என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சிம்மம், கன்னி, கும்பம், மீனம் ஆகிய 4 ராசிக்காரர்கள் பரிகார வழிபாடுகள் செய்வது நல்லது.
    • திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூட பூஜை செய்யுங்கள்.

    ராகு மற்றும் கேது பெயர்ச்சி 2023-ம் ஆண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நாளை (8-ந் தேதி) நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி அக்டோபர் 30-ந் தேதி நடக்க உள்ளது என ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.

    இந்த பெயர்ச்சியின் போது ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2025ம் ஆண்டு மே 18-ந் தேதி இரவு 7.35 மணி வரை இந்த கிரகங்கள் மேலே குறிப்பிட்டுள்ள ராசியில் சஞ்சரிக்கும். மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் ராகுவும், கேதுவும் எப்போதும் பின்னோக்கி அதாவது வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவை. இவை சர்ப்ப கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சர்ப்ப கிரகங்களின் இடையில் மற்ற கிரகங்கள் அமைந்துவிட்டால் அதனை கால சர்ப்ப தோஷம் அல்லது யோகம் என்பார்கள். நாளை பிற்பகல் 3 மணி 36 நிமிடத்துக்கு ராகு, தான் இருந்த மேஷ ராசியில் இருந்து, மீன ராசிக்கு வருகின்றார்.

    கேது, தான் இருந்த துலாம் ராசியில் இருந்து கால புருஷனுக்கு ஆறாம் ராசியான கன்னிராசிக்கு வருகிறார். ராகுவுக்கு இடம் தந்து குரு வலிமையுடன் இருப்பதால் ராகுவின் பாதிப்பு குறையும்.

    அதுபோல் ராகுவின் எதிர் ராசியான கன்னி ராசியும் புதனின் சுபத்தன்மையை பொறுத்து கெடுபலன்களை குறைத்து கொள்ளும். இந்த ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு நாளை சிறப்பு வழிபாடுகளும் சர்ப்ப சாந்தி பரிகாரங்களும் செய்து கொள்வது நல்லது. குறிப்பாக சிம்மம், கன்னி, கும்பம், மீனம் ஆகிய 4 ராசிக்காரர்கள் பரிகார வழிபாடுகள் செய்வது நல்லது. மற்ற ராசிக்காரர்கள் சாதாரண பூஜைகள் செய்யலாம்.

    ராகு-கேது பெயர்ச்சி பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள அம்மன் கோவில்களில் உள்ள நாகப் பிரதிஷ்டைகளை வணங்கி வாருங்கள். அதுவே பரிகாரத்துக்கு போதுமானது. வேறு எந்த சிறப்பு பரிகார பூஜைகளும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலும் இந்த முறை ராகு-கேது தோஷம் பெரும் பாதிப்பு செய்வதில்லை. மாறாக தன்னம்பிக்கை துணிச்சலை வளர்க்கும். எனவே கவலை தேவையில்லை.

    சிம்மம்

    இதுவரை ராகு ராசிக்கு 9ம் இடத்திலும், கேது 3ம் இடத்திலும் சஞ்சரித்து வந்தனர். தற்போது இந்த பெயர்ச்சி மூலம் ராகு 8-ம் இடத்திலும், கேது 2-ம் இடத்திலும் அமர்கின்றனர். இதன் காரணமாக பொதுவாக உங்களுக்கு கடன் தொல்லை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம். அஷ்டம ஸ்தானத்தில் ராகு அமர்வதோடு, ராசிக்கு 2ல் தன ஸ்தானத்தில் கேது இருப்பதால் உங்களின் வருவாய் குறையும். அதனால் வருமானம் குறைவதற்கும் வாய்ப்பு உண்டு. தேவையற்ற சிந்தனைகள், மன குழப்பங்கள் வரும். ஆனால் பனி போல அவை மறைந்து விடும். எனவே எந்த விஷயத்தையும், செலவையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குறிப்பாக உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

    கன்னி

    இந்த ராகு கேது பெயர்ச்சியினால் கன்னி ராசியிலேயே கேது பகவான் அமர்கிறார். 7-ம் இடத்தில் ராகு அமர உள்ளார்.

    லக்கினத்தில் கேதுவும், 7-ல் ராகு அமர்வதால் திருமண வாழ்க்கையில் சிறு, சிறு சலசலப்பு வரலாம். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூட பூஜை செய்யுங்கள். மேலும் கன்னி ராசியினரின் வளர்ச்சி தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் முன்னேற்றத்தை தடுக்க சிலர் கங்கனம் கட்டிக் கொண்டு வருவார்கள். கவனமாக இருங்கள். நீங்கள் எடுக்கும் முடிவு, செயல்களில் உங்களின் சிந்தனை நிலையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

    கும்பம்

    கும்ப ராசிக்காரர்களுக்கு 2ம் இடத்தில் ராகுவும், 8ல் கேதுவும் இந்த பெயர்ச்சியின் போது அமையப் பெறுவார்கள்.

    இரண்டாம் இடத்தில் ராகு, 8ல் கேது அமர்வதால் உங்களின் குடும்ப வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும். மேலும் தற்போது ஜென்ம சனி நடந்து கொண்டிருப்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். மேலும் குடும்ப விருத்தி அடைவதில் கவனம் தேவை.

    மீனம்

    மீன ராசியிலேயே ராகு வருவதும், கேது 7ம் இடத்தில் அமர்வதாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. புத்திர தோஷம், சொத்து தகராறு போன்ற விஷயங்கள் வர வாய்ப்புள்ளதால் சற்று பொறுமையை கையாழுங்கள். எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடப்பது அவசியம்.

    ராகு-கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட இடங்களில் மாறினாலும் சரி. அதற்கு பயப்பட தேவையில்லை. குண்டலினி சக்தியை தன்னுள்கொண்டு ஜீவ ஜோதியான சித்தர்களின் ஜீவ சமாதிகளில் சென்று வழிபட்டால் போதும். ராகு-கேது பெயர்ச்சி பலனை உங்களுக்கு இனிய பெயர்ச்சியாக மாற்றுங்கள்.

    • குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • ஸ்ரீவரதராஜருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, புரட்டாசி 20 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: அஷ்டமி காலை 11.43 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம்: புனர்பூசம் பின்னிரவு 3.42 மணி வரை. பிறகு பூசம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று அவிதவா நவமி. குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம். திருவண்ணாமலை ஸ்ரீசீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு. பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம் பெருமாள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-புகழ்

    மிதுனம்-ஆசை

    கடகம்-நேர்மை

    சிம்மம்-நற்செய்தி

    கன்னி-நன்மை

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- ஜெயம்

    மகரம்-வரவு

    கும்பம்- செலவு

    மீனம்- பயணம்

    • இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் 15-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது.

