என் மலர்
வழிபாடு
- சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு எப்பொழுது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம் என கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
- திருப்பதியில் நேற்று 71,361 பேர் தரிசனம் செய்தனர். 24,579 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது :-
ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவம் வருகிற 15-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி நிறைவு பெறுகிறது.
இதில் முக்கிய வாகன சேவையான கருட சேவை 19-ந்தேதியும், 21-ந்தேதி புஷ்பக விமானம், 22-ந்தேதி தங்க ரதம், 23-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. கருட சேவை வழக்கமாக இரவு 7 மணிக்கு தொடங்கப்படும்.
ஆனால் அதனை 1 மணி நேரத்திற்கு முன்னதாக தொடங்கினால் காலை முதல் நான்கு மாட வீதியில் காத்திருக்கும் பக்தர்களை விரைவில் சாமி தரிசனம் செய்து வைக்க முடியும்.
இது தொடர்பாக கோவில் அர்ச்சகர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அவர்களும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு எப்பொழுது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.
இதுகுறித்து மீண்டும் ஒரு முறை அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அர்ச்சகர்களுடன் ஆலோசித்து கருட சேவை மட்டும் மாலை 6.15-க்கு அல்லது 6.30 மணிக்கே தொடங்குவது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதியில் நேற்று 71,361 பேர் தரிசனம் செய்தனர். 24,579 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இன்று காலை பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. நேர ஒதுக்கீடு இலவச தரிசன பக்தர்கள் சுமார் 6 மணிநேரமும் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- இன்று சன்யஸ்த மகாளயம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 24 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி இரவு 7.03 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: மகம் காலை 11.01 மணி வரை பிறகு பூரம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சன்யஸ்த மகாளயம். கஜட்சாயை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. அருணந்தி சிவாச்சாரியர் குரு பூஜை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-கவனம்
ரிஷபம்-புகழ்
மிதுனம்-ஜெயம்
கடகம்-அசதி
சிம்மம்-தனம்
கன்னி-மாற்றம்
துலாம்- அமைதி
விருச்சிகம்-செலவு
தனுசு- போட்டி
மகரம்-பெருமை
கும்பம்-பொறுப்பு
மீனம்-சுகம்
- கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
- மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்படும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலில் 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி தீபாராதனை காட்டுகிறார். 18-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
18-ந் தேதி காலை 8 மணியளவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி முன்னிலையில், 2023-24-ம் ஆண்டுக்கான சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்ந் தெடுக்கப்படுவார்கள். சபரிமலை ஐயப்பன் கோவில், மாளிகப்புரம் கோவில் ஆகியவற்றிற்கு ஏற்கனவே நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், குலுக்கல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.
இவர்கள் இந்த ஆண்டின் மண்டல சீசன் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை ஓராண்டு காலத்திற்கு மேல்சாந்திகளாக பணியாற்றுவார்கள்.
ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு 18-ந் தேதி அதிகாலை முதல் 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுடன் 22-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள அரசின் சிறப்பு பஸ்கள் சபரிமலைக்கு இயக்கப்படும். அதே போல், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையம் 17-ந் தேதி முதல் செயல்படும்.
நடப்பு ஆண்டின் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்படும். 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி மண்டல பூஜையும், 2024-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
- பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது.
- தங்களைப் படைத்த இறைவனிடமே துஆ செய்பவர்களாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மூன்று விஷயங்கள் நிம்மதி, மகிழ்ச்சியை தருகின்றன. அவை ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் குறைவில்லா வாழ்வாதாரம். இம்மூன்றும் ஒருவருக்கு அமைந்து விட்டால் அவரை விட பாக்கியசாலி வேறு எவரும் இல்லை.
கரு, சதைத்துண்டாக கருவறையில் இருக்கும் நிலையில் அதன் தவணை (ஆயுள்), வாழ்வாதாரம், செயல்பாடுகள், நற்பேறு பெற்றவரா? அல்லது துர்பாக்கியசாலியா? ஆகிய நான்கு விஷயங்கள் அல்லாஹ்வின் ஆணைப்படி, வானவர் ஒருவரைக் கொண்டு எழுதப்படுகிறது. பின்னர், கருவில் உயிர் ஊதப்படுகிறது. மனிதன் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அத்தனை படைப்புகளுக்குமான அனைத்து விஷயங்களும் அவை பிறப்பதற்கு முன்பே நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது.
இதுகுறித்து திருக்குர்ஆன் (57:22) இவ்வாறு குறிப்பிடுகிறது. `பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்த சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை. நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே ஆகும்'.
அதற்காக, `என்னுடைய விதிதான் எழுதப்பட்டுவிட்டதே' என்று மனோ இச்சையின் படி நடந்து கொள்ளுதல் கூடாது. விதியின் மீது பழியைப் போடாமல், நம் உழைப்பு மற்றும் முயற்சியின் மூலமாகவும், பிரார்த்தனைகளின் மூலமாகவும் நம்முடைய வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் இறையருளால் மேம்படுத்தலாம்.
`(நபியே) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும' என்று திருக்குர்ஆன் (2:186) விளக்குகிறது.
`பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒரு முறை சுலைமான் (அலை) அவர்களிடம் ஒருவர் வந்து, `அல்லாஹ் உங்களுக்கு பறவைகள் மற்றும் உயிரினங்களின் மொழிகளைக் கற்றுக்கொடுத்திருக்கிறான். எனக்கு அவற்றுள் ஏதாவது ஒரு உயிரினத்தின் மொழியைக் கற்றுக்கொடுங்கள்' என்று கேட்கிறார்.
`எனக்கு அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை' என்று சுலைமான் (அலை) கூறியும், அந்த மனிதர் வற்புறுத்தவே, `சரி, எந்த உயிரினத்தின் மொழியைக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?' என்று கேட்கிறார்கள். `எங்கள் வீட்டில் இரண்டு பூனைகள் உள்ளன, எனவே பூனைகளின் மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்று அந்த மனிதர் சொல்கிறார்.
பூனைகளின் மொழியை கற்றுக்கொண்டு வீடு திரும்பும் அவர், அன்றிரவு இரு பூனைகளும் பேசிக்கொள்வதை கேட்கிறார். ஒரு பூனை, மற்றொரு பூனையிடம், `நான் பசியால் செத்து விடுவேன் போல் இருக்கிறது, உன்னிடம் ஏதாவது உணவு இருந்தால் கொடு' என்று கேட்கிறது. அதற்கு அந்த பூனை `கொஞ்சம் பொறு, நம் எஜமான் வளர்க்கும் சேவல் நாளை செத்து விடும், அதை உண்டு பிழைத்துக்கொள்ளலாம்' என்றது.
இதைக்கேட்ட அந்த மனிதர், அதிகாலையிலேயே தன் சேவலை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்று விடுகிறார். சேவலை காணாமல் ஏமாற்றமடைந்த பூனை, மற்ற பூனையிடம், `நம் எஜமான், செத்த சேவலை ஏதோ ஒரு இடத்தில் புதைத்து விட்டார் போலும்' என்றது. அதற்கு மற்ற பூனை, எஜமான் சேவலை விற்று விட்டதைக் கூறுகிறது.
மறுநாளும் அதே பூனை `பசிக்கிறது' என்று மற்ற பூனையிடம் கேட்கிறது. `கவலைப்படாதே, எஜமான் வளர்க்கும் ஆடு நாளை செத்து விடும், அதை உண்டு பிழைத்துக் கொள்ளலாம்' என்று மற்ற பூனை பதில் சொல்கிறது. அன்றும் பூனைகள் பேசுவதைக் கேட்ட அந்த மனிதர், அடுத்த நாள், அதிகாலையில் ஆட்டை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்று விடுகிறார். பூனைகளுக்கு இம்முறையும் ஏமாற்றமாகி விடுகிறது.
அதற்கு அடுத்த நாள், பசிக்கிறது என்று சொன்ன பூனையிடம், `நாளை நம் எஜமான் செத்து விடுவார், அதை உண்டு பிழைத்துக்கொள்ளலாம்' என்று மற்ற பூனை ஆறுதல் சொல்கிறது.
இதைக்கேட்ட அந்த மனிதர் பதறிப்போய் சுலைமான் (அலை) அவர்களிடம் வந்து நடந்ததைச் சொல்லி `எப்படியாவது நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்' என்று கெஞ்சுகிறார். சுலைமான் (அலை) அவரிடம் `சேவல் விஷயத்திலும், ஆட்டுக் குட்டி விஷயத்திலும் நீ எப்படி புத்திசாலித்தனமாக நடந்து கொண்டாயோ, அவ்வாறே இப்பொழுதும் நடந்து கொள்' என்று கூறி, `வீட்டிற்குச் சென்று உன் மரண சாசனத்தையும், கஃபன் துணியையும் தயார் செய்து கொள்' என்று கூறி அனுப்பி விடுகிறார்கள்.
இந்த சம்பவத்தின் மூலம் அல்லாஹ் மற்றவர்களுக்கு அளித்துள்ள அருட்கொடைகள் பற்றி பேராசை கொள்வதால் ஏற்படும் விபரீதத்தை நாம் புரிந்து கொள்ளலாம். "மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை, வேறு சிலரைவிட மேன்மையாக்கி இருக்கின்றானோ, அதனை அடைய வேண்டும் என்று பேராசை கொள்ளாதீர்கள்". (திருக்குர்ஆன் 4:32)
எனவே, அருட்கொடைகளை விரும்புபவர்கள், தங்களை படைத்த இறைவனிடமே துஆ செய்பவர்களாக இருக்க வேண்டும்.
- இயேசு உயர்வு தாழ்வற்ற சமூகத்தை கட்டியெழுப்ப விரும்பியவர்.
- பாவிகள் என அழைக்கப்பட்டோருடைய வீடுகளுக்கும் சென்றார்.
