என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சந்திரகாந்தா தேவி துர்கா தேவியின் மூன்றாவது வடிவம்.
    • அசுரர்களின் தலைவன் ஜதூகசுரன் தேவலோகத்தையும், மானிடர்களையும், பூலோகத்தையும் துன்புறுத்தினான்.

    நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியை வழிபடுவதற்கான காலம்.

    நவராத்திரி 3-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் சந்திரகாந்தா தேவி. இவர் துர்கா தேவியின் மூன்றாவது வடிவம் ஆவார்.

    சந்திரகாந்தா தேவி

    பார்வதி தேவி, மகிஷாசுரனை அழிக்க சக்தியாகிய துர்காவாக அவதரித்தபோது பல்வேறு வடிவங்களில் தோன்றினாள்.

    சத்யுகத்தில், ஹிமவந்தன் (இமயமலை) மகளான பார்வதி, சிவபெருமானை கணவனாகப் பெற விரும்பினார். அவர் பல வருடங்கள் கடுமையான தவம் செய்து சிவனைத் துதித்தார். இறுதியில் சிவபெருமான் சம்மதித்து, அவர்களின் திருமண நாள் நிர்ணயிக்கப்பட்டது. பார்வதி திருமண அலங்காரத்தில் புனித வடிவம் எடுத்தார். அப்போது அவரது நெற்றியில் நிலவும் பிரகாசத்தைப் போல ஒரு சந்திரக்கலையுடன் தோன்றினார். அந்த வடிவமே சந்திரகாந்தா.

    சந்திரகாந்தா தேவியின் கதை:

    முன்னொரு காலத்தில் அசுரர்களின் தலைவன் ஜதூகசுரன் தேவலோகத்தையும், மானிடர்களையும், பூலோகத்தையும் துன்புறுத்தினான். அவனது சக்திக்கு முன் தேவதைகள் பலவீனமடைந்தனர். அப்போது, மகாதேவி பார்வதி ஒரு புதிய ரூபத்தில் தோன்றி, தன் நெற்றியில் சந்திரனை அலங்கரித்து, சிங்கத்தில் ஏறி, கையில் பல ஆயுதங்களுடன் அசுரர்களை அழிக்க முனைந்தார்.

    ஜதூகசுரன் மிகுந்த பலம் நிறைந்தவனாக இருந்தான். அவனை எதிர்த்து, சந்திரகாந்தா தேவி தேவசேனையை வழிநடத்தி யுத்தம் புரிந்தார். அவர் சிங்கத்தில் ஏறி கம்பீரமாக போராடினார். அசுரர்களின் பல ஆயிரம் படைகளை அழித்து, இறுதியில் ஜதூகசுரனையும் வதம் செய்தார்.

    சந்திரகாந்தா தேவியின் கதை, தைரியம், கருணை மற்றும் நீதியின் சக்தி என்பதைக் காட்டுகிறது.

    சிவபெருமானை மணந்த பிறகு அவள் தலையை அரை நிலவால் அலங்கரித்ததாகக் கூறப்படுகிறது. அவர் துணிச்சலையும் தைரியத்தையும் பிரதிபலிக்கிறார். அவள் பத்து கைகளுடன் திரிசூலம், கதாயுதம், வில், அம்பு, தாமரை, வாள், மணி மற்றும் ஒரு நீர்க்குடம் ஆகியவற்றை ஏந்தியபடி காட்சியளிக்கிறாள். அவள் புலியின் மீது அமர்ந்திருப்பாள்.

    ஸ்லோகம்:

    "ஓம் தேவி சந்திரகண்டாயை நமஹ" என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

    • மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோலாட்ட அலங்காரத்துடன் கொலு தர்பார் காட்சி.
    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-8 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திருதியை (முழுவதும்)

    நட்சத்திரம் : சித்திரை மாலை 4.34 மணி வரை பிறகு சுவாதி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம்

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் பிரம்மோற்சவம் ஆரம்பம். பெரிய சேஷ வாகனத்தில் பவனி. மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோலாட்ட அலங்காரத்துடன் கொலு தர்பார் காட்சி. குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கற்பக விருட்ச வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் அலங்காரம். சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் மகேஸ்வரி விருஷப சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். மதுரை ஸ்ரீ கூடலழகர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்புளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம், மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பெருமை

    ரிஷபம்-உழைப்பு

    மிதுனம்-வெற்றி

    கடகம்-உண்மை

    சிம்மம்-துணிவு

    கன்னி-லாபம்

    துலாம்- சுகம்

    விருச்சிகம்-வரவு

    தனுசு- தேர்ச்சி

    மகரம்-பெருமை

    கும்பம்-உவகை

    மீனம்-நன்மை

    • திருப்பதி ஏழுமலையான் விழா தொடக்கம்
    • மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி.

