என் மலர்tooltip icon

    வழிபாடு

    • திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள்.
    • சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு.

    கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமை இன்று இந்த திங்கட்கிழமையில் சிவ ஆலயங்களுக்கு அவசியம் செல்ல வேண்டும். இந்த நாளில், சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வணங்கினால், மனோபலத்தையும் தெளிவையும் பெறலாம்.

    திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு. திங்கள் என்றால் சந்திரன். சிவனாரின் தலையில் சந்திரனையும் கங்கையையும் சூடியிருப்பார்.கார்த்திகை சோமவார விரதத்தின் சிறப்பை சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லி இருக்கிறார். இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம்.

    சிவனுக்கு சங்காபிஷேகம் சோமவார நாளில் சிவனாருக்கு நடைபெறும் விசேஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்யுங்கள். சங்காபிஷேகம் சிவாலயங்களில் நடைபெறும். சில கோயில்களில் 108 சங்காபிஷேகமும் 1008 சங்காபிஷேகமும் விமரிசையாக நடைபெறும். சங்காபிஷேகத்தில் சிவ தரிசனம் செய்தால் வாழ்வில் இழந்ததை பெறாலாம்.

    சிவனுக்கு விரதம் சோமவார விரதம் எப்படிப்பட்டது என்பதை சிவனே சொல்கிறார். சோமன் என்றால் சந்திரன், அவனுக்கு உரிய தினம் திங்கள் கிழமை. அந்தக் கிழமையை சோம வாரம் என்று குறிப்பிடுவர். பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது. இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருந்தால் பெருமான் மிகவும் மகிழ்ந்து, திருப்தியடைந்து வேண்டும் வரம் எல்லாம் தந்திடுவார் என்பது முன்னோர் சொன்ன வழி. காரணம், இந்த சோம வார விரதச் சிறப்பை, சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லுவதாய் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

    சந்திரனுக்கு பெருமை சிவனின் ஜடாமுடியில் சந்திரன் அமர்ந்திருந்தான். இதைக் கண்ட பார்வதிக்கு ஆச்சர்யம். தன் சுவாமியின் ஜடா முடியில் சந்திரன் அமரும் பேறு எப்படி வாய்த்தது என்று ஸ்வாமி சந்திரனைத் தாங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? அதற்கு அவன் செய்த பாக்கியம் என்ன? என்று பரமனிடமே கேட்டாள் பார்வதி. எனக்காக விரதம் இருந்து என்னை மகிழ்வித்தான். அதுவே காரணம் என்றார். அதற்கு பார்வதி தேவியும் மற்றும் அங்கிருந்தவர்களும் தங்களுக்கும் இந்த விரதம் குறித்துக் கூறி தாங்களும் பெருமானின் கடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெற வழிசெய்யக் கோரினாள்.

    சிவனுக்காக விரதம் அதன்படி, சிவபெருமானே, பார்வதி தேவிக்கும் மற்றும் அங்கே கூடியிருந்தவர்களுக்கும் இந்த விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார் என்கிறது புராணம்.திங்கட்கிழமையில் அதிகாலையில் குளித்து விரதத்தை தொடங்க வேண்டும். அந்தணரை தம்பதியாய் வரவழைத்து, அவர்களையே பார்வதி, பரமேஸ்வரனாக பாவனை செய்து அவர்களுக்கு தானம் அளித்து ஆசிர்வாதம் பெற வேண்டும். வசிஷ்டர், சோமசர்மன், தன்மவீரியன், கற்கர் ஆகியோர் இதைக் கடைபிடித்து முறையே அருந்ததி, செல்வம், நற்கதி, குழந்தைப் பேறு ஆகியவற்றைப் பெற்று மகிழ்ந்தனர்.

