என் மலர்
நீங்கள் தேடியது "poompuhar"
- நம் தாய்மடி எனச் சொன்னோம்!
- இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்!
மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள "பூம்புகாரில்" , பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பட்டினப்பாலையின் பாடல் வரிகளை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நம் தாய்மடி எனச் சொன்னோம்!
இரும்பின் தொன்மையை உலகுக்கு உணர்த்தினோம்!
அடுத்து, "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்..." என நிறைந்து வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்!!!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சீர்காழி:
நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வானகிரியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30) மீனவர். இவர் கடந்த 18-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு கும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகை ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.
நேற்று வீடு திரும்பிய சரவணன் நகை பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் பூம்புகார் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ராகுல்ட்ராவிட், அகத்தியன் என்ற 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள்தான் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. அவர்கள நகையை ஒரு மின்கம்பம் அருகே புதைத்து வைத்திருந்தனர். அதனை போலீசார் பறிமுதல் செய்து சரவணனிடம் ஒப்படைத்தனர்.