    திருவொற்றியூர்:

    மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி மிகவும் பிரசித்தி பெற்றது, இங்கு ஆண்டு தோறும் 10 நாள் புரட்டாசி திருவிழா வெகு விமரிசையாக நடை பெறும். இந்த விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது

    இதையொட்டி அய்யாவின் பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திரு நாமக்கொடியை கையில் ஏந்தியவாறு பள்ளியறையை 5 முறையும்,கொடி மரத்தை 5 முறையும் அய்யா அரஹர சிவ என்ற நாமத்தை உச்சரித்தபடி சுற்றி வந்தனர்.

    பின்னர் பதிவலம் வந்து காலை 6.30 மணியளவில் திருநாமக்கொடி ஏற்றப்பட்டது.

    இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார். விழா நாட்களில் தினமும் மாலை திருஏடு வாசிப்பு நடை பெறுகிறது.

    தினமும் இரவு அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனம், கருடவாகனம், மயில் வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், சர்ப்ப வாகனம், மலர்முக சிம்மாசன வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், குதிரை வாகனம், இந்திரவாகனம், பூம்பல்லக்கு வாகனங்களில் அய்யா பதிவலம் வருகிறார்.

    விழாவின் 8-வது நாளான 13-ந்தேதி இரவு 8.30 மணிக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணி விடை, 9மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் 15-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6.30 மணிக்கு திருத்தேர் அலங்காரம், 10.30 மணிக்கு பணிவிடை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு அய்யா திருத்தேரில் வீதி உலா வருகிறார்.

    தேரோட்டத்தை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயத்துரை, ஞானதிரவியம் எம்.பி., நெல்லை -தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன்.

    திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ்குமார், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் செயலாளர் கொட்டிவாக்கம் ஏ.முருகன், பிரைட் சி.முருகன், சி. அருணாசலம் உள்ளிட்ட முக்கிய பரிமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

    பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், இரவு10.30 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடை பெறுகிறது. பின்னர் இரவு 1.30 மணிக்கு அகண்டநாமம், 1.45 வைகுண்ட சோபனம், அண்டநாமம், திரு நாமக்கொடி இறக்குதல், பள்ளி யுணர்த்தல், திருநாள் சேவை மகத்துவகானம், இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி. துரைப்பழம், பொது செயலாளர் ஏ. சுவாமி நாதன், பொரு ளாளர். பி. ஜெயக் கொடி, கூடுதல் செயலாளர் டி. ஐவென்ஸ், துணை செயலாளர் வி. சுந்தரேசன், இணை பொது செயலாளர் கே. ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    விழா நாட்களில் பக்தர்கள் சென்று வர போக்குவரத்து வசதி மற்றும் பொது சுகாதாரம் நவீன கழிப்பறைகள் உணவு வசதி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    • கல்ப விருட்ச வாகனத்தில் விநாயகர் வீதிஉலா
    • சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா

    சித்தூர்:

    காணிப்பாக்கம் கோவில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று கல்ப விருட்ச வாகனத்தில் விநாயகர் வீதிஉலா வந்து அருள் பாலித்தார்.

    சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 18-வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.

    அதைத்தொடர்ந்து மாலை கல்ப விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வாகன வீதிஉலாவின்போது மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாடவீதிகளில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 19-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடக்கிறது. அதன்பிறகு பூலங்கி சேவை வாகனத்தில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    • மயிலாடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
    • இத்திருக்கோவில் பஞ்சரங்கதலங்களுள் ஒன்றாகும்.

    ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவ திருத்தலங்களுள் ஒன்றான திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோவில், மயிலாடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்திருக்கோவில் பஞ்சரங்கதலங்களுள் ஒன்றாகும். வைணவ தலங்களில் ஐந்து அரங்கங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தன. அவை திருவரங்கப்பட்டினம் (மைசூர்), திருவரங்கம், கோவிலடி (திருக்காட்டுப்பள்ளி), கும்பகோணம் சாரங்கபாணி, திருஇந்தளூர் (மயிலாடுதுறை) ஆகியவையாகும்.

    இதில் திருஇந்தளுர் பரிமளநாதர் கோவில் ஏகாதசி விரதத்திற்கு உரிய தலம் என்பதால், ஏகாதசி விரதம் இருக்க விரும்புபவர்கள் இத்தலம் வந்து வழிபட்டு விரதம் இருந்தால் விரும்பியது நிறைவேறும் என்பது ஐதீகம். பிரம்மா, எமன், கங்கை, காவிரி, சூரியன், சந்திரன், அம்பரீசன் ஆகியோர் வழிபட்ட தலம் இது.

    பிரம்மதேவனால் வெளிப்பட்ட வேதங்களை, மது - கைடபர் என்னும் அரக்கர்கள் அபகரித்துச் சென்றனர். இதனால் மிகவும் வருந்திய பிரம்மா, பெருமாளை வேண்டினார். அந்த வேதங்களை அரக்கர்களிடம் இருந்து பெருமாள் மீட்டு வந்து வேதங்களுக்கு பரிமளத்தை கொடுத்ததால், இத்தல இறைவன் `பரிமள ரங்கநாதர்' என்று அழைக்கப்படுகிறார். தாயார் பெயர், பரிமள ரங்கநாயகி. இத்தல தீர்த்தம் `இந்து புஷ்கரணி' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

    ஒரு சமயம் தட்சனால், சந்திரனுக்கு சாபம் ஏற்பட்டது. அந்த சாபத்தில் இருந்து விடுபட சந்திரன், இத்தலத்தில் உள்ள பள்ளிகொண்ட பெருமாளை வழிபட்டார். சந்திரனின் வேண்டுதலுக்கு இறங்கிய பெருமாள், அவருக்கு சாப விமோசனம் அளித்தார். பின்னர் `இத்தலம் எனது பெயராலேயே வழங்கப்பட வேண்டும்' என்று சந்திரன், பெருமாளிடம் கோரிக்கை வைத்தார்.

    அதன்படியே பெருமாள் வரமளித்தார். அதன் காரணமாகவே இத்தலம் `இந்தளூர்' என்று அழைக்கப்படுகிறது. `இந்து' என்பதற்கு `சந்திரன்' என்று பொருள். `இந்து ஊர்' என்பதே 'இந்தளூர்' என்று மருவியதாக சொல்லப்படுகிறது.

