search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bhairava worship"

    • பங்குனி மாத அஷ்டமி திரியம்பகாஷ்டமி என்று அழைக்கப்படுகின்றன.
    • பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள்.

    ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு ஒரு பெயர் உள்ளது. சித்திரை மாதம் சனாதன அஷ்டமி, வைகாசி மாதம் சதாசிவாஷ்டமி, ஆனி மாதம் பகவதாஷ்டமி, ஆடி மாதம் நீலகண்டாஷ்டமி, ஆவணி மாதம் சிவா அஷ்டமி, புரட்டாசி மாதம் சம்பு அஷ்டமி, ஐப்பசி மாதம் ஈஸ்வராஷ்டமி, கார்த்திகை மாதம் ருத்ராஷ்டமி,காலபைரவாஷ்டமி, மார்கழி மாதம் சங்கராஷ்டமி, தை மாதம் தேவ தேவாஷ்டமி, மாசி மாதம் மகேஸ்வராஷ்டமி, பங்குனி மாதம் திரியம்பகாஷ்டமி என்று அழைக்கப்படுகின்றன.

    அஷ்டமி என்பது எட்டாவது திதி. அது வைணவத்தில் கண்ணனுக்கு உரியது. சைவத்தில் சிவபெருமானுக்கு உரியது. குறிப்பாக கால பைரவருக்கு உரியது. சக்தி வழிபாட்டில் துர்க்கைக்கு உரியது. எனவே எல்லோரும் அனுசரிக்கக்கூடிய விரத நாள் அஷ்டமி. இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை பங்குனி மாதம் வருகின்ற அஷ்டமி திரியம்பகாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. இன்று காலையில் சிவபெருமானையும் மாலையில் சூரிய அஸ்தமனத்தில் பைரவரையும் தரிசனம் செய்து வழிபட்டால் அஷ்டமி விரத நன்மைகள் ஏற்படும் திருமணத் தடைவிலகும். எம பயம் நீங்கி ஆயுள் விருத்தி ஏற்படும்.

    பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எவரொருவர் தேய்பிறை அஷ்டமி தோறும் பைரவ பகவானை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம். செந்நிற மலர்கள், அரளி மாலை கொண்டு பைரவருக்கு அணிவித்து பிரார்த்தனை செய்ய வேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்தால் கடன் தொல்லைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். தீய சக்திகள் அண்டாது. வடைமாலை சார்த்தி வணங்குவார்கள் பக்தர்கள். மிளகு வடை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தன்னை வழிபடுபவர்களுக்கு பயத்தை போக்குபவர், சுகவாழ்வு தருபவர்.
    • உலகில் தோன்றிய உயிர்களை உரிய நேரத்தில் அழிக்கிறார்.

    இரண்யாட்சனின் மகன் அந்தகாசூரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி கடும்தவம் புரிந்தான். அதன் மூலம் பல வரங்களையும் பெற்றான். அதனால் அகந்தை கொண்டவன், முனிவர்கள், தேவர்கள், தேவலோக பெண்கள் என்று அனைவரையும் துன்புறுத்தினான்.

    தேவர்கள் இதுபற்றி சிவபெருமானிடம் முறையிட்டனர். ஈசன் தன்னுடைய அவதாரமாக பைரவரைத் தோற்றுவித்து, அந்தகாசூரனை அழித்தார். 'பைரவர்' என்ற வடமொழிச் சொல்லுக்கு 'எதிரிகளுக்கு பயத்தை அளிப்பவர்' என்று பொருள். ஆனால் தன்னை வழிபடுபவர்களுக்கு பயத்தை போக்குபவர், சுகவாழ்வு தருபவர்.

    பைரவர் தோற்றம்

    நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்சபூதங்களால் உலகம் இயங்குகிறது. நிலத்தின் அதிதேவதையாக இருந்து பிரம்மன் படைப்புத் தொழில் செய்கிறார். நீருக்கு அதி தெய்வமான திருமால் காத்தல் தொழில் புரிகிறார். நெருப்பின் அதிதெய்வமான ருத்திரன், உலகில் தோன்றிய உயிர்களை உரிய நேரத்தில் அழிக்கிறார்.