    இந்த வார விசேஷங்கள்

    23-ந் தேதி (செவ்வாய்)

    * மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரம்.

    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலம்.

    * காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், அருப்புக்கோட்டை சவுடாம்பிகை அம்மன் தலங்களில் நவராத்திரி அலங்கார சேவை.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * சமநோக்கு நாள்.

    24-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * நாட்டரசன்கோட்டை உற்சவம் ஆரம்பம்.

    * திருப்பதி ஏழுமலையான் விழா தொடக்கம்

    * மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜாங்க சேவை, மாலை அமிர்த வீணை மோகினி அலங்காரம்.

    * சமநோக்கு நாள்.

    25-ந் தேதி (வியாழன்)

    * மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் பட்டாபிஷேக அலங்காரம்.

    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி கோலத்துடன் காட்சி.

    * காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி, அருப்புக்கோட்டை சவுடாம்பிகை தலங்களில் நவராத்திரி அலங்கார காட்சி.

    * சமநோக்கு நாள்.

    26-ந் தேதி (வெள்ளி)

    * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர் ராமாவதார காட்சி.

    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் அனுமன் வாகனத்தில் பவனி.

    * மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி.

    * கீழ்நோக்கு நாள்.

    27-ந்தேதி (சனி)

    * உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசன் கருட வாகனத்தில் பவனி.

    * சிருங்கேரி சாரதாம்பாள் மோகினி அலங்காரம்.

    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    28-ந் தேதி (ஞாயிறு)

    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் மகிசாசூர மர்த்தினி கோலம்.

    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    29-ந் தேதி (திங்கள்)

    * திருப்பதி ஏழுமலையான் அனுமன் வாகனத்தில் வசந்த உற்சவம்.

    * உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கில் புறப்பாடு.

    * திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் யானை வாகனத்தில் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    • கடற்கரை மற்றும் குலசை பகுதியில் திரும்பி பக்கம் எல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
    • இன்று முதல் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

    உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா பெருந் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர். இன்று அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வைத்து ஊர்வலம் நடந்தது.

    கொடிப்பட்டம் கோவிலை வந்துசேர்ந்ததும் அதிகாலை 5.36 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் தீர்த்தம் எடுத்து ஓம்காளி, ஜெய்காளி கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர்.

    இதனால் கடற்கரை மற்றும் குலசை பகுதியில் திரும்பி பக்கம் எல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கோவிலில் இலவசமாக வழங்கிய மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு வாங்கி வலது கையில் கட்டினர்.

    இதைத்தொடர்ந்து தாங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்களுக்கு பிடித்தமானவேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் பிரிக்க தொடங்குவார்கள். காலை 10 மணிக்கு சிவலூர் தசரா குழு சார்பில் அன்னதானம் வழங்கும் பணி தொடங்கியது.

    இன்று முதல் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் கலை அரங்கத்தில் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

    இன்று முதல் 1-ந் தேதி வரை தினசரி காலை 7.30 மணி, காலை 9 மணி, காலை 10.30 மணி, பகல் 12 மணி, பகல் 1.30 மணி, மாலை 4.30 மணி, மாலை 6 மணி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், தினசரி மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

    இன்று முதல் 9-ம் திருவிழாவான 1-ந் தேதி வரை தினசரி இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஒவ்வொரு வாகனத்தில் ஒவ்வொரு கோலத்தில் வீதியுலா நடக்கிறது.

    6-ம் திருவிழா முதல் 10-ம் திருவிழா வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வேடம் அணிந்து மேளம், டிரம் செட், செண்டா மேளம், தாரை தப்பட்டம் மற்றும் கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சி நடத்துவார்கள்.

