search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swiggy"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொழில் நுட்பத்துறையில் நீடித்த பின்னடைவால் செலவுகளை குறைத்து மறுசீரமைக்க 'பேடிஎம்' மற்றும் 'பிளிப்கார்ட்' போன்றவற்றுடன் 'ஸ்விகி' இணைகிறது.
    • 'ஸ்விகி' நிறுவனம் உணவு விநியோக சந்தையில் அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறது.

    பிரபல உணவு டெலிவரி நிறுவனமான 'ஸ்விகி'யில் 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 'ஸ்விகி' நிறுவனம் 380 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.

    இந்நிலையில் தற்போது 'ஸ்விகி' நிறுவனம் இந்த ஆண்டில் மேலும் சுமார் 400 ஊழியர்களை அதாவது பணியாளர்களில் 7 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் பெங்களூருவை மையமாக கொண்டு இயங்கி வரும் 'ஸ்விகி' நிறுவனம் தற்போது 2-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கி உள்ளது.


    தொழில் நுட்பத்துறையில் நீடித்த பின்னடைவால் செலவுகளை குறைத்து மறுசீரமைக்க 'பேடிஎம்' மற்றும் 'பிளிப்கார்ட்' போன்றவற்றுடன் 'ஸ்விகி' இணைகிறது. இதைத்தொடர்ந்து 'ஸ்விகி' நிறுவனம் உணவு விநியோக சந்தையில் அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் செலவின குறைப்பு நடவடிக்கையாக மேலும் 400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.

    • உணவு நிறுவனங்களின் செயலிகளை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
    • தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து வருகின்றனர்.

    கடந்த சில வருடங்களாக உணவிற்காக வசிப்பிடத்தை விட்டு வெளியே சென்று உணவகங்களை தேடுவதற்கு பதிலாக இணையதளத்தில் உள்ள செயலிகளின் மூலம் விருப்பமான உணவகங்களிலிருந்து விலைகளை ஒப்பிட்டு பார்த்து தங்களுக்கு பிடித்தமான உணவுகளை இருக்கும் இடத்திற்கே தருவிப்பது இந்தியர்களிடையே பிரபலமாகி வருகிறது.

    சமீபகாலமாக ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தவற்காக குறிப்பிட்ட உணவு நிறுவனங்களின் செயலிகளை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து வருகின்றனர்.


    இந்தாண்டில் அதிகபட்சமாக சென்னையை சேர்ந்த ஒருவர் ஒரே நாளில் ரூ.31748க்கு ஜூஸ், பிஸ்கட், சிப்ஸ் உள்ளிட்டவற்றை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் வாங்கியுள்ளார்.

    இதே போல் இந்தாண்டில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் வெங்காயம், ஆணுறை, வாழைப்பழம், சிப்ஸ் உள்ளிட்டவை அதிகமாக ஆர்டர் செய்து வாங்கப்பட்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொமேட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இச்சேவையில் முன்னணியில் உள்ளன
    • இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியின் போது மிக அதிகளவில் ஆர்டர்கள் செய்துள்ளனர்

    கடந்த சில வருடங்களாக உணவிற்காக வசிப்பிடத்தை விட்டு வெளியே சென்று உணவகங்களை தேடுவதற்கு பதிலாக இணையதளத்தில் உள்ள செயலிகளின் மூலம் விருப்பமான உணவகங்களிலிருந்து விலைகளை ஒப்பிட்டு பார்த்து தங்களுக்கு பிடித்தமான உணவுகளை இருக்கும் இடத்திற்கே தருவிப்பது இந்தியர்களிடையே பிரபலமாகி வருகிறது.

    சொமேட்டோ (Zomato), ஸ்விக்கி (Swiggy) உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையில் முன்னணியில் உள்ளன.

    ஆண்டுதோறும், ஸ்விக்கி நிறுவனம் தங்கள் செயலியின் மூலம் பெரும்பான்மையானோர் தருவிக்கும் உணவு வகைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

    இதில் தொடர்ச்சியாக 8-வது ஆண்டாக முதலிடத்தை "பிரியாணி" பிடித்துள்ளது.


