என் மலர்
வழிபாடு
- ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-26 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அஷ்டமி இரவு 8.00 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : பூரம் காலை 9.21 மணி வரை பிறகு உத்திரம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
வள்ளியூர் ஸ்ரீ சுப்பிரமணியர் தெப்போற்சவம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி திருவீதியுலா. மெய்பொருள் நாயனார் குரு பூஜை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. வேலூர் கோட்டை துர்கையம்மன், கதிராமமங்கலம் ஸ்ரீ வனதுர்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்கையம்மன் தலங்களில் ஸ்ரீ துர்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் காலை சிறப்பு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பயணம்
ரிஷபம்-நேர்மை
மிதுனம்-சிந்தனை
கடகம்-சிறப்பு
சிம்மம்-ஊக்கம்
கன்னி-அமைதி
துலாம்- கணிப்பு
விருச்சிகம்-நட்பு
தனுசு- இன்சொல்
மகரம்-ஆர்வம்
கும்பம்-அன்பு
மீனம்-நற்செயல்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். நண்பர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.
ரிஷபம்
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
மிதுனம்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வரும்.
கடகம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புது முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
சிம்மம்
லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
கன்னி
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். பணநெருக்கடி அகலும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர்.
துலாம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்கள் கூட ஒத்துழைப்புச் செய்வர். உத்தியோக முயற்சி கைகூடும்.
விருச்சிகம்
வரவு திருப்தி தரும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். அலுவலகப் பணி சம்பந்தமாகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
தனுசு
நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும் நாள். பிற இனத்தாரால் பெருமை வந்து சேரும். சாதுர்யமாகச் செயல்பட்டு பொருள் வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
மகரம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். கூட்டாளிகளால் தொல்லை உண்டு. வரவைக் காட்டிலும் செலவு கூடும்.
கும்பம்
யோகங்கள் வந்து சேர யோசித்து முடிவெடுக்க வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும். நண்பர்களால் தொல்லை உண்டு.
மீனம்
புகழ் கூடும் நாள். பயணங்களால் ஆதாயம் உண்டு. பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
- அறிவியல் ரீதியாக ஓசோன் மண்டலம் பூமிக்கு மிக அருகில் வரும் காலம் என்பதால் இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து பெண்கள் வாசலில் கோலமிட வேண்டும்.
- மார்கழி மாதம் இறை வழிபாட்டிற்கே உரிய மாதம்.
தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாகும். இந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.
மார்கழி மாதத்தில் சூரிய பகவான், குரு பகவானின் வீட்டில் சஞ்சரிக்கும் காலம். இது தேவர்கள் கண் விழிக்கும் அதிகாலை பொழுதாக சொல்லப்படுகிறது. அதாவது தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலம் ஆகும். அவர்கள் கண் விழிக்கும் சமயத்தில், நாம் இறை வழிபாட்டில் ஈடுபட்டு, என்ன வேண்டிக் கொண்டாலும் அதை அப்படியே அவர்கள் அருள்வார்கள்.
அறிவியல் ரீதியாக ஓசோன் மண்டலம் பூமிக்கு மிக அருகில் வரும் காலம் என்பதால் இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து பெண்கள் வாசலில் கோலமிட வேண்டும் என்றும், ஆண்கள் பஜனைக்கு செல்ல வேண்டும் என்றும் சொல்லி வைத்தார்கள்.
மார்கழி மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, குளித்து விட்டு இறை நாமங்களை ஒரு முறை சொன்னால் கூட, மற்ற நேரங்களில் ஒரு கோடி முறை நாம ஜபம் செய்ததற்கு சமம்.
ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் கோவில்களுக்கு போக முடியாதவர்கள் மார்கழி மாதம் மட்டும் கோவிலுக்கு சென்றாலே வருடம் முழுவதும் கோவிலுக்கு சென்ற பலன்கள் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.
வருடத்தின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்படுகிறது. அவற்றில் மிக உயர்வானதாக சொல்லப்படுவது மார்கழி மாதம். இது இறை வழிபாட்டிற்கே உரிய மாதம் ஆகும். அதனால் தான் அர்ஜூனனுக்கு செய்த கீதை உபதேசத்தில், மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ண பகவான் விரும்பி சொல்லி உள்ளார்.