    எனவே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தசரா பக்தர்களாக காட்சியளிப்பார்கள். 10-ம் திருவிழா அன்று 11 மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் தொடர்ந்து இரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி தொடர்ந்த பலலட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    வருகிற 3-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்காரம் முடிந்தவுடன் கடற்கரையில் அன்னைக்கு அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவில் முன்பு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனையும், 3 மணிக்கு அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து தேரில் பவனி வந்து தேர் நிலையம் சென்றடைதல், 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அபிஷேக ஆராதனையும், 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்படுதல் நடைபெறுகிறது.

    பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முடிப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.

    12-ம் திருவிழாவான அக்டோபர் 4-ந் தேதி காலை 6 மணி, காலை 8 மணி, காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடக்கிறது.

    தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், ஆய்வர் முத்துமாரியம்மாள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் ரவீந்திரன் குமரன், மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகமும் தசரா விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

    • பார்வதி தேவி தன் முன் பிறவி நினைவுடன், சிவபெருமானையே தனது கணவனாகக் கொள்ள வேண்டும் என்ற உறுதியை எடுத்தார்.
    • பார்வதியின் தவத்தை சோதிக்க சிவபெருமான் ஒரு முதிய முனிவனின் வேடத்தில் வந்தார்.

    பார்வதி தேவிக்கு முந்தைய பிறவி பெயர் சதி. அவர் தக்ஷன் மகளாகப் பிறந்தார். சதி சிவனைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், தக்ஷன் தனது மகள் சிவனை மணந்ததை விரும்பவில்லை. பின்னர் தக்ஷன் பெரும் யாகம் செய்தார். எல்லா தேவர்களையும் அழைத்தார், ஆனால் சிவனை அழைக்கவில்லை. சதி தனது கணவனின் அவமதிப்பை தாங்காமல் அக்னிக்குள் தன்னை அர்ப்பணித்தார்.

    இந்தப் பிறவியை முடித்துவிட்டு, மீண்டும் ஹிமவானின் மகளாக பிறந்து, பார்வதி என்ற பெயரைப் பெற்றார்.

    பிரம்மச்சாரிணி (தவ வாழ்க்கை)

    பார்வதி தேவி தன் முன் பிறவி நினைவுடன், சிவபெருமானையே தனது கணவனாகக் கொள்ள வேண்டும் என்ற உறுதியை எடுத்தார். அதற்காக, கடுமையான தவத்தைத் தொடங்கினார்.

    இவரது தவத்தைப் பார்த்து தேவதைகள் மிகவும் பிரமித்தனர். அப்போது அசுரர்களும் பலவித சோதனைகளால் அவரின் தவத்தை கலைக்க முயன்றனர். ஆனால் பார்வதியின் அசைக்க முடியாத மன உறுதி காரணமாக அவர்கள் எல்லாம் தோல்வியடைந்தனர்.

    இறுதியில், அவரது தவத்தை சோதிக்க சிவபெருமான் ஒரு முதிய முனிவனின் வேடத்தில் வந்து, "சிவனை மணப்பது உன் வாழ்க்கைக்கு ஏற்றதல்ல, அவர் யோகி, அவர் வீடறியாதவர், அவரிடம் எதுவும் இல்லை" என்று கூறினார்.

    ஆனால் பார்வதி மனம் அசையாமல், "சிவனே எனது கணவன்; வேறு யாரும் இல்லை" என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

    அப்போது சிவன் மகிழ்ந்து தனது உண்மையான வடிவத்தை வெளிப்படுத்தி, பார்வதியின் தவத்தை ஏற்றுக்கொண்டார்.

    'பிரம்மச்சாரிணி' என்ற பெயரின் அர்த்தம்

    இந்தக் கடுமையான தவம், ஒழுக்கம், மன உறுதியின் காரணமாகவே பார்வதிக்கு பிரம்மச்சாரிணி என்று பெயர் கிடைத்தது.

    "பிரம்ம" - தவம், அறிவு, பரமத்துவம்

    "சாரிணி" - கடைபிடிப்பவள்

    அதாவது தவமும், ஒழுக்கமும் நிறைந்தவள் என்பதே பொருள்.

    பிரம்மச்சாரிணி தேவியின் வெள்ளை நிற ஆடை அணிந்திப்பார். இவரது முகம் அமைதி, சாந்தம், பக்தி நிறைந்ததாக உள்ளது.