    காற்றின் அதிதெய்வமான மகேஸ்வரர், ஒரு பிறப்பின் நினைவு மறுபிறப்புக்கு தெரியாதபடி மறைத்து, மறைப்பு தொழிலை செய்கிறார். ஆகாயத்தின் அதிதெய்வமான சதாசிவர், அருளல் தொழில் மூலமாக உயிர்களுக்கு பிறவிகளைக் கொடுத்து அருள்கிறார்.

    இந்த ஐந்து அதிதெய்வங்களையும் முழுமுதற் கடவுளாக எண்ணுதல் கூடாது. அதே நேரம் இவர்களை புறக்கணிக்கவும் கூடாது. இவர்களுக்கு மேலாக, முழு முதற்கடவுளாக இருந்து அருள்பவர், அனைத்திற்கும் மூலமான பரமசிவன் ஆவார். இவரின்றி முக்திப்பேறு அடைய முடியாது. இத்தகைய சிறப்பு பெற்ற சிவபெருமானின் மூர்த்தங்களில் ஒன்றுதான் பைரவர்.

    பல்வேறு பைரவர்கள்

    சிவாகமங்கள், சிற்பநூல்கள் பைரவ மூர்த்தங்களை அறுபத்து நான்கு என விரிக்கிறது. இவற்றில் சிறப்பான எட்டு வடிவங்கள் 'அஷ்ட பைரவர்' என்று போற்றப்படுகிறார்கள். 1. அசிதாங்க பைரவர், 2. ருரு பைரவர், 3. சண்ட பைரவர், 4 குரோதன பைரவர், 5. உன்மத்த பைரவர், 6. கபால பைரவர், 7. பீஷன பைரவர், 8. சம்ஹார பைரவர் ஆகியோர் அந்த எட்டு பைரவர்கள் ஆவர்.

    ஒரே பைரவர், எட்டு செயல்களை எட்டு திசைகளில் இருந்து செய்யும்போது, அஷ்ட பைரவராக காட்சிதருகிறார். பைரவர் பற்றி பல புராணங்கள் விவரிக்கின்றன. சிவபெருமானின் ஐந்து குமாரர் களின் வரிசையில், கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் ஆகியோருடன் பைரவரும் எண்ணப்படுகிறார். சிவபெருமான் வலிமைமிக்க ஞான மூர்த்தியாக பைரவரைத் தோற்று வித்து உலகினைக் காத்திட அருள்புரிந்துள்ளார்.

    • பைரவாஷ்டகம் பாராயணம் செய்து மனதார வழிபடுங்கள்.
    • இதுவரை இருந்த எதிர்ப்புகள் அனைத்தும் அகலும்.

    மத்யாஷ்டமி எனும் அற்புதமான நாளில், பைரவரை பிரார்த்தனை செய்து, பைரவாஷ்டகம் பாராயணம் செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். இதுவரை இருந்த எதிர்ப்புகள் அனைத்தும் அகலும். எடுத்த காரியங்களை எல்லாம் வெற்றியாக்கி தந்தருள்வார் பைரவர்.

    பைரவ வழிபாடு சக்தி வாய்ந்தது. காலபைரவரை அனுதினமும் வழிபடலாம். எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். வழக்கு முதலான சிக்கல்கள், எதிரிகள் முதலான தொல்லைகள், குடும்பத்தில் குழப்பங்கள், கடன் தொல்லையால் அவமானம் என கலங்கி தவிப்பவர்கள், அவசியம் பைரவரை வணங்கி வருவது நல்லது. அனைத்தையும் சுபமாக்கித் தருவார் காலபைரவர்.

    குறிப்பாக தேய்பிறை அஷ்டமியில், பைரவ வழிபாடு என்பது மிக மிக அவசியம். பைரவருக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. அரளி முதலான செந்நிற மலர்களைச் சூட்டுங்கள். எதிரிகளை அழிக்கும் வல்லமை கொண்டவர் அனுமன். மனோதிடம் தருபவர் அனுமன். அவருக்கு வடைமாலை சார்த்துவது விசேஷம். அதேபோல் பைரவருக்கும் வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வது மகோன்னத பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    இன்று தேய்பிறை அஷ்டமி. இந்த நாளில், மாலையில் விளக்கேற்றி, பைரவாஷ்டகம் சொல்லி வழிபடுங்கள்.

