search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prevent"

    • என்னுடைய பில் என்னுடைய அதிகாரம் என்கிற புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
    • ஜி.எஸ்.டி., பில்களை பதிவேற்றம் செய்வோர் குலுக்கல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்

    திருப்பூர்:

    நுகர்வோரிடம் வசூலிக்கும் வரி முறையாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், வரி ஏய்ப்புகளை குறைப்பதற்காகவும், மத்திய அரசு, மேரா பில் மேரா அதிகார் அதாவது என்னுடைய பில் என்னுடைய அதிகாரம் என்கிற புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இதற்காக பிளேஸ்டோர், ஆப்ஸ் ஸ்டோரில் பிரத்யேக செயலியும் பயன்பாட்டில் உள்ளது. இந்த திட்டம் கடந்த செப்டம்பர் 1-ந்தேதி அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. மொபைல் செயலியில் நுகர்வோர், தங்கள் பெயர், மொபைல் எண்ணை அளித்து எளிதாக பதிவு செய்து கொள்ளலாம். பொருட்கள் வாங்கும் போது ஜி.எஸ்.டி., பிடித்தம் செய்ததற்கான பில்லை போட்டோ எடுத்து இந்த ஆப் ல் அப்லோட் செய்ய வேண்டும். ஒரு நபர் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் 25 பில்களை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்.

    ஜி.எஸ்.டி., பில்களை பதிவேற்றம் செய்வோர் குலுக்கல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவி க்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டமாக அசாம், ஹரியானா, குஜராத் ஆகிய 3 மாநிலங்கள், புதுச்சேரி, டாமன், டையு, தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பகுதிகளில் மட்டுமே இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.திட்டம் துவங்கிய 51 நாட்களிலேயே இந்த செயலி மூலம் இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரத்து 972 ஜி.எஸ்.டி., பில் பதிவேற்றம் செய்ய ப்பட்டுள்ளன.

    இம்மாதம் மட்டும் குஜராத்தில் 93,576, அசாம் - 15,850, ஹரியானா - 35,429, புதுச்சேரி - 8,677, டாமன், டையூ, தாத்ரா நகர் - 1,351 என மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 883 ஜி.எஸ்.டி., பில் பதிவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து திருப்பூர் ஆடிட்டர்கள் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு தடுப்பதற்கான புதுமையான முயற்சியாக, மேரா பில் மேரா அதிகார் திட்டத்தை செயல்படுத்த துவங்கியுள்ளது. வணிகர் வழங்கும் ஜி.எஸ்.டி., பில், இந்த திட்டத்தில் மொபைல் ஆப் வாயிலாக நுகர்வோரிடமிருந்து அரசுக்கு சென்றடைந்து விடும்.

    இதனால் குறிப்பிட்ட வணிகர் முறையாக வரி செலுத்துகிறாரா, வரி ஏய்ப்பு நடைபெறுகிறதா என்பதை சுலபமாக கண்டறிய முடியும். அதனடிப்படையில் வரி ஏய்ப்பு தடுப்பு, ஏய்ப்பு வரியை வசூலிப்பது போன்ற துறைசார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.

    வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள அரசுக்கு வரி வருவாய் இன்றியமையாததாக உள்ளது. இந்த திட்டம் மூலம் தாங்கள் செலுத்தும் வரி, முறையாக அரசுக்கு சென்றடைய வேண்டும் என்கிற பொறுப்பு நுகர்வோர் மத்தியில் அதிகரிக்கும். திட்டம் நடைமுறையில் உள்ள 3 மாநிலங்களில் நுகர்வோர் ஆர்வமுடன் ஜி.எஸ்.டி., பில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.சோதனை ஓட்டம் வெற்றியடைந்துள்ளதால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தை மத்திய அரசு விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது
    • அடிக்கடி கபசுர குடிநீர் காய்ச்சி குடிக்க வேண்டும்

    தாராபுரம்

    தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    தமிழகத்தில் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் பெரும்பாலும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும், அதே போல தாங்கள் குடியிருக்கும் இடத்தை சுற்றி குப்பை கூழங்கள் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள பழைய டயர்கள் மற்றும் காலி பாட்டில்கள், தேங்காய் தொட்டிகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் மற்றும் சாக்கடை தண்ணீர் தேங்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

    இதனால் வீட்டில் கொசு தொல்லையை ஒழிக்க முடியும், பாதுகாப்பான முறைகளை கடைபிடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றுக்களை பாதிக்காமல் ஒவ்வொருவரும் தங்களை காத்து கொள்ள வேண்டும்.

    கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி கபசுர குடிநீர் காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவுகள் அதிகமாக இருக்குமேயானால் உடனடியாக தாராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கு உடனடியாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் இதனால் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 77 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டது.
    • குன்னூர் நகருக்கு மாற்றுப்பாதை ரூ.46 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

    விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விவரம் பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 77 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கூடலூரில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் பாரம்பரிய பயிர் இரக்கங்களின் விவசாயத்தை மேம்படுத்த தோட்டக்கலைத்துறையின் அரசு தோட்டக்கலை பண்ணையில் பீன்ஸ் மற்றும் பாகற்காய் போன்ற பயிர்களின் பாரம்பரிய ரகங்களை உற்பத்தி செ்யது விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் வன விலங்கு களால் ஏற்படும் விவசாய பாதிப்பை தடுக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    மாநில நெடுஞ்சாலை துறையின் மூலம் லவ்டேல் சந்திப்பு முதல் காட்டேரி வரையிலான குன்னூர் நகருக்கு மாற்றுப்பாதை ரூ.46 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பணிகள் முடிவுற்ற பிறகு விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களை குன்னூர் நகருக்குள் வராமலேயே நேரடியாக மேட்டுப்பா ளையத்திற்கு சென்று தங்களது விளை பொருட்களை கொண்டு செல்லலாம். இதன் மூலம் கால நேரம் குறைபடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மானியத்தில் பேட்டரி தெளிப்பான்களை மாவட்ட கலெக்டர் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் விவசாயிகளின் பொது கோரிக்கைகளும் விவாதிக்கப்பட்டு உரிய விவரம் தெரிவிக்கப்பட்டது.

    • கண் நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
    • நோய் பாதித்தவர்கள் சரியாகும் வரை பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம்.

    திருப்பூர் :

    தமிழகத்தில் தற்போது மெட்ராஸ் ஐ பரவி வருகிறது.திருப்பூரில் பாதிப்பு இல்லை. இந்நிலையில், விழிப்புடன் இருந்தால் மெட்ராஸ் ஐ பாதிப்பை தவிர்க்கலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:- ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு, பாதிப்பு வேகமாகப் பரவும். இது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது. கண்களில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் சிவத்தல், அழுக்குகள் வெளியேற்றம் மற்றும் அதிக உறுத்தல் ஆகியவை ஏற்படும்.

    இது ஒரு சிறிய கண் தொற்று என்றாலும் சரியான முறையில் டாக்டரிடம் சிகிச்சை பெறவேண்டியது அவசியம். சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மஞ்சள், சொட்டு மருந்துகளை தவிர்க்க வேண்டும்.

    கண் நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.பாதிக்கப்பட்டவரின் துண்டு, தலையணை, கவர்கள் மற்றும் மேக்கப் பொருட்கள் உள்ளிட்ட தனிப்பட்ட உடைமைகளை பயன்படுத்துவதால், இந்நோய் மற்றொருவருக்கு எளிதில் பரவும்.

    எனவே நோயாளிகளை தனிமைப்படுத்துவது முக்கியம். நோயாளிகள் தங்கள் கண்களை அடிக்கடி கழுவினால் போதும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். நோய் பாதித்தவர்கள் சரியாகும் வரை பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்

    கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறினார்.
    நெல்லை:

    நெல்லை டவுன் கல்லணை பள்ளி அருகே கால்வாய் தூர்வாரும் பணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாவட்டத்தில் உள்ள பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் மற்றும் கோடகன் கால்வாய் ஆகியவை தூர்வாரும் பணி இன்று தொடங்கி உள்ளது. 42.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாளையங்கால்வாய் மூலமாக 9500 ஏக்கரும், 24.6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கோடகன் கால்வாய் மூலம் 6 ஆயிரம் ஏக்கரும், 28.4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நெல்லை கால்வாய் மூலம் 6410 ஏக்கரும் பாசன வசதி பெறும்.

    தற்போது கால்வாய்கள் தூர்வாருவதன் மூலமாக நெல்லை, பாளை, மானூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள 21 ஆயிரத்து 910 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அரசின் உத்தரவின் அடிப்படையில் வருகிற 1-ந்தேதி அணையில் இருந்து நீர் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    இந்த ேகாடை காலத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்ததால் தூர்வாரும் பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. தற்போது நிலவரப்படி 75 சதவீத குளங்களில் நீர் இருப்பு உள்ளது.

    வடகிழக்கு பருவமழைக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளது என்பதால் அதற்குள் 3 கால்வாய்களயும் முழுவதுமாக தூர்வார திட்டமிட்டு உள்ளோம். அந்தநேரத்தில் கால்வாய் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும். பொதுமக்கள் கால்வாயில் குப்பை கொட்டுவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    தற்போது கால்வாய் அனைத்தையும் தூர்வாருவதால் வரும் மழை காலங்களில் மாநகர பகுதியில் வெள்ள பாதிப்பு நிச்சயமாக ஏற்படாது. போர்கால அடிப்படையில் தூர்வாரும் பணி நடைபெறும்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    குரங்கணி தீ விபத்தை தொடர்ந்து வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்க அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    இருந்த போதும் கொழுக்குமலை அருகே 6000 அடி உயரத்தில் உள்ள திப்படா மலைப்பகுதிக்கு பாதுகாப்பற்ற முறையில் கேரள மாநிலம் மூணாறு வழியாக சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.