    பிரம்மச்சாரிணியை வழிபடுவதால் மன உறுதி, பொறுமை, தைரியம் கிடைக்கும். கல்வி, ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும். சிரமங்களைத் தாங்கி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும்.

    பிரம்மச்சாரிணி தேவியின் வரலாறு நமக்கு சொல்லும் பாடம், பொறுமை, ஒழுக்கம், உறுதி இருந்தால் எதையும் அடையலாம். உண்மையான நம்பிக்கையால் இறைவன் கூட கிடைக்க முடியும் என்பது ஆகும்.

    • சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
    • துர்கையின் இரண்டாம் வடிவமான பிரம்மசாரிணி தேவியை வணங்குவதாகும்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.

    ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபடப்படுகிறது.

    இதில், நவராத்திரியின் இரண்டாம் நாளில் துர்கையின் இரண்டாம் வடிவமான பிரம்மசாரிணி தேவியை வணங்குவதாகும்.

    பிரம்மசாரிணி தேவிக்கு உரிய மந்திரம்:

    ஓம் தேவி பிரம்மச்சாரிணியை நமஹ.

    விளக்கம்: ஓம் பிரம்மசாரிணி தேவிக்கு வணக்கம்.

    இந்த மந்திரத்தின் மூலம் ஒழுக்கம், மன உறுதி மற்றும் பக்தியை வளர்த்துக் கொள்ளலாம். 

    • இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான அனைத்து பணிகளும் தொடங்கும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் 10-ம் நாள் அதிகாலை கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து டிசம்பர் மாதம் 3-ந் தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் முகூர்த்தம் நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) காலை 6 மணியில் இருந்து 7.30 மணிக்குள் நடைபெற உள்ளது. அப்போது கோவிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.

    மேலும் பந்தக்காலுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் அர்ச்சகர் பந்தக்காலை ராஜகோபுரம் வரை சுமந்து வந்து அங்கு பந்தக்காலிற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால் நடப்படும். அதன் பின்னர் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான அனைத்து பணிகளும் தொடங்கும்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கர் டாக்டர் மீனாட்சிசுந்தரம், இணை ஆணையர் பரணிதரன் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
    • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்கள் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

    நவராத்திரியின் முதல் நாளில் கொலு வைத்து, துர்கை அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜைகளும், மந்திரங்களாலும் வணங்கப்படுகிறது.

    அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் படைக்கப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் இரண்டாவது நாளான இன்று பிரம்மச்சாரிணி தேவிக்கு படைக்க வேண்டிய சிவப்பு பட்டாணி சுண்டல், தக்காளி சாதம் மற்றும் கேரட் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

    சிவப்பு பட்டாணி சுண்டல்

    தேவையான பொருட்கள்:

    * சிவப்பு பட்டாணி - 1 கப்

    * சமையல் எண்ணெய் - 2 டீஸ்பூன்

    * கடுகு - 1/2 டீஸ்பூன்

    * உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    * பெருங்காயம்- ஒரு சிட்டிகை

    * கறிவேப்பிலை - சிறிது

    * பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2

    * துருவிய தேங்காய் - 1/4 கப்

    * உப்பு - சுவைக்கு ஏற்ப.

    செய்முறை:

    சிவப்பு பட்டாணியை சுமார் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.

    ஊறவைத்த பட்டாணியை உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

    வேகவைத்த பட்டாணியை தாளித்ததில் சேர்த்து கிளறவும்.

    கடைசியாக துருவிய தேங்காயைச் சேர்த்து இறக்கவும்.

    தக்காளி சாதம்:

    நவராத்திரியின் போது படைப்பதற்கான தக்காளி சாதம் என்பது ஒரு சுலபமான கலப்பு சாதமாகும். தெய்வங்களுக்கு நைவேத்தியமாக வழங்கப்படுகிறது.

    தேவையான பொருட்கள்:

    *சமைத்த சாதம்

    *தக்காளி

    *நெய் அல்லது எண்ணெய்

    *கடுகு

    *உளுந்து

    *கடலைப்பருப்பு

    *சீரகம்

    *மிளகு

    *பச்சை மிளகாய்

    *இஞ்சி

    *பூண்டு

    *மஞ்சள் தூள்

    *மிளகாய் தூள்,

    *கொத்தமல்லி தூள்

    *கரம் மசாலா அல்லது சாம்பார் மசாலா

    *கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள்

    செய்முறை:

    ஒரு கடாயில் எண்ணெயில் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    நறுக்கிய அல்லது அரைத்த தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மற்றும் மசாலாப் பொடிகளை சேர்க்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் வரை சமைக்கவும். சமைத்த சாதத்தை சேர்த்து, நெய் ஊற்றி நன்றாக கலக்கவும்.