எத்தனை முறை அழித்தாலும் மறையாத ஏற்றத்தாழ்வு மனநிலை சமூகத்தில் எல்லா இடங்களிலும் புரையோடிக் கிடக்கிறது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், உயர் குடிப்பிறப்பு, கீழ் குடிப்பிறப்பு எனும் மறைமுக யுத்தம் சமூக வெளிகளில் மட்டுமன்றி திருச்சபைகளிலும் நிலவி வருகிறது. சில திருச்சபைகளில் இது வெளிப்படையாய் நடக்கிறது, பல இடங்களில் மறைமுகமாய் நடக்கிறது. அது ஒன்று மட்டுமே வித்தியாசம்.
இயேசு உயர்வு தாழ்வற்ற சமூகத்தை கட்டியெழுப்ப விரும்பியவர். அதனால் தான் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயரவும், பெண்களின் சமூக அங்கீகாரம் மேம்படவும், ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை வாழ்வு வழங்கவும் அவர் போராடினார். அவருடைய போராட்டம் உயர்ந்தோர் என தங்களைக் கருதிக்கொள்வோரை பாராட்டுவதாய் இருக்கவில்லை. அல்லது தாழ்ந்தோராய் தள்ளிவிடப்பட்டோரை உதாசீனம் செய்வதாய் இருக்கவில்லை. `பாரபட்சம் பார்க்கவேண்டாம்' என அறைகூவல் விடுப்பதாய் இருந்தது.
அதனால் தான் அவர், `பாவிகள் என அழைக்கப்பட்டோருடைய வீடுகளுக்கும் சென்றார், தீட்டு என ஒதுக்கப்பட்ட தொழுநோயாளர்களைத் தொட்டு சுகமாக்கினார், சமூகத்தால் விலக்கப்பட்ட வரி தண்டுவோரை தனது நெருங்கிய சீடராக மாற்றினார்'. அதேநேரம் நான் மறை நூல் வல்லுநர், நான் குருவானர், நான் உயர்ந்த பரிசேயன் என்றெல்லாம் மமதை கொண்டு திரிந்தவர்களைக் கடுமையாக சாடினார்.
யார் உயர்குடி பிறப்பு? விவிலியம் இதற்கு ஒரு அருமையான புதிய விளக்கத்தை தருகிறது.
"கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால் ஞானம் தன் உயர்குடிப்பிறப்பில் மேன்மை பாராட்டுகிறது" என்கிறது சாலமோனின் ஞானம் 8:3.
அதாவது "கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வு வாழ்வது உயர்குடிப் பிறப்பு" என்கிறது பைபிள். அப்படியானால் இறைவனோடு ஒன்றுபட்டு வாழாத வாழ்வு வாழ்வது கீழ்குடி பிறப்பு எனப் புரிந்து கொள்ளலாம்.
உயர்குடியும், தாழ்குடியும் பிறப்பினால் வரவில்லை, வாழ்வினால் வருகிறது எனும் புதிய சிந்தனையை விவிலியம் தருகிறது. யார் வேண்டுமானாலும் உயர்குடியாய் மாறி வாழலாம், யார் வேண்டுமானாலும் கீழ் குடியை தேர்வு செய்யலாம். இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்வு என்பது அவரைப்போற்றிப் பாடுவது அல்ல. அவர் தருகின்ற மேலான போதனைகளை செயல்படுத்தும்படி வாழ்வது.
`உங்கள் கனிகளைக் கொண்டே மக்கள் உங்களை அடையாளம் காண்பார்கள்' என்றார் இயேசு. கனி கொடாத பழ மரங்களால் பயன் ஏதும் இல்லை. அவை எவ்வளவு தான் செழித்து வளர்ந்தாலும் மக்களின் பசியை தணிப்பதில்லை. நமது உள்ளத்தில் இறைவனின் போதனைகள் பதியமிடப்பட்டு, செயல்களில் மனித நேயம் வெளிப்படுவதே உண்மையான உயர் குடி வாழ்வு. மனித நேயப் பணிகளே கனிகள்.
அப்படிப்பட்ட வாழ்வை வாழ்வதே மேன்மையானது. அத்தகைய வாழ்வு வாழ்பவர்கள் மட்டுமே மேன்மையை அடைவார்கள். கடவுளை விட்டு விலகி வாழும் போது நமது வாழ்க்கை மேன்மை இழக்கிறது.
பிறப்பின் போது நாம் எந்த பெற்றோருக்கு பிறந்தோம் என்பதை வைத்து நாம் அளவிடப்படுவதில்லை. எந்த தொழிலை செய்து வாழ்கிறோம் என்பதைப் பார்த்து நாம் அளவிடப்படுவதில்லை. எந்த பொருளாதார வசதியில் இருக்கிறோம், என்னென்ன திறமைகளைக் கொண்டிருக்கிறோம் என்பதை வைத்தும் நாம் மதிப்பிடப்படுவதில்லை. இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்வு வாழ்கிறோமா? என்பதே முக்கியம். அதை வைத்தே அளவிடப்படுவோம் என்பது அழகான ஒரு ஆன்மிகப் பாடம்.