    தல வரலாறு

    ஒருகாலத்தில் இந்த பகுதியை அம்பரீசன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் தொடர்ந்து ஏகாதசி விரதம் இருந்து வந்தான். அவன் நூறாவது ஏகாதசி விரதத்தை மேற்கொண்டபோது, அது தேவர்களுக்கு பெரும் கவலையை அளித்தது. குறிப்பாக தேவேந்திரனுக்கு. இந்த விரதத்தை அம்பரீசன் வெற்றிகரமாக முடித்துவிட்டால், அவனுக்கு தேவலோக பதவி கிடைத்துவிடும் என்பதே அவர்களின் கவலைக்கு காரணம்.

    எனவே அவன் விரதத்தை முடிக்கக்கூடாது என்று நினைத்தனர். அதற்காக துர்வாச முனிவரிடம் சென்று தேவர்கள் அனைவரும் முறையிட்டனர். துர்வாச முனிவரும் அம்பரீசனின் விரதத்தை தடுக்கும் பொருட்டு இங்கு வந்தார். அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்து விட்டான். துவாதசி நேரத்தில் மன்னன் உணவு அருந்தியாக வேண்டும். அப்படிச் செய்தால்தான் ஏகாதசி விரதத்தின் பலன் முழுமையாக மன்னனுக்குக் கிடைக்கும்.

    அம்பரீசன் உணவு உண்ண தயாராக இருந்த நேரத்தில் துர்வாச முனிவர் உள்ளே நுழைகிறார். அவரை வரவேற்ற மன்னன் உணவு உண்ண வரும்படி அழைத்தான். துர்வாச முனிவரும் அதற்கு சம்மதித்து நதியில் நீராடி விட்டு வருவதாக கூறிச் சென்றார்.

    ஆனால் துவாதசி நேரம் முடியும் வரை துர்வாச முனிவர் மன்னனின் இருப்பிடம் செல்லக்கூடாது என்று நினைத்தார். முனிவர் வருவதற்குள் உணவருந்தினால் மன்னனுக்கு சாபம் ஏற்படும் என்பதால் அவன், உணவருந்த மாட்டான் என்று நினைத்தார் துர்வாச முனிவர்.

    துவாதசி நேரம் முடிவதற்குள் உணவு அருந்தியாக வேண்டும். ஆனால் முனிவர் வர தாமதமாகிறதே என்று நினைத்த மன்னன், வேதியர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தான். துவாதசி விரதம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், உள்ளங்கை அளவு தீர்த்தத்தை எடுத்து, அதை மூன்று முறை அருந்தினான். இந்த வகையில் அவன் ஏகாதசி விரதத்தை முழுமையாக நிறைவு செய்தான்.

    இதை அறிந்த துர்வாச முனிவர் கோபத்துடன் ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீசனைக் கொல்ல ஆணையிட்டார். அம்பரீசன், பரிமள ரங்கநாதரை சரணடைந்தான். பெருமாள் மிகுந்த கோபத்துடன் பூதத்தை விரட்டினார். இதையடுத்து துர்வாச முனிவர், பெருமாளை பணிந்து மன்னித்து அருள வேண்டினார்.

    பெருமாளும் அவரை மன்னித்தார். நூறு ஏகாதசி விரதத்தை நிறைவு செய்த அம்பரீசனிடம், `பிடித்ததைக் கேள்' என்று பெருமாள் சொன்னார். அதற்கு அம்பரீசன், `தாங்கள் இத்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களின் குறைகளைக் கேட்டு அருள்புரிய வேண்டும்' என்று வேண்டினான். அதன்படி பெருமாள் இத்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

    கங்கையை விட காவிரி இந்த இடத்தில் புனிதத் தன்மையை அதிகம் பெறுவதாக கருதப்படுகிறது. பரிமள ரங்கநாதர் கோவில், ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. சந்திரன் இக்கோவில் தாயாரான புண்டரிக வல்லியிடம் தன் பாவத்தை போக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள, பெருமாளும், தாயாரும் சேர்ந்து சந்திரனின் மனக்குறையைப் போக்கியதாக சொல்கிறார்கள்.

    இதனால் இத்தலத்தில் உள்ள தாயாருக்கு `சந்திர பாப விமோசன வல்லி' என்ற பெயர் ஏற்பட்டது. ஒருவரின் பாவம், அவரது குடும்பத்தினர் பாவம், முன்னோர்கள் செய்த பாவம் அனைத்தையும் இத்தலத்தில் வழிபட்டு விலக்கிக் கொள்ள முடியும் என்று தல புராணம் சொல்கிறது.

    கோவில் வாசலில் சந்திர புஷ்கரணி உள்ளது. சந்திரன் இந்த தீர்த்தத்தில் நீராடி தன் சாபம் நீங்கப் பெற்றாராம். பெண் பித்தால் தவறு செய்தவர்கள், பெண்கள் சாபத்திற்கு ஆளானவர்கள், பெண் குழந்தை வேண்டுபவர்கள் இந்த ஆலயம் வந்து வழிபாடு செய்தால், அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்கிறார்கள். இத்தலப் பெருமாளின் முகத்தை சந்திரன், பாதத்தை சூரியன், நாபிக் கமலத்தை பிரம்மன் பூஜிப்பதாக வரலாறு. நாபியில் பிரம்மாவும், பெருமாளின் தலை அருகே காவிரியும், திருவடி அருகே கங்கையும் வழிபடுகின்றனர். எமனும், அம்பரீசனும் பெருமாள் திருவடிகளை பூஜை செய்கின்றனர்.

    இத்தலம் வந்து ஏகாதசி அன்று விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என நம்பப்படுவதால், ஏராளமான பக்தர்கள் விரதம் இருக்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவுடன் பெருமாளை துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

    தனி சன்னிதியில் பரிமள ரங்கநாயகி அருள்புரிகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கொடிமரத்தை வணங்கி, ராமர் சன்னிதி, ஆஞ்சநேயர், கருடன், துவாரபாலகர், ஆழ்வார் சன்னிதி, சக்கரத்தாழ்வார் ஆகியோரை தரிசிக்க வேண்டும். பின்னர் பன்னீர் மரத்தடியில் பெருமாள் விமானத்தை தரிசித்த பின்னர், பரிமள ரங்கநாயகியை வணங்கவேண்டும்.

