search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hostel"

    • அறையை பயன்படுத்தி வந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
    • அதிகாரிகள் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரிடம் ஆலோசனை.

    குஜராத் பல்கலைக்கழக தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த ஆறு மாணவர்கள் அறையை காலி செய்ய வலியுறுத்தப்பட்டு இருப்பதாக பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தங்குவதற்கான அவகாசம் முடிந்த பிறகும், அறையை பயன்படுத்தி வந்ததால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    முன்னதாக தங்கும் விடுதியில் நமாஸ் செய்த மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மார்ச் 16 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆப்கன் மற்றும் காம்பியாவை சேர்ந்த அதிகாரிகள் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரிடம் ஆலோசனை நடத்தினர்.

    "தங்குவதற்கான கால அவகாசம் முடிந்த பிறகும், தங்கும் விடுதியை பயன்படுத்தி வந்த ஆறு ஆப்கன் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க மாணவர்கள் அறையை காலி செய்ய வலியுறுத்தப்பட்டனர். இவர்கள் படிப்பை நிறைவு செய்துவிட்டனர். எனினும், அலுவல் பணிகள் முழுமை பெறாததால் தங்கும் விடுதியை பயன்படுத்தி வந்தனர்," என்று துனை வேந்தர் நீரஜ் குப்தா தெரிவித்தார்.

    "அவர்களுக்கான அலுவல் பணிகள் முழுமை பெற்ற நிலையில், அவர்கள் பாதுகாப்பாக அவர்களது நாட்டிற்கு செல்ல முடியும். முன்னாள் மாணவர்கள் யாரையும் தங்கும் விடுதியில் தங்க வைக்க நாங்கள் விரும்பவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் மாணவர்களிடம் விடுதியை காலி செய்ய அறிவுறுத்தி உள்ளனர்," என்று அவர் மேலும் தெரிவித்தார். 

    • சேலம் அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன்கள் கோகுல் (வயது 12), பிரசாந்த் (10). இவர்கள் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி யில் 7 மற்றும் 5-ம் வகுப்பு தங்கி படித்து வந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 மாணவர்க ளையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன்கள் கோகுல் (வயது 12), பிரசாந்த் (10). இவர்கள் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி யில் 7 மற்றும் 5-ம் வகுப்பு தங்கி படித்து வந்தனர்.

    இதே போல பெரிய கிணறு பகுதியை சேர்ந்த செந்தமிழ் குமரன். இவரது மகன் மயிலேஷ் (8). இவரும் அதே பள்ளியில் தங்கி 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 3 பேரும் பள்ளியில் இருந்து திடீரென மாயமாகினர். இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 மாணவர்க ளையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி தினந்தோறும் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.
    • வேறு ஏதேனும் காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூரில் கருவூல கணக்குத் துறை ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் புதுப்பாளை யத்தை சேர்ந்தவர் அந்தோணி சகாயராஜ் (47). இவர் கடலூர் மாவட்ட கருவூல கணக்கு துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால், தனது குடும்பத்தை பிரிந்து கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி தினந்தோறும் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை அறையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தோணி சகாயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி சகாய ராஜ் தூக்கு ேபாட்டு தற்ெகாலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர் தற்கொ லை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செம்பனார்கோயில் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • மிகவும் பழுதடைந்து கிடக்கும் தாய் சேய் நல விடுதியை புதுப்பிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

    கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி செயலர் மனோகரன் வரவேற்றார். கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை எடுத்துக் கூறினார்.

    தலைவர் விரைவில் செய்து தருவதாக உறுதி அளித்தனர்.

    பின்னர் முன்னாள் ராணுவத்தினர் ராமதாஸ் மனு அளித்தார்.

    அதில் கூறி இருப்பதாவது:-

    திருவள்ளுவர் தெருவில் ஊராட்சி மன்றத்திற்கு அருகில் தாய் செய் நல விடுதி கடந்த 75 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் மோசமான நிலை ஏற்பட்டு பூட்டி போடப்பட்ட நிலையில் உள்ளது.

    மிகவும் பழுதடைந்து கிடக்கும் தாய் சேய் நல விடுதியை புதுப்பித்து 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவையாம்பிகை நகரில் மோசமான நிலையில் ரோடு சேதம் அடைந்து உள்ளதால் சிமெண்ட் சாலையாக அமைத்து தர வேண்டும்.