ஒன்றுபட்ட வாழ்வு என்பது ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத வாழ்வு. இதைத்தான் இயேசு "செடியில் நிலைத்திருக்கும் கிளைகள்" என குறிப்பிடுகிறார். செடியோடு இணைந்தாலன்றி, கிளையானது கனிகொடுப்பதில்லை. கிளை தனியே நறுக்கப்பட்டால் அதற்குத் தேவையான நீரும் சத்துகளும் கிடைக்காது. அது வெயிலில் காய்ந்து விறகாகும். தனது கனி கொடுக்கும் தன்மையை இழந்து விடும். தனது வாழ்வை இழந்து விடும். நெருப்புக்குத் தன்னை அர்ப்பணித்து விடும்.
ஒன்றுபட்ட வாழ்வு என்பது உடலில் இணைந்திருக்கும் உறுப்புகளைப் போன்றது. எல்லா உறுப்புகளும் ஒன்றாய் இணைந்து செயல்படும் போது தான் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். ஒன்றோடொன்று ஒன்றிக்காமல் இருக்குமானால் அது மிகப்பெரிய ஆபத்தைக் கொண்டு வந்து விடும். ஒன்றுபட்டு வாழும்போது தான் உடல் பல செயல்களைச் செய்ய முடியும். அப்படித் தான் நாம் இறைவனோடு ஒன்றித்து வாழவேண்டும்.
நாம் உயர்குடிகளாக வாழ இறைமகன் இயேசு அழைப்பு விடுக்கிறார். அதை நமது 'முதல் பிறப்பு' முடிவு செய்வதில்லை, 'இரண்டாம் பிறப்பு' முடிவு செய்கிறது. இறைவனோடு இணைந்து வாழ முடிவெடுப்பதே இரண்டாம் பிறப்பு. இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்க்கை வாழ்வதில் நமது வாழ்க்கை முழுமையடைகிறது. அத்தகைய வாழ்க்கை வாழ, இறைவனின் ஞானத்தை நாம் வேண்டுவோம்.
- மிக பிரமாண்டமாக நடைபெறும் விழாக்களில் ஒன்று நவராத்திரி.
- சரஸ்வதி தேவிக்கு கூத்தனூரில் மட்டுமே தனிக்கோவில் உள்ளது.
வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியை போலவே, மிக பிரமாண்டமாக நடைபெறும் விழாக்களில் ஒன்று, நவராத்திரி. இந்த விழாவில் துர்க்கையை முன்னிறுத்தி அப்பகுதி மக்கள் வழிபாட்டை நடத்துவார்கள். தமிழ்நாட்டிலும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும், வட மாநிலங்களில் உள்ள ஆர்ப்பாட்டம் இங்கே இருக்காது என்றாலும், தெய்வீகமான வழிபாட்டு முறையை தமிழ் மக்கள் கையாளுவார்கள்.
புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரையான ஒன்பது நாட்கள், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியர் என்று அழைக்கப்படும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோரை வழிபாடு செய்ய வேண்டும்.
முதல் மூன்று நாட்கள் பார்வதி (துர்க்கை) வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் முறையாக நடத்தப்படும்.
துர்கா தேவி
நெருப்பின் ஒளி பொருளிய அழகும், ஆவேசப்பார்வையும் கொண்டு வீரத்தின் அடையாளமாகத் திகழும் தெய்வம் இவர். இச்சா சக்தியாக போற்றப்படும் இந்த துர்க்கையை, 'கொற்றவை', 'காளி' என்ற பெயர்களிலும் வழிபாடு செய்வார்கள். போர் வீரர்களின் தொடக்கம் மற்றும் முடிவின் வழிபாட்டுக்குரிய இந்த அன்னை, சிவ பிரியை ஆவார். இந்த அன்னை, மகிஷாசூரன் என்ற அரக்கனுடன் ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக போரிட்டாள். இந்த ஒன்பது நாட்களையே நவராத்திரியாக கொண்டாடுகிறோம்.
10-வது நாளில் அவளுக்கு வெற்றி கிடைத்தது. அந்த நாளை நாம் 'விஜயதசமி' என்று வழிபடுகிறோம். வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜூவாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை. தீப துர்க்கை, சூரி துர்க்கை, லவண துர்க்கை ஆகியோர் துர்க்கையின் அம்சங்கள். இவர்களை "நவ துர்க்கை' என்று அழைப்பார்கள்.
லட்சுமி தேவி
செல்வத்தின் தெய்வமாக விளங்கும் லட்சுமி தேவி. மலரின் அழகும், அருள் பார்வையும் கொண்டு அருள்பாலிப்பவர், கிரியா சக்தியாக இருந்து செயல்படுபவர். விஷ்ணு பிரியையான இந்த தேவி, திருப்பாற்கடலை கடைந்தபோது, அமிர்தம் தோன்றுவதற்கு முன்பாக வெளிப்பட்டவள். இந்த அன்னையும் அமிர்தம் போன்றவள் தான். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருப்பார் இந்த தேவி.
இந்த தேவியை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டிக் கொண்டிருக்கும். செல்வ வளம் தந்து. வறுமையை அகற்றும் சக்தி பெற்றவள். லட்சுமி தேவியின் அம்சமான ஆதி லட்சுமி, மகாலட்சுபி, தன லட்சுமி, தானிய லட்சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட்சுமி ஆகிய 8 பேரும் "அஷ்ட லட்சுமிகள்' என்று அழைக்கப்படுகின்றனர்.