    இந்த தரவுகளின்படி ஒவ்வொரு 2.5 வினாடிகளில் இந்தியர்களால் ஒரு பிரியாணி ஆர்டர் செய்யப்படுகிறது. அதிலும் சைவ பிரியாணியோடு ஒப்பிட்டால் சிக்கன் பிரியாணியின் விகிதாசாரம் 1 : 5.5 எனும் அளவில் உள்ளது.

    ஸ்விக்கி செயலியின் தளத்தில் 40,30,827 முறை "பிரியாணி" அதிகம் தேடப்பட்ட சொல்லாக உள்ளது. ஐதராபாத் நகரில்தான் பிரியாணி ஆர்டர்கள் அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. அந்நகரத்தில் ஒரே நபர் இந்த ஒரே வருடத்தில் 1633 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளார்.

    ஐசிசி 2023 ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது சண்டிகர் நகரில் ஒரு குடும்பம் ஒரே முறையில் 70 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளது. விறுவிறுப்பான அப்போட்டி நடைபெற்ற தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 250 ஆர்டர்கள் எனும் விகிதத்தில் மக்கள் ஸ்விக்கியில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர்.

    ஸ்விக்கியின் தரவுகளின்படி கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரூ மக்கள்தான் அதிகளவில் கேக் ஆர்டர் செய்துள்ளனர். 8.5 மில்லியன் ஆர்டர்கள் செய்ததால் இந்நகர் "கேக் தலைநகரம்" (cake capital) என அழைக்கப்படுகிறது.

    பிப்ரவரி 14, வேலண்டைன் தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 271 கேக்குகள் எனும் விகிதத்தில் ஆர்டர்கள் குவிந்தன. நாக்பூர் நகரில் ஒரு உணவு விரும்பி, ஒரே நாளில் 92 கேக்குகளை ஆர்டர் செய்துள்ளார்.


    பிரியாணியையும், கேக்குகளையும் தவிர, மும்பை நகரை சேர்ந்த ஒருவர் 42.3 லட்சம் பெருமான உணவு ஆர்டர்களை செய்திருந்தது இந்த தரவுகளில் உள்ள வியக்க வைக்கும் மற்றொரு தகவல்.

    அதே போல் ஒடிஸா மாநில தலைநகர் புபனேஸ்வரில் ஒரு வீட்டில் ஒரே நாளில் 207 பீஸாக்களை ஆர்டர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் ஸ்விக்கியில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்தது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
    • டி.வி.முன்பு ஒரு தட்டில் உருளைக்கிழங்கில் ஊதுபத்திகளை கொலுத்தி வைத்துள்ள காட்சி பயனர்களை கவர்ந்தது.

    இந்திய கிரிக்கெட் அணி 3-வது முறையாக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என நாடு முழுவதும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் ஸ்விக்கியில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்தது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.

    தானேயை சேர்ந்த அந்த ரசிகர் ஸ்விக்கியில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரை வழங்கிய நபர் இதுதொடர்பாக ஒரு படத்தை ஸ்விக்கி தளத்தில் பதிவிட்டார். அதில் இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியின் போது டி.வி.முன்பு ஒரு தட்டில் உருளைக்கிழங்கில் ஊதுபத்திகளை கொலுத்தி வைத்துள்ள காட்சி பயனர்களை கவர்ந்தது.

    அதனுடான பதிவில், நாங்கள் உங்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    • ஸ்விக்கி செயலியில் உணவு ஆர்டர் செய்யும் போது ஒரு ஆர்டருக்கு 3 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிப்பதாக சில வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
    • பயனர்கள் சிலர் தங்களது ஆர்டருக்கான பில் தொகையை பதிவிட்டு அதில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டினர்.

    சமீபகாலமாக ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தவற்காக குறிப்பிட்ட உணவு நிறுவனங்களின் செயலிகளை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஸ்விக்கி செயலியில் உணவு ஆர்டர் செய்யும் போது ஒரு ஆர்டருக்கு 3 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிப்பதாக சில வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது 'எக்ஸ்' தளத்தில் ஒரு விவாதமாகவே மாறியது. பயனர்கள் சிலர் தங்களது ஆர்டருக்கான பில் தொகையை பதிவிட்டு அதில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டினர்.