    பைரவாஷ்டகம்

    தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்

    வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம்

    நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்

    காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே


    பானு கோடி பாஸ்வரம் பவாப்தி தார கம்பரம்

    நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோஸனம்

    கால காலமம் புஜாக்ஷ மஸ்த ஸூல மக்ஷரம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    ஸூல டங்க பாஸ தண்ட பாணி மாதி காரணம்

    ஸ்யாம காய மாதி தேவ மக்ஷரம் நிராமயம்

    பீம விக்ர மம் ப்ரபும் விஸித்ர தாண்டவ ப்ரியம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    புக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்த சாரு விக்ரஹம்

    பக்த வத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்த லோக விக்ரஹம்

    நிக்வணத் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    தர்ம ஸேது பாலகம் த்வதர்ம மார்க்க நாஸகம்

    கர்மபாஸ மோசகம் ஸுசர்ம தாயகம் விபும்

    ஸ்வர்ண வர்ண கேஸ பாஸ ஸோபிதாங்க நிர்மலம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    ரத்ன பாதுகா ப்ரபாபி ராம பாத யுக்மகம்

    நித்ய மத்வி தீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்

    ம்ருத்யு தர்ப்ப நாஸனம் கரால தம்ஷ்ட்ர பூஷணம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    அட்டஹாஸ பின்ன பத்மஜாண்ட கோஸ ஸந்ததிம்

    த்ருஷ்டி பாத நஷ்ட பாப ஜாலமுக்ர ஸாஸனம்

    அஷ்ட ஸித்தி தாயகம் கபால மாலி காதரம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    பூத ஸங்க நாயகம் விஸால கீர்த்தி தாயகம்

    காஸி வாஸி லோக புண்ய பாப ஸோதகம் விபும்

    நீதி மார்க்க கோவிதம் புராதனம் ஜகத் பதிம்

    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே


    கால பைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்

    ஜ்ஞான முக்தி ஸாதனம் விஸித்ர புண்ய வர்த்தனம்

    ஸோக மோஹ லோப தைன்ய கோப தாப

    நாஸனம்

    தே ப்ரயாந்தி கால பைரவாங்க்ரி ஸந்நிதிம்

    த்ருவம்

    இந்த நன்னாளில், பைரவாஷ்டகம் சொல்லி பைரவ வழிபாடு செய்யுங்கள். முக்கியமாக, தெருநாய்களுக்கு இரண்டு ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டாவது வழங்குங்கள். எதிரிகள் தொல்லைகள் ஒழியும். எதிர்ப்புகள் அகலும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்வில் காரியத்தில் வெற்றியைக் காண்பீர்கள்.

    அழிவிடை தாங்கி பைரவபுரம் கால பைரவரை வணங்கினால் முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகளும் அகலும். பில்லி சூனியம் விலகும்.
    பைரவரின் எட்டு விதமான தோற்றங்களை, ஒரே ஆலயத்தில் வழிபடும் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது, பைரவபுரம் திருத்தலம். இதனை ‘அழிவிடை தாங்கி பைரவபுரம்’ என்றும் அழைக்கிறார்கள்.

    சுமார் 500 வருடங்கள் பழைமையானது இந்த ஆலயம். கோவிலில் அருள்பாலிக்கும் பைரவர் தெற்கு நோக்கி காட்சி தந்து, அருள்பாலிக்கிறார். பொதுவாக பைரவரின் வாகனம் மேற்கு நோக்கி இருக்கும். ஆனால் இங்குள்ள நாய் வாகனம் கிழக்கு நோக்கி இருப்பது வித்தியாசமாக உள்ளது. காசியிலிருக்கும் கால பைரவருக்கு நிகரான ஆலயம் இது என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் பல பைரவர் கோவில்கள் இருந்தாலும், சொர்ணகால பைரவருக்கான தனி ஆலயம் வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலய இறைவன் விக்கிரகம், ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    வாஸ்து பகவானுக்கு குரு, கால பைரவர் என்பதால், இவரை வணங்கினால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் விலகும். பைரவர் சனி பகவானுக்கு குருவாக இருக்கிறார். எனவே சனியில் துன்பங்களில் இருந்து விடுபடலாம். மேலும் திருமணத்தடை நீங்கும். பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி பெரும். வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகளும் அகலும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

    தேய்பிறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

    திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ளது அழிவிடைதாங்கி கிராமம் என்னும் மதுரா பைரவபுரம். காஞ்சீபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம், வெம்பாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாகவும் வரலாம்.
    ×