search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்- பரபரப்பு
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்.

    தஞ்சையில், கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்- பரபரப்பு

    • மழை காலங்களில் மேற்கூரைகள் பெயர்ந்து விழுகிறது.
    • விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே அரசு மன்னர் சரபோஜி அரசு கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 4000-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திலேயே ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள பிற்படுத்தப்பட்டோர் விடுதி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் மழை காலங்களில் மேற்கூரைகள் பெயர்ந்து விழுவதாகவும் மேலும் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். எனவே விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர் .

    ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த விடுதி மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து இந்திய மாணவர் சங்க செயலாளர் அரவிந்த்சாமி தலைமையில் புதிய பஸ் நிலையம் அருகே திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

    இதில் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    விடுதிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்டு மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×