என் மலர்tooltip icon

    வழிபாடு

    • 16 வகையான திரவியங்களை கொண்டு மகா அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • 3 நாட்களுக்கு ராகு பகவான் சன்னதியில் லட்சார்ச்சனை நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு தலம் கிரிகுஜாம்பிகை நாகநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவலில் நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் ராகு பகவான், நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் பால் அபிஷேகம் செய்யும் போது அந்த பாலானது நீல நிறமாக மாறும்.

    ராகு பகவான் 1½ வருடங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வார். இது ராகுப்பெயர்ச்சி விழாவாக நடைபெறுகிறது.

    நேற்று பிற்பகல் 3.40 மணிக்கு ராகுபகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள், அபிஷேக ஆராதனை, லட்சார்ச்சனை, நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 6-ந்தேதி மாலை முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்றுமுன்தினம் காலை 2-ம் காலம், மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 4-ம் காலம் யாக பூஜைகள் நடைபெற்று மதியம் 2.30 மணிக்கு கடங்கள் புறப்பட்டு ராகுபகவான் சன்னதிக்கு வந்தது.

    ராகு பகவானுக்கு மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம் தேன் பால் இளநீர் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு மகா அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து கடம் அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்கமுலாம் பூசிய கவச அலங்காரத்தில் நாககன்னி நாகவல்லி உடனாய ராகு பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ராகு பெயர்ச்சி அடையும் மதியம் 3.40 மணிக்கு ராகு பகவானுக்கு விசேஷ தீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு ராகு பகவான் சன்னதியில் லட்சார்ச்சனை நடக்கிறது.

    • வில்லியனூர், திருக்காஞ்சி கோவில்களில் நடந்த ராகு-கேது பெயர்ச்சி விழா.
    • நவகிரக சன்னதியில் சிறப்பு அபிஷேகம்.

    புதுச்சேரி:

    வில்லியனூர், திருக்காஞ்சி கோவில்களில் நடந்த ராகு-கேது பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    18 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ராகு- கேது பெயர்ச்சியானது நேற்று மாலை 3.40 மணிக்கு நடந்தது. ராகு-கேது பெயர்ச்சியையொட்டி சிவாலயங்களில் உள்ள நவகிரக சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி திருக்காஞ்சி காமாட்சி, மீனாட்சி சமேத ஸ்ரீகங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் உள்ள ராகு- கேது தனி சன்னதியில் காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜை தொடங்கியது. மதியம் 3.40 மணியளவில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நெய் தீபம் ஏற்றியும், பரிகார பூஜை செய்தும் வழிபட்டனர். வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் பரிகார ராசிக்காரர்கள் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபட்டனர்.

    புதுவை பாரதி வீதி காமாட்சி அம்மன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி ராகு பகவான், கேது பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தகர்கள் கலந்துகொண்டு பரிகார பூஜை செய்து வழிபட்டனர். இதேபோல் புதுச்சேரியில் உள்ள பல்வேறு கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது.

    • வாள் வச்ச கோஷ்டம் என்றால் வாளை வைத்த கோவில் என்று பொருள்.
    • மகிஷாசுர மர்த்தினி தேவி திருவிதாங்கூர் மன்னர்களின் குடும்ப தேவதை.

    இன்றைய குமரி நிலம் தொன்மையும், புராதன பாரம்பரியங்களும் மிக்க நிலம் என்றால் மிகையாகாது. இந்த நிலத்தில் வாழும் மக்களெல்லாம் நீண்ட பாரம்பரியம் கொண்ட வரலாற்றின் குழந்தைகள் என்று கூறலாம்.

    நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கைகள் செய்த செயல்கள் ஆகியவற்றை பின்னோக்கிப் பார்க்கும் போது வியப்பளிக்கின்றன. அறம் போதித்தவர்கள், ஆன்மிகம் வளர்த்தவர்கள் இந்த மண்ணில் ஏராளமானோர் இருந்திருக்கின்றனர். தெய்வங்கள் எழுந்தருளியதாக நம்பிக்கைக் கொள்ளும் இடங்களில் பெரும் கோவில்கள் கட்டிய மன்னர்களும், கோட்டைக் கொத்தளங்களுடன் ஆட்சியை தக்கவைக்க போர்களுடனேயே வாழ்ந்த மன்னர்கள் விட்டுச் சென்றுள்ள அடையாளங்கள் பல. அது பற்றிய பல்வேறு சம்பவங்கள் இப்போதும் பேசப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் குமரி நிலத்தின் ஒவ்வொரு ஊரின் பெயரின் பின்னாலும் ஒரு கதையுடன் கூடிய வரலாறு இருக்கின்றது.

    குமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில், இயற்கை எழில் சூழ்ந்த ஊர் தான் வாள் வச்ச கோஷ்டம். வாள் வச்ச கோஷ்டம் என்றால் வாளை வைத்த கோவில் என்று பொருள் கொள்ளலாம். அதாவது போருக்கு பயன்படுத்தப்படும் வாளை வைத்த கோவில் என்றும் பொருள் கொள்ளலாம்.

    இந்த ஊர் நாகர்கோவிலில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அழகான குளங்கள், ஓங்கி உயர்ந்த தென்னை மரங்கள், பச்சையாய் பரவி நிற்கும் வாழை மரங்கள், ரப்பர் மரங்கள் என இந்த ஊர் இயற்கை எழில் நிறைந்து காட்சி தருகிறது.

    வாள் வச்ச கோஷ்டம் என்னும் இந்த அழகான ஊரின் பெயருக்கான காரணத்தை நாம் கண்டடைய வேண்டுமெனில் அதற்காக நாம் மன்னராட்சிக் காலத்திற்கும், அதற்கு முந்தைய புராண காலத்திற்கும் செல்ல வேண்டும். இந்த ஊரின் தனித்துவ அடையாளமாக அமைந்துள்ளது இங்குள்ள மகிஷாசுர மர்த்தினி கோவில் ஆகும்.

    இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் மகிஷாசுர மர்த்தினி தேவி திருவிதாங்கூர் மன்னர்களின் குடும்ப தேவதையாக இருந்துள்ளார். மகிஷாசுர மர்த்தினி தேவியின் பாதத்தில் திருவிதாங்கூர் மன்னர்கள் போருக்குப் புறப்படுவதற்கு முன்பு தங்களது வாளை வைத்து வணங்கி முதற்குருதி தொட்டு கிளம்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    இது போன்று மன்னர் மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூர் நாட்டை விரிவாக்கம் செய்து பத்மநாப சுவாமிக்கு சமர்ப்பணம் செய்த பின்னர் தனது பெயரை பத்மநாபதாசன் என்று மாற்றியபிறகு மகிஷாசுரமர்த்தினி கோவிலுக்கு வந்து தேவியின் முன்பு தனது வாளை சமர்ப்பித்து வழிபட்டதால் இந்த கோவிலுக்கு வாள் வச்ச கோஷ்டம் என்று பெயர் வந்ததாகவும், இதுவே பின்னர் ஊரின் பெயராக நிலை பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

    இந்த கோவிலில் தமிழ், கிரந்தம், வட்டெழுத்து மொழி வடிவங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. கோவிலின் தெற்குப் பக்கச் சுவரில் உள்ள கல்வெட்டு, வேணாடு மன்னரின் உதவியுடன் அரங்க நாயகம் என்பவரால் கி.பி. 1234-ல் கட்டப்பட்டதாகக் கூறுகிறது. வீர ரவி கேரள வர்மன். கருவறை முன்புறம் உள்ள முகமண்டபம் முள்ளமங்கலம் திருவிக்கிரமன் நம்பூதிரியால் கி.பி.1620-ல் கட்டப்பட்டதாக கூறுகிறது.

    இக்கோவிலின் உள்பகுதியிலிருந்து ஒரு சுரங்கப்பாதை செல்கிறது. இது பத்மநாபபுரம் அல்லது சாரோடு அரண்மனைக்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது இந்தச் சுரங்கப்பாதை மூடிய நிலையில் உள்ளது.

    இந்த கோவிலை மகாபாரத கதையுடன் இணைத்து கூறப்படுவதும் உண்டு. பாண்டவர்கள் 14 ஆண்டுகள் வன வாசத்திற்கு செல்லும் முன்பு தங்களது ஆயுதங்களை மகிஷாசுரமர்த்தினி குடி கொண்ட இந்த இடத்தில் வைத்து பூஜை செய்ததாகவும், பரசுராமர் ரத்தம் சிந்துவதை நிறுத்தும் வகையில், இங்கு வந்து தனது வாளைக் கழுவி தேவியின் முன்பு வைத்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த கோவிலை ஒரு சிற்பக் கலையின் பொக்கிஷம் என்று கூறினால் அதில் மிகையில்லை. அந்த அளவுக்கு இக்கோவிலின் வாசலில் காட்சி தரும் துவார பாலகிகள் முதல் உள் மண்டபங்களின் தூண்களில் கலை நுட்பத்துடன் செதுக்கப்பட்டுள்ள தெய்வங்களின் சிலைகள் வரை ஒவ்வொன்றும் காண்போரை வியப்படைய செய்கின்கின்றன. இவையெல்லாம் அன்றைய சிற்பக் கலைக்கு கட்டியம் கூறுவதாகவும் உள்ளன.