    • சிவன்கோவில்களில் சோமவார 1008 சங்காபிஷேகம்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-25 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திரயோதசி காலை 6.32 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: விசாகம் நண்பகல் 2.42 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று மாத சிவராத்திரி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடையூர், குன்றக்குடி, திருமயிலை கோவில்களில் கார்த்திகை சோமவார 1008 சங்காபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், லால்குடி, திருவிடைமருதூர் கோவில்களில் சுவாமி காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-புகழ்

    ரிஷபம்-துணிவு

    மிதுனம்-உறுதி

    கடகம்-வெற்றி

    சிம்மம்-ஜெயம்

    கன்னி-நன்மை

    துலாம்- சோதனை

    விருச்சிகம்-உழைப்பு

    தனுசு- சாதனை

    மகரம்-நலம்

    கும்பம்-சாந்தம்

    மீனம்-பொறுப்பு

    • கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்கள் உள்ளன.
    • கார்த்திகை மாத சிவராத்திரியன்று குபேரன் அருணாசலேஸ்வரரை கிரிவலம் வருகிறார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைந்து உள்ளது. 14 கிலோ மீட்டர் தொலைவு உடைய கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்கள் உள்ளன. இந்த பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் என்ற வழக்கம் ஏற்பட்டுள்ளது.

    கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளன்று குபேரன் பூமிக்கு வந்து அருணாசலேஸ்வரரை வணங்கி கிரிவலம் வருகிறார் என்று கூறப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தில் கிரிவலப்பாதையில் 7-வது லிங்கமாக உள்ள குபேர லிங்கத்தை தரிசனம் செய்து கிரிவலம் சென்றால் செல்வ செழிப்புடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    அதன்படி கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளான நாளை (திங்கள்கிழமை) குபேர கிரிவலம் நடைபெற உள்ளது. குபேர கிரிவலம் செல்ல மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உகந்த நேரம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குபேர லிங்க கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்க கோவிலில் பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் கிரிவலப்பாதையில் வேங்கிக்கால், அந்தியந்தல், அடிஅண்ணாமலை, ஆணாய்பிறந்தான் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

    • பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன மஹோற்சவம் நடந்தது.
    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு அர்ச்சகர்கள் ஸ்நாபன திருமஞ்சனம் செய்தனர்.

    திருமலை:

    புனித கார்த்திகை மாதத்தில் சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வனபோஜன மஹோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று திருப்பதியை அடுத்த ஸ்ரீவாரிமெட்டில் உள்ள பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன மஹோற்சவம் நடந்தது.

    அதற்காக, காலை 7 மணியளவில் சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க, பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக ஸ்ரீவாரிமெட்டில் உள்ள பார்வேடு மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    அந்த மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு அர்ச்சகர்கள் ஸ்நாபன திருமஞ்சனம் செய்தனர். மதியம் 12 மணியில் இருந்து மாலை 3 மணி வரை கார்த்திகை வனபோஜன மஹோற்சவத்தை நடத்தினர்.

    அப்போது கோவில் அர்ச்சகர் நாராயணாச்சாரியார் கூறியதாவது:-

    மகாவிஷ்ணு புனித கார்த்திகை மாதத்தில் நெல்லிமரத்தின் கீழே அமர்ந்து உணவு சாப்பிடுவதை விரும்புவார். அதைக் கொண்டாடும் வகையில் வைணவ கோவில்களில் கார்த்திகை வனபோஜன மஹோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2013-2014ம் ஆண்டு முதல் தேவஸ்தானம் கார்த்திகை தாமோதர வனபோஜன உற்சவத்தை தொடங்கி நடத்தி வருகிறது.

    அதே ஆண்டில் இருந்து சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலிலும் கார்த்திகை வனபோஜன மஹோற்சவத்தை தொடங்கி தொடச்சியாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. வனபோஜனத்தில் பக்தர்கள் பங்கேற்று அன்னப்பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால் நல்லது நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கார்த்திகை வனபோஜன மஹோற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் அன்னப்பிரசாதம் வழங்கினர்.

