search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏவுகணைகள்"

    • இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏமன், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கிறது
    • அமெரிக்க கடற்படை டெஸ்ட்ராயர் போர்கப்பல்களை பயன்படுத்தி தாக்குதலை முறியடித்தது

    மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று ஏமன் (Yemen). 90களில் ஏமன் நாட்டில் உருவானது ஹவுதி (Houthi) எனப்படும் பயங்கரவாத அமைப்பு.

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரிடையே தொடங்கிய போர் 90 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏமன், கத்தார், லெபனான் மற்றும் ஈரான், ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் நாடுகள்.

    செங்கடல் (Red Sea) பகுதியில் அமெரிக்கா மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகள் "ஆபரேஷன் பிராஸ்பரிட்டி கார்டியன்" (Operation Prosperity Guardian) எனும் அப்பகுதி கடல் வழித்தடத்தில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இணைந்துள்ளன.

    இந்நிலையில், நேற்று முன்னிரவு 09:15 மணியளவில் தெற்கு செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகளால் தாக்க முனைந்தனர்.

    இவற்றில் 18 ஒரு வழி டிரோன்களும், 2 கப்பல்களை தாக்கும் க்ரூயிஸ் ஏவுகணைகளும் (cruise missiles) மற்றும் கப்பல்களை தாக்கும் பெரும் தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றும் அடங்கும்.

    ஆனால், ஹவுதியின் இத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்டு அந்த தொடர் ஏவுகணைகளை செயலிழக்க செய்ததாக அமெரிக்க கடற்படையின் மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது.

    மனித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இன்றி நடந்த இந்த தாக்குதல் முறியடிப்பு நடவடிக்கை எந்த கப்பலுக்கும் சேதமின்றி நடைபெற்றது.

    "டெஸ்ட்ராயர்" (destroyer) எனப்படும் போர்கப்பல்களும் இரண்டும், எஃப்-18 (F-18) ரக போர் விமானங்களும் இந்த முறியடிப்பில் அமெரிக்க கடற்படையால் ஈடுபடுத்தப்பட்டன.

    • ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணைகளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
    • கடந்த 3 நாளில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் ராணுவம்-காசாவின் ஹமாஸ் ஆயுதக்குழு இடையிலான போா் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிது. இந்த விவகாரத்தில் பேசுபொருள் ஆகியிருக்கும் மற்றொரு அமைப்பு ஹவுதி.

    செங்கடலில் இஸ்ரேலை நோக்கிப் பயணிக்கும் அல்லது இஸ்ரேலிலிருந்து பயணிக்கும் சரக்கு கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதன் மூலம் உலக நாடுகளை கவலைகொள்ளச் செய்திருப்பவர்கள் ஏமனை தலைமையிடமாக கொண்ட இந்த ஹவுதி கிளா்ச்சியாளா்கள்.

    உலகின் பிரதான கிழக்கு-மேற்கு வா்த்தக வழித்தடமாக செங்கடல் அமைந்துள்ளது. இந்தச் செங்கடலில் வா்த்தக கப்பல்கள் மீது ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருவதன் மூலம் சூயஸ் கால்வாயை அணுகுவது பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.

    சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவுடன் ஐரோப்பாவையும், வட அமெரிக்காவையும் இணைக்கும் முக்கிய வா்த்தகப் பாதையை ஹவுதி அமைப்பினா் சீா்குலைத்துள்ளனா். இந்தப் பாதையையே பல கப்பல்கள் தவிா்க்கத் தொடங்கியுள்ள நிலையில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வுக்கும் வழிவகுத்துள்ளது.

    இதற்கிடையே, சில தினங்களுக்கு முன் செங்கடல் பகுதியைக் கடந்த ஒரு கப்பல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் உள்ளிட்ட தாக்குதல்களை ஹவுதி அமைப்பினா் நடத்தினர். அதனை முறியடிக்கும் விதமாக அமெரிக்க ராணுவப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்தது.

    இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணையை அமெரிக்க ராணுவப் படை சுட்டு வீழ்த்தியது. கடந்த 3 நாட்களில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 10 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து தாக்குதலை நடத்தியுள்ளனர் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்.
    • F-18 போர் விமானம் இந்த தடுப்பு நடவடிக்கையில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதில் செங்கடல் பகுதியில் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து போர் கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய டிரோன்கள், ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் இடைமறித்து சுட்டு வீழ்த்தியது.