- கூட்ட நெரிசலுக்கு தகுந்தாற்போல் “ஸ்பாட் புக்கிங்” எண்ணிக்கை அதிகரிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
- கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக கூட்ட நெரிசல் இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட்டதன் காரணமாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம் போர்டு உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.
ஆன்லைன் முன்பதிவு மூலமாக தினமும் 70 பேருக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக 20 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டதை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
ஐகோர்ட் உத்தரவின் பேரில், கூட்ட நெரிசலுக்கு தகுந்தாற்போல் "ஸ்பாட் புக்கிங்" எண்ணிக்கை அதிகரிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் தற்போது பக்தர்களின் வருகை மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதனால் தினமும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக நடை திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் 45 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மதியம் ஒரு மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.15 மணிக்கும் கோவில் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் கூடுதலாக 3,500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும். சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கூடுதலாக 45 நிமிடங்கள் கிடைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
- சிவபக்தனாக வீரபாகு பாண்டிய மன்னனுக்கும், விக்கிரமசோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வந்தது.
- சிவபெருமானின் கோபத்தால் விக்கிரமசோழனின் கண்பார்வை பறிபோனது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது, நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில். தென் தமிழகத்தின் பஞ்சபூதத் தலங்களில் இக்கோவில் ஆகாயத் தலமாக போற்றப்படுகிறது.
தல வரலாறு
சிவபக்தனாக வீரபாகு பாண்டிய மன்னனுக்கும், விக்கிரமசோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வந்தது. விக்கிரசோழன், பாண்டிய மன்னன் மீது பலமுறை போர் தொடுத்தும், அவனை வெல்ல முடியவில்லை. இதனால், அவனை வஞ்சகத்தால் கொல்ல முடிவு செய்தான். அதன்படி, அவனுடன் நட்பு கொள்வதாகக் கூறி, நச்சு கலந்த ஆடையை தன்னுடைய சேவகனிடம் பரிசாக அனுப்பி வைத்தான். அந்த ஆடையை அணிந்தவர் எரிந்து சாம்பலாகி விடுவார்.
இறைவன் அருளால், சோழ மன்னனால் தனக்கு ஏற்பட இருந்த சதித் திட்டத்தை பாண்டிய மன்னன் அறிந்து கொண்டான். தனக்கு பரிசாக அனுப்பி வைத்த நச்சு ஆடையை, அதைக் கொண்டு வந்த சேவகனுக்கே அணிவித்தான். சிறிது நேரத்தில் அந்த சேவகன் எரிந்து சாம்பலானான். நச்சு ஆடையை அணியவிடாமல் காப்பாற்றிய சிவபெருமானுக்கு பாண்டிய மன்னன் கோவில் எழுப்பினான். மேலும், இத்தல இறைவனுக்கு 'நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி' என்றும் பெயர் சூட்டினான்.
அதே சமயம் சிவபெருமானின் கோபத்தால் விக்கிரமசோழனின் கண்பார்வை பறிபோனது. பிறகு, தன் தவறை உணர்ந்த விக்கிரமசோழன், பாண்டிய மன்னனிடம் மன்னிப்பு கேட்டான். மேலும், தனக்கு மீண்டும் கண்பார்வை கிடைக்க வேண்டி தேவதானம் வந்து இத்தல இறைவனை வழிபட்டான். அதன் காரணமாக விக்கிரமசோழனுக்கு ஒரு கண்பார்வை மட்டும் கிடைத்தது.
இதையடுத்து மற்றொரு கண்ணுக்கும் பார்வை கிடைக்க வேண்டும் என்று வேண்டினான். அப்போது சிவபெருமான், ''மற்றொரு கண்ணுக்கும் பார்வை வேண்டும் என்றால், இவ்வூரின் அருகிலேயே இன்னும் ஒரு கோவிலை எழுப்பு'' என்று அசரீரியாக ஒலித்தார். அதன்படி அருகில் இருக்கும் சேத்தூர் என்ற இடத்தில் விக்கிரமசோழன் கோவில் கட்டினான். இதையடுத்து, அவனுக்கு மற்றொரு கண்பார்வையும் கிடைத்தது.
அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க, உலக மக்களின் நன்மைக்காக பார்வதி தேவி சிவபெருமானை நோக்கி ஊசி முனையில் நின்று தவம் இயற்றினார். இதனால் இங்குள்ள அம்பாள், தவமிருந்த நாயகி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
கோவில் அமைப்பு
கோவில் முகப்பு வாசலை தாண்டி உள்ளே நுழைந்ததும், கொடிமர மண்டபம் காணப்படுகிறது. அதில் கொடிமரம் அழகுற காட்சி அளிக்கிறது. அதையடுத்து, கொலுமண்டபம், தியான மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்ப மண்டபம் என மண்டபங்கள் காணப்படுகின்றன. கருவறையில் லிங்க வடிவமாக நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி அருள்பாலிக்கிறார். கோவிலை சுற்றி தட்சிணாமூர்த்தி, விஷ்ணு - மகாலட்சுமி, பிரம்மா, சரஸ்வதி, கன்னிமூல கணபதி, வள்ளி - சமேத முருகப்பெருமான், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். கோவில் வெளிச்சுற்று பிரகாரத்தில் திருக்கொழுந்தீஸ்வரர், கண் கொடுத்த சிவன், கண் எடுத்த சிவன் ஆகிய மூன்று சிவன் சன்னிதிகள் உள்ளன. கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், இந்த மூன்று சன்னிதி களையும் வழிபட்டு வந்தால் விரைவில் கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குழந்தை பாக்கியம் வேண்டி வரும் தம்பதியர், இக்கோவிலில் உள்ள நாகலிங்க மரத்தின் பூக்களை பறித்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்பு, அந்தப் பூக்களை பிரசாதமாக பெற்று உண்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
அமைவிடம்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் - புளியங்குடி சாலையில் ராஜபாளையத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது தேவதானம். அங்கிருந்து உள்ளே 3 கி.மீ. தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-25 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சப்தமி இரவு 7.43 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : மகம் காலை 8.44 மணி வரை பிறகு பூரம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம்.
தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-துணிவு
ரிஷபம்-உதவி
மிதுனம்-புகழ்
கடகம்-வெற்றி
சிம்மம்-நன்மை
கன்னி-சாதனை
துலாம்- லாபம்
விருச்சிகம்-நட்பு
தனுசு- சாந்தம்
மகரம்-பெருமை
கும்பம்-யோகம்
மீனம்-மேன்மை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
இடமாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் உண்டு.
ரிஷபம்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும்.
மிதுனம்
வள்ளல்களின் உதவி கிடைத்து வளர்ச்சி கூடும் நாள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள். வருமானம் திருப்தி தரும்.
கடகம்
இனிமையான நாள். இல்லத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர்.
சிம்மம்
குறைசொல்லியவர்கள் கூட பாராட்டுகின்ற நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறலாம்.
கன்னி
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
துலாம்
பிரச்சனைகள் அதிகரிக்கும் நாள். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம்.
விருச்சிகம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வர்.
மகரம்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
கும்பம்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழில் சீராக நடைபெறும்.
மீனம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த நற்பலன் உண்டு. வருமானம் திருப்தி தரும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும்.
- மார்கழி மாதம் வருகிற 16-ந் தேதி தொடங்கி ஜனவரி 14-ந் தேதி நிறைவு பெறுகிறது.
- மார்கழி 17-ந் தேதியான ஜனவரி 1-ந் தேதி ஆங்கில வருடப்பிறப்பு என்பதால் அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத முதல் நாளான வருகிற 16-ந் தேதி முதல் மார்கழி 30-ம் நாளான ஜனவரி 14-ந் தேதி வரை கோவில் நடை திறப்பு மற்றும் பூஜை நேரங்கள் குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மார்கழி மாதம் வருகிற 16-ந் தேதி தொடங்கி ஜனவரி 14-ந் தேதி நிறைவு பெறுகிறது. மார்கழி மாதத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணியில் இருந்து 5 மணிக்குள் உதய மார்த்தாண்ட தீபாராதனை, காலை 5மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை நடக்கிறது.
காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் கால சந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8.45 மணியில் இருந்து 9 மணிக்குள் உச்சிகால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.
மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், 7 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை மற்றும் நடை திருக்காப்பிடல் நடக்கிறது.
17-ந் தேதி மற்றும் ஜனவரி 1-ந் தேதி மற்றும் 6-ந் தேதி ஆகிய 2 நாட்களும் பிரதோஷம் என்பதால் பகல் 2.30 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.
