search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு
    X

    குமரி மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு

    • திருநட்டாலம் மகாதேவர் திருக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆய்வின் போது அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ், மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.

    திற்பரப்பு மகாதேவர் கோவில், திரு நந்தி கரை மகாதேவர் கோவில் , பொன்மனை மகாதேவர் கோவிலில் அவர் ஆய்வு செய்தார். இன்று 2-வது நாளாக 12-வது சிவாலயமான திருநட்டாலம் மகாதேவர் திருக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.

    அங்கு ரூ.95 லட்சம் செலவில் நடைபெறும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.பன்னிபாகம், அருள்மிகு மகாதேவர் திருக்கோவில், பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில்களிலும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது :-

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் ஏற்கனவே திருப்பணிகள் தொடங்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும் குடமுழுக்கு நடைபெறாத கோவில்களை உடனடியாக பட்டியலிட்டு அந்த திருக்கோவில்களில் குடமுழுக்கு நடைபெற அறிவுறுத்தியிருந்தார்.

    அந்த வகையில் ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட கோயில்களில் கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறிய கோவில்களை கணக்கெடுத்து புகைப்பட ஆல்பம் தயாரித்துள்ளோம்.

    ஒவ்வொரு கோவிலுக்கும் ரூ. 10 லட்சம் செலவில் மொத்தம் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் ரூ. 84 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மீதமுள்ள 11 சிவாலயங்களிலும் திருப்ப ணிகள் மேற்கொள்ளப்படும்.

    மகா சிவராத்திரிக்கு முன்னதாக திருப்பணிகள் நிறைவு செய்யப்படும். குமரி மாவட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எல்லா வித நன்மைகள் பெறும் அளவிற்கு தெய்வீக பணிகள் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் இசைக் கல்லூரி அமைப்பது தொடர்பாக வல்லுனர் குழுவினரை கொண்டு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ், மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    Next Story
    ×