    இவர்களுக்கு உதவுவதற்காக கேரள வனத்துறை சார்பில் ஜீப்புகளும் இயக்கப்பட்டு வந்தன. இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் தேயிலை எஸ்டேட் மேலாளர் ஜானி புகார் அளித்தார்.

    அதன் பேரில் குரங்கணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், குமரேசன், ராமதாஸ், மாவட்ட வன அலுவலர் கவுதம், உதவி வன அலுவலர் மகேந்திரன், போடி வனச்சரகர் ஆகியோர் அடங்கிய வனக்குழுவினர் திப்படா மலைப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இது குறித்த அறிக்கையை மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.க்கு அவர்கள் அளித்துள்ளனர். இது குறித்து வன அலுவலர் கவுதம் தெரிவிக்கையில், திப்படா மலைக்குன்று கேரள-தமிழக எல்லைப்பகுதியில் உள்ளது. இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் ஊராட்சியிடம் சுற்றுலா பயணிகள் தற்காலிக அனுமதி பெற்று இங்கு வருகின்றனர்.

    இது குறித்து தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்களிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்க அவர்கள் உறுதியான நடவடிக்கையை விரைவில் அறிவிப்பார்கள்.

    வனப்பகுதியில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தீ விபத்து நடக்கும் காலமாகும். இதன் காரணமாகவே இந்த கால கட்டங்களில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு கண்டிப்பான தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதனை மீறி குறுக்கு வழியில் வரும் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கிக் கொள்வதை தடுக்க தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

    அதிகாரிகள் ஆய்வு அறிக்கையை சமர்பித்து உள்ளதால் விரைவில் தடை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அலகாபாத் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் பதவியேற்பு விழாவுக்கு சென்ற அகிலேஷ் யாதவ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்? என யோகி ஆதித்யநாத் விளக்கம் அளித்துள்ளார். #Akhileshstopped #Lucknowairport #Allahabaduniversity
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் (தற்போதைய புதிய பெயர் பிரயாக்) பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மாணவர் வெற்றி பெற்றார்.

    இன்று பிற்பகல் அந்த பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த மாணவர் சங்கத்தின் புதிய பிரதிநிதிகள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் செல்வதற்கு திட்டமிட்டிருந்த உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் இன்று காலை லக்னோ விமான நிலையத்துக்கு வந்தார்.



    அப்போது, அங்கு சாதாரண உடையில் இருந்த ஒரு காவலர் அகிலேஷ் யாதவ் மீது கையை வைத்து தடுத்து நிறுத்த முயன்றார். ‘மேலே கையை வைக்காதே’ என்று அகிலேஷ் யாதவ் போட்ட சப்தத்தை கேட்ட அவரது மெய்க்காப்பாளர் அந்நபரை பிடித்து தள்ளினார்.

    இதைதொடர்ந்து, தனி விமானத்தை நோக்கி நடந்துச்சென்ற அகிலேஷ் யாதவை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

    அகிலேஷ் யாதவ் லக்னோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல் சமாஜ்வாதி கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் தீயாக பரவியது. இச்சம்பவம் தொடர்பாக இன்று உ.பி. சட்டசபையில் அக்கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அரசியல் பிரமுகர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

    எனவே, மாணவர் சங்கத்தின் புதிய பிரதிநிதிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அகிலேஷ் யாதவ் வர வேண்டாம் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் அகிலேஷ் யாதவின் தனிச் செயலாளருக்கு நேற்று மாலை கடிதம் அனுப்பப்பட்டதாக அலகாபாத் பல்கலைக்கழகத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அலகாபாத் பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துவிட்ட நிலையில் அகிலேஷ் யாதவ் அங்கு சென்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அவரை லக்னோ நகரில் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் போலீசார் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளார். #Akhileshstopped #Lucknowairport #Allahabaduniversity

    அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க ரூ.30 லட்சத்தில் திட்ட பணிகள் செய்யப்பட உள்ளது என்று கலந்தாய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், அரியலூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமபுற சாலைகள் தொடர்பான உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அரியலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு, விபத்துகளை தடுப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்டு நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலும் ராம்கோ சிமெண்டு நிறுவனத்தினர் செந்துறை ரவுண்டானாவில் இருந்து ஓட்டக்கோவில் வரை சாலையில் முகப்பு குவி கண்ணாடி வைத்தல், உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்தல், எச்சரிக்கை பலகை வைத்தல் உள்ளிட்ட திட்ட பணிகளுக்காக ரூ.30 லட்சம் செலவு செய்வதாக கூட்டத்தில் தெரிவித்தனர். மற்ற தனியார் சிமெண்டு நிறுவனத்தினர் சாலை விபத்தை தடுக்க தடுப்பு அரண்கள், தகுந்த ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி தர கூட்டத்தில் சம்மதித்தனர்.