மார்கழி 17-ந் தேதியான ஜனவரி 1-ந் தேதி ஆங்கில வருடப்பிறப்பு என்பதால் அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மார்கழி 19-ந் தேதி (3-ந்தேதி) ஆருத்ரா தரிசனம் என்பதால் அன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அழகிய கடற்கரைத் தலமான மாரியூரில் ஒரு சிவபக்தராய் விளங்கிய மீனவர் குடும்பத்தில் பார்வதிதேவி மகளாக அவதரித்தார்.
- ஒரு சமயம் இந்திரனுக்கும், வருணனுக்கும் யார் பெரியவர் என்னும் பிரச்சனை எழுந்தது.
சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் 64. அவற்றில், ஆழ்கடலில் யாருக்கும் அடங்காமல் பல அட்டூழியங்கள் புரிந்த பயங்கர சுறாமீனை அடக்கி, மீனவர் குல மகளாக அவதரித்த உமாதேவியை கரம்பிடித்து மண முடித்த திருத்தலமாய் மாரியூர் என்னும் கடற்கரை ஊர் உள்ளது. இங்கு பவளநிற வல்லி அம்மன் சமேத பூவேந்தியநாதர் கோவில் அமைந்துள்ளது. திருவிளையாடல் புராணத்தில் 57-வது நிகழ்வாக நடைபெற்ற வலைவீசிய படலத்தைப் பற்றி பார்ப்போம்.
தல வரலாறு
ஒரு நாள் மாலைப்பொழுது தனிமையிடத்தில் பரம்பொருளாகிய ஈசன், நால்வகையான வேத நூல்களின் உட்பொருளை உமாதேவிக்கு விளக்கி கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த விநாயகரும், முருகரும் அன்னையின் மடியில் அமர்ந்து விளையாட ஆரம்பித்தனர். இதை எதிர்பாராத உமாதேவி தன் கவனத்தை மாற்றி குழந்தைகளுடன் பேச ஆரம்பித்துவிட்டார்.
தர்மநெறி சாத்திரங்களைச் சொல்லும் வேத தத்துவங்களை புறந்தள்ளிவிட்டு, குழந்தைப் பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த பார்வதியை கோபத்துடன் பார்த்தார் ஈசன். ''எந்தவித தர்மமோ, முறையான விரத நெறிகளோ எதுவும் அறியாத மீனவர் குலத்தில் ஒரு பெண்ணாகப் பிறப்பாயாக'' என ஈசன், உமாதேவிக்கு சாபமிட்டார். இதனைக் கேட்டதும் பார்வதி மிகவும் கவலை அடைந்தாள்.
இறைவன், "தேவி இதற்காக வருந்த வேண்டாம். நீ மீனவர் மகளாக வளர்ந்து பருவமங்கை ஆகும் வேளையில் நானே நேரில் வந்து உன் கரம் பிடிப்பேன்" என ஆறுதல் சொன்னார். தாய்க்கு இப்படியொரு சாபம் கொடுத்த தந்தையின் செயலைக் கண்டு ஆத்திரப்பட்டார் ஆனைமுகன். ''இந்த வேதங்களால் அல்லவா என் தாய்க்கு சாபம் கிடைத்தது. இவைகள் இனிமேலும் இங்கு இருக்கக்கூடாது'' என முடிவெடுத்தார். அடுத்த கணமே வேத சுவடிகளை எல்லாம் தூக்கி கடலில் வீசி எறிந்தார்.
அதே நேரத்தில் ஆறுமுகனும் தன் பங்குக்கு தனது தந்தையின் கையிலிருந்த சிவஞான போத சுவடிகளை பிடுங்கி கடலில் வீசினார். இதை சற்றும் எதிர்பாராத சிவபெருமான், திகைத்துப் போனார். இதனால் ஈசனின் கோபம், தாங்கள் தனித்திருக்கும் வேளையில் அனுமதியில்லாமல் குழந்தைகளை உள்ளே அனுமதித்த நந்திதேவன் மேல் திரும்பியது. "இத்தனை அசம்பாவிதங்களுக்கும் காரணமானவன் நீதான். எனவே, நீ பயங்கர சுறா மீனாகப் பிறந்து, பிறரது வசைகளுக்கு ஆளாவாய்" என சாபமிட்டார்.