    அதையொட்டி திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்கள் பலர் பங்ேகற்று அன்னமயாவின் சங்கீர்த்தனங்களை பாடினர்.

    • பேட்டைதுள்ளல் என்பது மகிழ்ச்சியாக ஆடப்படும் நடனம்.
    • பம்பை நதியில் பக்தியுடன் ஐயப்பனை நினைவில் கொண்டு நீராட வேண்டும்.

    எருமேலி:

    தர்மசாஸ்தா சன்னதி (எருமேலி) ஐயப்ப பக்தர்கள் இச்சன்னதியில் அவசியம் பேட்டை துள்ள வேண்டும். மணிகண்டன் ராஜசேகரமன்னன் ஆணைப்படி காட்டுக்கு வேட்டையாடச் சென்று வந்ததன் நினைவாக இது செய்யப்படுகிறது. பேட்டைதுள்ளல் என்பது மகிழ்ச்சியாக ஆடப்படும் நடனம், பேட்டை துள்ளலின் போது சாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தக்கத்தோம் என்று பாடவேண்டும் காணிக்கைகளை உண்டியலில் போடவேண்டும்.

    பம்பா நதி வழிபாடு:

    பம்பை நதியில் பக்தியுடன் ஐயப்பனை நினைவில் கொண்டு நீராட வேண்டும். நீராடியபின், குருதட்சணை, அன்னதானம், பம்பை விளக்கு ஆகிய சக்திக்குரிய பூஜைகளை நடத்த வேண்டும். பம்பை நதிக்கரையில் பம்பா சத்யா எனும் அன்னதானம் செய்ய வேண்டும். காட்டிலுள்ள மூலிகை மரம், வேர் போன்றவற்றை விறகாகக் கொண்டு தயாரிக்கப்படும் அன்னத்தையும் மற்றும் உள்ள பதார்த்தங்களையும் உண்பதால் உடலில் உள்ள நோய்கள் குணமாகின்றன.

    பம்பை-ஸ்ரீராமர் அனுமர் கோவில் வழிபாடு:

    பம்பை நதிக்கரையில் உள்ள கணபதி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்டபின் ஸ்ரீராமர் கோவிலிலும், ஸ்ரீஅனுமார் கோவிலிலும் வழிபட வேண்டும்.

    பந்தள ராஜ வந்தனம்:

    நீலிமலை ஏறுவதற்கு முன்பாக நதிக்கரையில் வீற்றிருக்கும் பந்தளராஜா ஆசிரமத்திற்கு வந்து இறைவனை வழிபட்ட பிறகே செல்ல வேண்டும்.

    அப்பாச்சிக்குழி, இப்பாச்சிக்குழி:

    ஐயப்ப சுவாமியின் முக்கியமான பூதகணமான கடுவரனால் துர்பூதங்களும், துர்வேதனங்களும் இங்கு அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கன்னி சுவாமிகள் தங்கள் மூத்த குருசுவாமி ஆணைப்படி இந்த இடத்தில் அரிசி மாவு உருண்டையும் வெல்ல உருண்டை களையும் இந்தக்குழியில் போட வேண்டும்.

    சரஸ்குழி ஆல்துறை:

    கன்னிசுவாமிகள் குருதட்சணை வழங்கியபிறகு இந்த இடத்தில் சரக்கோல் குத்த வேண்டும்.

    நெய் அபிஷேகம்:

    நெய் அபிஷேகம் ஸ்ரீ சன்னிதானத்தில் செய்ய வேண்டிய ஒன்றாகும். ஐயப்ப பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்துள்ள நெய் தேங்காய்களை உடைத்து அதை சுவாமி அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்து கிடைக்கும் நெய்யை பிரசாதமாக உபயோகப்படுத்த வேண்டும்.

    கணபதி சுவாமி சன்னதி:

    இங்கு ஒரு ஹோமகுண்டம் இருக்கும். இதில் நெய், தேங்காயின் ஒரு பங்கை போட வேண்டும்.