சரஸ்வதி தேவி
கல்வியின் தெய்வமாக போற்றப்படும் சரஸ்வதி தேவி, அமைதியான பார்வையும், வைரத்தின் ஜொலிப்பும் கொண்டவர். ஞான சக்தியாக அருளும் இந்த தேவிக்கு, தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூரில் மட்டுமே தனிக்கோவில் அமைந்திருக்கிறது. பிரம்ம பிரியையான இந்த தேவியை, நவராத்திரி விழாவின் போது, மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும் நேரத்தில் வழிபாடு செய்வது முறையாகும்.
நவராத்திரி நாளில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வழிபடும் நாளை, 'சரஸ்வதி பூஜை' என்கிறோம். குழந்தைகளுக்கு இந்த நாளில் கல்வியை தொடங்குவதை பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த நாளில் தொடங்கும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும். வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்த ரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகிய 8 பேரும் "அஷ்ட சரஸ்வதிகள்" என்று போற்றப்படுகின்றனர்.
- நவராத்திரியின் போது நவமங்களி பாராயணம் செய்ய வேண்டும்.
- குடும்ப ஒற்றுமை, மன அமைதி, நீண்ட ஆயுள், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்
நவராத்திரி விரதத்தின் போது இந்த நவமங்களி பாராயணத்தைச் சொல்லி வழிபட்டால், குடும்ப ஒற்றுமை, மன அமைதி, நீண்ட ஆயுள், எடுத்த காரியங்களில் வெற்றி முதலியவை உண்டாகும்.
காத்யாயநி மஹாமாயே பவாநி புவநேச்வரி
ஸம்ஸார ஸாகரே மக்நாத் உத்தரஸ்ரீ க்ருபாமமி
தன்யோஹம் அதிபாக்யோஹம் பாவிதோஹம் மஹாத்மபி
யத்பிருஷ்டம் ஸுஸூமஹத் புண்யம் புராணம் வேதவித்க்ருதம்.
நமோ தேவ்யை ப்ரக்ருத்யைச விதாத்ர்யை ஸததம் நம:
கல்யாண்யை காமதாயைச வ்ருத்யை ஸித்யை நமோ நம:
சச்சிதாநந்த ரூபிண்யை ஸம்ஸாராரணயே நம:
பஞ்ச க்ருதயை விதாத்ரைச புவநேச்வர்யை நமோ நம:
க்ரீடாதே லோகரசநா ஸகா தே சிந்மய:
சிவ ஆஹா ரஸ்தே ஸதாநந்த வாஸஸ்தே ஸ்ருதயம் மம
நமச்சிவாயை கல்யாண்யை சாந்த்யை புஷ்ட்யை நமோ நம:
பகவத்யை நமோ தேவ்யை ருத்ராயை ஸததம் நம:
ஜயஜய ஐயதாரே ஐயசீலே ஐயப்ரதே
யக்ஞ ஸூகர ஜாயே த்வம் ஜயதேவி ஐயாவஹே
ஸுகதே மோக்ஷதே தேவி ப்ரஸந்நா பவஸுந்தரி
புஷ்பஸாரா நந்த நீயே துளஸீ கிருஷ்ண ஜீவநீ
நமஸ்தே துளஸீ ரூபே நமோ லக்ஷ்மி ஸரஸ்வதி
நமோ துர்கே பகவதி நமஸ்தே ஸர்வ ரூபிணி
- 9 நாட்கள் பகலும் இரவும் தொடர்ந்து பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும்.
- இடைவிடாமல் எரியும் அகண்ட தீபம் ஏற்றி வைத்து அம்பாளை ஆராதனை செய்யலாம்.
நவராத்திரியில் நான்கு வகை உண்டு. ஆனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் 9 நாட்களை `ஆஷாட நவராத்திரி' என்றும், புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் ஒன்பது நாட்களை `சாரதா நவராத்திரி' என்றும், தை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரக்கூடிய நவராத்திரியை `மகா நவராத்திரி' என்றும், பங்குனி மாதத்திற்கு பின் அமாவாசைக்கு அடுத்து வரும் நவராத்திரியை `வசந்த நவராத்திரி' என்றும் சொல்வார்கள்.
நவராத்திரி கொண்டாடும் வழக்கம் குறித்து கூறும்பொழுது புரட்டாசி மாதமும், பங்குனி மாதமும் எமதர்ம ராஜாவின் இரண்டு கோரைப் பற்கள் என்று கூறுவார்கள். அனைத்து ஜீவராசிகளும் இந்த பற்களில் அகப்பட்டு துன்பம் இல்லாமல் இருக்க, நவராத்திரி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அக்னி புராணம் கூறுகிறது.
நான்கு நவராத்திரிகள் இருந்தாலும், பல இடங்களில் பிரசித்தியாக கொண்டாடப்படும் நவராத்திரியாக, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி உள்ளது. நவராத்திரி பண்டிகையில் 9 நாட்கள் பகலும் இரவும் தொடர்ந்து பூஜை செய்து விரதம் இருப்பது இந்த விழாவின் சிறப்பாகும்.