அதன்படி அழகிய கடற்கரைத் தலமான மாரியூரில் ஒரு சிவபக்தராய் விளங்கிய மீனவர் குடும்பத்தில் பார்வதிதேவி மகளாக அவதரித்தார். வருடங்கள் பல உருண்டோடியது. மணமுடிக்கும் பருவமங்கையாக பார்வதி வளர்ந்திருந்தார். அதே சமயம், அன்றாடம் ஆழ்கடலில் மீனவர்களுக்கு தொடர்ந்து பல தொல்லைகளைக் கொடுத்து வந்தது ஒரு கொடிய சுறா.
ஒரு கட்டத்தில் இனியும் சுறாவின் அட்டூழியத்தை தாங்கிக்கொள்ள முடியாது என முடிவெடுத்த மீனவர் தலைவர், ஒரு அறிவிப்பையும் வெளியிட்டான். எவர் ஒருவர் ஆழ்கடலில் துன்புறுத்தும் சுறாவை அடக்கி பிடிக்கிறாரோ, அவருக்கு தன் மகளை மணமுடித்துத் தருவதாக வாக்களித்தார். இந்த தகவல் காட்டுத் தீ போல் எங்கும் பரவியது. அதே சமயம் இது தான் பார்வதிதேவியை ஆட்கொண்டு கரம்பிடிக்க வேண்டிய தருணம் என முடிவெடுத்தார் இறைவன்.
ஒரு மீனவர் வேடம் பூண்டு மாரியூருக்கு வந்த இறைவன், சுறாவை அடக்க வந்திருப்பதாக ஊர்க்காரர்களிடம் கூறினார். உடனே கடலுக்குள் அவரை அனுப்ப ஏற்பாடு செய்தனர். இதையடுத்து ஆழ்கடலில் ஆர்ப்பாட்டம் செய்துவந்த சுறாவை இறைவன் தனது வலையில் எளிதாக பிடித்தார். இதனால், கரையிலிருந்த மீனவர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர். ஏற்கனவே, மீனவ தலைவனின் வாக்குப்படி அவரது மகளான பார்வதியை கரம் பிடித்தார், இறைவன்.

மாரியூர் கடலில் நடத்தப்படும் வலைவீசும் படலம் நிகழ்ச்சி
இந்த சுவையான புராண நிகழ்வு நடந்ததை எடுத்துக்காட்டும் விதமாக ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமித் திருநாளில் கடலுக்குள் வலை வீசும் படலத்தை உண்மை சம்பவம் போல் நடத்திக் காட்டுகின்றனர். பதினொரு நாட்கள் இவ்விழா நடைபெறும். சுறாவை அடக்கி முடித்ததும் சுவாமி பூவேந்தியநாதர், அம்பாள் பவளநிற வல்லி திருமண நிகழ்வு கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் அலங்கார பந்தலில் வெகுவிமரிசையாக நடைபெறும். மணவிழாவையொட்டி நடைபெறும் பிரமாண்ட அன்னதானத்தில் திரளாக பக்தர்கள் கலந்துகொள்வர்.
பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் இடைக்குள நாடு என்ற உள்நாட்டுப் பிரிவின் கீழ் இப்பகுதி அடங்கி இருந்தது. கி.பி.13-ம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சுவாமி, அம்பாளுக்கு தனித்தனியாக கோவில்கள் கட்டப்பட்டன. சுவாமி சன்னிதியின் வலப்பக்கம் அம்பாள் கோவில் உள்ளது. செவிவழிச் செய்தியின்படி, வருணபகவான் தன் சாபம் நீங்க, இத்தல பரம்பொருளுக்கு லிங்க பிரதிஷ்டை செய்து வைத்தாராம்.
ஒரு சமயம் இந்திரனுக்கும், வருணனுக்கும் யார் பெரியவர் என்னும் பிரச்சனை எழுந்தது. இதில், வருணனது கை, கால்கள் கட்டப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்டான். பல நாட்கள் கடலில் தத்தளித்த வருண பகவான், இறுதியில் மாரியூர் கடற்கரையில் வந்து தங்கினார். அங்கு, மனதில் லிங்கம் அமைத்து வழிபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் அவரது பிரார்த்தனைக்கு இரங்கிய ஈசன், அவருக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தந்தார். வருண பகவான் கரையேறிய பகுதியாக இத்தல தீர்த்த கட்டம் விளங்குவதால் 'வருண தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் இதை நினைவுகூரும் விதமாக வருணபகவானுக்கு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
ஆடி, தை, புரட்டாசி அமாவாசைகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு பக்தர்கள் நூற்றுக்கணக்கில் கூடுவர். சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் பக்தர்கள் வசதிக்காக கோவில் எதிரே பெரிய சத்திரம் ஒன்று கட்டி வைக்கப்பட்டது. தல விருட்சம் அபூர்வமான முன்னை மரம் ஆகும். சுவாமி சன்னிதி உள்சுற்றில் உள்ள தீர்த்தக் கிணற்றில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் போட்டால் அது செழுவனுார் சிவாலய திருக்குளத்தில் மிதப்பதாக நம்பப்படுகிறது.

