search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Social networking site"

    • மகளிர் அணி பொறுப்பாளர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    • சரவணகுமார், பழனிவேல், ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் தகவல் தொழில்நுட்ப அணியின் களப்பணிகள் ஒருங்கிணைப்பாளர்கள், சமூக வலைதள பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ, மாவட்ட பொருளாளர் இரா. ஜனகராஜ், மாநில ஆதிதிராவிட நலக்குழு இணைச் செயலாளர் செ.புஷ்பராஜ், மாவட்ட துணைச் செயலாளர் தயா. இளந்திரையன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வளவனூர் ப. அன்பரசு, துணை அமைப்பாளர்கள் சாம்பசிவம், கிருஷ்ணராஜ், பாலாஜி, சசி ரேகா பிரபு, தொகுதி நிர்வாகிகள் தேவா, குரு ராமலிங்கம், மகாலட்சுமி செந்தில், ரகுபதி, கதிரவன், நாராய ணமூர்த்தி, குமரவேல், மூகாம்பிகை நாராயணன், புளிச்சப்பள்ளம் ராதிகா சித்தானந்தன், கோட்டக்குப்பம் ஜாகிர், திருக்கோயிலூர் தொகுதி விக்னேஷ், ஆசைத்தம்பி பரிமளம், திருநாவுக்கரசு, மேகநாதன், நவீன் குமார், விக்னேஷ், அகமது ஷெரிப், சுப ஸ்ரீ, செல்வகுமார், தேவன், மோகன், ராஜேஷ், சசிகலா கபிரியேல், அபுபக்கர், கோமதி பாஸ்கர், சந்திரசேகர், செல்வகுமார், அருண், வள்ளி ராஜேஷ், முத்தமிழ், இராமு, சுப்புலட்சுமி மணிகண்டன், அரவிந்தன், கபிலன், புஷ்பராஜ், மனோஜ் குமார், மணிகண்டன், பூவராகவன், சரவணன், யுவராஜ், சரவணகுமார், பழனிவேல், ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
    • நடவடிக்கை எடுக்க ெபாதுமக்கள் வலியுறுத்தல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் செல்லும் டவுன் பஸ்சில் டிைரவர் செல்போன் பேசியப்படி பஸ் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் அரசின் விதிமுறைகளை மீறி டிரைவர் ஒருவர் செல்போனில் பேசியபடி பேருந்து ஓட்டி செல்லுகிறார். மேலும் அவருக்கு பிடித்த நொறுக்கு தீனிகளையும் சாப்பிட்டு கொண்டு அஜாக்ரதையாக பஸ்சை ஓட்டி வருகிறார்.

    இப்படி பயணிகள் ஏற்றிக்கொண்டு பஸ் இயக்குவதால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட டிரைவர் மீது அரசு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பிற பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கேக்கை வெட்டி சாப்பிட வைத்து நூதன முறையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார்.
    • புதிய சிந்தனையில் உருவாக்கும் நோக்கில் இதுபோன்று செய்ததாக தெரிகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலை எல்.டி பேங்க் தெருவை சேர்ந்தவர் சபீர், இவரது சகோதரர் ஷாகீர் (17).இவர் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 30-ந் தேதி ஷாகீர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அண்ணன் சபீர் இந்தியன் (டாய்லெட்) கழிவறை வடிவத்தில் 5 கிலோ கேக் ஆர்டர் செய்து அதை அவரது தம்பி பிறந்தநாள் அன்று அவருக்கு ஆச்சரியமூட்டும் வகையில் கேக்கை வெட்டி சாப்பிட வைத்து நூதன முறையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார்.

    இந்தியன் டாய்லெட் முறையில் கேக் வாங்கி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் சற்று அருவருப்பாக இருந்தாலும் சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் புதிய சிந்தனையில் உருவாக்கும் நோக்கில் இதுபோன்று செய்ததாக தெரிகிறது. இந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • பண்ருட்டி அருகே காதலியின் போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    • பண்ருட்டிமகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மேல்பாதி, மாரியம்மன் கோவில் தெருசேர்ந்தவர் சிவனேசன். இவரது மகள்சிம்னி துஷிதா (22) இவர் அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் முத்தமிழன் என்பவரை காதலித்து வந்தார். இவரது நடத்தை சரியில்லாமல் தற்போது பிரிந்து விட்டார். இந்தநிலையில் முத்த மிழன் தனியாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதி வேற்றம்செய்துள்ளார் இது பற்றி பண்ருட்டிமகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்துமுத்தமிழனைகைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மருத்துவக் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் அருகே கீரப்பாளையம் சேர்ந்த மாணவி நாமக்கல் பல் மருத்துவக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவதன்று தனது ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு கல்லூரி மாணவி வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த வாலிபர் மாணவியின் புகைப்படத்தை எடுத்துள்ளார். மேலும் வாலிபர் மாணவி தன்னை காதலிப்பதாக தெரிவித்து புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த மருத்துவ கல்லூரி மாணவி இது சம்பந்தமாக கேட்டபோது மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கலைச்செல்வன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • கல்லூரி மாணவி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக காதலன் மிரட்டியதால் காதலன் மீது வழக்கு.
    • மாணவியின் காதலன் திடீரென்று பஸ்சில் இருந்த மாணவி கையை பிடித்து இழுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அவருடன் செல்ல மறுத்தார்.

    கடலூர்: 

    கடலூர் தனியார் கல்லூரியில் பண்ருட்டியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி சம்பவத்தன்று கடலூர் பஸ் நிலையத்தில் தனது ஊருக்கு செல்வதற்காக பஸ்ஸில் அமர்ந்திருந்தார். அப்போது மாணவியின் காதலன் திடீரென்று பஸ்சில் இருந்த மாணவி கையை பிடித்து இழுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அவருடன் செல்ல மறுத்தார். அப்போது காதலன் நம் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து விடுவேன்‌. மேலும் குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி மாணவி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விஷால், சங்கர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×