என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய்"

    • கிழிவது ஒரு இடம்? தைப்பது ஒரு இடமா?
    • தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்..

    திருச்சியில் நடைபெற்ற மொழிப் போர் தியாகிகள் நாள் வீரவணக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், 'அழுத்தத்துக்கு நானா பயப்படுவேன்? ஒரு காலத்திலும் பயப்பட மாட்டேன்' என்றெல்லாம் வீர வசனம் பேசியிருக்கிறார்.

    இதே விஜய், ஜெயலலிதாவிடம் எப்படி கை கட்டி நின்றார் என்பதை இந்த நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஒரு சினிமா படம் வெளியிட முடியாமல் போனதற்காக, ஜெயலலிதாவை சந்தித்து, "உங்களுக்கு என்றைக்கும் நாங்கள் எதிரி இல்லை" என்று அழுத்தத்துக்கு பயந்து தந்தையுடன் கை கட்டி நின்றவர்தான் விஜய். அவர்தான் இன்று வீரவசனம் பேசுகிறார்" எனப் பேசினார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத், 

    "தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்.. எந்த அழுத்தத்திற்கும் அடிபணிகிறவன் நான் இல்லை என்று முழங்கிய எங்கள் தலைவரை பார்த்து அமைச்சர் நேருவுக்கு ஏன் ஆத்திரம்? ஒரு படம் வெளிவருவதில் வரும் இடையூறை அதிகாரத்திலிருக்கிற முதலமைச்சரை சந்தித்து தீர்வு காண கேட்டால் அது என்ன பஞ்சமா? பாதகமா?

    தவெகவை பற்றி கவலைப்படுகின்ற நேரு தன்னுடைய துறையில் ரூ.2000 கோடிக்கு மேல் நடந்த முறைகேடுக்கு ED விடுத்த நோட்டிசுக்கு எங்கெல்லாம் ஓடி ஒழிந்தார்? கிழிவது ஒரு இடம்? தைப்பது ஒரு இடமா? முதலில் உங்கள் கிழிசலை தைத்துக்கொள்ளுங்கள்..!" என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

     

    • ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார்.
    • தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.

    நடிகர் விஜயின் 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஜன நாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் இவ்வழக்கு தனி நீதிபதியின் விசாரணை அனுப்பி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இரு நீதிபதிகள் உத்தரவை அடுத்து நீதிபதி ஆஷா மீண்டும் வழக்கை விசாரிக்கிறார்.

    இந்நிலையில், ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் வழக்கைத் திரும்பப் பெற்று, தணிக்கை குழுவின் ரிவைசிங் கமிட்டியை அணுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரிவைசிங் கமிட்டியிடம் செல்வதா அல்லது வழக்கை தொடர்வதா என்பது குறித்த இறுதி முடிவை பட தயாரிப்பு நிறுவனம் நாளை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

    • கட்சி நிர்வாகிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
    • கூட்டத்துக்கு த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமை தாங்குகிறார்.

    சட்டசபை தேர்தலை சந்திக்க விஜயின் த.வெ.க. ஆயத்தமாகி வருகிறது. களத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் கட்சி நிர்வாகிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, பிரசார அணி ஆகியவை நியமிக்கப்பட்டு உள்ள நிலையில் அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

    இந்த கூட்டங்களில் தேர்தலில் வெற்றிக்காக எப்படி பணியாற்றுவது? பூத் கமிட்டிகளை எவ்வாறு அமைப்பது? தொண்டர்களை அரவணைத்து கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வது என்பது குறித்து ஆலோசனை வழங்குகின்றனர்.

    முதல்கட்டமாக சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.சந்திரா அரங்கில் நடைபெறுகிறது.

    கூட்டத்துக்கு த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமை தாங்குகிறார். இதில் நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்குகின்றனர்.

    அடுத்தடுத்து பிற மாவட்டங்களிலும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. 

    • தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
    • தணிக்கை வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது

    நடிகர் விஜயின் 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஜன நாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் இவ்வழக்கு தனி நீதிபதியின் விசாரணை அனுப்பி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இரு நீதிபதிகள் உத்தரவை அடுத்து நீதிபதி ஆஷா மீண்டும் வழக்கை விசாரிக்கிறார்.

    தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக தணிக்கை வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகி இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. 

    • வீராப்பில் வார்த்தைகளைப் பார்த்துப் பேச வேண்டாம்.
    • தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட விசில் சின்னத்தை அறிமுகம் செய்தார்.

    தவெக தலைவர் விஜய் தலைமையில் நேற்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் அக்கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட விசில் சின்னத்தை அறிமுகம் செய்த விஜய் வழக்கம்போல் எழுச்சியுரை ஆற்றினார். குறிப்பாக அதிமுக  குறித்து முதல் முறையாக விஜய் விமர்சித்தார்.

     அக்கூட்டத்தில் பேசிய விஜய், "தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றி மாற்றி வாக்களித்து தற்போது அழுத்தத்தில் இருக்கிறார்கள். தீய சக்தி தி.மு.க., ஊழல் சக்தி அ.தி.மு.க. இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது" என்று அதிமுகவை முதல்முறையாக கடுமையாக தாக்கி பேசினார்.

    இதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில் அதிமுக இடம்பெற்ற என்டிஏ கூட்டணியின் பாஜகவை சேர்ந்த குஷ்பு விஜய் பேச்சுக்கு பதிலளித்துள்ளார்.

    குஷ்பு கூறியதாவது, "மேடையில் இருக்கும்போது விசில் சத்தம் கேட்டு, வீராப்பில் வார்த்தைகளைப் பார்த்துப் பேச வேண்டாம். தம்பி அரசியலுக்கு புதுசு, திருந்திவிடுவார்.

    அதிமுகவினர் அரசியலுக்கு நேற்று வந்தவர்கள் கிடையாது. அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, இபிஎஸ் என வேர் ஊன்றி இருக்கும் ஒரு கட்சி, சரணடைய வேண்டிய அவசியம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.   

    • முதலில் அவரது ரசிகர்களை கட்டுப்படுத்த முடிகிறதா?
    • அறையிலேயே அமர்ந்து அரசியல் செய்தால் எப்படி?

    தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து மாநிலத்தின் ஆளுங்கட்சியான திமுகவை மட்டுமே விமர்சித்தார். பாஜக தங்கள் கொள்கை எதிரி என்றுக் கூறிகொண்டாலும், அக்கட்சியின் பெயரைக் கூட பயன்படுத்தவில்லை என பல விமர்சனங்கள் எழுந்தது. மேலும் தமிழ்நாட்டின் மற்றொரு பெரும்கட்சியான அதிமுகவை தாக்கி எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை. இதற்கு விளக்கமளிக்கும் விதமாக கடந்தமுறை பேசிய விஜய், களத்தில் இருக்கும் கட்சிகளோடு மட்டும்தான் மோதல் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று மாமல்லபுரத்தில் நடந்த அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், அதிமுகவை "ஊழல் சக்தி" என்று விஜய் நேரடியாக விமர்சித்தார். முன்னாள் ஆட்சியாளர்கள் பாஜகவிற்கு அடிமையாக இருந்திருக்கிறார்கள், அவர்களை நம்பிப் பிரயோஜனம் இல்லை என்றும் குறிப்பிட்டார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் அண்ணாவின் கொள்கைகளை மறந்து மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

    இதற்கு அதிமுக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. நேற்று விஜய்யை விமர்சித்து அதிமுக ஐடி விங் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை விடப்பட்டது. பாஜக தலைவர்களும் பலர் விஜய்யை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் இந்தப் பேச்சு குறித்து பதிலளித்துள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,

    "அரசியலுக்கு வருகிறார், புதுமுகம் வரட்டும் என நினைத்தோம். நான் உண்மையாக அவரை வரவேற்றேன். ஆனால் யார் ஆதரித்தோமோ, எங்கள் காதையே கடித்தால் நாங்கள் சும்மா இருப்போமா? 41 பேர் இறந்துள்ளனர். எங்காவது இதுபோல் நடந்ததுண்டா? முதலில் அவரது ரசிகர்களை கட்டுப்படுத்த முடிகிறதா? உலகத்தில் எங்கும் கிடையாது, இறந்தவர்களின் அழைத்து வீட்டில் துக்கம் விசாரிப்பது.

