search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொல்லியல் துறை"

    • தஞ்சை அரண்மனை வளாகம் மராட்டி தர்பார் மண்டபத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
    • பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவன மாணவர்களுக்கு களப்பயிற்சி நடந்து வருகிறது.

    இந்த பயிற்சியை தமிழ்நாடு தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் பார்வையிட்டார். பின்னர் தஞ்சை அரண்மனை வளாகம் மராட்டி தர்பார் மண்டபத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-மதுரை திருமலை நாயக்கர் மகால், தரங்கம்பாடி கோட்டை, கவர்னர் மாளிகை என தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் ரூ. 25 கோடி மதிப்பில் புராதன கட்டிடங்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தஞ்சை அரண்மனை வளாக மராட்டா தர்பார் மண்டபம், சர்ஜா மாடி ஆகிய இடங்களில் பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை மேம்பாலம் அருகே சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடுமலை, மடத்துக்குளம் தாலுகா வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் கரையில், பல்வேறு பழமையான தொல்லியல் சின்னங்கள், நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
    • தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

    உடுமலை:

    கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து 6 தாலுகாவை பிரித்து திருப்பூர் மாவட்டம் 2009ல், உருவாக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பழமையான கோவில்கள், வரலாற்றுச்சின்னங்கள் அதிக அளவு உள்ளன. குறிப்பாக உடுமலை, மடத்துக்குளம் தாலுகா வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் கரையில், பல்வேறு பழமையான தொல்லியல் சின்னங்கள், நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    சங்க காலத்திலிருந்தே சிறப்பு பெற்றிருந்த கோவில்கள், நொய்யல் மற்றும் அமராவதி ஆற்றங்கரையில் தற்போது வரை வரலாற்றுச்சின்னங்களாக உள்ளன. இக்கோவில்களில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு ஆவணப்படுத்த ப்பட்டுள்ளன.

    இதே போல் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலும், வரலாற்று ஆய்வாளர்களால் பெருங்கற்காலத்தைச்சேர்ந்த கல்திட்டைகள் மற்றும் அக்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள், பொருட்கள், மேற்பரப்பு ஆய்வில் கிடைத்துள்ளது. கடத்தூர், கொழுமம், கண்ணாடிப்புத்தூர், சோமவாரப்பட்டி, கொங்கல்நகரம், குடிமங்கலம், கோட்ட மங்கலம் உட்பட பல இடங்களில் நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளும், கல்திட்டை உட்பட பெருங்கற்காலத்தை சேர்ந்த வரலாற்று சின்னங்களும் உள்ளன.

    சமீபத்தில் மடத்துக்குளம் ஒன்றியம், மெட்ராத்தி கிராமத்தில் குளத்தின் கரையில் இருந்த பாறை கல்வெட்டு, போதிய விழிப்புணர்வு இல்லாமல் சிதைக்கப்பட்டு, முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.இதே போல் கல்வெட்டுகளை அழித்தல், நடுகற்கள் மற்றும் சிற்பங்களை சேதப்படுத்துதல் தொடர் கதையாக உள்ளது.

    பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.தற்போது திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட தொல்லியல் சார்ந்த பணிகளில் கோவை மாவட்டத்தைச்சேர்ந்த மாவட்ட தொல்லியல்துறை அலுவலர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

    எனவே திருப்பூர் மாவட்டத்துக்கு தனியாக மாவட்ட தொல்லியல்துறை அலுவலகத்தை துவக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் தொழில்சார்ந்த மாவட்ட மக்களுக்கு, முக்கிய சுற்றுலா தலமாகவும், அருங்காட்சியகம் அமைய வாய்ப்புள்ளது.

    இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் தரப்பில் அரசுக்கு மீண்டும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

    • ஒரு சில தங்க நாணயங்களின் விளிம்பில் டெல்லி நாணயத்தின் சித்தரிப்பு உள்ளது.
    • ஆந்திர மாநில தொல்லியல் துறை தங்க நாணயங்களை இன்னும் கைப்பற்றவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், சித்தேபள்ளி கிராமத்தில் அங்காளம்மா கோவில் உள்ளது.

    இந்த கோவில் அருகே உள்ள மலையில் பாறாங்கல் ஒன்றின் அடியில் நேற்று தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது. இதில் 450-க்கும் மேற்பட்ட தங்கக் காசுகள் இருந்தன.

    இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) இயக்குனர் கே முனிரத்தினம் ரெட்டி கூறுகையில்:-

    புதையலில் இருந்த தங்க காசுகள் 15 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளில் இருந்த தங்க நாணயங்கள், விஜயநகர மன்னர் I மற்றும் II ஹரிஹரர் மற்றும் டெல்லி சுல்தான்களுக்கு சொந்தமானது.

    ஒரு சில தங்க நாணயங்களின் விளிம்பில் டெல்லி நாணயத்தின் சித்தரிப்பு உள்ளது. இப்பகுதியில் உள்ள பழமையான கோவிலுக்கு அருகிலேயே இந்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது.

    இடைக்காலங்களில், முறையான வங்கி முறை இல்லாததால், மக்கள் தங்கள் பணத்தை கோவில்களில் டெபாசிட் செய்தனர்.

    ஆந்திர மாநில தொல்லியல் துறை தங்க நாணயங்களை இன்னும் கைப்பற்றவில்லை.