    இந்த கோவிலில் மகிஷாசுர மர்த்தினி தேவி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லாத தனித்தன்மை வாய்ந்த கோவிலாக மகிஷாசுர மர்த்தினி எழுந்தருளியுள்ள இக்கோவில் பார்க்கப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத் துறையின் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள மகிஷாசுர மர்த்தினி கோவிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளாவில் இருந்தும் இங்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினரும் மாதம் தோறும் இங்கு வந்து வழிபட்டும், சிறப்பு பூஜைகளும் செய்கின்றனர்.

    இப்போது மகிஷாசுர மர்த்தினி கோவிலும் வாள் வச்ச கோஷ்டம் ஊரும் புகழ் பெற்றவையாக திகழ்கின்றன. வாள் வச்ச கோஷ்டம் ஊரில், குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற 12 சிவாலயத் திருத்தலங்களில் 11 -வது சிவாலயமான திருப்பன்றிகோடு மகாதேவர் ஆலயம், மும்மத வழிப்பாட்டுத் தலமான பள்ளியாடி பழைய பள்ளி திருத்தலம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. வாள் வச்ச கோஷ்டம் தற்போது பேரூராட்சியாக உள்ளது.

    • நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா.
    • கேதுபகவானை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

    திருவெண்காடு:

    பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி நாகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இதனால் இந்த கோவில் கேது பகவானின் பரிகார தலமாக விளங்குகிறது.

    கேதுபகவானை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு, நாக தோஷம் , திருமணத்தடை நீங்கி செல்வ செழிப்புடன் நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. நேற்று மாலை 3 .41 மணி அளவில் கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை யொட்டி கேது பரிகார யாகம் நடந்தது. பின்னர் கேது பகவானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், கங்கை நீர் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து யாக குடங்களிலிருந்து புனித நீர் ஊற்றப்பட்டு மகாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு சரியாக 3.41 மணியளவில் தீபாரதனை நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கேதுவை வழிபட்டனர்.

    கேது பெயர்ச்சி நாளிலிருந்து 18 நாட்களுக்கு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.

    • நட்சத்திர விரதம் இருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும்.
    • திதி விரதமிருந்தால் விதி மாறும்.

    பொதுவாகவே விரதங்கள் மூன்று வகைப்படும். ஒன்று வார விரதம், மற்றொன்று திதி விரதம். மூன்றாவது நட்சத்திர விரதமாகும். 'வார விரதத்தை மேற்கொண்டால் சீரான வாழ்க்கை அமையும். நட்சத்திர விரதம் இருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும். திதி விரதமிருந்தால் விதி மாறும். எனவே ஒருவருக்கு விதிக்கப்பட்ட "விதி" மாற வேண்டுமானால் திதி பார்த்து விரதம் இருந்து அதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

    மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு என்று, விதியை இறைவன் மாற்றியமைத்த கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதைப்போல நமக்கு விதிக்கப்பட்ட விதி எதுவாக இருந்தாலும் அதை மாற்றக்கூடிய ஆற்றல் விரதங்களுக்கு உண்டு. உண்ணா விரதம் இருந்து இந்த நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் மகாத்மா காந்தி, உண்மையாக நாம் விரதம் இருந்து உள்ளன்போடு வழிபட்டால் சுகங்களை வழங்குவார் முருகப்பெருமான்.

    "சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்பது நம் முன்னோர் வாக்கு. உடல் ஆரோக்கியத்திற்கு சுக்கு மருந்தாக இருப்பது போல உள்ளம் சீராக இருக்க வள்ளல் முருகனின் வழிபாடு நமக்கு கைகொடுக்கின்றது. அந்த முருகப்பெருமானை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். இருந்தாலும் அவருக்கு உகந்த நாளில் வழிபடுகின்ற பொழுது எண்ணற்ற நற்பலன்கள் இதயம் மகிழும் விதம் நமக்கு வந்து சேருகின்றது.

    மனித வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுவது இரண்டு விழாக்கள். ஒன்று திருமண விழா, மற்றொன்று வாரிசு பிறக்கும் திருநாள். அங்ஙனம் வாரிசு உண்டாக வள்ளல் முருகனை விரதம் இருந்து வழிபட வேண்டிய திருநாள் கந்தசஷ்டி விழாவாகும். முருகனுக்கு உகந்த விரதங்களில் ஒன்று சஷ்டி விரதமாகும். அந்த சஷ்டியை கந்த சஷ்டி என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது கந்தனுக்குரிய சஷ்டி, கந்தசஷ்டி ஆகும்.

    முருகனுக்குரிய திதி விரதங்களில் முக்கியமானது சஷ்டி திதி. "சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பது பழமொழி. இந்த பழமொழிதான் நாளடைவில் மருவி "சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்று மாற்றம் பெற்றுவிட்டது.