    இது தமிழ்நாட்டில் புதிது. இதுதான் விஜய்யின் புதிய திட்டம். ஒரு புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளார். அரசியல் இயக்கம் தொடங்கிவிட்டு, அறையிலேயே அமர்ந்து அரசியல் செய்தால் எப்படி? இப்போது இருக்கும் புகழை வைத்து அப்படியே மக்களிடம் ஓட்டை வாங்கிவிடலாம் என நினைக்கிறீர்கள். அரசியல் இயக்கம் தொடங்கினாலே மக்களுக்கு களத்தில் சென்று பணியாற்றவேண்டும். பாருங்கள் இப்போதுதான் வந்தார், களத்தில் இறங்கி எவ்வாறு வேலைசெய்கிறார் என மக்கள் பேசவேண்டும்.

    வாயில் வடைசுடுவார். ஒவ்வொரு வீட்டிலும் ஓட்டு உள்ளதா? எந்த வீட்டில் உள்ளது? எத்தனை வீட்டிற்கு சென்று இவர் பார்த்தார்? கணக்கெடுத்தாரா? எல்லாம் பில்டப்தான், கதாநாயகனாக இருந்தவருக்கு பில்டப்தான் கொடுப்பார்கள்" என தெரிவித்துள்ளார். 

    • சென்சார் கிடைக்காததால் ஜன நாயகன் படம் இன்னும் வெளியாகவில்லை.
    • இன்று செய்தியாளர்களை சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேசினார்

    ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாகவிருந்து. ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் கிடைக்காததால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை.

    இப்படத்தில் இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய லோகேஷ் கனகராஜ், "வினோத் அண்ணாவும், விஜய் அண்ணாவும் ஜனநாயகனில் கேமியோ செய்ய அழைத்தார்கள்.. அவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும்" என்று தெரிவித்தார்.

    இதன்மூலம் ஜன நாயகன் படத்தில் கேமியோ ரோலில் நடித்ததை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார்.

    • பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு அரசு ஊழியர்களை ஏமாற்றி விட்டார்.
    • அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே சொல்லி இருக்கிறார்.

    நெல்லை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று நெல்லையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் அது மாநாடாகவே அமைந்துவிட்டது. இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்தாத அளவுக்கு இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்றார்கள். நிச்சயமாக உறுதியாக தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.

    தே.மு.தி.க. மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் அணி எங்களது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக ஒரு வார காலத்துக்குள் பதில் கிடைக்கும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் முழுக்க முழுக்க பொய்யான தகவல்களை வழங்கி வருகிறார். தேர்தல் வருவதால் தி.மு.க.விற்கு பயமும், நடுக்கமும் வந்து விட்டது.

    பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு அரசு ஊழியர்களை ஏமாற்றி விட்டார். இதன் மூலமாக அவர் அரசு ஊழியர்களுக்கு திருநெல்வேலி அல்வாவை கொடுத்துள்ளார். யாரையும் யாருக்கும் அடிமையாக வைக்கக்கூடிய கட்சி பா.ஜ.க. இல்லை. அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம்.

    தமிழக வெற்றிக்கழகத்தில் எத்தனை மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்பது கூட அதன் தலைவருக்கு தெரியாது. விஜய்க்கு பா.ஜ.க. எந்த அழுத்தமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ.க.வில் ஊழல் இல்லை. தீய சக்தி இல்லை. ஆகையால் பா.ஜ.க.வை பற்றி விஜய் பேசி இருக்க மாட்டார்.

    தி.மு.க.வை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என ஒற்றை எண்ணத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒரே குடைக்குள் வர வேண்டும் என்பதே எனது விருப்பம். அந்த வகையில் தான் டி.டி.வி. தினகரனும் எங்கள் கூட்டணிக்கு வந்துள்ளார். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே சொல்லி இருக்கிறார் என்றார். 

