search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவாலயங்கள்"

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்தீஸ்வரர் மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜாமணி அய்யர் நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    இதேபோல கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசி விசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்பற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ்மலை ஜோதிலிங்கசாமி கோவில், பரமார்த்தலிங்கசுவாமி கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • சோழவந்தான் பகுதியில் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • நந்திக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சோமவார பிரதோஷ விழா நடந்தது. சோழவந்தான் பிரளயநாத கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்திக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை வலம் வந்தனர். எம்விஎம் குழுமத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன், மற்றும் கோவில் நிர்வா கத்தினர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதேபோல் மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவாலவாய நல்லூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வர முடையார் கோவில் தென்கரை அகிலாண்டே சுவரி சமேத மூலநாதசுவாமி ஆகிய கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

    • தொண்டி, திருவாடானை, சோழவந்தான் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.



    சோழவந்தான் பிரளயநாதர் கோவில் பிரதோஷ விழாவில் சுவாமி வலம் வந்த காட்சி.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருவாடானை பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. தொண்டி அருகே உள்ள நம்புதாளை அன்னபூரனேசுவரி சமேத நம்பு ஈசுவரர் கோவிலில் நந்திக்கு பால், பழம், பன்னீர், இளநீர், தயிர், விபூதி, அரிசி மாவு, அபி ஷேக பொடி, பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    உற்சவ மூர்த்தி சுவாமி வீதி உலா நடந்தது. பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, காலபைரவர், நாகநாதர் மற்றும் கல்யாண நவக்கிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு சர்க்கரைப்பொங்கல், எள் சாதம், சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமி நாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

    இதேபோல் திருவாடானை ஆதிரத்தினேசுவரர், ஓரியூர் சேயுமானோர், தீர்த்தாண்ட தானம் சர்வ தீர்த்தேசுவரர், தளிர் மருங்கூர் சிவாலயம், தொண்டி சிதம்பரேசுவரர் சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளயநாதர் சுவாமி சிவன் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. சனீசுவரலிங்கம் நந்திகேசு வரருக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர்.

    ஏற்பாடுகளை பா.ஜ.க. விவசாய அணி மாநில துணைத்தலைவர், எம்.வி.எம். குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவில் பட்டி மருததோதைய ஈசுவரர் கோவிலிலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலிலும், தென்கரை அகிலாண்டே சுவரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈசுவரர் கோவிலிலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலிலும் பிரதோஷ விழா நடந்தது.

    • சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும் நடந்தது
    • திரளான பக்தர்கள் பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. குமரி மாவட்டத்தி லேயே மிகவும் உயரமான 5½ அடி உயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் அமைந்து உள்ளது சிறப்பாகும்.

    வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது.இதையொட்டிமாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணை, மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம்ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

    பின்னர் 5.30 மணிக்கு மூலவரான சிவபெரு மானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு பள்ளியறை எழுந்திருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    இதேபோல கன்னியா குமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்க புரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசிவிசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்பற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ் மலை ஜோதி லிங்கசாமி கோவில், பரமார்த்த லிங்க சுவாமி கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயி னார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் கார்த்திகை மாத சோமவார பிரதோசத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை பகுதியில் சிவாலயங்களில் சனிபிரதோஷவிழா நடந்தது.
    • 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் வலம்வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்று கரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் சனிபிரதோஷத்தை முன்னிட்டு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு நந்தி வாகனத்தில் எழுந்த ருளி கோவிலில் உள்ள பிரகாரத்தில் வலம்வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு பள்ளியறை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    மானாமதுரை-பரமக்குடி சாலையில் உள்ள குறிச்சி வழிவிடு பெரிய நாச்சி அம்மன் கோவிலில் உள்ள காசிவிஸ்வநாதர் திருலிங்க திருமேனிக்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    நாளை (திங்கட்கிழமை) காலை வருஷாபிஷேக மும் ஐப்பசி மாத அன்னாபிஷேகம் மற்றும் பவுர்ணமி பூஜையும் இங்கு நடைபெறுகிறது.

    இதேபோல் நாகலிங்கம் நகர் அருணாச்சலேஸ்வரர், இடைக்காட்டூர் மணிகண்டேஸ்வரர், வேம்பத்தூர் கைலாசநாதர், மேலெநெட்டூர் சொர்ண வாரிஸ்வர் கோவில்களிலும் சனிபிரதோஷம் பூஜைகள் நடைபெற்றது.

    • சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் சனி மகா பிரதோஷ விழா நடந்தது.
    • சிவனுக்கு பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் சனி மகா பிரதோஷ விழா நடந்தது. சனீஸ்வரன். லிங்கம். நந்திகேஸ்வரர். சிவனுக்கு பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் சுவாமியுடன் கோவிலை வலம் வந்தனர். சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது. பா.ஜனதா விவசாய அணி மாநில துணைத் தலைவர், எம்.வி.எம். குழும தலைவர் மணி முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம்.வி.எம். தாளாளர்-சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருதோதைய ஈஸ்வரர் ஆலயத்திலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் சனி பிரதோஷ விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பிரதோச நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும் என முன்னோர்கள் கூறுகின்றனர்.
    • குரு பகவான் பிரதோசத்தை முன்னிட்டு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவாலயங்களில் பிரதோசதினத்தில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

    சிவபெருமானை தினமும் வணங்கினாலும் பிரதோச நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும் என முன்னோர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் குரு பகவான் பிரதோசத்தை முன்னிட்டு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிரதோசத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது. காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், அருளானந்த ஈஸ்வரர்கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.

    • திருநட்டாலம் மகாதேவர் திருக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆய்வின் போது அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ், மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.

    திற்பரப்பு மகாதேவர் கோவில், திரு நந்தி கரை மகாதேவர் கோவில் , பொன்மனை மகாதேவர் கோவிலில் அவர் ஆய்வு செய்தார். இன்று 2-வது நாளாக 12-வது சிவாலயமான திருநட்டாலம் மகாதேவர் திருக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.

    அங்கு ரூ.95 லட்சம் செலவில் நடைபெறும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.பன்னிபாகம், அருள்மிகு மகாதேவர் திருக்கோவில், பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில்களிலும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது :-

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் ஏற்கனவே திருப்பணிகள் தொடங்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும் குடமுழுக்கு நடைபெறாத கோவில்களை உடனடியாக பட்டியலிட்டு அந்த திருக்கோவில்களில் குடமுழுக்கு நடைபெற அறிவுறுத்தியிருந்தார்.

    அந்த வகையில் ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட கோயில்களில் கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறிய கோவில்களை கணக்கெடுத்து புகைப்பட ஆல்பம் தயாரித்துள்ளோம்.

    ஒவ்வொரு கோவிலுக்கும் ரூ. 10 லட்சம் செலவில் மொத்தம் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் ரூ. 84 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மீதமுள்ள 11 சிவாலயங்களிலும் திருப்ப ணிகள் மேற்கொள்ளப்படும்.

    மகா சிவராத்திரிக்கு முன்னதாக திருப்பணிகள் நிறைவு செய்யப்படும். குமரி மாவட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எல்லா வித நன்மைகள் பெறும் அளவிற்கு தெய்வீக பணிகள் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் இசைக் கல்லூரி அமைப்பது தொடர்பாக வல்லுனர் குழுவினரை கொண்டு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ், மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    ×