search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிபோதை தகராறு"

    • ராமலட்சுமி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஆண்டியப்பன் உடலில் சரமாரியாக வெட்டினார்.
    • ராமலெட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடை அன்னை நாகம்மாள் தெருவை சேர்ந்தவர் வேலு என்ற ஆண்டியப்பன் (வயது 50). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராமலட்சுமி (45).

    ஆண்டியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 10 நாட்களாக ஆண்டியப்பன் குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் மது போதையில் அடிக்கடி மனைவியிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் மது குடித்து விட்டு வந்த ஆண்டியப்பன் ராம லட்சுமியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராமலட்சுமி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஆண்டியப்பன் உடலில் சரமாரியாக வெட்டினார். இதனால் ஆண்டியப்பன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அதன் பின்னர் கோபத்துடன் ராமலட்சுமி தனது அறையில் போய் படுத்துக்கொண்டார்.

    இன்று காலையில் எழுந்த ராமலட்சுமி பத்தமடை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவர் நடந்த விபரங்களை கூறியதும், போலீசார் ராம லட்சுமியின் வீட்டுக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆண்டியப்பனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், ராமலெட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோகன்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது.
    • கொலை சம்பவம் வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.வி.பழனிசாமி நகரில் உள்ள ஒரு வீட்டில் நாமக்கல் மாவட்டம் பரமத்தியை சேர்ந்த மோகன்ராஜ்(வயது 31), திருப்பூர் திருமுருகன்பூண்டியை சேர்ந்த உசேன் (35), அவரது சகோதரர் காதர்(40) மற்றும் கரூரை சேர்ந்த அருண் (25) ஆகியோர் தங்கியிருந்து பெயிண்டர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை அவர்கள் தங்கியிருந்த வீடு நீண்டநேரமாகியும் திறக்கப்பட வில்லை. இதையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து பார்த்த போது உள்ளே மோகன்ராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உசேன் பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் உடனே இதுகுறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மோகன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உசேனையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மோகன்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவருடன் தங்கியிருந்த அருண், காதர் ஆகியோரை காணவில்லை. இதனால் அவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து தலைமறைவான அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். போதையில் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். வேறு ஏதேனும் காரணமா என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2பேரும் பிடிபட்டால் இந்த கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். கொலை நடந்த இடத்தில் தடயவியல் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆய்வு செய்தார். இந்த கொலை சம்பவம் வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • மதுகுடித்த போது ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை வெட்டி கொலை செய்து விட்டதாக தெரிவித்தனர்.
    • கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள கரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சி, பெருமாள்நகர்,10-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது24). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். நேற்றுமாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே பலத்த வெட்டுக்காயத்துடன் வெங்கடேசன் இறந்து கிடந்தார். இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வெங்கடேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேசன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இது தொடர்பாக கொலையுண்ட வெங்கடேசனின் நண்பர்களான, பெருமாள் நகரை சேர்ந்த நரேஷ் குமார், தினேஷ் ஆகிய2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது நண்பர்கள் அனைவரும் மதுகுடித்த போது ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை வெட்டி கொலை செய்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும்இந்த கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள கரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கண் மற்றும் மூக்கு உள்ளிட்ட இடங்களில் கைகளால் தாக்கி உள்ளார்.
    • தினகரன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம் :

    தாராபுரம் குப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் , நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பல்லடம் பகுதியில் வசூல் செய்து விட்டு, இரவு நேரம் ஆகிவிட்டதால், பல்லடம் ராயர் பாளையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே தங்கி இருந்த ஒருவர் குடிபோதையில் விஜயகுமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் விஜயகுமாரை கண் மற்றும் மூக்கு உள்ளிட்ட இடங்களில் கைகளால் தாக்கி உள்ளார்.

    இதில் காயம் அடைந்த விஜயகுமார் பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் விஜயகுமாரை தாக்கிய ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் தினகரன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சூளகிரி அருகே குடிபோதை தகராறில் நண்பரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த அத்திமுகம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி. இவரது மகன் ரமேஷ் (23). நண்பர். இவர் சம்பவத்தன்று தனது நண்பர் நாகராஜ் உள்பட 5பேருடன் அதேபகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் மது குடித்தனர். அப்போது அவர்களுக்கு போதை தலைகேறியது.

    இதில் ரமேசும், நாகராஜும் தனியாக சென்று தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ் மறைத்து வைத்திருந்த பட்டன் கத்தியை எடுத்து ரமேசின் வயிற்றில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்து கிடந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீசார் வழக்குபதிவு செய்து நாகராஜியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
    ×