    உணவு தொகையுடன் ஆர்டர் பேக்கிங் கட்டணம், டெலிவரி கட்டணம் மற்றும் வரிகள் அனைத்தையும் சேர்த்த பிறகும் இறுதி பில் தொகையில் ரூ.3 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக கிங்ஸ்லி என்ற பயனர் குறிப்பிட்டிருந்தார். இதே போல மேலும் சில வாடிக்கையாளர்களும் வலைதள பக்கங்களில் புகார் கூறியதை தொடர்ந்து ஸ்விக்கி நிறுவனம் இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில், இது ஒரு காட்சி பிழையாக இருக்கலாம். பயனர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது என கூறி உள்ளது.

    • செல்போனில் பேசிக் கொண்டே வேகமாக செல்லக்கூடாது.
    • விதிமுறைகளை மீறினால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 6 மாதங்களில் வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

    இருப்பினும் சென்னை போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இதன்படி முக்கிய இடங்களில் போக்குவரத்து உதவி கமிஷனர்களின் தலைமையில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி, சுமோட்டா, டன்சோ போன்றவை ஓட்டுனர்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

    600 உணவு விநியோக ஓட்டுனர்களுக்கு முறையற்ற வகையில் வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அப்போது உணவு டெலிவரி ஊழியர்கள் ஒரு வழிபாதையில் பயணம் செய்யக்கூடாது, செல்போனில் பேசிக் கொண்டே வேகமாக செல்லக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்து போக்குவரத்து போலீசார் கடிவாளம் போட்டுள்ளனர்.

    இந்த விதிமுறைகளை மீறினால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    • நாடு முழுவதும் உள்ள 26 லட்சத்துக்கும் அதிகமான உணவகங்கள் பிரியாணியை தயாரித்து வழங்குகின்றன.
    • பெங்களூருவில் 24,000 பிரியாணி வழங்கும் உணவகங்கள் உள்ளன.

    புதுடெல்லி:

    அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் எத்தனையோ இருந்தாலும் அனைவரின் தேர்வாக இருப்பதில் கம... கம..., சுடச்சுட பிரியாணி தான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் ஆன்லைன் உணவு டெலிவரி முறை வந்த பின்னர் வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து சாப்பிடும் பிரியாணியின் மகத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.

    அந்த வகையில், இந்தியர்கள் பிரியாணியை அதிகம் ஆர்டர் செய்துள்ளதாகவும், கடந்த 12 மாதங்களில் 7.6 கோடி ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளதாகவும் ஸ்விக்கி உணவு விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நாளை (2-ந்தேதி) சர்வதேச பிரியாணி தினத்தை கொண்டாடும் வகையில், ஆன்லைன் உணவு விநியோக தளமான ஸ்விக்கி, இந்தியர்கள் தங்கள் தளத்தில் பிரியாணியை ஆர்டர் செய்தது தொடர்பாக ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அந்த புள்ளி விவரப்படி தங்களுக்கு பிடித்தமான உணவு வகைகளில் பிரியாணி முதலிடத்தில் இருப்பதாகவும், பிரியாணியின் மீதான காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்றும் பிரியாணி பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஸ்விக்கி நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள வாடிக்கையாளர்கள் பிரியாணியின் மகத்துவம் குறித்த கருத்துக்களை சமூக வலைதளங்களிலும் அதிக அளவில் பரப்பி வருகின்றனர்.

    இது தொடர்பான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம் கடந்த ஜனவரி 2023 முதல் ஜூன் 15 வரை செய்யப்பட்ட பிரியாணி ஆர்டர்கள் பற்றிய விபரத்தை வெளியிட்டுள்ளது. கடந்த ஐந்தரை மாதங்களில் பிரியாணி ஆர்டர்களில் 8.26 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் பிரியாணி ஆர்டர்கள் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    பிளாட்பாரங்கள் மற்றும் சாலையோர கடைகள் மூலம் பிரியாணி வழங்கும் ஒரு லட்சம் உணவகங்கள், 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் இந்த பிரியாணி உணவில் தனித்துவம் பெற்றவையாக கண்டறியப்பட்டுள்ளன. நறுமணமுள்ள லக்னோவி பிரியாணி முதல் காரமான ஐதராபாத் தம் பிரியாணி மற்றும் சுவையான கொல்கத்தா பிரியாணி முதல் மணமிக்க மலபார் பிரியாணி வரை, நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களுக்கு பிரியாணி உணவுக்காக நிமிடத்திற்கு 219 ஆர்டர்களை வழங்குகின்றனர்.