    இந்த நாணயங்களை அருங்காட்சியகங்களில் வைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    • 2800 ஆண்டுகள் பழமையான உலகில் மிக உயரமான சுமார் 32 அடி உயரம் கொண்ட நடுக்கல்லை ஆய்வு செய்தனர்.
    • பொதுமக்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    பெருமாநல்லூர்:

    விருதுநகர் முதல் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த குன்னத்தூர் அருகே உள்ள காவுத்தம்பாளையம் வரை அமைய உள்ள 765/ 400 கிலோ வாட் உயர் மின் கோபுர துணை மின் நிலைய திட்டத்தினால் ஏற்படும் ஆபத்திலிருந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் காப்பாற்ற கோரியும், இத்திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக் கோரியும் காவுத்தம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    மேலும் அப்பகுதியில் உள்ள குமரிக்கல் பகுதியை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் மற்றும் ஈரோடு தொல்லியல் துறை ஆய்வு அதிகாரி காவியா காவுத்தம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரிக்கல்பாளையத்தில் அமைந்துள்ள 2800 ஆண்டுகள் பழமையான உலகில் மிக உயரமான சுமார் 32 அடி உயரம் கொண்ட நடுக்கல் என்ற குமரி கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலத்தில் கிடந்த பானை ஓடுகள் ,முதுமக்கள் தாழி ,இரும்பு கசடுகள், தர்மசக்கரக்கல் என்னும் போர் நினைவுகள், ப்ரியல் சைட் எனப்படும் வட்டக் கல், கூடலூர் பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் ,மீன் சின்னம் ,சுவாமி சிலைகளை ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது அவருடன் ஊத்துக்குளி தாசில்தார் தங்கவேல்,வருவாய் ஆய்வாளர் ரியானா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இருந்தனர்.மேலும் 9-ந் தேதி சாம்ராஜ் பாளையம் பிரிவு பகுதியில் கோரிக்கை மாநாடு நடத்த உள்ளனர்.

    • சோழர் கால பாசி அம்மன் கோவில் புனரமைப்பு தொல்லியல் துறை நிபுணர்கள் அறிக்கையின்படி முடிவு எடுக்கப்படும்.
    • மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில வழக்கறிஞர் அணி செய லாளர் கலந்தார் ஆசிக் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாசிபட்டினம் கி.பி. 875 முதல் கி.பி. 1090 வரையில் துறைமுகமாக இருந்துள்ளது. இங்குள்ள கடற்கரை அருகில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பாசி அம்மன் கோவில் மற்றும் மண்டபம் இருந்துள்ளது.

    இங்கு சோழர்களின் வெற்றியின் அடையாளமாக 8 கைகளுடன் அமர்ந்த நிலையில் பாசி அம்மன் சிலை இருந்துள்ளது. இந்தநிலையில் இந்த கோவில் தற்போது எந்தவித பராமரிப்புமின்றி சிதில மடைந்து காணப்படுகிறது. எனவே பல நூற்றாண்டுகள் பழமையான இந்த கோவிலை பாதுகாத்து மக்கள் வழிபாடு செய்வதற்கு புனரமைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோ ரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவிலின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வரு கிறது.

    இந்த கோவில் கட்டுமானங்கள் கருங்கற்களால் அமைந்துள்ளது. கோவில் உள் மண்டபம் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே இந்த கோவிலை புனரமைப்பு செய்வதற்கு தொல்லியல் வல்லுநர்களிடம் ஆலோ சனை பெற வேண்டியுள்ளது. எனவே அதற்கு உரிய கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

    • மீனாட்சி அம்மன் கோவிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் கோரிக்கை வைத்தனர்.
    • இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை பா.ஜ.க. பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் நிர்வாகிகள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது கலெக்டர். அனீஷ்சேகரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 15 வருடங்களுக்கு முன்பு கோவில் கோபுரங்களில் விரிசல் ஏற்பட்டது. தொல்லியல் துறை பரிந்துரைப்படி கனரக வாகனங்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. கோவில் கோபுரத்தை சுற்றி இருந்த காவல் ஆணையர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன.

    கோபுரத்தை சுற்றி 9 மீட்டர் உயரத்துக்கு கூடுதலாக கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் கட்டிட உரிமையாளர்கள் பூமிக்கு அடியில் பல மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் தோண்டி கட்டிடங்களை கட்டி வருகின்றனர். இதனால் கோவில் கோபுரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    கட்டிடங்களை உயர்த்து வதால், பிரகாரத்துக்குள் மழை நீர் தேங்கி, கோவிலின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் கோவில் பொலிவை இழந்து வருகிறது. கோவிலுக்குள் வாடகை கடைகள் தற்போது அகற்றப்பட்டு உள்ளன.

    ஆனால் தமிழக அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்து அறநிலைய துறையின் கீழ் உள்ள கோவில் சொத்துகளை குத்தகைக்கு விட புதிய உத்திரவு பிறப்பித்து உள்ளார். இதன் மூலம் அரசியல் செல்வாக்கு உள்ள வேறு நபர்களுக்கு கோவில் இடத்தை பல ஆண்டுகளுக்கு குத்தகை விட முயற்சிகள் நடக்கிறது.

    கோவிலுக்குள் பலத்த பாதுகாப்பு இருந்தும் தீ விபத்து ஏற்பட்டு தூண்கள், மண்டபங்கள் இடிந்து சேதம் அடைந்தது. எனவே மீனாட்சி அம்மன் கோவிலின் பழமையை பேணி காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல்லி யல் துறை அறிவுறுத்தியது. அங்குள்ள சேதம் அடைந்த மண்டபம், தூண்கள் இதுவரை சீரமைக்கப்பட வில்லை.

    உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் பழமை, பொலிவை பேணி காக்கும் வகையில், அதனை மத்திய அரசின் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிபா.ஜ.க.வித்தார்.

    ×