கோவில் தோற்றம்
அமாவாசைதோறும் தல விருட்சத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. திருமணத் தடை, கணவன்- மனைவி ஒற்றுமை, வேலைவாய்ப்பு, நீண்ட காலமாக இருக்கும் கோர்ட்டு வழக்குகள் ஆகிய பிரச்சனைகளுக்கு யாகம் வளர்த்து பரிகார பூஜை செய்யப்படுகிறது.
செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு கால வேளைகளில் பவளம் மகளிர் குழுவினரால் அம்பாள் துதிப்பாடல்கள் பாடப்படுகிறது. தினமும் நான்கு கால பூஜை நடத்தப்பட்டு வருகிறது. பிரதோஷ வழிபாடு, தேய்பிறை அஷ்டமி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை முதல் சோம வாரத்தில் 108 சங்காபிஷேக வழிபாடு, ஆடிப்பூரம் அம்பாளுக்கு வளைகாப்பு, விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் சுவாமி ஐயப்பன் சன்னிதியில் விரதமிருக்கும் பக்தர்களின் பஜனை வழிபாடு நடைபெறும். கோவில், காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து வாலிநோக்கம் செல்கிற நெடுஞ்சாலையில் 12 கி.மீ. தொலைவில் மாரியூர் கடற்கரைத் தலம் உள்ளது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல் வாங்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.
ரிஷபம்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதாரத்தில் இருந்த தடை அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்வர்.
மிதுனம்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.
கடகம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்தழைப்பு கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகிப் பரவசமடைவீர்கள்.
சிம்மம்
எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.
கன்னி
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதால் விரயம் ஏற்படும்.
துலாம்
பாக்கிகள் வசூலாகும் நாள். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். ஆதாயம் தரும் தகவல் மதிய நேரம் வரலாம்.
விருச்சிகம்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள்.
தனுசு
வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
மகரம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம். இடமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.
கும்பம்
பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம். தொழில் சீராக நடைபெறும்.
மீனம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் பலன் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளை நனவாக்குவீர்கள்.
- தேய்பிறை சஷ்டி விரதம். சுபமுகூர்த்த தினம்.
- திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-24 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சஷ்டி இரவு 7.58 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : ஆயில்யம் காலை 8.36 மணி வரை பிறகு மகம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை
இன்று தேய்பிறை சஷ்டி விரதம். சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு.
திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீமாணிக்கவாசகர் புறப்பாடு. அஹோபிலமடம் ஸ்ரீமத் 31-வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கரின் திருநட்சத்திர வைபவம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல். திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி பவனி. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-ஆர்வம்
மிதுனம்-ஜெயம்
கடகம்-தனம்
சிம்மம்-போட்டி
கன்னி-சலனம்
துலாம்- அமைதி
விருச்சிகம்-அசதி
தனுசு- ஆதரவு
மகரம்-செலவு
கும்பம்-வரவு
மீனம்-சிறப்பு
- திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை.
9-ந் தேதி (செவ்வாய்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* குரங்கணி முத்து மாலையம்மன் பவனி.
* மேல்நோக்கு நாள்.
10-ந் தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருநாகேசுவரம் நாகநாதசுவாமி பவனி.
* கீழ்நோக்கு நாள்.
11-ந் தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
12-ந் தேதி (வெள்ளி)
* வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை.
* கீழ்நோக்கு நாள்.
13-ந் தேதி (சனி)
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* திருநாகேசுவரம் நாக நாதசுவாமி, திருவாஞ்சியம் முருகப்பெருமான் தலங்களில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
14-ந்தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவாஞ்சியம் முருகப்பெருமான், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி தலங்களில் பவனி வரும் காட்சி.
* சமநோக்கு நாள்.
15-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* சர்வ ஏகாதசி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் 1008 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம்.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, குன்றக்குடி, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* சமநோக்கு நாள்.