    சுடுகாட்டு பாதைக்கு செல்லும் தெருக்களில் மரங்கள் இடையூராக இருப்பதால் மரங்களை அப்புபடுத்தி இறந்தவர்களை எடுத்துச் செல்ல இடையூர்யில்லாமல் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கிராமசபையில் பொது மக்களுடன் வலியுறுத்த ப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஊரக உட்கட்டமைப்பு பிரிவு முன்னாள் உதவி திட்ட அலுவலர் நக்கீரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் துணைத்த லைவர் உமாராணி நன்றி கூறினார்.

    • அரியலூரில் 3 ஆண்டுகளாக தனியார் கட்டிடத்தில் இயங்கும் அரசு கல்லூரி விடுதி
    • போதிய வசதி இல்லாததால் குறையும் மாணவர்கள் எண்ணிக்கை

    அரியலூர்,

    அரியலூர் அரசு கலைக்க ல்லூரி வளாகத்தில் ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல மாணவர்கள் விடுதி இயங்கி வந்தது.கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த அந்த மாணவர் விடுதியை மாற்ற முடிவு செய்தனர்.அதை தொடர்ந்து அந்த விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எழு த்துக்காரன் பட்டியில் உள்ள பேரிக்காய் செந்துறை ரவுண்டானாவில் உள்ள தனியார் நல விடுதிக்கு மாற்றியுள்ளனர்.இந்த தனியார் விடுதி கல்லூரியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப் பால் உள்ளது. ஆகவே விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் தினமும் வெகு தூரம் நடந்து கல்லூ ரிக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் விடுதி மாணவர்களின் எண்ணி க்கையும் சரிந்து உள்ளது.இது ஒரு புறம் இருக்க தனியார் விடுதிக்கு மாதா ந்திர வாடகை கட்டணம் ரூ. 2 லட்சத்து 41 ஆயிரம் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படு கிறது.கல்லூரி வளாகத்தில் அமைந்திருந்த பழைய விடுதியில் 165 மாணவர்கள் தங்கும் வசதி இருந்தது. ஆனால் தற்போது உள்ள தனியார் விடுதியில் 96 மாணவர்கள் மட்டுமே தங்கி உள்ளார்கள். புதியவர்க ளும் இந்த தனியார் விடுதி யை தவிர்க்கிறார்கள்.இது தொடர்பாக சமூக நல ஆர்வலர் ஒருவர் கூறும் போது,தனியார் கட்டிடத்தில் இயங்கும் நலவாழ்வு விடுதி கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகை என்ற போர்வை யில் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.மாதா ந்திர வாடகை கூட சரியாக கொடுக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை, விடுதியில் (கல்லூரி வளாகத்தில்) எப்பொழுதும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தார்கள். ஆனால் கல்லூரிக்கும் விடுதிக்கும் இடையிலான தூரம் அதிக மாக இருப்பதால் மாண வர்கள் விடுதியில் தங்க விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள்

    விடுதி மாற்றப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகள் கடந்தும், புதிய நலவாழ்வு விடுதிக்கு இடம் தேர்வு செய்யாதது வருத்தம் அளி க்கிறது. கல்லூரி அருகே விடுதி கட்ட மாவட்ட நிர்வா கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

    விடுதியில் தங்கி படிக்கும் 19 வயது மாணவி கூறுகை யில், கடந்த இரண்டு ஆண்டு களாக போதிய பஸ் வசதி இல்லாததால் நடந்தே கல்லூரிக்கு சென்று வருகி றேன். கல்லூரிக்கு வர குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் ஆகிறது என்றார்,மற்றொரு விடுதியாளர் கூறுகையில், "3 கட்டில் உள்ள ஒரு அறையை பத்து மாணவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இத னால், இருவர் படு க்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.இதுகுறித்து ஆதி திரா விடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை அதிகாரி விஜயபாஸ்கரை தொடர்பு கொண்டபோது, "புதிய கட்டிடம் (விடுதி) அமைக்க இடம் தேடி வருகிறோம்" என்று தெரிவித்தார். வாடகை பாக்கியில், "அரசாங்கம் பணம் கிடைத்ததும் நாங்கள் செலுத்துவோம்" என்றார்.

    • பாளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் பிளஸ்-2 வரை வகுப்புகள் உள்ளன.
    • மாணவிகளின் பெற்றோருக்கு போன் செய்து பள்ளி நிர்வாகம் விசாரித்த நிலையில், அங்கும் மாணவிகள் செல்லவில்லை.

    நெல்லை:

    பாளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் பிளஸ்-2 வரை வகுப்புகள் உள்ளன.

    இந்த பள்ளியில் நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தின் உள்ளேயே மாணவிகளுக்கான விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் விடுதி வார்டன், அங்கு தங்கியிருக்கும் மாணவிகளின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்று வழக்கம்போல் எண்ணி பார்த்தனர். அப்போது அதில் 2 மாணவிகளை காணவில்லை. அவர்கள் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருவதும், சங்கரன்கோவில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோருக்கு போன் செய்து பள்ளி நிர்வாகம் விசாரித்த நிலையில், அங்கும் மாணவிகள் செல்லவில்லை. இதையடுத்து பாளை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான 2 மாணவிகளையும் தேடி வருகின்றனர். அவர்களை தேடி கண்டுபிடித்த பின்னரே எதற்காக விடுதியை விட்டு வெளியேறினார்கள் என்ற விபரம் தெரியவரும்.

    • 24 படுக்கைகள் கொண்ட சிறப்பு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்கள் வருகிற 15-ந் தேதி மாலை 3.00 மணி வரை வரவேற்கப்படுகிறது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    பட்டுக்கோட்டை நகராட்சி க்குப்பட்ட பழனியப்பன் தெருவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக 24 படுக்கைகள் கொண்ட சிறப்பு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.

    இதனை பராமரிக்க முன்அனுபவமு ள்ள தகுதிவாய்ந்த தன்னார்வு தொண்டு நிறுவனங்க ளிடமிருந்து விண்ணப்பங்கள் 15.09.2023 அன்று மாலை 3.00 மணி வரை வரவேற்கப்படுகிறது.

    மேலும் இது குறித்து தகவல்கள் நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை பட்டுக்கோ ட்டை நகராட்சி நகரமைப்பு பிரிவில் 15ம் தேதி வரை அலுவலக நேரத்தில் நேரடி யாக தொடர்புக்கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுமார் 100 மாணவர்கள் தங்கும் பிற்படுத்தப்பட்டோர் நல மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதி திறக்கப்பட்டது.
    • தொடர்ந்து விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் பிற்படுத்த ப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் சுமார் 100 மாணவர்கள் தங்கும் பிற்படுத்தப்பட்டோர் நல மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியினை காணொலி காட்சி வழியாக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து விடுதியை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் பார்வையிட்டு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரேணுகா தேவி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் விடுதி கட்டப்பட்டது.
    • விடுதியை பார்வையிட்ட அமைச்சர்கள் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

    உடுமலை,

    உடுமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகின்ற ஆதி திராவிட மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் விடுதி கட்டப்பட்டது. இந்த விடுதியை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இணைந்து விடுதியை திறந்து வைத்தனர்.

    அதைத் தொடர்ந்து விடுதியை பார்வையிட்ட அமைச்சர்கள் அங்கு மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவரும் மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன், உடுமலை நகர செயலாளர் சி.வேலுச்சாமி,உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன்,ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், எஸ்.கே.எம் தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார்,மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் முருகன், மடத்துக்குளம் ஒன்றிய குழு துணைத்தலைவர் ஈஸ்வர சாமி, உடுமலை ஆர்.டி.ஓ., ஜஸ்வந்த் கண்ணன்,தாசில்தார் கண்ணாமணி, தொழிற் பயிற்சி மைய முதல்வர் ராஜேஸ்வரி, பயிற்சி அலுவலர் ரமேஷ்குமார் உடன் இருந்தனர்.

    • மழை காலங்களில் மேற்கூரைகள் பெயர்ந்து விழுகிறது.
    • விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே அரசு மன்னர் சரபோஜி அரசு கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 4000-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திலேயே ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள பிற்படுத்தப்பட்டோர் விடுதி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் மழை காலங்களில் மேற்கூரைகள் பெயர்ந்து விழுவதாகவும் மேலும் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். எனவே விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர் .

    ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த விடுதி மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து இந்திய மாணவர் சங்க செயலாளர் அரவிந்த்சாமி தலைமையில் புதிய பஸ் நிலையம் அருகே திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

    இதில் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    விடுதிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்டு மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • திருப்பூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்காக 21 விடுதிகள் உள்ளன.
    • உணவு, தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்காக 21 விடுதிகள் உள்ளன. அதன்படி உடுமலை அரசு பள்ளி மாணவர் விடுதி, காங்கயம் அரசு பள்ளி மாணவர் விடுதி, வெள்ளகோவில் அரசு பள்ளி மாணவர் விடுதி, தாயம்பாளையம் அரசு பள்ளி மாணவர் விடுதி, குண்டடம் அரசு பள்ளி மாணவர் விடுதி, எலுகாம்வலசு அரசு பள்ளி மாணவர் விடுதி, சின்னக்காம்பட்டி அரசு பள்ளி மாணவர் விடுதி, ஊத்துக்குளி அரசு பள்ளி மாணவர் விடுதி, திருப்பூர் அரசு கல்லூரி மாணவர் விடுதி, உடுமலை அரசு கல்லூரி மாணவர் விடுதி, பல்லடம் அரசு கல்லூரி மாணவர் விடுதி, மடத்துக்குளம் அரசு பள்ளி மாணவர் விடுதி, அவினாசி அரசு பள்ளி மாணவர் விடுதி ஆகியவை மாணவர்களுக்காக உள்ளன.

    இதுபோல் திருப்பூர் அரசு பள்ளி மாணவியர் விடுதி, உடுமலை அரசு பள்ளி மாணவியர் விடுதி, காங்கயம் அரசு பள்ளி மாணவியர் விடுதி, வெள்ளகோவில் அரசு பள்ளி மாணவியர் விடுதி, தாராபுரம் அரசு பள்ளி மாணவியர் விடுதி, உடுமலை அரசு கல்லூரி மாணவியர் விடுதி, முத்தூர் அரசு பள்ளி மாணவியர் விடுதி, சின்னகாம்பட்டி அரசு பள்ளி மாணவியர் விடுதி ஆகியவை மாணவிகளுக்காக உள்ளன.

    பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக் படிப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள். உணவு, தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக 4 சீருடைகள், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

    பள்ளி விடுதிகளில் சேர பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வீட்டில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தூரம் குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி மாணவர்கள் விடுதி காப்பாளர்களிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் ஜூலை மாதம் 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதிச்சான்றிதழ், பெற்றோர் ஆண்டு வருமானம் சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது இந்த சான்றிதழ்களை அளிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும், முகாமில் வாழும் இலங்கை தமிழர் மாணவர்களுக்கு தனியாக 5 இடங்கள் ஒதுக்கப்படும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • பக்தர்கள் தங்குவதற்கு ஆலய நிர்வாகம் அறை வசதிகள் செய்து வருகிறது.
    • 30 அறைகள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதி புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

    பூதலூர்:

    பூண்டி மாதா பேரால யத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.

    ஆண்டு பெருவிழாவில் கலந்து கொள்ள நாடெங்கிலும் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஆலயநிர்வாகம் செய்து வருகிறது.

    ஆலயம் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.ஆலயத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஆலய நிர்வாகம் அறை வசதிகள் செய்து உள்ளது.

    ஆலய வளாகத்தில் கும்பகோணம் முன்னாள் பிஷப் பீட்டர்ரெமிஜியுஸ் பெயரில் அமைந்த 30அறைகள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதி புதுப்பிக்கப்பட்டு நேற்று காலை புனிதம் செய்து திறந்து வைக்கப்பட்டது.

    கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோனிசாமி புதுப்பிக்கப்பட்ட விடுதியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து புனிதம் செய்தார்.

    இதற்கானகல்வெட்டை மறைமாவட்ட முதன்மைக் குரு அமிர்தசாமி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் பூண்டி பேராலய அதிபர் சாம்சன், மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், பேராலயதுணைஅதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ்,ஆன்மீக தந்தை அருளானந்தம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×