சுரதன் என்ற மன்னன், தான் ஆட்சி செய்த தேசத்தை நல்ல முறையில் ஆண்டு வந்தான். எல்லாவிதமான தர்மங்களும் தெரிந்த அந்த மன்னனை, மக்கள் அனைவரும் போற்றினர். அந்த நேரத்தில் மலைகள் சூழ்ந்த ஒரு பிரதேசத்தில் இருந்து ஒரு பிரிவினர், சுரத மன்னனின் நாடு மீது படையெடுத்து வந்தனர். சுரத மன்னன் நல்ல வீரனாகவும், போர்த் திறமை மிக்கவனாகவும் இருந்தாலும், சூழ்ச்சியின் காரணத்தால் அந்தப் போரில் தோல்வியடைந்தான்.
தன் மந்திரிகளே தனக்கு எதிராக சூழ்ச்சி செய்ததை அறிந்து வருந்திய மன்னன், தன் நாட்டை விட்டு காட்டிற்குச் சென்றான். அப்போது காட்டில் தவம் செய்து கொண்டிருந்த சுமேதஸ் என்ற மகரிஷியைச் சந்தித்தான். அவரிடம் தன்னுடைய நிலையைச் சொல்லி வருந்தினான். அந்த மகரிஷி மன்னனிடம், `சில நாட்கள் நீ இங்கேயே தங்கி இரு' என்றார்.
அப்படி அவ்விடத்தில் மன்னன் தங்கியிருந்த நேரத்தில், சமாதி என்ற வியாபாரி ஒருவனும் அங்கு வந்து சேர்ந்தான். அவனும் மகரிஷியிடம் `நான் நல்ல முறையில் வியாபாரம் செய்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தேன். என்னை சேர்ந்த மற்றவர்கள் செய்த சூழ்ச்சியால் அனைத்து செல்வத்தையும் இழந்தேன். என் மனைவி, பிள்ளைகளும் என்னை மதிக்கவில்லை. அதனால் கடன் அதிகமாகி மனம் வருந்தி தனித்து இந்த காட்டை வந்தடைந்தேன்' என்றான்.
பின்னர் மன்னனையும், வியாபாரியையும் பார்த்து, `உங்கள் இருவருக்கும் துயரங்கள் தீர, அற்புதமான தேவியின் மந்திரத்தை உபதேசிக்கிறேன். இந்த வனத்தில் இருந்து ஜெபியுங்கள்' என்றார் மகரிஷி. அவர்களும் தேவியின் அந்த மகா மந்திரத்தை வனத்தில் இருந்து நீண்ட காலம் ஜெபம் செய்தனர். தேவியின் உருவத்தை மண்ணில் செய்து வைத்து வழிபட்டனர்.
அவர்கள் தவத்திற்கு மகிழ்ந்து தேவி அங்கே தோன்றி, `உங்கள் இருவருக்கும் என்ன வேண்டும்?' என்று கேட்டாள். அவர்களும் தங்கள் நிலையை சொல்லி வரம் கேட்டனர். அரசனைப் பார்த்து, `நீ இழந்த ராஜ்ஜியத்தை அடைவாய். அடுத்த ஜென்மத்தில் மனுவாக பிறப்பாய்' என்று வரம் கொடுத்தாள். வியாபாரியை பார்த்து `சம்சார பந்தம் உன்னை விட்டு விலகும். நீ இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று, நிறைய தான தர்மங்கள் செய்து மோட்சத்தை அடைவாய்' என்றாள்.
அதன்படி சுரத மகாராஜா தன் நாட்டையும், வியாபாரி மோட்சத்தையும் அடைந்தனர். அவர்கள் மண்ணில் அம்மன் உருவை செய்து வைத்த வழிபட்டதன் காரணமாகவே, இன்றும் நாம் நவராத்திரி வேளையில் பொம்மைகளால் கொலுவைத்து வழிபாடு செய்கிறோம்.
விரதம் இருப்பது எப்படி?
13 அத்தியாயங்களும், 700 சுலோகங்களும் கொண்டது, தேவி மகாத்மியம். இதை `சப்த சதி' என்றும் சொல்வார்கள். நவராத்திரியில் இதை முறையாக பாராயணம் செய்வது மிக விசேஷமானது.
யம் யம் சிந்தயதே காமம்
தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்
இதை படிப்பதால் எதை கேட்கிறோமோ அதை அம்பாள் கொடுப்பதாக ஐதீகம்.
நவராத்திரி ஒன்பது நாட்களில், முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியாகவும், அம்பாளை வழிபாடு செய்வார்கள். 9 நாட்களும் தினமும் சுத்தமாக உபவாசம் இருந்து அம்பாளை அர்ச்சனை செய்வதும், நவாவரண பூஜை செய்வதும், சப்த சதி என்னும் தேவி மகாத்மியத்தை பாராயணம் செய்வதும், சுவாசினி பூஜை செய்வதும், கன்னியா பூஜை செய்வதும், தினமும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்வதும், சவுந்தர்ய லஹரி படிப்பதும் மிக விசேஷமானதாகும்.