    பிரியாணி விற்பனையான உணவகங்கள் அதிகம் உள்ள நகரங்களைப் பொறுத்தவரை ஸ்விக்கியின் ஆய்வில், நாடு முழுவதும் உள்ள 26 லட்சத்துக்கும் அதிகமான உணவகங்கள் பிரியாணியை தயாரித்து வழங்குகின்றன. 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் பிரியாணி உணவை மட்டுமே தயாரித்து வழங்குவதில் தங்களது பெயரை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டி உள்ளது.

    இருப்பினும், பெங்களூருவில் 24,000 பிரியாணி வழங்கும் உணவகங்களும், அதற்கு அடுத்தபடியாக மும்பையில் 22,000 உணவகங்களும், டெல்லியில் 20,000 உணவகங்களும் உள்ளன. பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை என்று வரும்போது ஐதராபாத்தில் உள்ள ஸ்விக்கி நிறுவனம் 7.2 மில்லியன் ஆர்டர்களை அதிகம் பெற்று முதலிடத்தில் உள்ளது.

    பெங்களூரு வாடிக்கையாளர்கள் 5 மில்லியன் ஆர்டர்களை செய்து தொடர்ந்து 2-வது இடத்திலும், அதற்கு அடுத்தபடியாக சென்னை வாசிகள் 3 மில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்களை பிரியாணிக்காக செய்து 3-வது இடத்தில் உள்ளனர். அதிலும் சுமார் 85 வகை பிரியாணி வகைகளுடன், 35 மில்லியன் ஆர்டர்களுடன் ஐதராபாத் பிரியாணி சாதனை படைத்துள்ளது.

    இதற்கிடையே சென்னையை சேர்ந்த பிரியாணி பிரியர் ஒருவர் ஒரே நேரத்தில் ஸ்விக்கி நிறுவனத்தில் ரூ.31 ஆயிரத்து 532-க்கு ஆர்டர் செய்து பிரியாணியின் மீதான பிரியத்தை உலகுக்கு வெளிக்காட்டி உள்ளார்.

    • ஐ.பி.எல். ஒட்டுமொத்த சீசனில் மட்டும் 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
    • ஒரு சைவ பிரியாணிக்கு சமமாக, 20 அசைவ பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    2 மாத காலமாக நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    ஐ.பி.எல். தொடரில் ஒவ்வொரு போட்டிகளும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக இருந்தது. போட்டிகளை வீட்டில் இருந்தே டி.வி., செல்போன்கள், இணையதளங்கள் மூலம் கண்டுகளித்த ரசிகர்கள், தங்களை உற்சாகப்படுத்தி கொள்ள பல்வேறு உணவு பொருட்களையும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி உள்ளனர்.

    போட்டிகளை பிரியாணி விருந்துடனும், பல்வேறு சுவையான உணவு பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி சுவைத்தும், திருவிழா போல கொண்டாடியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆன்லைன் உணவு டெலிவரி செயலியான ஸ்விகி டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

    அதில், ஐ.பி.எல். ஒட்டுமொத்த சீசனில் மட்டும் 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    அதாவது நிமிடத்திற்கு 212 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு சைவ பிரியாணிக்கு சமமாக, 20 அசைவ பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடம் பிடித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த சீசனில் கொல்கத்தாவில் ஒருவர் ஆர்டர் செய்த உணவை 77 வினாடிகளுக்குள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நகரங்களை பொறுத்தவரை பெங்களூருவில் தான் அதிகளவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிரியாணி மட்டுமல்லாமல் சமோசா, ஷாக்கர், தாகி, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களும் ஸ்விகியில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்விகி இன்ஸ்டா மார்ர்ட் மூலம் 2,423 காண்டங்களும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 3,641 யூனிட் தாகி மற்றும் 720 யூனிட் ஷக்கர் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த ஒரு ரசிகர் மட்டும் 701 சமோசாக்களை ஆர்டர் செய்துள்ளார்.