    சண்முக சுவாமி சன்னதி:

    இதுவும் மகா கணபதி சன்னி தானத்தைப்போல சன்னதிக்குள் இருக்கிறது. இங்கு பன்னீர், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம் முதலியவற்றை ஏற்றி வழிபட வேண்டும். மாளிகைப்புறத்தம்மா ஐயப்ப சக்தி ஸ்வரூபிணி தேங்காய் உருட்டல் அந்த அம்மனுக்குரிய முக்கியமான வழிபாடு, இங்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலைப்பாக்கு முதலியவற்றை தேவியின் முன்வைக்க வேண்டும். இங்கு பிரசாதம் வாங்கிக் கொள்ளவும்.

    கருத்த சுவாமிகள்:

    அவல், நெல்பொறி, வெல்லம், பழம், தேங்காய், வறுத்தபொடி முதலியவற்றை செலுத்தி வழிபாடு செய்ய வேண்டும்.

    கருப்ப சுவாமிகள்:

    இங்கு கற்கண்டு திராட்சைப்பழம், கற்பூரம் ஆகியவற்றை காணிக்கையாக வைத்து வழிபட வேண்டும்.

    நாகராஜா, நாகஷியம்:

    இங்கு மஞ்சள்பொடி, கற்பூரம் வைத்து வணங்க வேண்டும். பின் சர்ப்ப தோஷம் ஏற்படாமல் இருக்க சர்ப்ப பாட்டு பாட வேண்டும்.

    வாபர் சுவாமி:

    இந்த சன்னதியில் வாசனை திரவியங்களான பன்னீர், ஊதுபத்தி, தேங்காய், நெல், மிளகு ஆகியவற்றை வைத்து வணங்க வேண்டும்.

    • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
    • திருநாகேஸ்வரம் நாகநாதர் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-24 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திரயோதசி (முழுவதும்)

    நட்சத்திரம்: சுவாதி காலை 11.26 மணி வரை பிறகு விசாகம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம். சூரியானார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. ஸ்ரீவாஞ்சியம் முருகப்பெருமான் புறப்பாடு. திருநாகேஸ்வரம் நாகநாதர் சிறப்பு அபிஷேகம். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-ஆர்வம்

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-போட்டி

    கன்னி-கடினம்

    துலாம்- சலனம்

    விருச்சிகம்-குழப்பம்

    தனுசு- அமைதி

    மகரம்-உயர்வு

    கும்பம்-பாராட்டு

    மீனம்-பரிசு

    • சனி பெயர்ச்சி விழாவிற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர்.
    • பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் அருகே பிரமாண்ட ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.

    திருநள்ளாறு:

    திருநள்ளாறில் உலகபுகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சி விழா வருகிற 20-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் சனீஸ்வரர் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.

    சனி பெயர்ச்சி விழாவிற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதையொட்டி சனிப்பெயர்ச்சி விழா அழைப்பிதழை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.

    பின்னர் கலெக்டர் குலோத்துங்கன் கூறுகையில், சனி பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக காரைக்கால் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து கோவிலுக்கு 25 பஸ்கள் இலவசமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் அருகே பிரமாண்ட ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.

    சனிப்பெயர்ச்சி தரிசனத்துக்காக ஆன்லைன் டிக்கெட்டுகள் 15-ந்தேதி முதல் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது என்றார்.

    • 27-ந் தேதி மண்டல பூஜைக்கு பிறகு அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
    • சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சபரிமலை:

    மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி நடக்கிறது. மண்டல பூஜையின் முன்னோடியாக 26-ந் தேதி மாலையில் தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதற்கான தங்க அங்கி ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து 23-ந் தேதி ஊர்வலமாக பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்படுகிறது.