தினமும் பூஜை செய்ய முடியாவிட்டால் அஷ்டமி அன்றும், மகா நவமி அன்றும் மட்டுமாவது பூஜிப்பது சிறப்பான பலனைத்தரும். நவராத்திரி ஒவ்வொரு நாளும், ஒரு சுஹாசினி மற்றும் ஒரு கன்னியான குழந்தையை வீட்டுக்கு வரவைத்து, அவர்களை அம்மனாக பாவித்து வஸ்திரம், மாலை, வளையல் போன்ற மங்கலகரமான பொருட்களைக் கொடுத்து, அவர்களை சாப்பிட வைத்து அம்பாளாக நமஸ்கரிக்க வேண்டும்.
நவராத்திரி ஒன்பது நாளும் பூஜை அறையில் தெய்வ அருள் தொடர்ந்து இருக்க இடைவிடாமல் எரியும் அகண்ட தீபம் ஏற்றி வைத்து அம்பாளை ஆராதனை செய்யலாம். அவரவர் வசதிக்கேற்ப மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினோறு படிகளில் மண் பொம்மைகளை வைத்து வழிபாடு செய்யலாம். பிளாஸ்டிக் பொம்மைகளை தவிர்ப்பது உத்தமம்.
அம்பாளை இந்த ஒன்பது நாளும் அந்தந்த தினத்திற்கு சொல்லிய கோல மிட்டு, சுண்டல் செய்து, அந்தந்த தினத்திற்குரிய பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்தும், அந்தந்த தினத்திற்குரிய பாடல்களைப் பாடியும், அம்பாளை வழிபாடு செய்தால், நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும், அந்த குடும்பத்தில் உண்டாகும்.
நவராத்திரி அன்று எந்தவித பூஜைகளும் செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அபிராமி அந்தாதியில் வரும் `வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை, பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த, ஐயன் திருமனை யாள்அடித் தாமரைக்கு அன்புமுன்பு, செய்யும் தவமுடை யார்க்கு உளவாகிய சின்னங்களே' என்ற பாடலையாவது, ஒன்பது நாளும் தொடர்ந்து சொல்லி வர அம்பாளின் அருள் கிடைக்கும்.
சகல சித்திகளையும் தரக்கூடிய `ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே' என்ற நவராதிரி மந்திரத்தையும் உச்சரிக்கலாம்.
- புரட்டாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வாமன ஏகாதசி.
- அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த புண்ணியம் கிடைக்கும்.
புரட்டாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி, வாமன ஏகாதசி அல்லது பரிவர்த்தினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இதனை ஜெயந்தி ஏகாதசி என்றும் அழைப்பார்கள். மற்ற ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் வாமன ஏகாதசியில் விரதம் இருந்தால் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த புண்ணியம் கிடைக்கும். மற்ற ஏகாதசி விரதங்களைப் போலவேதான் இதனையும் கடைபிடிக்க வேண்டும்.
புரட்டாசி முழுவதுமே சைவ உணவு மட்டுமே உண்ண வேண்டும். ஏகாதசிக்கு முந்தைய நாள் இரவில் வெறும் பால் மற்றும் பழங்களைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏகாதசி அன்று பெருமாளின் பெருமைகளைப் பாடி பஜனைகளில் ஈடுபடலாம். அப்படி செய்ய இயலாதவர்கள் பெருமாள் துதிகளை ஒலிக்க விடலாம். ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். பால், பழங்கள் சேர்த்துக்கொள்ளலாம். கட்டாயமாக மோர் மற்றும் தயிர் எடுத்துக் கொள்ளக்கூடாது. காபி, டீ இவையும் ஆகாது.
அப்படி கடுமையாக விரதம் இருந்த பின்னர் துவாதசியில் காலையில் துளசி தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடிக்க வேண்டும். அன்றைய உணவில் அகத்திக் கீரையும் நெல்லிகாயும் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த விரதத்தை கடைபிடித்தால் திருமாலின் மார்பில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீதேவி மகிழ்ந்து செல்வங்களை நமக்கு அள்ளி அளிப்பாள். மலைமகள் மகிழ்ந்து தன்னம்பிக்கையையும், மனோதிடத்தையும் அளிப்பாள். கலைமகள் நல்ல எண்ணங்களையும் கல்வியையும் அருள்வாள்.
மாணவர்கள் இந்த வாமன ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால் நல்ல நினைவாற்றல், நிறைய மதிப்பெண்கள் ஆகியவை கிடைக்கும்.
- புரட்டாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியே அஜா ஏகாதசி.
- திருமாலின் திருநாமங்களைச் சொல்லி வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.
புரட்டாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை அஜா ஏகாதசி என்று சொல்வார்கள். நம்மில் பலரும் காரணம் இல்லாமல் துன்பங்களை அனுபவிப்பார்கள். மனக்கவலைகளுக்கு ஆளாவார்கள், அலுவலகங்களில் பல பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். இவற்றுக்குக் காரணம் நாம் முன் ஜென்மங்களில் செய்த பாவங்களே ஆகும்.