    இது, இந்த சீசனில் தனி நபர் ஒருவர் அதிகம் ஆர்டர் செய்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஸ்விகியின் உணவு வினியோகிப்பாளர்கள் மொத்தம் 33 கோடி கிலோ மீட்டர்கள் இந்த சீசன் முழுவதும் பயணம் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தோல்வியடைந்த லக்னோ அணியையும், நவீன் உல் ஹக்கையும் ரசிகர்கர் கிண்டல் செய்து வருகின்றனர்.
    • ரசிகர்கள் மட்டுமின்றி ஸ்விகி வரை லக்னோ அணி வீரர்களை கிண்டல் செய்து டுவிட் செய்துள்ளது.

    சென்னை:

    ஐபிஎல் 2023 சீசன் வரும் 28-ந் தேதியுடன் முடியவடைய உள்ளது. இறுதி போட்டிக்கு முதல் அணியாக சென்னை தகுதி பெற்றது. இதனையடுத்து நாளை நடைபெறவுள்ள குவாலிபையர் 2-ல் மும்பை- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்த சீசனில் அதிகமாக பேசப்படும் ஒரு விஷயாமாக மாம்பழம் உள்ளது. மாம்பழம் சீசன் கேள்விபட்டிருக்கோம். ஆனால் ஐபிஎல் தொடர்ல இது மாம்பழம் சீசனா மாறியிருக்கு என்று சொல்லலாம்.

    இந்த மாம்பழல் சீசன் தொடங்க முக்கிய காரணமாக இருந்தவர், லக்னோ அண்யின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் ஆவர். அவர் பெங்களூரு அணிக்கு எதிராக மோதிய போது விராட் கோலியுடன் மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய வீரர்களை இன்ஸ்டாகிராமில் விராட் கோலி பாராட்ட, இன்னொரு பக்கம் விராட் கோலி டக் அவுட்டானதை நவீன் உல் ஹக் மாம்பழங்களுடன் கொண்டாடினார். இது ரசிகர்களிடையே கோபத்தை உண்டாக்கியது. இதன் காரணமாக விராட் கோலி ரசிகர்கள், நவீன் உல் ஹக் எங்கு சென்றாலும் கோலி பெயரை சொல்லி கோஷம் எழுப்பினர்.

    இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நவீன் உல் ஹக் 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இறுதியில் மும்பை அணியிடம் தோல்வியடைந்த லக்னோ அணியையும், அந்த அணியின் நவீன் உல் ஹக்கையும் மாம்பழங்கள் மூலமாக ரசிகர்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.

    ரசிகர்கள் மட்டுமின்றி ஸ்விகி வரை லக்னோ அணி வீரர்களை கிண்டல் செய்து டுவிட் செய்துள்ளது. இந்த டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    அதில் லக்னோ அணி வீரர்களே டென்சன் வேண்டாம். லக்னோவில் டிஸ்யூ பேப்பர் ரெடி பன்ன ஆரம்பித்து விட்டோம் என பதிவிட்டிருந்தனர். 

    • ஸ்விகி உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு.
    • ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை, வேலூர், ஆரணி, குடியாத்தம் மாவட்டங்களை சேர்ந்த ஸ்விகி மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    உணவு மற்றும் இதர பொருட்கள் வினியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உணவு டெலிவரி சேவை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

    ஸ்விகி சேவையில் புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஸ்லாட் முறையை திரும்ப பெற்று, ஏற்கனவே வழங்கிவந்த "டர்ன் ஒவர்" தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று ஸ்விகி உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஸ்விகி ஊழியர்களுக்கு கோடைகாலத்தில் பணியாற்ற ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
    • சுகியில் புதிதாக வந்தவர்கள் மட்டும் ஆர்டர்கள் கொடுக்கப்படுகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் ஸ்விகி ஊழியர்கள் உணவு விநியோகம் செய்வதை நிறுத்திவிட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஊழியர்கள் கூறுகையில் ,