    பின்னர் விபத்து தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பாக செந்துறை பைபாஸ் சாலையில் கண் கூசும் விளக்குகள் எரியும் வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கருப்பு வில்லை ஒட்டியும், வாகன ஓட்டிகளுக்கு அறிவுரையும் வழங்கினார். 
    வேலூரில் காய்ச்சலை தடுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.
    வேலூர்:

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் காய்ச்சல் அதிகரித்து வருவதால், நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நகரம் மட்டுமல்லாது கிராமங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குகிறது. இதன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் ஒன்றியத்துக்கு 3 மருத்துவ முகாம் என 20 ஒன்றியங்களில் மொத்தம் 60 முகாம்கள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை செய்த பின்னர், 'டெங்கு' அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்வார்கள்.

    அத்துடன் காய்ச்சல் பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுகாதார ஊழியர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மற்றவர்களுக்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் பொதுமக்களும் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

    உதாரணமாக, மழைக்காலத்தில் தண்ணீரை நன்கு காயவைத்து குடிக்க வேண்டும். உணவுகளை சமைத்த உடனே சிறிது நேரத்தில் உட்கொள்வது நல்லது. நீண்ட நேரம் கழித்து உட்கொள்வதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உணவுக்கு முன் தங்கள் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.

    அதுமட்டுமின்றி, திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையோ, அரசு மருத்துவமனைகளையோ அணுகி சிகிச்சை பெற வேண்டும். வீட்டின் அருகில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வள்ளியூரில் குழந்தை, பெண் பலியான சம்பவத்தையடுத்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்ப‌ட்டு வருகின்றன.
    வள்ளியூர்:

    சென்னையில் 7 வயது இரட்டைக் குழந்தைகள் காய்ச்சலுக்கு உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் காய்ச்சல் குறித்த பீதி அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்றாற் போல அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீபகாலமாக பல்வேறு வகையிலான காய்ச்சல் பரவி வருகிறது. வைரஸ் காய்ச்சல், பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காய்ச்சலின் தீவிரத்தை பொறுத்து சிலர் உள்நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ள‌னர். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பகலில் வெயிலும், மாலையில் மழையும் என மாறி மாறி காணப்படுவதால் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட சீசன் நோய்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் காரணமாக நெல்லை மாவட்டத்தில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி கர்ப்பிணி பெண் சாந்தினி(வயது 26) டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.

    இந்த நிலையில் வள்ளியூர் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு பெண் குழந்தை உள்பட 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வள்ளியூர் வடக்கு மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் முருகையா (வயது 37), லாரி டிரைவர். இவருடைய மனைவி ஜெயராணி (35). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பவித்ரா என்ற பெண்குழந்தை உள்ளது. ஜெயராணி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் குழந்தை பவித்ராவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக ஏர்வாடி, வெள்ளமடம் பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். ஆனாலும் பவித்ராவுக்கு காய்ச்சல் குறையவில்லை.

    பின்னர் குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வள்ளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை பவித்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலியான சம்பவம் வள்ளியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து வள்ளியூரில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீடு வீடாக கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு மருத்துவ குழுக்களும் வள்ளியூரில் முகாமிட்டுள்ளன.

    ஏற்கனவே கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்த சந்தியாகு என்பவருடைய மனைவி ஜெனதா (47). இவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெனதா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஜெனதாவின் உடல், இடிந்தகரைக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    மாவட்டத்தில் பரவலாக பல இடங்களில் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. சிங்கை மற்றும் பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சிங்கை மற்றும் அகஸ்தியர்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்காக ஏராளமானோர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். வெளிநோயாளிகளாக அனைவரும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தனியார் மருத்துவமனைகளிலும் பலர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    மர்மகாய்ச்சல், டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வருவதால் பொது சுகாதாரத்துறை கொசு ஒழிப்பிற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோருக்கு உடனடியாக டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளதா எனக் கண்டறிவதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்ப‌ட்டு வருகின்றன. 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நகராட்சி, கிராம பகுதியில் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தூத்துக்குடி மாநகராட்சியில் 400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள‌னர். கலெக்டர் மற்றும் அனைத்து அதிகாரிகளும் தினந்தோறும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். டெங்கு காய்ச்சலால கர்ப்பிணி பெண் பலியான முள்ளக்காடு பகுதியில் சுகாதார குழுவினர் முகாமிட்டுள்ளனர்.



    ×