search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவக் கல்லூரி மாணவியின்  புகைப்படத்தை சமூக  வலைத்தளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு
    X

    மருத்துவக் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு

    மருத்துவக் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அருகே கீரப்பாளையம் சேர்ந்த மாணவி நாமக்கல் பல் மருத்துவக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவதன்று தனது ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு கல்லூரி மாணவி வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த வாலிபர் மாணவியின் புகைப்படத்தை எடுத்துள்ளார். மேலும் வாலிபர் மாணவி தன்னை காதலிப்பதாக தெரிவித்து புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த மருத்துவ கல்லூரி மாணவி இது சம்பந்தமாக கேட்டபோது மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கலைச்செல்வன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×