    திருமண வீடுகளில் உணவு பரிமாறும் பொழுது சாம்பார், கூட்டு, போன்றவைகள் குறைவாக இருந்தால் கரண்டியில் எடுக்கும் போது குறைவாகவே வரும். அப்பொழுது சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்று சொல்வதை நாம் கேட்கலாம். ஆனால் அதன் உண்மையான விளக்கம். `சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால் 'அகப்பை எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதைக் குறிப்பதாகும்.

    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர். கந்த சஷ்டி விழாக்காலத்தில் ஆறு நாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள் சஷ்டியன்று முழுமையாக விரதம் இருப்பது நல்லது.

    இந்த ஆண்டு தீபாவளிக்கு அடுத்த நாள் கந்த சஷ்டி ஆரம்பமாகின்றது. பிறகு ஆறாவது நாள் கார்த்திகை 2-ந்தேதி (18.11.2023) சூரசம்ஹார நிகழ்வு அதாவது கந்த சஷ்டி விழா வருகின்றது. அன்றைய தினம் சூரசம்ஹாரம் முடித்து வெற்றிக் களிப்போடு இருக்கும் முருகப்பெருமானை வழிபட்டு இனிப்பு பொருள் உண்டு விரதத்தை நிவர்த்தி செய்வது நல்லது.

    முருகப்பெருமான் செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக புராண வரலாறு சொல்வதால், அன்றையதினம் திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட செல்கின்றனர். திருச்செந்தூரின் கடல் ஓரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம். தேடித் தேடி வருவோர்க் கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் என்று கவியரசு கண்ணதாசன் வர்ணித்திருப்பார்.

    எனவே அப்படிப்பட்ட தெய்வாம்சம் நமக்கு கிடைக்க திருவருள் கைகூட, குருபீடமாக வீற்றிருக்கும் திருச்செந்தூருக்கு சென்று வழிபட்டு வரலாம். அங்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் முருகப்பெருமான் ஆலயங்களுக்குச் சென்று ஆறுமுகப்பெருமானை வழிபட்டு வரலாம்.

    வீட்டிலுள்ள பூஜை அறையிலும் ஆறுமுகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் கூடிய தெய்வ படத்தை வைத்தும் வழிபட்டு வரலாம். புத்திரப்பேறு மட்டுமல்லாமல் புகழ், கீர்த்தி, செல்வாக்கு, போன்ற பதினாறு பேறுகளும் பெற்று செல்வ வளத்தோடு வாழ இந்த வழிபாடு கைகொடுக்கின்றது.

    கந்தன்பெயரை எந்தநாளும் சொல்லிப் பாருங்கள்

    கவலையெல்லாம் தீரும் இது உண்மைதானுங்க!

    செந்தில்வேலன் புகழ்படித்தால் செல்வம் சேருங்க!

    தேசமெல்லாம் கொடிபறக்கும் வாழ்வைப் பாருங்க!

    என்று கவிஞர் பெருமக்கள் வள்ளி மணாளனை வர்ணித்து கவசம் பாடியிருக்கின்றார்கள்.

    • ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    திருநாகேஸ்வரம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் கோவில்களில் ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதத்தில் மீன ராசிக்கு ராகுவும், சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதத்தில் கன்னி ராசிக்கு கேதுவும் சென்றனர்.

    இதனையடுத்து ராகு-கேது பரிகாரத்தலங்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதன்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசாமி கோவிலில் நேற்று ராகு பெயர்ச்சி விழா நடைபெற்றது.

    இதையொட்டி ராகு பகவானுக்கு மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம் தேன் பால் இளநீர் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு மகா அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து கடம் அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்கமுலாம் பூசிய கவச அலங்காரத்தில் நாககன்னி நாகவல்லி உடனாய ராகு பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ராகு பெயர்ச்சி அடையும் மதியம் 3.40 மணிக்கு ராகு பகவானுக்கு விசேஷ தீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி நாகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இதனால் இந்த கோவில் கேது பகவானின் பரிகார தலமாக விளங்குகிறது.

