திருவான்மியூரில் உள்ள ஜெயந்தி சிக்னல் அருகில் வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் வாசுதேவனிடம் சென்று அவரது செல்போனை கேட்டனர். அவர் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து வாசுதேவனை கல்லால் தாக்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் மயங்கிய வாசுதேவனிடமிருந்து செல்போனை 3 பேரும் பறித்துச்சென்றனர்.
பின்னர் அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடி தலைமறைவானார்கள். அவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. தலையில் காயத்துடன் மயங்கி கிடந்த வாசுதேவனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வாசுதேவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துச்சென்ற வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
- விருதுநகரில் பஸ் கண்டக்டர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டார்.
- பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் சின்ன தாயம்மன் ரோடு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்(வயது52). அரசு பஸ் கண்டக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நல பாதிப்பு இருந்து வந்தது. இதனால் அவர் மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் பாண்டியன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் ரோசல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(55). இவர் தனது 2 மகள்களின் திருமணத்திற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனை திரும்ப செலுத்தமுடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்துப்பாண்டியின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.
- 110 கிலோமீட்டர் தூரத்தை 11 மணி நேரத்தில் இடைவிடாது பயணம் செய்து உலக சாதனை படைத்தார்.
தாராபுரம்:
தாராபுரத்தில் சர்வதேச சைக்கிள் தினம் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழாவையொட்டி சாதாரண சைக்கிள் மூலம் இடைவிடாது பயணம் செய்து உலக சாதனை நிகழ்த்திய அரசு போக்குவரத்து கழக நடத்துனர் அறிவழகனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருபவர் அறிவழகன். இவர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார். புகலூர், அன்னூர், கருமத்தம்பட்டி, காரணம்பேட்டை, பல்லடம், பொங்கலூர், அவிநாசிபாளையம், கொடுவாய், வழியாக தாராபுரம் வந்தடைந்தார். தாராபுரம் வந்தடைந்த கருணாகரனுக்கு நகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ,நகரச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சாதாரண சைக்கிள் மூலம் 40 கிலோ எடையை சுமந்து கொண்டு 110 கிலோமீட்டர் தூரத்தை 11 மணி நேரத்தில் இடைவிடாது பயணம் செய்து உலக சாதனை படைத்தார்.அதனைத் தொடர்ந்து நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார். அவருக்கு சாதனை படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
சாதனை படைத்த அறிவழகன் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து விபத்துக்களை தவிர்ப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- பஸ்சை வழிமறித்து செல்லத்துரையை கீழே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினர்.
- மாணவியின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குப்பதிவு செய்யாமல் கண்டக்டரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பள்ளிப்பாளையம்:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது41). இவர் ஈரோட்டில் இருந்து குமாரபாளையத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்சில், கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த பஸ் பள்ளிப்பாளையம் வந்ததும், ஒரு மாணவி குமாரபாளையம் கல்லூரிக்கு செல்ல ஏறினார்.
பஸ் புறப்பட்டதும் அவரது காதை பிடித்து செல்லத்துரை திருகியுள்ளார். இதனால், அதிர்ச்சிக்குள்ளான மாணவி தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, விரைந்து வந்த உறவினர்கள், ஒட்டமெத்தை பகுதியில் பஸ்சை வழிமறித்து, செல்லத்துரையை கீழே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினர்.
இதுகுறித்த தகவலின் பேரில், பள்ளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்லத்துரையை மீட்டு, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது, மாணவியின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குப்பதிவு செய்யாமல் கண்டக்டரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கடலூரில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
- அன்பரசன், சூர்யா ஆகியோர் தகராறில் ஈடுபட்டவர்களிடம் தட்டி கேட்டனர்.
கடலூர்:
கடலூரில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் பயணம் செய்த 6 பேர் கும்பல் கடுமையாக வாக்குவாதம் செய்து கொண்டனர். இதனால் பஸ் கண்டக்டர்கள் அன்பரசன், சூர்யா ஆகியோர் தகராறில் ஈடுபட்டவர்களிடம் தட்டி கேட்டனர். அப்போது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க பஸ்சை நிறுத்தினர். அப்போது பஸ்சில் இருந்த கும்பல் திடீரென்று தப்பி ஓடினர்.
மீண்டும் அந்த பஸ் கடலூர் நோக்கி மீனாட்சி பேட்டை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த கும்பல் பஸ்சை வழிமறித்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நடத்துனர்கள் அன்பரசன் மற்றும் சூர்யாவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த 2 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் டிரைவர் தனவேல் கொடுத்த புகாரின் பேரில் வடலூரை சேர்ந்த லோலிசின், ஹரிஷ், அப்பு, வினோத் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- அரசு பஸ் டிரைவரும், டிராக்டர் டிரைவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
- ஆம்புலன்ஸ் வந்த நேரத்தில் சாலையில் பஸ்சை நிறுத்தி இருவரும் அடித்து தாக்கி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
செம்பட்டி:
கூடலூரில் இருந்து கோவைக்கு திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி வழியாக அரசு பஸ் சென்றது. இந்த பஸ் செம்பட்டி பஸ் நிலையம் வந்த போது பாளையங்கோட்டையை சேர்ந்த ஒருவர் டிராக்டரில் வந்தார். அவரை அரசு பஸ் டிரைவர், ஓரமாக மெதுவாக செல்லும்படி கூறியுள்ளார்.
இதனால், டிராக்டர் டிரைவர் டிராக்டரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, அரசு பஸ் கண்டக்டரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அரசு பஸ் கண்டக்டருக்கும், டிராக்டர் டிரைவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது. இதில் டிராக்டர் டிரைவர், அரசு பஸ் கண்டக்டரை தாக்கினார்.
இதனால் கடும் கோபமடைந்த அரசு பஸ் கண்டக்டர், தனது கேஸ் பேக்கை, அருகில் இருந்த டைம் கீப்பரிடம் கொடுத்துவிட்டு, அந்த டிராக்டர் டிரைவரை சரமாரியாக தாக்கினார். ேமலும் டிராக்டர் டிரைவர் தொடர்ந்து, அரசு பஸ் கண்டக்டரிடம் வாக்குவாத த்தில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தார்.
அப்போது, அந்த வழியாக திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு நோக்கி ஆம்புலன்ஸ் வந்தது. அந்த நேரத்தில் சாலையில் பஸ்சை நிறுத்தி இருவரும் அடித்து தாக்கி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்