    • தம்பி விஜய்க்கு இன்னும் அனுபவம் போதவில்லை.
    • NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விஜய் எந்த பிரச்சனையும் இல்லாமல் அரசியல் செய்யலாம்.

    மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய விஜய், "ஊழல் சக்தி அ.தி.மு.க. இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது" என்று அதிமுகவை முதல்முறையாக கடுமையாக தாக்கி பேசினார்.

    இதற்கு விஜய் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என்று அதிமுக ஐடி விங் பதிலடி கொடுத்தது. இந்நிலையில், இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசைஇடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "தம்பி விஜய்க்கு இன்னும் அனுபவம் போதவில்லை. தனித்து விடப்பட்டதால் இப்படி பேசுகிறார் என்று நினைக்கிறேன். அவர் இப்படி பேசுவதால் NDA கூட்டணியின் பலம் குறைந்துவிட போவதில்லை. NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெரும். போட்டி என்பது திமுக கூட்டணிக்கும் NDA கூட்டணிக்கும் தான்.

    விஜய்க்கு திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற ன்னம் இருந்தது என்றால்... விஜய் ஒரு 0 மாதிரி... தனியா இருந்தா மதிப்பு கிடையாது. ஆனால் அதே 0 ஒருவர் கூட இருந்தால் அதுக்கு மதிப்பு உண்டு.

    NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விஜய் எந்த பிரச்சனையும் இல்லாமல் அரசியல் செய்யலாம். ஆனால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.

    • அழுத்தமா? நமக்கா? அழுத்தத்திற்கெல்லாம் அடங்குகிற ஆளா நான் என்று விஜய் தெரிவித்தார்.
    • சிபிஐ விசாரணை நெருக்கடி குறித்து விஜய் இவ்வாறு தெரிவித்தார்.

    மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய விஜய், "அழுத்தமா? நமக்கா? அழுத்தத்திற்கெல்லாம் அடங்குகிற ஆளா நான்" என்று தெரிவித்தார்.

    ஜனநாயகம் சென்சார் பிரச்சனை, கரூர் கூட்டநெரிசல் தொடர்பான சிபிஐ விசாரணை நெருக்கடி குறித்து விஜய் இவ்வாறு தெரிவித்தார்.

    இந்நிலையில், திருச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "ஒரு நடிகர் இப்போது கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் இன்றையைக்கு அவருடைய செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகிறபோது, 'அழுத்தத்திற்கு நான் ஒருபோதும் பயப்படமாட்டேன்' என்று வீரவசனம் பேசியிருக்கிறார். அவர் எப்படி ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். ஒரு சினிமா படம் வெளியாகாமல் போனதற்காக அவரும் அவரது தந்தையும் முதலமைச்சரிடம் கைகட்டி நின்றி என்றைக்கும் நான் உங்களுக்கு எதிரி இல்லை என்றெல்லாம் சொல்லி... அழுத்தத்திற்கு பயந்து கைகட்டி நின்றவர் தான் இன்று வீர வசனம் பேசுகிறார்" என்று தெரிவித்தார்.

    • 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதி.
    • தமிழக முதலமைச்சராக விஜய் வருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் குழு மணி பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன். 1972-ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபோதே அதில் தன்னை இணைத்துக்கொண்டார். மக்களின் கவனத்தை ஈர்க்கும் அரசியல் களப்பணிகளில் ஈடுபட்டு தன்னை முன்னிலைப்படுத்திய அவர், எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் அ.தி.மு.க. ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்த போது ஜெயலலிதா அணியில் இடம் பெற்றார்.

    கடந்த 1991-ல் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வேளாண்மை துறை அமைச்சரானார். பல்வேறு மனக்கசப்புகளால் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறிய அவர் 2001-ல் தமிழர் பூமி என்ற புதிய கட்சியை தொடங்கினார். ஆனாலும் அதன் செயல்பாடுகள் நீடிக்கவில்லை.