என்னதான் நாம் இந்த ஜென்மத்தில் இறைவனை மனதார தியானித்து நல்லனவற்றையே பேசி, செய்து வந்தாலும் நமக்கு காரணம் இல்லாமல் ஏன் குழப்பங்களும் கஷ்டங்களும் வருகின்றன? அதற்கு காரணம் முன்வினைப்பயன். அதை சீராக்குவதுதான் அஜா ஏகாதசி விரதம்.
இதற்கு ஆதாரமாக புராணக் கதை இருக்கிறது. இது பலருக்கும் தெரிந்த கதைதான்.

அரசனாக வாழ்ந்த அரிச்சந்திரன் ஒரு கட்டத்தில் வாழ்க்கையை இழந்து, அரசப் பதவியை இழந்து காட்டில் கஷ்டப்பட்டான். அது மட்டுமா? காசுக்காக மனைவியை அடிமையாக விற்றான். கடுகாட்டில் பிணங்களை எரித்துப் பிழைத்தான்.
அந்த சூழ்நிலையில் கவுதம முனிவர் அவனைச் சந்தித்தார். விசுவாமித்திரர் அரிச்சந்திரனை பரீட்சிக்கிறார் என்றாலும் அவனது இந்த துன்பங்களுக்குக் காரணம் அவன் முற்பிறவியில் செய்த பாவங்களே. அவைதான் விசுவாமித்திர முனிவருக்கு இத்தகைய எண்ணங்களை உருவாக்கின என்று ஞான திருஷ்டியில் அறிந்தார்.
அரிச்சந்திரனை அழைத்து புரட்டாசி மாதத்தில் வரும் அஜா ஏகாதசி விரதத்தைப் பற்றி விவரித்தார். `மன்னனே நீ இந்த விரதத்தைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் உனக்கு நன்மை கிடைக்கும்' என்றார்.
அரிச்சந்திரனும் 9 ஆண்டுகள் தொடர்ந்து அஜா ஏகாதசி விரதத்தை அனுசரித்தான். அதன் பலனாக விசுவாமித்திரர் வைத்த பரீட்சையில் வென்றான். அது மட்டுமா? அவனுக்கு மும்மூர்த்திகளின் தரிசனமும் கிடைத்தது. மீண்டும் நாட்டை பெற்றதோடு உலகில் அழியாப் புகழோடு வாழ்ந்தான்.
நமது முன்ஜென்ம பாவங்களை நீக்கி இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அளிக்கக்கூடியது அஜா ஏகாதசி விரதம். மற்ற ஏகாதசி விரதங்களைப் போலவேதான் இதையும் அனுசரிக்க வேண்டும். திருமாலின் திருநாமங்களைச் சொல்லி வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.
குறைந்தது பத்து நிமிடங்களாவது கண் மூடி அமர்ந்து பெருமாளை தியானித்து என் முன் ஜென்ம தகாத வினைப் பலன்களை அழிப்பாய் ஐயனே என்று வேண்ட வேண்டும். இரவில் விஷ்ணு புராணத்தை படிக்கலாம். நாம ஜபம் செய்யலாம். மறுநாள் காலை நீராடி பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி தீர்த்தத்தை அருந்தி பின்னர் உணவு உண்ண வேண்டும். அப்படி செய்தால் முன்ஜென்ம பாவங்கள் யாவும் நீங்கி நலம் பெறலாம்.
- 14-ந்தேதி மகாளய அமாவாசை.
- 15-ந்தேதி நவராத்திரி விழா ஆரம்பம்.
10-ந்தேதி (செவ்வாய்)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி. அலங்கார திருமஞ்சனம்.
11-ந்தேதி (புதன்)
* திருப்பதி ஏழுமலையான் கத்த வால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
12-ந்தேதி (வியாழன்)
* பிரதோஷம்.
* திருப்பதி எழுமலையாள் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
13-ந்தேதி (வெள்ளி)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப்பல்லக்கில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
14-ந்தேதி (சனி)
* மகாளய அமாவாசை.
* திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷ்ண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
* சமநோக்கு நாள்.
15-ந்தேதி (ஞாயிறு)
* நவராத்திரி விழா ஆரம்பம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கொலு மண்டபத்தில் ராஜ ராஜேஸ்வரி அலங்காரம்.
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை அலங்காரத்துடன் காட்சி.
* சமநோக்கு நாள்.
16-ந்தேதி (திங்கள்)
* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கற்பக விருட்ச வாகனத்தில் விசுவகாமேஸ்வரர் கோலம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
- இன்று சர்வ ஏகாதசி.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கம்மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 23 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி மாலை 5.06 மணி வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: ஆயில்யம் காலை 8.24 மணி வரை. பிறகு மகம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூ மாலை சூடியருளல், ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் கந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கம்மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை, சிறுவாபுரி தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-மாற்றம்
மிதுனம்-உயர்வு
கடகம்-அமைதி
சிம்மம்-முயற்சி
கன்னி-நன்மை
துலாம்- துணிவு
விருச்சிகம்- நிம்மதி
தனுசு- உறுதி
மகரம்- அனுகூலம்
கும்பம்-விவேகம்
மீனம்- புகழ்






