search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிபோதையில் தகராறு -நண்பரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
    X

    குடிபோதையில் தகராறு -நண்பரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

    சூளகிரி அருகே குடிபோதை தகராறில் நண்பரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த அத்திமுகம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி. இவரது மகன் ரமேஷ் (23). நண்பர். இவர் சம்பவத்தன்று தனது நண்பர் நாகராஜ் உள்பட 5பேருடன் அதேபகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் மது குடித்தனர். அப்போது அவர்களுக்கு போதை தலைகேறியது.

    இதில் ரமேசும், நாகராஜும் தனியாக சென்று தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ் மறைத்து வைத்திருந்த பட்டன் கத்தியை எடுத்து ரமேசின் வயிற்றில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்து கிடந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீசார் வழக்குபதிவு செய்து நாகராஜியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
    Next Story
    ×