    தக்காளி சாதத்தை நன்றாக கிளறி, நவராத்திரி நிவேதனமாக படைக்கவும்.

    கேரட் அல்வா:

    தேவையான பொருட்கள்:

    காரட் – ½ கிலோ (துருவியது)

    பால் – ½ லிட்டர்

    சர்க்கரை – 1 கப் (தேவைக்கேற்ப)

    நெய் – 3 டேபிள்ஸ்பூன்

    முந்திரி – 8-10 (நறுக்கியது)

    ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்

     செய்முறை:

    * காரட்டை நன்றாக கழுவி தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    * ஒரு கனமான பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

    * துருவிய காரட்டை பாலில் சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

    * காரட் மெலிந்து பால் சுருங்கும் வரை நன்றாகக் கிளறிக் கொண்டே இருக்கவும்.

    * இப்போது சர்க்கரை சேர்த்து, கலந்து, கெட்டியான நிலைக்கு வரும் வரை சமைக்கவும்.

    * தனியே ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி வறுத்து சேர்க்கவும்.

    * ஏலக்காய் பொடி தூவி நன்றாகக் கலக்கவும். நெய் ஒட்டும் தன்மை வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

    நவராத்திரி ஸ்பெஷல் கேரட் அல்வா தயார்.

    • முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
    • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

    முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

    பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.

    முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.

    ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் இரண்டாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

    இரண்டாவது நாள் போற்றி பாடல்:

    ஓம் வளம் நல்குவாய் போற்றி

    ஓம் நலந்தரும் நாயகி போற்றி

    ஓம் முக்கண் மூர்த்தியே போற்றி

    ஓம் அறத்தின் வடிவோய் போற்றி

    ஓம் மின் ஒளி அம்மா போற்றி

    ஓம் எரி சுடராய் நின்ற தேவி போற்றி

    ஓம் ஏற்றத்துக்கரசி போற்றி

    ஓம் எரம்பன் தாயானவளே போற்றி

    ஓம் எங்களின் தெய்வமே போற்றி

    ஓம் ஒளிக்குள் ஒளிர்பவனே போற்றி

    ஓம் ஈரேழுலகில் இருப்பாய் போற்றி

    ஓம் சூளா மணியே போற்றி

    ஓம் சுந்தர வடிவே போற்றி

    ஓம் ஞானத்தின் வடிவே போற்றி

    ஓம் நட்புக்கரசியே போற்றி

    ஓம் திரிமூர்த்தி தேவியே போற்றி!

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோகமான நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். சகோதர ஒற்றுமை பலப்படும். அரைகுறையாக நின்ற பணி தொடரும். வரன்கள் வாயில்தேடி வரும்.

    ரிஷபம்

    குறைகள் அகலும் நாள். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. தொழில் வெற்றி நடைபோடும்.

    மிதுனம்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் செலவுகள் ஏற்படலாம். திட்டமிட்ட சில காரியங்களால் மாற்றம் செய்யும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்படுவீர்கள்.

    கடகம்

    விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள். எடுத்த முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    சிம்மம்

    சஞ்சலங்கள் தீரும் நாள். பொருளாதார நிலை உயரும். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    கன்னி

    காலையில் கலகலப்பும் மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.

    துலாம்

    நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.

    விருச்சிகம்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு கிடைக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

    தனுசு

    முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அகலும்.

    மகரம்

    நினைத்தது நிறைவேறும் நாள். உறவினர்கள் வழியில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவர். அரசியல்வாதிகளின் மூலம் செய்த உத்தியோக முயற்சி கைகூடும்.

    கும்பம்

    தெய்வ வழிபாட்டின் மூலம் திருப்தி காண வேண்டிய நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

    மீனம்

    பணவரவு திருப்தி தரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் கொடுப்பர்.