    அதன்பிறகு உட்பிரகாரம் சென்று ஆண்டாள் உள்ளிட்ட பிற சன்னிதிகளை தரிசனம் செய்த பின்னரே, பரிமள ரங்கநாதரை வணங்க வேண்டும். இவ்வாலயத்தில் மூலவரான பரிமள ரங்கநாதர் 4 திருகரங்களுடன் வீர சயன கோலத்தில், பச்சை நிற திருமேனியுடன் காட்சி தருகிறார். மாதந்தோறும் உத்தரத்தன்று மூலவரின் திருமேனிக்கு சந்தனாதி தைலமும், திருமுகத்துக்கு புனுகு சவ்வாதும் சாத்தப்பட்டு வருகிறது.

    தன்னுடைய சாபம் நீங்கப்பெற்றதால் மகிழ்ச்சி அடைந்த சந்திரன், பங்குனி மாதம் பெருமாளுக்கு பிரமோற்சவம் செய்தார். அதை நினைவுகூரும் பொருட்டு, இன்றும் பங்குனி மாதம்10 நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆடி மாதம் ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி மாதம் 10 நாட்கள் தாயாருக்கு நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.

    பெருமாளுக்கு உகந்த துலாம் மாதத்தில் (ஐப்பசி) காவிரியில் நீராடினால் கங்கையை விட அதிக புண்ணியம் கிடைப்பதாக கூறப்படுவதால், துலா பிரமோற்சவம் இங்கு சிறப்பாக நடத்தப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி உற்சவமும் இங்கே கண்கொள்ளா காட்சியாக நடைபெறும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    மயிலாடுதுறையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்தளூருக்கு, மயிலாடுதுறையில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    • நாகதோஷம் நீங்க வழிபட வேண்டிய கோவில்கள் பல உள்ளன.
    • சர்ப்ப விநாயகர் படம் வைத்து வீட்டிலும் வழிபடலாம்.

    நாகதோஷம் நீங்க வழிபட வேண்டிய புராதனக் கோவில்கள் பல உள்ளன. அவற்றில் திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம், நாகர்கோவில், திருக்காளகஸ்தி, பேரையூர், நயினார்கோவில், ராமேஸ்வரம், திருச்செங்கோடு போன்றவை முக்கியமானவை. சர்ப்பத்தை அருகில் வைத்திருக்கும் தெய்வங்கள், சர்ப்பத்தை மாலையாக அணிந்துள்ள தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயங்களுக்கும், சர்ப்ப விநாயகர் அருளும் ஆலயங்களுக்கும் சென்று வழிபடலாம். சர்ப்ப விநாயகர் படம் வைத்து வீட்டிலும் வழிபடலாம்.

    ஜாதகத்தில் ராகு-கேது ஆதிக்கம் அமைந்தவர்கள், திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், 4, 7, 13, 16, 22, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், ராகு - கேது ஆதிக்க எண்களில் பிறந்தவர்கள் ஆகியோர் ஆதிசேஷனுக்குரிய பெயர்களை வைத்துக் கொண்டால் வாழ்க்கை வளமாகும். செட்டிநாட்டுப் பகுதிகளில் நாகப்பன், நாகம்மை, நாகராஜன், நாகமுத்து, நாகவள்ளி, நாகலிங்கம், நாகா, நாகரத்னம், நாகமணி போன்ற பெயர்களை வைப்பது வழக்கம்.

    எண்கணிதப்படி ஆராய்ந்து நாகர் பெயர் வைத்துக் கொண்டால் பெருமை சேரும். எப்படி இருந்தாலும் தோஷங்களிலேயே பெரிய தோஷமாகக் கருதப்படும் நாகதோஷம் ஒருவருக்கு ஜாதகத்தில் இருக்குமானால், முறையாக வழிபாடு செய்வதன் மூலமே முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். சுய ஜாதகத்தின் அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளை தேர்ந்தெடுத்து, உங்களுக்கு யோகம் தரும் ஆலயங்களில் வழிபாடுவது உகந்தது.

    • மகாளயபட்ச காலத்தில் வரும் அஷ்டமி ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது.
    • மறக்காமல் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.

    மகாளயபட்ச காலத்தில் வரும் அஷ்டமி, ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தநாளில், மறக்காமல் முன்னோர் வழிபாடு செய்யுங்கள். முன்னுக்கு வரச்செய்வார்கள் முன்னோர்கள்.

    பட்சம் என்பது பதினைந்து நாட்கள். மகாளய பட்சம் என்பது முன்னோர்களுக்கான பதினைந்துநாட்கள். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை முக்கியமான நாள், அது முன்னோர்களுக்கான நாள்.

    ஒவ்வொரு மாதமும் வருகிற அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். பித்ருக்களுக்கான நாள். இந்த நன்னாளில் பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் முன்னோரை வணங்க வேண்டும் என்றும் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு அர்க்யம் செய்து, ஆராதிக்கவேண்டும் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.

    ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் உள்ளன. மாத அமாவாசை, தமிழ் மாத பிறப்பு, திவசம், கிரகண காலம் என்று உள்ளன. அதேபோல், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை என்பது மிக முக்கியமான அமாவாசைகள்.

    இந்த நாட்களில், முன்னோர் தர்ப்பணம் உள்ளிட்ட பித்ரு ஆராதனைகளை செய்யாவிட்டால், பித்ரு தோஷத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் பித்ரு தோஷத்துக்கு ஆளாவோம் என்கிறார்கள் ஆச்சாரியார்கள்.

    ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசைகளில், புரட்டாசி அமாவாசை என்பது இன்னும் மகத்துவம் வாய்ந்தது. அமாவாசைக்கு முந்தைய 15 நாட்கள், அதாவது பவுர்ணமியில் இருந்து வருகிற அடுத்த 15 நாட்கள், முன்னோர்களுக்கான நாட்கள். இந்த பதினைந்து நாட்களும் பித்ரு லோகத்தில் இருந்து, பூலோகத்துக்கு, நம் வீட்டுக்கு முன்னோர்கள் வருகிறார்கள். நம் ஆராதனைகளை பார்த்து மகிழ்கிறார்கள். மகிழ்ந்து ஆசி வழங்குகிறார்கள் என்பதாக ஐதீகம்.

    மகாளயபட்ச காலம் என்பது கடந்த செப்டம்பர் 2-ந் தேதியில் இருந்து தொடங்கியது. இது வருகிற அமாவாசை வரை இருக்கிறது. மகாளயபட்ச காலத்தில் பரணி நட்சத்திரம் இணைவது ரொம்பவே விசேஷம். இந்த நாளில், முன்னோர் ஆராதனை செய்வதும் அவர்களை நினைத்து தான தருமங்கள் செய்வதும் மிகுந்த புண்ணியம்.