    ஸ்விகி ஊழியர்களுக்கு கோடைகாலத்தில் பணியாற்ற ஊக்கத் தொகை வழங்க வேண்டும். மேலும் இரவு நேரத்தில் கிராமப்புற பகுதிகளை சென்றால் வழிப்பறி விபத்து ஏற்படுகின்றனர். இதனால் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு இஎஸ்ஐ பிஎப் பிடித்தல் ஏற்படுத்த வேண்டும்.

    திருவள்ளூர் வட்டாரத்தில் 40 ஊழியர்கள் பணியாற்ற வந்தனர் தற்போது கூடுதலாக 40 பேர் நியமித்துள்ளனர். மேலும் வட்டத்திற்கு தனி மேலாளர்கள் நியமிக்க வேண்டும்.

    சுகியில் புதிதாக வந்தவர்கள் மட்டும் ஆர்டர்கள் கொடுக்கப்படுகின்றனர். பழைய ஊழியருக்கு ஆர்டர்கள் கொடுப்பதில்லை

    மேலும் எவ்வளவு வேலை பார்த்தாலும் சம்பளம் குறைவாகவே வழங்கப்படும். என்றனர்.

    திருவள்ளூர் வட்டாரத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு மூன்று ஆயிரத்துக்கு மேற்பட்ட டெலிவரிகள் செய்யப்பட்டு மூன்று லட்சம் வரை வருவாய் ஈட்டினர்.

    இந்த போராட்டத்தால் 3000க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் டெலிவரி செய்யப்படாமல் இருந்ததால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினார்கள்.

    • நாடு முழுவதும் ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விகி தெரிவித்துள்ளது.
    • அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட 10 ஸ்நாக்ஸ் பட்டியலில், 4 மில்லியன் ஆர்டர்களுடன் சமோசா முதலிடத்தில் உள்ளது.

    பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்த உணவு வகைகளை பட்டியலிட்டு வெளியிடுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை ஸ்விகி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தில் இருக்கிறது. ஸ்விகி பட்டியலில் பிரியாணி 7வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது.

    ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி (ஒரு நொடிக்கு 2.28 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. அதிகம் ஆர்டர் செய்த உணவுகளில் சிக்கன் பிரியாணியைத் தொடர்ந்து, மசாலா தோசை, சிக்கன் ப்ரைடு ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் பிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதன்மூலம் இந்தியர்களிடையே பிரியாணிக்கு உள்ள மவுசு குறையவில்லை என்பது தெரிகிறது.

    அதேபோல் வெளிநாட்டு உணவுகளை வாங்கி உண்பதிலும் இந்தியர்கள் அதிக ஆர்வம் கொண்டிருப்பதை இந்த பட்டியல் காட்டுகிறது. இத்தாலிய பாஸ்தா, பீட்சா, மெக்சிகன் பவுல், ஸ்பைசி ராமென் மற்றும் சுஷி போன்ற உணவுகளை அதிக அளவில் ஆர்டர் செய்ததாக ஸ்விகி கூறியிருக்கிறது. இத்தாலிய உணவான ரவியோலி மற்றும் கொரிய உணவான பிபிம்பாப் ஆகியவை பிரபலமான வெளிநாட்டு உணவு வகைகளையும் நிறைய ஆர்டர் செய்துள்ளனர்.

    இந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட 10 ஸ்நாக்ஸ் பட்டியலில் மொத்தம் 4 மில்லியன் ஆர்டர்களுடன் சமோசா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பாப்கார்ன், பாவ் பாஜி, பிரஞ்சு ஃப்ரைஸ், கார்லிக் பிரட்ஸ்டிக்ஸ், ஹாட் விங்ஸ், டாக்கோ, கிளாசிக் ஸ்டஃப்டு கார்லிக் பிரட் மற்றும் மிங்கிள்ஸ் பக்கெட் ஆகியவை உள்ளன. 

    ×