search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் அருகே குடிபோதை தகராறில் பெயிண்டர் அடித்துக்கொலை
    X

    திருப்பூர் அருகே குடிபோதை தகராறில் பெயிண்டர் அடித்துக்கொலை

    • மோகன்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது.
    • கொலை சம்பவம் வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.வி.பழனிசாமி நகரில் உள்ள ஒரு வீட்டில் நாமக்கல் மாவட்டம் பரமத்தியை சேர்ந்த மோகன்ராஜ்(வயது 31), திருப்பூர் திருமுருகன்பூண்டியை சேர்ந்த உசேன் (35), அவரது சகோதரர் காதர்(40) மற்றும் கரூரை சேர்ந்த அருண் (25) ஆகியோர் தங்கியிருந்து பெயிண்டர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை அவர்கள் தங்கியிருந்த வீடு நீண்டநேரமாகியும் திறக்கப்பட வில்லை. இதையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து பார்த்த போது உள்ளே மோகன்ராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். உசேன் பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் உடனே இதுகுறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மோகன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உசேனையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மோகன்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவருடன் தங்கியிருந்த அருண், காதர் ஆகியோரை காணவில்லை. இதனால் அவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையடுத்து தலைமறைவான அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். போதையில் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். வேறு ஏதேனும் காரணமா என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2பேரும் பிடிபட்டால் இந்த கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். கொலை நடந்த இடத்தில் தடயவியல் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆய்வு செய்தார். இந்த கொலை சம்பவம் வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    Next Story
    ×