    அதேபோல், பெளர்ணமியில் இருந்து அமாவாசை உள்ள காலத்துக்கு நடுவே, மகாளயபட்ச காலத்தில், அஷ்டமி திதி வரும். மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி, மத்யாஷ்டமி என்று போற்றப்படுகிறது.

    ஒரு ஊரின் மையப்பகுதி என்பது எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததோ, ஒரு கோவிலின் மையப்பகுதியில் முக்கியமான இறைவன் எப்படி குடிகொண்டிருக்கிறாரோ, மனித உடலின் மையப்பகுதியாக வயிறு எப்படி இருக்கிறதோ அதேபோல், மகாளயபட்ச காலத்தின் மையப்பகுதியாக, நடுநாளாக இருப்பது அஷ்டமி. அதனால்தான் மத்யாஷ்டமி என்று மகாளயபட்ச அஷ்டமியை போற்றுகிறது சாஸ்திரம்.

    மகாளயபட்சம் தொடங்கி தினமும் முன்னோர் வழிபாடு செய்யவேண்டும். அப்படி செய்ய இயலாதவர்கள், மறக்காமல் மத்தியாஷ்டமி அன்று முன்னோர் வழிபாடு செய்யவேண்டும். தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அரிசி, வாழைக்காய், வெற்றிலை பாக்கு, தட்சணை கொடுக்கவேண்டும். ஒரேயொரு நபருக்காவது தயிர்சாதமோ, எலுமிச்சை சாதமோ, சாம்பார் சாதமோ வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் ஆச்சாரியார்கள்.

    வீட்டில் முதலில் விளக்கேற்றுங்கள், முன்னோர் படத்துக்கு பூக்கள் போடுங்கள், ஏதேனும் உணவிட்டு நைவேத்தியம் செய்யுங்கள், காகத்துக்கு உணவிடுங்கள், குடையோ செருப்போ போர்வையோ வஸ்திரமோ ஏதேனும் ஒன்று வழங்குவது உங்கள் வாழ்வையே மலரச்செய்யும். இந்த வழிபாடு செய்வதால் இதுவரை உள்ள தடைகள் அனைத்தையும் தகர்த்து முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும். முன்னோர்களின் பரிபூரண ஆசியையும் பெறுவீர்கள்.

    • பைரவாஷ்டகம் பாராயணம் செய்து மனதார வழிபடுங்கள்.
    • இதுவரை இருந்த எதிர்ப்புகள் அனைத்தும் அகலும்.

    மத்யாஷ்டமி எனும் அற்புதமான நாளில், பைரவரை பிரார்த்தனை செய்து, பைரவாஷ்டகம் பாராயணம் செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். இதுவரை இருந்த எதிர்ப்புகள் அனைத்தும் அகலும். எடுத்த காரியங்களை எல்லாம் வெற்றியாக்கி தந்தருள்வார் பைரவர்.

    பைரவ வழிபாடு சக்தி வாய்ந்தது. காலபைரவரை அனுதினமும் வழிபடலாம். எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். வழக்கு முதலான சிக்கல்கள், எதிரிகள் முதலான தொல்லைகள், குடும்பத்தில் குழப்பங்கள், கடன் தொல்லையால் அவமானம் என கலங்கி தவிப்பவர்கள், அவசியம் பைரவரை வணங்கி வருவது நல்லது. அனைத்தையும் சுபமாக்கித் தருவார் காலபைரவர்.

    குறிப்பாக தேய்பிறை அஷ்டமியில், பைரவ வழிபாடு என்பது மிக மிக அவசியம். பைரவருக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. அரளி முதலான செந்நிற மலர்களைச் சூட்டுங்கள். எதிரிகளை அழிக்கும் வல்லமை கொண்டவர் அனுமன். மனோதிடம் தருபவர் அனுமன். அவருக்கு வடைமாலை சார்த்துவது விசேஷம். அதேபோல் பைரவருக்கும் வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வது மகோன்னத பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    இன்று தேய்பிறை அஷ்டமி. இந்த நாளில், மாலையில் விளக்கேற்றி, பைரவாஷ்டகம் சொல்லி வழிபடுங்கள்.

    பைரவாஷ்டகம்

    தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்

    வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம்

    நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்

    காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே


    பானு கோடி பாஸ்வரம் பவாப்தி தார கம்பரம்

    நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோஸனம்

    கால காலமம் புஜாக்ஷ மஸ்த ஸூல மக்ஷரம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    ஸூல டங்க பாஸ தண்ட பாணி மாதி காரணம்

    ஸ்யாம காய மாதி தேவ மக்ஷரம் நிராமயம்

    பீம விக்ர மம் ப்ரபும் விஸித்ர தாண்டவ ப்ரியம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    புக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்த சாரு விக்ரஹம்

    பக்த வத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்த லோக விக்ரஹம்

    நிக்வணத் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    தர்ம ஸேது பாலகம் த்வதர்ம மார்க்க நாஸகம்

    கர்மபாஸ மோசகம் ஸுசர்ம தாயகம் விபும்

    ஸ்வர்ண வர்ண கேஸ பாஸ ஸோபிதாங்க நிர்மலம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    ரத்ன பாதுகா ப்ரபாபி ராம பாத யுக்மகம்

    நித்ய மத்வி தீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்

    ம்ருத்யு தர்ப்ப நாஸனம் கரால தம்ஷ்ட்ர பூஷணம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    அட்டஹாஸ பின்ன பத்மஜாண்ட கோஸ ஸந்ததிம்

    த்ருஷ்டி பாத நஷ்ட பாப ஜாலமுக்ர ஸாஸனம்

    அஷ்ட ஸித்தி தாயகம் கபால மாலி காதரம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    பூத ஸங்க நாயகம் விஸால கீர்த்தி தாயகம்

    காஸி வாஸி லோக புண்ய பாப ஸோதகம் விபும்

    நீதி மார்க்க கோவிதம் புராதனம் ஜகத் பதிம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    கால பைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்

    ஜ்ஞான முக்தி ஸாதனம் விஸித்ர புண்ய வர்த்தனம்

    ஸோக மோஹ லோப தைன்ய கோப தாப

    நாஸனம்

    தே ப்ரயாந்தி கால பைரவாங்க்ரி ஸந்நிதிம்

    த்ருவம்

    இந்த நன்னாளில், பைரவாஷ்டகம் சொல்லி பைரவ வழிபாடு செய்யுங்கள். முக்கியமாக, தெருநாய்களுக்கு இரண்டு ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டாவது வழங்குங்கள். எதிரிகள் தொல்லைகள் ஒழியும். எதிர்ப்புகள் அகலும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்வில் காரியத்தில் வெற்றியைக் காண்பீர்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாளயபட்சத்தின் பதினைந்து நாள்களும் பித்ரு வழிபாட்டுக்கு உகந்தவை.
    • பதினைந்து நாள்களும் தினமும் தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறந்தது.