    செங்கடல் பகுதியில் சென்ற கப்பல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தினர். இதையடுத்து அமெரிக்க ராணுவப் படைகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு ஏவுகணை, டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

    10 மணி நேர கால இடைவெளியில் 12 டிரோன்கள், மூன்று கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் இரண்டு தரைவழி தாக்குதல் ஏவுகணைகளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் கப்பல்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

    • 3 ஏவுகணைகளும் தவறுதலாக விண்ணில் செலுத்தப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்து உள்ளார்.
    • கிராமங்களில் விழுந்த ஏவுகணைகளை தேடும் பணியில் ராணுவ வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டனர்.

    பொக்ரான்:

    ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் உள்ள ஜெய்சல்மார் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    பாலைவன பகுதியான இங்கு பயங்கரவாதிகள் முகாம்களை அழிப்பது, மறைவிடங்களில் தாக்குதல் நடத்துவது தொடர்பாக ராணுவ வீரர்கள் பயிற்சியை மேற்கொள்வார்கள்.

    வழக்கம் போல ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது இங்கிருந்து 3 ஏவுகணைகள் தவறுதலாக விண்ணில் செலுத்தப்பட்டது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த ஏவுகணைகள் விண்ணில் பாதை மாறி எல்லைக்கு அப்பால் சென்று அங்கிருந்த கிராமங்களில் உள்ள வயல்வெளி பகுதியில் விழுந்து நொறுங்கியது.

    அந்த சமயம் பயங்கர வெடிசத்தம் போல கேட்டது. ஏவுகணை விழுந்த பகுதியில் பெரிய பள்ளமும் ஏற்பட்டது. இந்த 3 ஏவுகணைகளும் தவறுதலாக விண்ணில் செலுத்தப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்து உள்ளார்.

    இந்த ஏவுகணைகள் 10 முதல் 25 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது ஆகும்.

    கிராமங்களில் விழுந்த ஏவுகணைகளை தேடும் பணியில் ராணுவ வீரர்களும், போலீசாரும் ஈடுபட்டனர். இதில் ஆஜசர் என்ற கிராமத்தில் ஒரு ஏவுகணையின் சிதறிய பாகங்களும், அருகில் இருந்த மற்றொரு கிராமத்தில் 2-வது ஏவுகணையின் பாகங்களும் கண்டு பிடிக்கப்பட்டன.

    ஆனால் 3-வது ஏவுகணை எங்கே விழுந்தது? என்று தெரியவில்லை. அதனை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.

    ஏவுகணை விழுந்ததில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.

    • உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது.
    • ராடார் எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய ரஷியா, பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஏராளமான ஏவுகணைகளை ஏவி உக்ரைனை நிலைகுலையச் செய்தது. அவர்களுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறது. அதி நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு ரஷ்ய பிராந்தியத்தில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 4 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா கூறி உள்ளது.

    பெல்கோரோட் பிராந்தியத்தின் வான்வெளியில் நான்கு அமெரிக்க 'ஹார்ம்' ராடார் எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த பிராந்தியம் உக்ரைன் தாக்குதல்களால் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும் கூறி உள்ளது.

    • உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • இந்தப் போரில் பல்வேறு வகையான ஏவுகணைகளை ரஷியா ஏவியுள்ளது.

    கீவ்:

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் நகரங்கள் மீது இரவு, பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன ரஷிய படைகள்.

    ரஷியா ராணுவம் 3000-க்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது என உக்ரைன் பாதுகாப்புத்துறை சமீபத்தில் குற்றம் சாட்டியது.

    இந்நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்கீவ் நகரில் ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள பள்ளிக்கூடம் இடிந்து சேதமானது. தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் பணியினர் 3 உடல்களைக் கைப்பற்றினர். மேலும் காயமடைந்த 23 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மீட்புக்குழு தெரிவித்தது.

    ரஷிய ராணுவம் பள்ளிக்கூடம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது என உக்ரைன் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • இந்தப் போரில் பல்வேறு வகையான ஏவுகணைகளை ரஷியா ஏவியுள்ளது.

    கீவ்:

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் நகரங்கள் மீது இரவு, பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன ரஷிய படைகள்.

    இந்நிலையில், உக்ரைன் விமானப்படை தனது முகநூல் பக்கத்தில், ரஷியா 3000-க்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.

    குரூஸ் ஏவுகணைகள், வான் மேற்பரப்பு ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள், பாஸ்டன் கடலோர அமைப்பின் ஓனிக்ஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தின.

    கப்பல் கட்டும் தளம் உள்பட தொழில்துறை கட்டமைப்புகள், பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ச்சியாக ஏவுகணைகள் வீசப்பட்டன என தெரிவித்துள்ளது.

    ×