search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Finance Company owner"

    • பிரேமானந்த் பொட்டல்காடு விலக்கு பகுதியில் சென்ற போது எதிரே வந்த கார் அவர் மீது மோதியது.
    • முத்தையாபுரம் போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி கீழத்தெருவை சேர்ந்தவர் பிரேமானந்த் (வயது45). இவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

    கார் மோதல்

    தற்போது இவர் குடும்பத்துடன் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் ஆழ்வார்திரு நகரிக்கு சென்றார். பின்னர் மீண்டும் இரவில் தூத்துக்கு டிக்கு திரும்பினார். அவர் பொட்டல்காடு விலக்கு பகுதியில் சென்ற போது எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார்.

    தசகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முத்தையாபுரம் போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வை த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரி ழந்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண் மற்றும் மூக்கு உள்ளிட்ட இடங்களில் கைகளால் தாக்கி உள்ளார்.
    • தினகரன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம் :

    தாராபுரம் குப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் , நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பல்லடம் பகுதியில் வசூல் செய்து விட்டு, இரவு நேரம் ஆகிவிட்டதால், பல்லடம் ராயர் பாளையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே தங்கி இருந்த ஒருவர் குடிபோதையில் விஜயகுமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் விஜயகுமாரை கண் மற்றும் மூக்கு உள்ளிட்ட இடங்களில் கைகளால் தாக்கி உள்ளார்.

    இதில் காயம் அடைந்த விஜயகுமார் பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் விஜயகுமாரை தாக்கிய ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் தினகரன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×