    மகாளயபட்சத்தின் பதினைந்து நாள்களும் பித்ரு வழிபாட்டுக்கு உகந்தவை. இந்த பதினைந்து நாள்களும் தினமும் தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறந்தது. குறைந்த பட்சம் இரண்டு தினங்களாவது தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இதில் மத்யாஷ்டமி முக்கியமான தினம்.

    பட்சம் என்றால் பதினைந்து நாள்கள். மகாளய பட்சம் என்பது ஆவணிமாத பவுர்ணமிக்குப் பிறகு வரும் 15 நாள்களைக் குறிக்கும். மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். பதினைந்து நாள்கள் நம் முன்னோர்கள் அனைவரும் பெரும் கூட்டமாக பூலோகம் வந்து தங்கும் காலமே மகாளய பட்சம் எனப்படுகிறது.

    ஒவ்வோரு அமாவாசை அன்றும் நாம் வழங்கும் தர்ப்பணங்களை எமதர்மராஜன் ஏற்று நம் முன்னோர்களுக்கு வழங்குவாராம். ஆனால் மகாளயபட்சத்தின் போது 'பித்ரு லோகத்தில் இருந்து உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு சென்று வாருங்கள்' என்று அவர்களை அனுமதிப்பாராம்.

    நம் முன்னோர்களுக்கு பிரியமான இடம் நம் வீடுதானே! எனவே அன்று நம் பித்ருக்கள் கூட்டமாக நம் வீட்டுக்கு வருவார்கள் என்கின்றன சாஸ்திரங்கள்.

    மகாளயபட்சத்தின் முக்கியமான நாள்கள்

    மகாளயபட்சத்தின் பதினைந்து நாள்களும் பித்ரு வழிபாட்டுக்கு உகந்தவை. இந்தப் பதினைந்து நாள்களும் தினமும் தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறந்தது. குறைந்த பட்சம் இரண்டு தினங்களாவது தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனர் முன்னோர்கள்.

    கட்டாயம் மகாளய அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும். அது தவிர மீதமுள்ள நாள்களில் ஏதேனும் ஒருநாள் நாம் தர்ப்பணம் முதலிய வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு உரிய நாள்களாக, மகாபரணி, மத்யாஷ்டமி, அவிதவாநவமி, மஹாவியதீபாதம், சந்நியஸ்தமாளயம், கஜச்சக்ஷமாளயம், மகாளய அமாவாசை ஆகிய நாட்களை வகுத்து தந்திருக்கிறார்கள்.

    பொதுவாக அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யும்போது மூன்று தலைமுறை தாய், தந்தையருக்கு மட்டுமே தர்ப்பணம் வழங்குவோம். ஆனால் மகாளயபட்சத்தில் அனைத்து உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் அறியாதவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் தர்ப்பணம் செய்யமுடியும்.

    இந்த நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது. மகாபரணி தந்தை, தாய் இறந்த திதி எதுவென்று அறியாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டிய நாள். முறையாக முன்னோர் வழிபாடு செய்யாதவர்கள், வழிபாடு செய்ய உகந்த நாள் மத்யாஷ்டமி.

    குடும்ப சுமங்கலிகளை வழிபட உகந்த தினம் அவிதவாநவமி. 27 யோகங்களில் ஒன்றான வியதீபாத யோகம் மகாளய பட்சத்தின்போது ஏற்பட்டால் அது மகாவியதீபாத யோகம் என்று அழைக்கப்படும். இந்த நாளில் செய்யப்படும் பித்ருவழிபாடு சகல நன்மைகளையும் பெற்றுத்தரும்.

    இந்த ஆண்டு மத்யாஷ்டமி இன்று. மகாளய பட்சத்தின் 15 நாள்களில் நடுநாயகமாகத் திகழ்வது இந்த மத்யாஷ்டமி. எனவே இந்த நாள் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. மத்யாஷ்டமி அன்று தர்ப்பணம் முதலான முன்னோர் வழிபாடுகளை செய்தால் மகாளய பட்சம் முழுவதும் முன்னோர்வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

    மேலும் அறிவாற்றல் பெருகி காரியங்களில் வெற்றி கிடைக்கும். எனவே காரியத்தடைகள் விலக கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியது மத்யாஷ்டமி வழிபாடு.

    குடும்பங்களில் சுமங்கலிகளாக வாழ்ந்து மறைந்த பெண்கள் குடும்பத்தினைக் காக்கும் தெய்வங்களாகத் திகழ்வர் என்பது நம்பிக்கை. முறையாக சுமங்கலி வழிபாடுகள், பிரார்த்தனைகள் செய்யாதவர்கள் குடும்பங்களில் சுபகாரியத் தடைகள் நிகழும் என்கின்றன சாஸ்திரங்கள்.

    திருமணம் முதலிய சுபகாரியங்களுக்கு முன்பாக சுமங்கலிப் பிரார்த்தனை செய்யும் வழக்கம் பல குடும்பங்களில் உள்ளன. மகாளய பட்சத்தில் வரும் நவமி திதி சுமங்கலி வழிபாட்டுக்கானது. இந்த நாளில் வீட்டின் மூத்த பெண்களை நினைத்து வழிபடுவதோடு, புடவை முதலிய மங்கலப்பொருள்களை தானம் செய்வதன் மூலம் சுமங்கலிகளின் ஆசி நமக்குக் கிடைக்கும்.

    பித்ரு தோஷம்?

    இதேபோன்று சந்நியாசிகளுக்கு உரிய திதி சந்நியஸ்தமாளயம், கணவரை இழந்த விதவைகள் செய்வதற்க்கான கஜச்சக்ஷமாளயம் மற்றும் துர்மரணம் நேரிட்டவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய சஸ்த்ரஹதமாளயம் ஆகிய நாள்கள் முக்கியமானவை. இந்த நாள்களில் முன்னோர் வழிபாடு செய்வது வாழ்வில் இருக்கும் துன்பங்களை நீக்கி நன்மைகள் சேர்ப்பவை.