    அதன் பின்னர் தே.மு.தி.க.வுக்கு சென்ற கு.ப.கிருஷ்ணன், மீண்டும் தாய் கழகமான அ.தி.மு.க.வில் இணைந்தார். கட்சியும் அவரை ஏற்றுக்கொண்டு 2011 சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

    ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பி.எஸ்.சின் கை ஓங்கும் என்ற நம்பிக்கையில் அவரது தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் இணைந்து செயல்பட்டார். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி மவுனம் காத்த அவர் நேற்று சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    இதுகுறித்து கு.ப.கிருஷ்ணன் கூறுகையில், அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க எவ்வளவோ முயற்சிகள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டும் கடைசி வரை அது நிறைவேறவில்லை. மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை கூட அவர்கள் பயன்படுத்தவில்லை. அந்த அளவுக்கு அ.தி.மு.க. பா.ஜ.க.விடம் அடிபணிந்துள்ளது.

    ஆனால் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை தனது கூட்டங்களில் பயன்படுத்துகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை தருவேன் என்று எங்கள் தலைவர்களை உயர்த்தி பிடித்து பேசுகிறார். அவர்களை போன்ற பெரிய தலைவர்களுடன் பணியாற்றிய எனக்கு விஜய்யுடன் பணியாற்றுவதில் எந்த நெருடலும் இல்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்கள் எந்த பக்கம் இருக்கிறார்களோ அந்தப்பக்கம் தான் நாமும் இருக்க வேண்டும். மனதில் இருப்பதை சொல்லி நிறைவேற்ற முடியும் என கருதுகிறேன். வேறு எனக்கு பதவி ஆசை கிடையாது என்றார்.

    தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க.வும் வலுவான கூட்டணி அமைத்துள்ளதே எனக் கேட்டதற்கு, நீங்களும், நானும் இங்கே தான் இருப்போம். களத்தில் வேடிக்கை பார்ப்போம். 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதி. தமிழக முதலமைச்சராக விஜய் வருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.

    • ஊழல் சக்தி அ.தி.மு.க. இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது என்று விஜய் பேசினார்.
    • ஊழல் சக்தி அ.தி.மு.க. என்று விஜய் விமர்சனம் செய்ததற்கு அதிமுக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.

    மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய விஜய், "தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றி மாற்றி வாக்களித்து தற்போது அழுத்தத்தில் இருக்கிறார்கள். தீய சக்தி தி.மு.க., ஊழல் சக்தி அ.தி.மு.க. இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது" என்று அதிமுகவை முதல்முறையாக கடுமையாக தாக்கி பேசினார்.

    இந்நிலையில், ஊழல் சக்தி அ.தி.மு.க. என்று விஜய் விமர்சனம் செய்ததற்கு அதிமுக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.

    அதிமுக ஐடி விங் பவெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.

    'மத்திய அரசிற்கு அடிமை' என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு…!

    தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து , வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..?

    இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகீறீர்களா..?

    ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் அதே வகை தான் பனையூர்காரரே..!

    அண்ணா திமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்தாட்சியில்

    கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா?

    நீங்கள் செய்தீர்களோ ? இல்லையோ? ஆனால் கருரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் ஒரு காரணம்தானே, அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல், என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களை ? அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை…!

    உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற level பண்ணையார்தனம்…! இதற்காக உங்களுக்கு Doctor பட்டமே கொடுக்கலாம்…!

    கரூர் சென்று கண்ணீரைத் துடைக்காமல் , Glycerin கண்ணீரோடு , Photo-க்களை வைத்து பேருக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சி நடத்திவிட்டு குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், அந்த நிகழ்ச்சியிலும் தன்னை Self Promotion செய்து கொண்ட Narcissistic Behaviour மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம்.

    அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத , தனது Fan'sஐ கூட ஏமாற்றும் , இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்துவிட கூடாது ….!

    நீங்கள் எங்கள் கழகம் குறித்து, மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே..!அறிவாலய குப்பையோடு, பனையூர் குப்பையையும் கூட்டியெறிந்திடுவோமாக" என்று பதிவிட்டுள்ளார்.

    ×