search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pokhran"

    • உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் ராணுவ ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
    • இந்த ஒத்திகை பயிற்சியை பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று 'பாரத் ஷக்தி' என்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து முப்படைகளின் ஒத்திகைப் பயிற்சியும் நடத்தப்பட்டது. சுமார் 50 நிமிடங்கள் இந்தப் பயிற்சி நடைபெற்றது.

    இந்த பயிற்சியில் கடற்படை ஏவுகணைகள், விமானப்படை தேஜஸ் இலகுரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள், டேங்கர்கள் உள்பட பல்வேறு ராணுவ உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

    துல்லியமான வழிகாட்டும் ஏவுகணை, தகவல் தொழில்நுட்ப அமைப்பு, தானியங்கி ஸ்பெக்ட்ரம் கண்காணிப்பு அமைப்பு போன்ற புது தொழில்நுட்பங்களும் பரிசோதிக்கப்பட்டன.

    இந்நிலையில், இந்த ஒத்திகை பயிற்சியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்வையிட்டார். பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே ஆகியோரும் பார்வையிட்டனர். மேலும், 40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பார்வையிட்டனர்.

    ராஜஸ்தான் மாநிலம், பொக்ரான் பகுதியில் இன்று இந்திய போர் விமானங்களின் நிகழ்த்திய மெய்சிலிர்க்கும் சாகசங்களை விமானப்படை தளபதி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். #IAchief #SachinTendulkar
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னர் இந்தியா வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை நடத்திய பொக்ரான் பகுதியில்  இந்திய விமானப்படையின் வல்லைமையையும், நமது வெடிகுண்டுகளின் ஆற்றலையும் பறைசாற்றும் வகையில் ‘வாயு சக்தி’ என்று போர் சாகசப் பயிற்சிகள் இன்று நடைபெற்றன.



    இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து, சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி சாகங்களை நிகழ்த்தின.



    மெய்சிலிர்க்கும் இந்த சாகசக் காட்சிகளை இந்திய விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். #IAchief #BSDhanoa #SachinTendulkar #IAchiefwitness #Sachinwitness #VayuShakti2019 #Pokranrange
    ×