    ஜாதகத்தில் பித்ரு தோஷம்

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும். சுய ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு கேதுகளுக்குடன் எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் அது பித்ரு தோஷமாகும். ஜாதகத்தில் ராகு-கேது 1, 5, 7, 9 இடங்களில் இருந்தாலும் அது பித்ரு தோஷம் ஆகும். ராகுவுடன் சூரியனும் சனியும் சிம்மத்தில் சேர்ந்து இருந்தால் மூன்று தலைமுறைக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தமாகும்.

    ராகு - கேது

    இத்தகைய பித்ரு தோஷம் உடைய ஜாதகக் காரர்களுக்கு அருமருந்தாகத் திகழ்வது இந்த மகாளயபட்சம். மகாளயபட்ச நாள்களில் தினமும் குளித்து பித்ருக்களை வழிபடுவதன் மூலம் அனைத்து தோஷங்களையும் நீக்கலாம். குறிப்பாக இந்த நாள்களில் வறியவர்களுக்கு உணவு, உடை ஆகியன வற்றை தானம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசியைப் பெறலாம். முன்னோர்களின் ஆசி நமக்கு அனைத்து நலன்களையும் பெற்றுத்தரும்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, புரட்டாசி 19 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சப்தமி காலை 10.40 மணி வரை. பிறகு அஷ்டமி.

    நட்சத்திரம்: திருவாதிரை நள்ளிரவு 1.47 மணி வரை. பிறகு புனர்பூசம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 5 மணி வரை

    இன்று மத்யாஷ்டமி. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் பவனி. திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மனுக்கு தாமிரபரணி ஆற்றில் அபிஷேகம். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-நிம்மதி

    மிதுனம்-வெற்றி

    கடகம்-ஆசை

    சிம்மம்-செலவு

    கன்னி-சுபம்

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-கண்ணியம்

    தனுசு- மகிழ்ச்சி

    மகரம்- நிறைவு

    கும்பம்- ஆதரவு

    மீனம்- போட்டி

    • விநாயகர் மனித முகத்துடன் காட்சி தருகிறார்.
    • விநாயகர் என்றாலே யானை முகத்தில் தோன்றுவதுதான் அனைவரும் அறிந்தது.

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் ஒரு கிலோமீட்டர் வடக்கே திலதர்ப்பணபுரி என்கிற செதலபதி என்ற கிராமம் உள்ளது. இங்கு அருள்மிகு முக்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் எங்கும் தரிசிக்க முடியாத வகையில் தும்பிக்கை இல்லாமல், இரண்டு கைகளுடன் விநாயகர் மனித முகத்தில் காட்சி தருகிறார். விநாயகர் என்றாலே யானை முகத்தில் தோன்றுவதுதான் அனைவரும் அறிந்தது. மனிதமுக விநாயகர் செதலபதியில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் மட்டுமே விநாயகர் மனித முகத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். இதுபற்றிய புராண வரலாறு உங்களுக்காக...

    பார்வதி தேவி தன் உடலில் இருந்து ஆண் குழந்தை ஒன்றை உருவாக்கி அதற்கு விக்னேஸ்வரன் என்று பெயரிட்டாள். ஒரு நாள் மனித முகத்துடன் இருந்த விக்னேஸ்வரரை அழைத்து, தன் இருப்பிடத்திற்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்தார். விக்னேஸ்வரன் வாசலில் காவலுக்கு இருந்த போது அங்கு வந்த சிவபெருமானையும், பார்வதிதேவியின் இருப்பிடத்திற்குள் அனுமதிக்கவில்லை. பார்வதியின் கணவர் என்று கூறியும் அனுமதிக்க மறுத்துவிட்டார்.

    இதனால் சிவனுடன் வந்த நந்தீஸ்வரர் விக்னேஸ்வரனுடன் சண்டையிட்டார். அவரையும் மற்ற பூத கணங்களையும் விரட்டி அடித்தார் விக்னேஸ்வரன். கோபம் அடைந்த சிவபெருமான் விக்னேஸ்வரன் தலையை வெட்டிவிட்டார். விவரம் அறிந்து ஓடிவந்த பார்வதி தன் மகனை உயிர்ப்பிக்க வேண்டும் என்று அழுதாள்.

    உடனே சிவன் தன் பூதகணங்களிடம் வடக்கு நோக்கி யார் படுத்திருகின்றனரோ அவரின் தலையை கொய்து வாருங்கள் என்று ஆணையிட்டார். அப்போது யானை ஒன்று வடக்கு நோக்கி படுத்திருக்க, அதன் தலையை பூதகணங்கள் கொய்து எடுத்து வந்தனர். சிவன் அந்த யானைத் தலையை குழந்தைக்கு பொருத்தி உயிர்ப்பித்தார். அத்துடன் அந்த குழந்தையை தன் பூதகணங்களுக்கு தலைவனாக்கி கணபதி என்று பெயர் வைத்தார்.

    மேலும் பக்தர்கள் எந்த பூஜை செய்தாலும் கணபதியை வழிபட்டபின் தொடங்கினால் வெற்றி கிடைக்கும் என்ற சிறப்பு அந்தஸ்தையும் அளித்தார். வி என்றால் வெற்றி, நாயகர் என்றால் தலைவர், இவ்வாறு விக்னேஸ்வரன், விநாயகர் என்ற வெற்றி நாயகன் ஆனார் என்று புராண வரலாறு கூறுகிறது.

    இதேபோல மற்றொரு புராண வரலாறும் உண்டு. கஜமுகாசுரன் என்பவன் யானை முகத்துடன் அட்டகாசம் செய்தான். அவனை வென்ற கணபதி, அவனது முகத்தை தனக்கு பொருத்தி கொண்டதாகவும் தகவல் உண்டு. விநாயகருக்கு யானைமுகம் கிடைப்பதற்கு முன் மனிதமுகம் கொண்ட விநாயகருக்கு செதலபதியில் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த விநாயகருக்கு ஆதிவிநாயகர் என்ற திருநாமமும் உண்டு. ஆதிவிநாயகர், வலதுகாலை தொங்கவிட்டு, இடதுகாலை மடித்து வைத்து, இடதுகையை இடது காலின் மீது வைத்தும், வலதுகையை சற்றே சாய்த்து அபய முத்திரை காட்டியபடி காட்சி அளிக்கிறார்.