    கேது பெயர்ச்சியையொட்டி சாமிக்கு நேற்று மலர் அலங்காரம் செய்யப்பட்டு சரியாக 3.41 மணியளவில் தீபாராதனை நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கேதுவை வழிபட்டனர். கேது பெயர்ச்சி நாளில் இருந்து 18 நாட்களுக்கு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, புரட்டாசி 22 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: தசமி பிற்பகல் 2.59 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: ஆயில்யம் (முழுவதும்)

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. அஹோபில மடம் ஸ்ரீமத் 18-வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கரின் திருநட்சத்திர வைபவம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர், லால்குடி உள்ளிட்ட கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செய்தி

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-சுகம்

    கடகம்-ஆதரவு

    சிம்மம்-அமைதி

    கன்னி-புகழ்

    துலாம்- தனம்

    விருச்சிகம்-ஆக்கம்

    தனுசு- நிறைவு

    மகரம்-வெற்றி

    கும்பம்-முயற்சி

    மீனம்-கடமை

    • கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • இந்து கோவில் கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

    அபுதாபி:

    அபுதாபியில், இந்து கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பணிகள் அனைத்தும் முடிந்து அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் திறக்கப்படுகிறது.

    அமீரகத்திற்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக வருகை புரிந்தார். அப்போது மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக அபுதாபியில் இந்து கோவில் கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அந்த கோவிலை கட்டுவதற்கு துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 55 ஆயிரம் சதுர அடி இடம் அபுதாபி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது.

    இதற்கான உத்தரவை அப்போதைய அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார். இந்த கோவிலின் கட்டுமான பணிகளை நிர்வகிக்க குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த பாப்ஸ் (போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற இந்து அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இது குறித்து பாப்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- அரசின் இந்த அனுமதியை தொடர்ந்து கோவிலின் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. மொத்தம் 30 ஆயிரம் சிற்ப வேலைபாடுகளை கொண்ட கற்கள் இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. சுவரின் அடிப்பகுதியில் கிரானைட் கற்களும் அதன் மீது இளஞ்சிவப்பு கற்களும் கொண்டு சுவர்கள் எழுப்பப்படுகிறது. இந்து கோவிலின் கட்டுமான பணிகளில் தங்கள் பங்கும் இருக்க வேண்டும் என அமீரகத்தில் வசிக்கும் இந்திய மக்கள், தன்னார்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என பலரும் கற்களை கட்டுமான தளத்திற்கு எடுத்து செல்கின்றனர்.

    இரும்பு கம்பிகள் எதுவும் இல்லாமல் பாரம்பரிய இந்து கோவிலாக கட்டப்படுவது இதன் சிறப்பம்சமாகும். கட்டிட உறுதிக்காக சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரகங்களை குறிக்கும் வகையில் ௭ கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது. அடித்தளம் அமைக்கும் பணி நிறைவு பெற்று முதல் தளத்தின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.

    கட்டிடத்தின் வெளிப்புறத்தில் கட்டப்படும் கற்கள் அனைத்தும் இந்தியாவின் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் உட்புறத்தில் உள்ள கட்டமைப்புகள் இத்தாலி நாட்டு மார்பிள் கற்களால் செய்யப்படுகிறது. பூக்கள் மற்றும் கொடிகள் போன்ற வேலைபாடுகளுடன் இந்த சிற்ப கற்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிலைகள் வைப்பதற்கு தேவையான இடைவெளி விட்டு கட்டப்படுகிறது.

    இதில் ராமரின் வாழ்க்கை வரலாறு குறித்த சம்பவங்களை விளக்கும் வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை அந்த கோவில் வளாகம் முழுவதும் பதிக்கப்பட உள்ளன. இந்த கோவிலின் ஆயுட்காலம் குறைந்தபட்சம் 1,000 ஆண்டுகளாக இருக்கும் வகையில் கட்டப்படுகிறது. இதற்காக கட்டுமான பகுதியில் மேற்கு ராஜஸ்தானில் இருந்து 70 சிற்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பணியாற்றுகின்றனர்.

    இதில் மிகப்பெரிய கலையரங்கம், கண்காட்சி அரங்கம், நூலகம், உணவகங்கள், கூட்டங்கள் நடத்தும் பகுதி மற்றும் 5 ஆயிரம் பேர் நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் பார்வையிடும் வசதியுடன் 2 சமூக அரங்குகளுடன் கட்டமைக்கப்படுகிறது. கூடுதலாக வளாகத்தின் அருகே 53 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கார் நிறுத்தப்பகுதி அமைக்கப்படுகிறது. இதில் மொத்தம் 1,200 கார்கள் மற்றும் 30 பஸ்கள் ஒரே நேரத்தில் நிறுத்திக்கொள்ளலாம். கூடுதலாக ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக 2 தளங்கள் ஏற்படுத்தப்படுகிறது.

    இந்த கோவிலின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்கள் வழிபாட்டுக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவில் முழுமையான செயல்பாட்டுக்கு வந்ததும் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அங்கு இடம்பெற்றிருக்கும் நுணுக்கமான கலை வடிவங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
    • இந்த கட்டிடம் பார்சிலோனா நாட்டில் அமைந்திருக்கிறது.