    27-ந் தேதி மண்டல பூஜைக்கு பிறகு அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந் தேதி மாலையில் நடை திறக்கப்படும். பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி நடைபெறும். அன்றைய தினம் சாமிக்கு பந்தளத்தில் இருந்து எடுத்து வரப்படும் தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் தோன்றும் மகர ஜோதியை பக்தர்கள் பார்த்து வழிபடுவார்கள்.

    இந்தநிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பு சீசனில் நேற்று வரை 13 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சென்னையில், மழை காரணமாக ஏராளமான ரெயில்கள் ரத்தானது. இதனால் ஐயப்ப பக்தர்களின் சபரிமலை பயணமும் எதிர்பாராத விதமாக ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது ரெயில் போக்குவரத்து சீராகி வரும் நிலையில் தென் மாநில பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் 10 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இதற்கிடையே சபரிமலையில் அதிகரித்து வரும் கூட்டத்தினால் நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு கேரள ஐகோர்ட்டு சிறப்பு அமர்வு அறிவுறுத்தி உள்ளது. 

    • கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை.
    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-22 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: ஏகாதசி நாளை விடியற்காலை 5.24 மணி வரை. பிறகு துவாதசி.

    நட்சத்திரம்: அஸ்தம் காலை 8.24 மணி வரை. பிறகு சித்திரை.

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. கூப முகூர்த்த தினம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை புறப்பாடு. ஸ்ரீவாஞ்சியம் முருகப் பெருமான் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-உவகை

    மிதுனம்-சிறப்பு

    கடகம்- பயணம்

    சிம்மம்-சுகம்

    கன்னி- துணிவு

    துலாம்- ஆர்வம்

    விருச்சிகம்- முயற்சி

    தனுசு- பணிவு

    மகரம்- தனம்

    கும்பம்- பக்தி

    மீனம்- உயர்வு

    • உற்சவர் கங்கையம்மன்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடந்தன.
    • திருவிழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதனால் நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏழு கங்கையம்மன் கோவிலில் உற்சவர் கங்கையம்மன்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடந்தன. பூஜைகள் முடிந்ததும் உற்சவர்களான ஏழு கங்கையம்மன்கள் எதிரே போடப்பட்டு இருந்த திரைகள் அகற்றப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதையடுத்து உற்சவர் கங்கையம்மன்கள் அங்கிருந்து சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபம் நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய உற்சவர்கள் ஊர்வலம் ஏழு பகுதிகளான ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபம், பேரிவாரி மண்டபம், ஜெயராம் ராவ் வீதி, சன்னதி வீதி, பிராமண வீதி எனப்படும் தேர் வீதி, காந்தி வீதி, கொத்தப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்ல சுமார் 3 மணி நேரம் ஆனது. உற்சவர் ஏழு கங்கையம்மன்கள் அந்தந்த நிலையை அடைந்ததும், அங்கு உற்சவர் ஏழு கங்கையம்மன்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டன.

    திருவிழாவில் ஸ்ரீகாளஹஸ்தி நகர மக்கள், பக்தர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவர் ஏழு கங்கையம்மன் மற்றும் உற்சவர் ஏழு கங்கையம்மன்களை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடுகள், கோழிகள் பலியிட்டனர். ஒருசில பக்தர்கள் கோவில் வாசலில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    நிறைவாக உற்சவர் ஏழு கங்கையம்மன்களுக்கு பல்வேறு பூஜைகள் முடிந்ததும் இரவு 9 மணியளவில் மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு உற்சவர் ஏழு கங்கையம்மன்கள் மற்றும் மூலவர் ஏழு கங்கையம்மனுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று இன்று (வியாழக்கிழமை) நீரில் கரைக்கப்படுகின்றன. இதோடு கோவில் திருவிழா நிறைவடைகிறது.

    கோவில் திருவிழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. திருவிழாவின்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஸ்ரீகாளஹஸ்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று முன்தினத்தில் இருந்து இன்று காலை வரை நகருக்குள் பஸ்கள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கனரக வாகனங்கள் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. சிவன் கோவில் நான்கு மாட வீதிகளில் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தன.

    • ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா ஓம் இன்பத்தமிழ் சுவையே சரணம் ஐயப்பா
    • ஓம் ஏழைப்பங்காளனே சரணம் ஐயப்பா ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா

    1.ஓம்கன்னிமூல கணபதியேசரணம் ஐயப்பா

    2.ஓம்காந்தமலை ஜோதியேசரணம் ஐயப்பா

    3.ஓம் அரிஹர சுதனேசரணம் ஐயப்பா

    4.ஓம் அன்னதான பிரபுவேசரணம் ஐயப்பா

    5.ஓம் ஆறுமுகன் சகோதரனே சரணம் ஐயப்பா

    6.ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா

    7.ஓம் இன்பத்தமிழ் சுவையே சரணம் ஐயப்பா

    8.ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா

    9.ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா

    10.ஓம் ஈடில்லாத தெய்வமே சரணம் ஐயப்பா

    11.ஓம் உண்மைப் பரம்பொருளேசரணம் ஐயப்பா

    12.ஓம் உலகாளும் காவலனேசரணம் ஐயப்பா

    13.ஓம் ஊழ்வினை அழிப்பவனேசரணம் ஐயப்பா

    14.ஓம் எளியோர்க்கு அருள்பவனேசரணம் ஐயப்பா

    15.ஓம் எங்கள் குலதெய்வமே சரணம் ஐயப்பா

    16.ஓம் ஏழைப்பங்காளனே சரணம் ஐயப்பா

    17.ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா

    18.ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா

    19.ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனேசரணம் ஐயப்பா

    20.ஓம் ஒப்பில்லாத திருமணியேசரணம் ஐயப்பா

    21.ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா

    22.ஓம் ஓங்கார பரம்பொருளே சரணம் ஐயப்பா

    23.ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா

    24.ஓம் ஔதடங்கள் அருள்பவனேசரணம் ஐயப்பா

    25.ஓம் சவுபாக்கியம் அளிப்பவனேசரணம் ஐயப்பா

    26.ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா

    27.ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா

    28.ஓம் சிவன் மால் திருமகனே சரணம் ஐயப்பா

    29.ஓம் சிவ வைணவ ஐக்கியமேசரணம் ஐயப்பா

    30.ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா

    31.ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா

    32.ஓம் குளத்துப்புழை பாலகனேசரணம் ஐயப்பா

    33.ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா

    34.ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா

    35.ஓம் வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா

    36.ஓம் உத்திரத்தில் உதித்தவனேசரணம் ஐயப்பா

    37.ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா

    38.ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா

    39.ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா

    40.ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

    41.ஓம் சாந்தம் நிறைமெய்ப்பொருள்சரணம் ஐயப்பா

    42.ஓம் குருமகனின் குறை தீர்த்தவனேசரணம் ஐயப்பா

    43.ஓம் குருதட்சணை அளித்தவனேசரணம் ஐயப்பா

    44.ஓம் புலிப்பால் கொணர்ந்தவனேசரணம் ஐயப்பா

    45.ஓம் வன்புலியின் வாகனனேசரணம் ஐயப்பா

    46.ஓம் தாயின் நோய் தீர்ப்பவனேசரணம் ஐயப்பா

    47.ஓம் குருவின் குருவேசரணம் ஐயப்பா

    48.ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா

    49.ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா

    50.ஓம் தூய உள்ளம் அளிப்பவனேசரணம் ஐயப்பா

    51.ஓம் இருமுடிப்பிரியனே சரணம் ஐயப்பா

    52.ஓம் எருமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா

    53.ஓம் நித்திய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா

    54.ஓம் நீல வஸ்திரதாரியே சரணம் ஐயப்பா

    55.ஓம் பேட்டை துள்ளும் பேரருளேசரணம் ஐயப்பா

    56.ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனேசரணம் ஐயப்பா

    57.ஓம் சாஸ்தாவின் நந்தவனமேசரணம் ஐயப்பா

    58.ஓம் சாந்திதரும் பேரழகே சரணம் ஐயப்பா

    59.ஓம் பேரூர்த்தோடு தரிசனமேசரணம் ஐயப்பா

    60.ஓம் பேதமையை ஒழிப்பவனேசரணம் ஐயப்பா

    61.ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா

    62.ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா

    63.ஓம் அழுதை மலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    64.ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா

    65.ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா

    66.ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

    67.ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

    68.ஓம் கரியிலந்தோடே சரணம் ஐயப்பா

    69.ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    70.ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா

    71.ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா

    72.ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா

    73.ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா

    74.ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா

    75.ஓம் திருவேணி சங்கமே சரணம் ஐயப்பா

    76.ஓம் திரு ராமர் பாதமே சரணம் ஐயப்பா

    77.ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா

    78.ஓம் சபரிக்கு அருள்செய்தவனே சரணம் ஐயப்பா

    79.ஓம் தீபஜோதி திருஒளியே சரணம் ஐயப்பா

    80.ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

    81.ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

    82.ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

    83.ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா

    84.ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா

    85.ஓம் நீலமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    86.ஓம் நிறையுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா

    87.ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா

    88.ஓம் இப்பாச்சிக் குழியே சரணம் ஐயப்பா

    89.ஓம் சபரி பீடமேசரணம் ஐயப்பா

    90.ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா

    91.ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா

    92.ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா

    93.ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா

    94.ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா

    95.ஓம் பகவானின் சன்னதியே சரணம் ஐயப்பா

    96.ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா

    97.ஓம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் ஐயப்பா

    98.ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா

    99.ஓம் நாகராஜப் பிரபுவே சரணம் ஐயப்பா

    100. ஓம் மாளிகை புறத்தம்மனே சரணம் ஐயப்பா

    101. ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா

    102. ஓம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா

    103. ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா

    104. ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா

    105. ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா

    106. ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா

    107. ஓம் ஜோதி சொரூபனே சரணம் ஐயப்பா

    108. ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

    • குழந்தை அற்புதங்கள் பல செய்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.
    • சிவ விஷ்ணுவின் ஆற்றல் கொண்ட தர்மசாஸ்தா அவதரித்தார்.

     மகிஷாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் இருந்து தன்னை யாரும் அழிக்கக்கூடாது என்ற வரம் பெற்றான்.

     முப்பெரும் தேவியர் சண்டிகாதேவி என்ற அவதாரம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தனர்.

     மகிஷாசுரனின் சகோதரி மகிஷி தன் சகோதரன் கொல்லப்பட்டதற்கு பரிகாரம் காண்பதற்காக கடும் தவம் இருந்தாள். ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் தனக்கு அழிவு வரவேண்டும் என்ற வரத்தை பெற்றாள்.

     மகிஷியை அழிப்பதற்காக அய்யப்ப அவதாரத்தை சிவ பெருமான் உண்டாக்கினார். பாற்கடலை கடைந்த போது அசுரர் களை மயக்க திருமால் மோகினி அவதாரம் எடுத்தார். அவர் அழகை கண்டு பரவசம் அடைந்த சிவன் அவளை தழுவினார். இதனால் சிவ விஷ்ணுவின் ஆற்றல் கொண்ட தர்மசாஸ்தா அவதரித்தார்.

     பந்தள மன்னர் ராஜசேகரன் குழந்தை இல்லாமல் இருந்து வந்தார். அவர் தனக்கு குழந்தை பிறக்க வேண்டுமென்று சிவனிடம் தினமும் மனம் உருக வேண்டினார்.