    தல வரலாறு:

    ராமபிரான் இத்தலத்துக்கு வந்து தன் தந்தை தசரதருக்காகவும், ஜடாயுக்காகவும் இந்த தலத்தில் எள் வைத்து பிதுர் தர்ப்பணம் செய்தார். இதன் காரணமாக இந்த ஆலய சிவலிங்கத்திற்கு முக்தீஸ்வரர் என்றும், திலதர்ப்பணபுரி என்றும் அழைக்கப்படுகிறது. (திலம் என்றால் எள் என்று பொருள்). ராமபிரான் பிண்டம் பிடித்து சிரார்த்தம் செய்துள்ளார். அந்த பிண்டங்கள் பிதுர் லிங்கங்களாக மாறியதாக தல வரலாறு கூறுகிறது.

    ஆலய சிறப்புகள்:

    அமாவாசை மட்டுமல்லாமல் எந்த நாளிலும் தர்ப்பணம் கொடுக்கலாம். சூரியனும், சந்திரனும் சேரக்கூடிய நாள் தான் அமாவாசை. தர்ப்பணம் கொடுக்க மிகச்சிறந்த நாள். இந்த செதலபதி முக்தீஸ்வரர் திருக்கோவிலில் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் இறைவனை வணங்கியுள்ளனர். இதனை குறிக்கும் வகையில் இந்த ஆலயத்தில் சூரியன், சந்திரன் ஆகியோர் ஒன்றாக நிற்கும் சன்னதி உள்ளது.

    இந்த ஆலயத்தில் சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோர் எப்போதும் சேர்ந்து இருப்பதால் இதனை நித்ய அமாவாசை என்பார்கள். இதனால் இந்த ஆலயத்தில் பிதுர் தர்ப்பணம் கொடுக்க நாள், கிழமை, திதி, நட்சத்திரம் என எதையும் பார்க்க வேண்டிய தேவையில்லை. எந்த நாளாக இருந்தாலும் இங்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்து கொள்ளலாம்.

    எப்படி செல்வது:

    திருவாரூர் மாவட்டத்தில் செதலபதியில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 22 கிமீ தூரத்தில் பூந்தோட்டம் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து 4 கிமீ தூரத்திலுள்ள கூத்தனூர் ஊருக்கு சென்று, அதன் அருகில் உள்ள செதலபதி என்ற ஊரை அடையலாம்.

    இந்த ஆலயத்திற்கு அருகில் உள்ள கூத்தனூரில் சரஸ்வதி ஆலயமும், அங்கிருந்து சற்று தொலைவில் சிவ பார்வதி திருமணத்தலமான திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி ஆலயமும் உள்ளன.

    • அகத்தியரால் வழிபடப்பட்டவர் ஆதலால் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
    • ஈரோட்டில் இருந்து 15 கி.மீ தொலைவில் தீவு அமைந்துள்ளது.

    கரைபுரண்டோடும் காவிரி, அதன் நடுவே பிரணவ உருவாய் திகழும் சிவாலயம். இங்ஙனம் ஆற்றின் நடுவில் கோவில் கொண்டிருப்பதால் நட்டாற்றீஸ்வரர் என்றும், அகத்தியரால் வழிபடப்பட்டவர் ஆதலால் அகத்தீஸ்வரர் என்றும் திருப்பெயர்களை ஏற்றுத்திகழ்கிறார் சிவபிரான்.

    ஈரோட்டில் அமைந்துள்ள இந்த தீவின் பெயர் நட்டாற்றீஸ்வரர் தீவு. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ தொலைவில் இந்த தீவு அமைந்துள்ளது. கடல் போல் காட்சியளிக்கும் காவிரி ஆற்றின் நீருக்கு நடுவே அமைந்துள்ள இந்த குட்டி தீவின் நடுவே சிவன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் உள்ள சிவபெருமான் நட்டாற்றீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இந்த கோவில் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. 10-ம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த கோவிலுக்கு முதலில் பரிசல் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது கரையில் இருந்து கோயிலுக்கு செல்ல பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் எளிதில் செல்ல முடியும்.

    கோயிலின் வரலாறு

    இந்த கோவில் குறித்து பழங்கால புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அகத்திய முனிவர் தனது பாவங்களைப் போக்க ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினாராம். மணலால் செய்யப்பட்ட இந்த சிவலிங்கம் காவேரி ஆற்றின் மையத்தில் ஒரு குன்றின் மீது வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அகத்தியர் தனது ருத்ராட்ச மாலையை மலையை சுற்றி வைத்துவிட்டு தனது தவத்தை தொடங்கினார்.

    சித்திரை முதல் நாள் அவர் எந்த தொந்தரவும் இல்லாமல் தவம் செய்துள்ளார். ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று சில இடையூறுகளால் கண்விழித்த அவர் தனது தவத்தை முடித்துக் கொண்டாராம். பின்னர் அவர் தனது ருத்ராட்ச மாலையை லிங்கத்தில் இருந்து அகற்ற முயன்றார். பின்னர் சிவபெருமானின் தெய்வீக குரலை கேட்டாரம். அப்போது சிவபெருமான் தனது லிங்கத்தைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், அது நிரந்தரமாக அங்கேயே இருக்கும் என்று கூறினாராம்.

    அகத்தியரையும், அங்கு வந்த அனைத்து பக்தர்களையும் ஆசீர்வதிக்க தோன்றியதாகவும் கூறினாராம். எனவே, இந்த புராணத்தின் படி சிவபெருமான் ஈரோடு நகரில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். பின்னர் அகத்திய முனிவர் தனது எஞ்சிய பணியை முடிக்க தெற்கில் பல்வேறு இடங்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் நட்டாற்றீஸ்வரர் கோவிலைக் கட்டி, கோவிலில் சிவ லிங்கத்தை நிறுவினர். இங்குள்ள லிங்கத்திற்கு அகஸ்தீஸ்வரர் என்று பெயர். இந்த கோவிலுக்குள் அமைந்துள்ள அத்தி மரத்தை பக்தர்கள் காணலாம். இது 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என நம்பப்படுகிறது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஈரோடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

    எப்படி செல்வது?

    ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் பேருந்தில் ஏறி சாவடிப்பாளையம் என்ற ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆட்டோ மூலம் 2 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோவிலுக்கு செல்லலாம். மேலும் காவிரி ஆற்றங்கரையில் இருந்தும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மற்ற ஆற்றங்கரைகளில் இருந்தும் பரிசல் சேவைகள் இக்கோயிலுக்குச் செல்லலாம். எனவே வாய்ப்புள்ளவர்கள் இந்த அழகான தீவு கோவிலுக்கு செல்வது நிச்சயம் நல்ல அனுபவத்தை தரும்.

    ×