    பழங்கால கட்டுமானங்கள் பல ஆண்டுக்கணக்கில் கட்டப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். அவற்றை எப்படி கட்டி இருப்பார்கள் என்பது நமக்கு தெரியாது. அதில் இடம்பெற்றிருக்கும் நுணுக்கமான கலை வடிவங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அதனை பார்வையிடும் பலரும் எப்படித்தான் இப்படி கலை வேலைப்பாடுகளை செய்திருப்பார்களோ என்று வியப்பில் ஆழ்ந்து போவார்கள். எத்தனை ஆண்டுகளாக கட்டி இருப்பார்கள் என்று யூகிப்பார்கள்.

    ஆனால் நூற்றாண்டுகளை கடந்தும் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. பழமை மாறாமல் அந்த கட்டுமானத்தை நிர்மாணிக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஆண்டுக்கணக்கில் கட்டுமானம் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது.

    அந்த கட்டிடம் பார்சிலோனா நாட்டில் அமைந்திருக்கிறது. அது தேவாலயமாக எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. சாக்ரடா பேமிலியா கதீட்ரல் எனப்படும் அந்த தேவாலயத்தின் கட்டுமானப்பணி 1881-ம் ஆண்டு தொடங்கி இருக்கிறது. கட்டிடக் கலைஞர் ஆண்டனி கவுடி என்பவர் இந்த கட்டுமானத்திற்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறார். உலகமே வியந்து பார்க்கும் வகையிலான பிரமாண்டமாக, கலை வேலைப்பாடுகள் கொண்ட கட்டிடமாக அமைய வேண்டும் என்று அவர் தீர்மானித்திருக்கிறார். அதற்காக ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்.

    கட்டுமான வரைபடம் தயாரிப்பதற்கு மட்டுமே சுமார் 10 ஆண்டுகாலம் செலவிட்டிருக்கிறார். அவர் எதிர்பார்த்தபடியே கட்டுமான வரைபடம் அமைய, உற்சாகமாக பணியை தொடங்கி இருக்கிறார். ஆனால் இப்போது போல் கட்டுமான தொழில்நுட்பட்பம் அந்த காலத்தில் இல்லை என்பதால் கட்டுமான பணி மெதுவாக நடந்திருக்கிறது. அவர் எதிர்பார்த்தபடி கட்டுமானத்தில் ஒரு பகுதி கூட நிறைவடையாத நிலையில் 1926-ம் ஆண்டு ஆண்டனி கவுடி உயிரிழந்துவிட்டார்.

    அதனால் கட்டுமான பணியில் சுணக்கம் ஏற்பட்டது. அங்கு நடைபெற்ற உள்நாட்டு போரும் கட்டுமான பணியை பாதிப்புக்குள்ளாகிவிட்டது. போரின்போது கட்டுமான வரைபடத்தை சிதைத்துவிட்டார்கள். அதனால் ஆண்டனி கவுடி திட்டமிட்டபடி கட்டுமானத்தை எழுப்புவது சவாலாக மாறியது. அவர் ஏற்படுத்தி கொடுத்த அடித்தள கட்டுமானத்தின் அடிப்படையில் கட்டுமான பணிகளை செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

    கட்டுமானத்திற்கு நிதி கிடைப்பதில் ஏற்பட்ட சுணக்கமும் தாமதத்தை அதிகப்படுத்திவிட்டது. இப்போது உலகின் பல பகுதிகளில் இருந்தும் நிதி குவிந்து கொண்டிருக்கிறது. நவீன கட்டுமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழமை மாறாமல் கட்டுமானத்தை எழுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆண்டனி கவுடி தேவாலயத்தின் முகப்பு பகுதிகளை நுணுக்கமான வேலைப்பாடுகளால் அலங்கரித்துவிட்டார். தேவாலயத்திற்குள் நுழைவதற்கு 3 நுழைவு வாயில்கள் அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தார். அவற்றுள் இரண்டு நுழைவு வாயில் பகுதிகள் அமைக்கப்பட்டுவிட்டன. மூன்றாவது நுழைவு வாயில் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தேவாலய கட்டுமான பணி 2026-ம் ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கட்டுமான பணி முடிவடையும்போது இது உலகின் மிக உயரமான தேவாலயமாக மாறும்.

    ஆண்டனி கவுடி, தேவாலயம் 18 பெரிய, சுழல் வடிவ கோபுரங்களை கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். 12 அப்போஸ்தலர்கள், 4 சுவிசேஷகர்கள், கன்னி மேரி மற்றும் இயேசு என ஒவ்வொரு கோபுரத்திலும் வெவ்வேறு உருவங்கள் இடம் பெற வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அதன்படியே கட்டுமானம் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

    நான்கு சுவிசேஷ கோபுரங்களும் 135 மீட்டர் உயரம் (சுமார் 443 அடி) கொண்டிருக்கின்றன. 138-மீட்டர் (453-அடி) உயரம் கொண்ட கன்னி மேரியின் கோபுரத்தின் மேல் 12 ஸ்டார்கள் கொண்ட பெரிய நட்சத்திரம் வடிவமைக்கப்பட்டது. இந்த கோபுர கட்டுமானப்பணி 2021-ம் ஆண்டு இறுதியில் முடிவடைந்தது.