    • நவராத்திரி கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் இதை செய்யலாம்.
    • அம்மனுக்கு இடது பக்கம், வலது பக்கம் என இரு பக்கங்களிலும் விளக்கை ஏற்ற வேண்டும்.

    நவராத்திரி நாட்களில் சகல கலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி, சவுந்தர்ய லகிரி, லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றை தவறாமல் பாராயணம் செய்தல் வேண்டும். அது போல நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, கன்யா பூஜை ஆகியவற்றை செய்தல் வேண்டும். இது அளவற்ற பலன்களை அள்ளித் தரும்.

    வேலை நிமித்தம் காரணமாக எல்லாராலும் இந்த பாராயணம், பூஜைகளை செய்ய முடிவதில்லை.

    இத்தகையவர்களுக்காகவே நமது முன்னோர்கள் அகண்ட தீபம் ஏற்றும் ஒரு வழிமுறையை கூறி உள்ளனர். அகண்ட தீபம் என்பது விளக்கை தொடர்ந்து எரிய வைப்பது ஆகும். நவராத்திரி கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் இதை செய்யலாம்.



    தேவியை பூஜிக்கும் இடம் அருகில் ஒரு மரப்பலகையில் மூன்று கோணமாக சந்தனத்தால் கோடு போட்டு நடுவில் சந்தனம் குங்குமமிட்டு, பூ போட்டு அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். அம்மனுக்கு இடது பக்கம், வலது பக்கம் என இரு பக்கங்களிலும் விளக்கை ஏற்ற வேண்டும்.

    ஒரு விளக்கு மண் அகல் விளக்காகவும் மற்றொன்று வெள்ளி அல்லது பித்தளை விளக்காகவும் இருக்கலாம். நவராத்திரி 9 நாட்களும் இந்த இரு விளக்குகளும் தொடர்ந்து எரிவது நல்லது. இல்லையெனில் கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் விடாமல் எரிய வேண்டும். நவராத்திரி முடிந்ததும் இந்த இரு விளக்குகளையும் தானமாக கொடுத்து விட வேண்டும்.

    இந்த அகண்ட தீப வழிபாட்டால், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.

    • பிரம்மச்சாரிணி தேவி பார்வதி தேவியின் ஒரு அவதாரம்.
    • பிரம்மச்சாரிணி தேவி தவமிருக்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.

    நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியை வழிபடுவதற்கான காலம்.

    நவராத்திரி 2-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் பிரம்மச்சாரிணி தேவி. இவர் பார்வதி தேவியின் ஒரு அவதாரம் ஆவார். மேலும் மகாதேவியின் நவதுர்கா வடிவங்களில் இரண்டாவது அம்சம் ஆவார்.

    பார்வதி தேவி சிவனை அடைய விரும்பி கடுமையான தவம் செய்து வந்தார். அப்போது அவர் எடுத்த தவமான, கற்பு நிறைந்த பிரம்மச்சாரி நிலைமையே பிரம்மச்சாரிணி என்ற வடிவமாக கருதப்படுகிறது.

    "பிரம்மம் சாரித்தல்" எனப் பொருள் தரும் பெயர் காரணமாக, தவம், கட்டுப்பாடு, பிரம்மச்சரியம் ஆகியவற்றின் சின்னமாக பிரம்மச்சாரிணி தேவி கருதப்படுகிறாள்.

    பிரம்மச்சாரிணி தேவி தவமிருக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். ஒரு கரத்தில் ஜபமாலை மற்றும் மற்றொரு கரத்தில் கமண்டலத்தை ஏந்தியிருப்பார்.

    இந்து தத்துவத்தில் வாழ்க்கையின் நான்கு நிலைகளில் ஒன்றான பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிக்கும் பெண்ணைக் குறிக்கும் விடாமுயற்சி மற்றும் அமைதியான வலிமையின் சின்னமாக இருக்கிறாள்.

    பிரம்மச்சாரிணியின் கதை, அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் சக்தியைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறது. இதில் தீவிர தியானம், உண்ணாவிரதம் மற்றும் காதல் வெளிப்படுவதற்காக பல வருட காத்திருப்பு ஆகியவை அடங்கும். எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் வந்தாலும், தனது பக்தர்கள் தங்கள் இலக்குகளில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.

    ஸ்லோகம்:

    "ஓம் தேவி பிரம்மச்சாரிணியை நம:" எனும் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

    ×