     மார்கழி மாதம் உத்திர நட்சத்திர தினத்தன்று பந்தள மன்னர் காட்டுக்கு வேட்டையாட சென்ற போது அங்கு கிடந்த ஒரு குழந்தையை கண்டெடுத்தார். அந்த குழந்தையை அரண்மனைக்கு எடுத்துவந்தார். வழியில் முதியவர் வடிவில் தோன்றிய திருமால் குழந்தை கழுத்தில் கனகமணி மாலை அணிவித்து மணிகண்டன் என்ற பெயரை சூட்டினார்.

     குழந்தையை ராணியிடம் பந்தள மன்னர் கொடுத்தார். ராணியும் மகிழ்ச்சி அடைந்தாள். அந்த குழந்தையை தாலாட்டி சீராட்டி வளர்த்தாள். அந்த குழந்தை அற்புதங்கள் பல செய்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.

     குருகுலத்தில் சேர்க்கப்பட்ட மணிகண்டன் எல்லா கலைகளிலும் தேர்ச்சி பொற்றான். குருவின் வாய் பேச முடியாத மகனை பேச வைத்து அற்புதம் நிகழ்த்தினான்.

     இந்த நிலையில் ராணிக்கு அழகான ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராஜராஜன் என பொயர் சூட்டினர். என்றாலும் பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார். இதை மந்திரி ஒருவர் விரும்பவில்லை. ராணி மனதை மாற்றி மணிகண்டனை விரட்ட முடிவு செய்தனர்.

     மந்திரி திட்டப்படி ராணி தலைவலி வந்தது போல் நடித்தாள். புலி பால் கொண்டு வந்தால் தான் ராணி தலைவலியை சரிப்படுத்த முடியும் என்று மருத்துவர்களை அந்த மந்திரி சொல்ல வைத்தான்.

     புலி பாலை யார் கொண்டு வரமுடியும் என அரசவையில் உள்ள எல்லோரும் திகைத்து நின்றனர். அப்போது மணிகண்டன் நான் காட்டுக்குள் சென்று புலி பாலை கொண்டு வருகிறேன் என்று கூறி புறப்பட்டு சென்றான்.

     காட்டுக்குள் மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் கடும் போர் ஏற்பட்டது. மகிஷியை அம்பு ஏய்தி மணிகண்டன் வீழ்த்தினார். தன்னை வீழ்த்தியது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஒருவன் என்பதை உணர்ந்த மகிஷி மறுஉருவம் பொற்று எழுந்தாள். ஐயப்பனை திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். ஆனால் இந்த அவதாரத்தில் பிரம்மச்சாரியாக வாழப்போவதாக கூறிய ஐயப்பன் அவளை தனது இடது பக்கத்தில் சிறு தூரத்தில் நிலைக்கொள்ளும்படி செய்தார். அவளே மஞ்சமாதா என்று அழைக்கப்படுகிறாள்.

     அதன்பிறகு புலி மீது ஏறி பந்தள நாட்டு அரண் மனைக்கு அய்யப்பன் திரும்பி வந்தார். அவரை கண்டு அனைவரும் பயபக்தியுடன் வணங்கினார்கள்.

     12 வயது முடிந்ததும் தான் ஒரு தெய்வ பிறவி என்பதை பந்தள மன்னர் ராஜசேகரனுக்கு ஐயப்பன் உணர்த்தினார். தனக்கு சபரிமலையில் ஆலயம் எடுக்க உத்தரவிட்டார்.

    சபரிமலையில் தான் ஒரு அம்பை எய்வதாகவும் அந்த அம்பு எந்த இடத்தில் போய் விழுகிறதோ அங்கு கோவில் கட்டும்படி அருள்பாலித்தார்.

     அதன்படி பந்தள ராஜா ஐயப்பன் கோவிலை கட்டினார். பரசுராமர் உதவியுடன் மகரசங்கர நாளில் சனிக்கிழமையன்று கோவில் கட்டி திறக்கப் பட்டது. இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று ஐயப்பன் ஜோதி வடிவில் இன்றும் அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.

    ×