    இயேசு கிறிஸ்துவை குறிக்கும் கோபுரம் 172.5 மீட்டர் (566 அடி) உயரம் கொண்டதாக இருக்கும். 1984-ம் ஆண்டில், இந்த கட்டிடம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்துவிட்டது. 2010-ம் ஆண்டு வழிபாட்டிற்காக பதினைந்தாம் போப் பெனடிக்ட்டால் புனிதப்படுத்தப்பட்டது. இந்த தேவாலயத்தையும், அதன் கட்டுமான பணியையும் காண்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    • கருட பஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாகசதுர்த்தி.
    • பித்ருக்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

    பாற்கடலை கடையும் போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்ட தினமாக நாகசதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் நாகசதுர்த்தி அன்று தம்பிட்டு என்ற ஒருவகை லட்டுவை சிவபெருமானுக்கு நைவேத்தியமாக படைக்கின்றனர்.

    கருட பஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் தான் நாகசதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. நாக சதுர்த்தி நாள் அன்று அஷ்ட நாகங்களான வாசிகி, ரட்சகன், காளிங்கன், மணிபக்தன், சராவதன், திருதிராஷ்டிரன், கார்கோடகன், தனஞ்செயன் இவர்களை வணங்க வேண்டும்.

    ராகு-கேது தோஷங்களால் திருமணம் நடக்காதவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்நாளில் நாகங்களை வழிபாடு செய்ய வேண்டும். ஆடி அல்லது ஆவணி வளர்பிறை சதுர்த்தியை நாகசதுர்த்தி என்று அழைக்கிறார்கள்.

    ராகு கேது கிரக தோஷங்கள் நீங்கவும், ஆரோக்கியம் மேம்படவும், செல்வ வளம் அதிகரிக்கவும், பித்ருக்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கவும் இந்த ஆவணி ஞாயிறு விரதத்தை அனுஷ்டிக்கலாம். தந்தை இல்லாதவர்கள் வாழ்வில் வளம் பெற சூரியனைத் தந்தையாக ஏற்றுக் கொண்டு இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். இதனால் இரட்டிப்பு பலன் உங்களுக்கு கிடைக்கும். சனிபகவானின் பாதிப்பு குறைந்து வாழ்வில் நிம்மதி கிடைக்கவும், சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் தீரவும் நாகசதுர்த்தி விரதத்தை கடைபிடிக்கலாம்.

    அந்த காலத்தில் விவசாயிகள் ஆவணி மாதத்தில் நன்கு விளைந்து நிற்கும் வயல்வெளிகளில் இருக்கும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டி பெண்கள் நாகருக்கு புற்றில் பால் ஊற்றி இந்த நாளில் வழிபாடுகள் செய்வார்கள். அரசு வேலைக்காக தேர்வு எழுதிவிட்டு காத்திருப்பவர்களும், வேலையில்லாதவர்கள் வேலை கிடைக்க ராகு கேதுவான நாகர் சிலைக்கு பால் ஊற்றி வேண்டிக் கொள்ளலாம். நாக சதுர்த்தி அன்று நாக தோஷம் நீங்கவும், கால சர்ப்ப தோஷங்கள் நீங்கவும் நாகர்களை வழிபடலாம்.

    நாகங்கள் தீண்டி இறந்த சகோதரர்களுக்கு உயிர்பிக்க வேண்டும் என்று ஒரு பெண் வேண்டியதாகவும். அந்த பெண்ணின் பக்திக்கு இணங்கி அவளுடைய சகோதரர்களுக்கு நாகபஞ்சமி அன்று உயிர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நாளை பற்றி சதுவேத சிந்தாமணி என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.

    • எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது.
    • இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

    இங்கு சிவன் சயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி. 850-ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான். கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும் கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 133-வது தேவாரத்தலம் ஆகும்.

    ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்ததும் இடப்பால் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது. முன் மண்டபத்தில் நுழைந்தால் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார் உள்வாயிலை தாண்டியதும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம் கவசமிட்ட கொடிமரம் பலிபீடம் நந்தி உள்ளன. அடுத்து, நட்டுவன், பிள்ளையார் சந்திடு தலப்பதிகம் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. இடல்பால் அதிகார நந்தி உள்ளார்.

    மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. மூலவர் சிவலிங்கத் திருமேனி சுயம்பு-சற்று தடித்த உயர்ந்த பாணம், உள் சுற்றில் வெண்ணெய் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியர் பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான் ஆகிய சன்னதிகள் உள்ளன.

    தெற்கு நோக்கிய சன்னதியில் எமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம் கதை சூலம் ஏந்தி இடதுகாலை மடித்து வலதுகாலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தாகிறார். அவர் அருகில் முனிவர் போல், ஒருவரது சிலாவடிவம் உள்ளது. மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர். மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம். பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப்பெறலாம். பிள்ளையாருக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்கிறார்கள். அனுமனுக்கே உரித்தான இவ்வழிபாட்டை பிள்ளையாருக்குச் செய்வது இக்கோயிலின் சிறப்பம்சம்.

    தலபெருமை:

    கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும் கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும். குப்த கங்கை ஒருமுறை கங்காதேவி சிவனிடம், மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழிகூற வேண்டும் என வேண்டினாள் அதற்கு சிவன், உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோச்சனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்றார்.

    அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும். காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த தங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியைவிட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மாசி மகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது

    கார்த்திகை ஞாயிறு:

    தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன், தன்னை அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும் ஒருவர், இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தார் ஸ்ரீயை வாஞ்சித்து (ஸ்ரீ என்ற மகாலட்சமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்ததால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் ஆனது. இங்கு சிவனே அனைத்துமாக அருள்பாலிப்பதால் நவக்கிரகங்களுக்கு சன்னதி இல்லை

    கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி எமனும், சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர். எமதர்மனை சாந்தி செய்யும் விதத்தில் இங்கு அபயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து நீண்ட ஆயுள் பெறலாம். இங்கு வீற்றிருக்கும் அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள். துர்க்கைக்கு தனி சன்னதி இல்லை, பிரம்மாண்ட நாயகியாக காட்சி தரும் மகிஷாசுரமர்த்தினியே துர்க்கையின் சொரூபமாக இருக்கிறாள். ராகுவும் கேதுவும் ஓரே வடிவில் இருப்பதை இக்கோயிலில் மட்டுமே. காண முடியும் என்று கூறப்படுகிறது.

    யோக நிலையில் எமன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு ஆனால் வாஞ்சியத்தில் மரித்தவருக்கு எமபயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில் தமது தண்டங்களையெல்லாம் கீழே வைத்துவிட்டு, ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார் எமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம் காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது என முனிவர்கள் கூறுகின்றனர். பிரமாண்ட புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

    தலவரலாறு

    எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும்போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார் என்று எமதர்மராஜா மிகவும் வருந்தினார். திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரி கூறியது. அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இன்றவன் மாசிமாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, `வேண்டும் வரம் கேள் என்றார்

    அதற்கு எமனும், `இறைவர் அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர் திட்டித் தீர்க்கின்றனர். பல கொலைகளால் ரோத பிரம்மா பிடித்து என்னை வாட்டுகிறது பாவமும் தொடர்கிறது. மன நிம்மதியே இல்லை என்றார்.

    எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், `எமதர்மனே இனிமேல் எமன் உயிரை பறித்து விட்டான் என்று கூறமாட்டார்கள் நோய் வந்ததாலும் வயதாகி விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என்றும் கூறுவார்கள். இதனால் பழியும், பாவமும் இனி உனக்கு கிடையாது. மேலும் நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமடுக்க வேண்டும். இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு. மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும். மேலும் நீ இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குவாய் இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்னரே என்னை தரிசிப்பார்கள் என்று அருளினார். அதன்படி இங்கு எமதர்ம ராஜனுக்கே முதல் வழியாடு நடக்கிறது.

    திறக்கும் நேரம்:

    காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    முகவரி:

    அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீவாஞ்சியம்  610 110 திருவாரூர் மாவட்டம்.

    • சூரியனார்கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்
    • திருமய்யம் சத்தியமூர்த்தி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, புரட்டாசி 21 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி நண்பகல் 1.12 மணி வரை. பிறகு தசமி.

    நட்சத்திரம்: பூசம் காலை 5.56 மணி வரை. பிறகு ஆயில்யம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார்கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருமய்யம் சத்தியமூர்த்தி புறப்பாடு. கீழ்த்திருப்பதி

    ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப்

    பெருமாள் கோவில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செயல்

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-நன்மை

    கடகம்-பரிசு

    சிம்மம்-சிந்தனை

    கன்னி-நட்பு

    துலாம்- பக்தி

    விருச்சிகம்- உதவி

    தனுசு- பாசம்

    மகரம்- உயர்வு

    கும்பம்- புகழ்

    மீனம்- திடம்

    ×