என் மலர்tooltip icon

    வழிபாடு

    • திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
    • கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை.

    9-ந் தேதி (செவ்வாய்)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * குரங்கணி முத்து மாலையம்மன் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    10-ந் தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருநாகேசுவரம் நாகநாதசுவாமி பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    11-ந் தேதி (வியாழன்)

    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    12-ந் தேதி (வெள்ளி)

    * வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    13-ந் தேதி (சனி)

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * திருநாகேசுவரம் நாக நாதசுவாமி, திருவாஞ்சியம் முருகப்பெருமான் தலங்களில் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    14-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருவாஞ்சியம் முருகப்பெருமான், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி தலங்களில் பவனி வரும் காட்சி.

    * சமநோக்கு நாள்.

    15-ந் தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * சர்வ ஏகாதசி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் 1008 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம்.

    * திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, குன்றக்குடி, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    • இந்த கோவிலுக்கு வரும்முன் காவிரியில் நீராடிவிட்டு, இங்குள்ள சுவாமியை வழிபடுவது வழக்கம்.
    • உள்பிரகாரத்தை சுற்றி வரும்போது ஆண்டாளை தரிசிக்கலாம்.

    கரூர் மாவட்டம் குளித்தலையில் பிரசித்தி பெற்ற நீலமேகப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் நீலமேகப்பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி தாயாருடன் காட்சி அளிக்கிறார். பராக்கிரம பாண்டியன் மகன் வீரபாண்டியன், மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்ம பல்லவன், முதலாம் பராந்தகச் சோழன் ஆகிய மன்னர்கள் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். இந்த ஆலயம் திருவரங்கம் கோவிலை போல ஏழு மதில் சுவர்களை கொண்டுள்ளது.

    கோவில் நுழைவுவாசலை கடந்து சென்றதும் கொடிமரம் காணப்படுகிறது. அதன் அருகே, கண்களுக்கு விருந்து படைப்பதாய் நந்தவனம் பூத்துக்குலுங்குகிறது. அதற்கு எதிரே வைகுண்ட ஏகாதசி மண்டபம் உள்ளது. அதன் உள்ளே நுழைந்ததும் நீலமேகப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார். அவர் அருகில் கமலநாயகி தாயார் அமர்ந்த கோலத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். உள்பிரகாரத்தை சுற்றி வரும்போது ஆண்டாளை தரிசிக்கலாம்.

    இந்த கோவிலுக்கு வரும்முன் காவிரியில் நீராடிவிட்டு, இங்குள்ள சுவாமியை வழிபடுவது வழக்கம். அதன்படி கோவிலுக்கு செல்லும்முன் காவிரியில் நீராடி விட்டு, இங்குள்ள நீலமேகப் பெருமாளை மனதார வேண்டி வழிபாடு செய்தால் மனதில் வேண்டிய காரியங்கள் நிறைவேறும், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கை. திருமணத் தடை உள்ளவர்களும் இங்குள்ள இறைவனை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இந்த ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறும். கோவில் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 43 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குளித்தலையில் நீலமேகப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    பிரியமானவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும் நாள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    ரிஷபம்

    கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். கூடப்பிறந்தவர்களால் நன்மை உண்டு. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நட்புவட்டம் விரிவடையும்.

    மிதுனம்

    தட்டுப்பாடுகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் முயற்சி வெற்றி பெற நண்பர்கள் உதவி செய்வர். நிலம், பூமி வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.

    கடகம்

    நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். நேற்று பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும்.

    சிம்மம்

    கவலைகள் அகலும் நாள். சுபச் செய்திகள் வந்து சேரும். தொழிலில் இருந்த சரிவு நிலைமாறும். பணத்தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

    கன்னி

    வரவு திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வருங்கால நலன்கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவு எடுப்பீர்கள். வாகனப் பழுதுச் செலவுகள் உண்டு.

    துலாம்

    வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். எந்தக் காரியத்தையும் எடுத்தோம். முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.

    விருச்சிகம்

    நிதிநிலை உயரும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். அலைபேசி வழிச் செய்தி ஆச்சரியப்பட வைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

    தனுசு

    தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லலாம். கூட இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

    மகரம்

    வாங்கிய கடனைச் செலுத்தி மகிழும் நாள். வங்கிகளில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பேச்சாற்றல் மிக்க ஒருவர் உங்களுக்குப் பின்னணியாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர்.

    கும்பம்

    நாடாளும் நபர்களின் நட்பால் நன்மை ஏற்படும் நாள். எதிரிகளின் தொல்லைகளைச் சமார்த்தியமாகச் சமாளிப்பீர்கள். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சனைகள் அகலும்.

    மீனம்

    தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். தடையாக இருந்த காரியம் ஒன்று துரிதமாக நடைபெறும். உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் உடல்நலம் சீராகும்.

    • சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-23 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பஞ்சமி இரவு 8.41 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம் : பூசம் காலை 8.55 மணி வரை பிறகு ஆயில்யம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி புறப்பாடு. திருவாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி. குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்த கோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலை அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-முயற்சி

    கடகம்-தாமதம்

    சிம்மம்-பயணம்

    கன்னி-மாற்றம்

    துலாம்- பொறுமை

    விருச்சிகம்-பரிசு

    தனுசு- பாசம்

    மகரம்-நன்மை

    கும்பம்-வெற்றி

    மீனம்-கடமை

    • முருகனின் 3-ம் படைவீடான பழனி திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
    • கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி பங்கேற்றனர்.

    முருகனின் 3-ம் படைவீடான பழனி திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. யாகசாலையில் வைத்த புனிதநீர் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

    அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி ஆகியோர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று இருந்தனர். திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'முருகனுக்கு அரோகரா' என்று கோஷம் எழுப்பி முருகப்பெருமானை வழிபட்டனர்.

    • திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1008 சங்காபிஷேகம்.
    • திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-22 (திங்கட்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சதுர்த்தி இரவு 9.51 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : புனர்பூசம் காலை 9.39 மணி வரை பிறகு பூசம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கடஹர சதுர்த்தி, சுபமுகூர்த்த தினம், சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்

    இன்று சங்கடஹர சதுர்த்தி. சுபமுகூர்த்த தினம். திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1008 சங்காபிஷேகம். பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப் பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர், தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் காலை ஹோமம், அபிஷேகம், வழிபாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

    கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பென்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-உண்மை

    மிதுனம்-பதவி

    கடகம்-கடமை

    சிம்மம்-ஓய்வு

    கன்னி-சுகம்

    துலாம்- துணிவு

    விருச்சிகம்-ஆர்வம்

    தனுசு- முயற்சி

    மகரம்-பணிவு

    கும்பம்-தனம்

    மீனம்-உவகை

    • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
    • வாண வேடிக்கைகள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களுடன் வாத்தியங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது.

    பஞ்சபூத தலங்களில் நிலத்திற்கு உரியதாக போற்றப்படுகிறது காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில். பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த கோவிலில் 29 கோடி ரூபாய் செலவில் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மகா கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலையில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத நேற்று எட்டாம் கால பூஜை விமரிசையாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து வந்த 40-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பக்க இசைக்கருவிகளுடன் திருமுறை பாராயணம் பாடினார்கள்.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

    அதிகாலை 5.45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் சன்னதி கோபுரங்களுக்கு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. 6.30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம், வாண வேடிக்கைகள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களுடன் வாத்தியங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது.

    நண்பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரம், ரிஷிகோபுரம் உள்பட கோபுரங்கள் அனைத்தும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கோவிலில் மூலவர் நுழைவுவாயில் முன்பாக வண்ண வண்ண பூக்களால் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரிஷி கோபுரத்தின் நுழைவுவாயில் பகுதியில் 'காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர்' என வண்ண மலர்களால் எழுத்துகள் கோர்க்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    எதிர்பார்த்த காரியம் எளிதில் நடைபெறும் நாள். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

    ரிஷபம்

    உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். வழக்கமாகச் செய்யும் பணிகளில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முடிவில் குழப்பங்கள் தோன்றும்.

    மிதுனம்

    தட்டுப்பாடு அகலும் நாள். பாகப்பிரிவினை பற்றிச் சிந்திப்பீர்கள். அலைபேசி வாயிலாக அனுகூலச் செய்தி வந்து சேரும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.

    கடகம்

    தொட்டது துலங்கும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சி கைகூடும்.

    சிம்மம்

    நண்பர்களின் ஆதரவால் நலம் கிடைக்கும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு.

    கன்னி

    இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். உடன் பிறப்புகள் உங்கள் கருத்துக்கு ஒத்து வருவர். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள்.

    துலாம்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் சலுகை உண்டு.

    விருச்சிகம்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள் வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. தீட்டிய திட்டம் வெற்றி பெறும்.

    தனுசு

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உறவினர் பகை உருவாகும். குடும்பச்சுமை கூடும். எப்படியும் முடியும் என்று நினைத்த காரியம் முடிவடையாமல் போகலாம்.

    மகரம்

    தன்னம்பிக்கையோடு பணிபுரியும் நாள். குடும்பத்தினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். பிரபலமானவர்களின் சந்திப்புக் கிட்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.

    கும்பம்

    வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். கரைந்த சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். தொழில் ரீதியாக அனுபவஸ்தர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள்.

    மீனம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். பயணங்களின்போது பொருட்களில் கவனம் தேவை. உடல் ரீதியாக உபாதைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லையுண்டு.

    • மிதுனம் நினைத்ததை நடத்தி முடிக்கும் வாரம்.
    • சிம்மம் நல்ல மாற்றங்களும், வாய்ப்புகளும் தேடி வரும் வாரம்.

    மேஷம்

    திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் 9-ம் மிடமான பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவருக்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது. வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த பிரச்சினைகள் விலகும். குடும்ப உறவுகளால் ஏற்பட்ட தொல்லைகள் வீண் பழிகள் அகலும். சிலருக்கு புதியதாக ஆயுள் காப்பீடு செய்து கொள்வதில் ஆர்வம் கூடும். சட்ட சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் மேல் வீண் பழிகள் அகலும். அரசாங்க ஊழியர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி கிடைக்கும். ராசி அதிபதி செவ்வாய்க்கு பாதகாதிபதி சனி பார்வை இருப்பதால் பூர்வீகச் சொத்து தொடர்பான விஷயங்களை ஒத்திப் போடுவது நல்லது. மூத்த சகோதரன் சித்தப்பா இவர்களால் சில அசவுகரியங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். காதல் திருமணம் முயற்சி வெற்றி தரும். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுவதால் வல்வினைகள் அகலும்.

    ரிஷபம்

    தன்னம்பிக்கை நிறைந்த வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ராசிக்கு 7-ம் இடத்தில் சூரியன் மற்றும் புதனுடன் இணைந்து ராசியை பார்க்கிறார். உங்கள் எண்ணங்கள், யோசனைகள் திட்டங்களை செயல்படுத்தக்கூடிய சாதகமான சூழ்நிலை உருவாகும். இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். கடன் தொல்லை இழப்புகள், விரயங்கள் குறையும். தொழிலில் மூலம் மதிப்பு, மரியாதை உயரும். தடைபட்ட வாடகை வருமானம் வரத்துவங்கும். புதிய வீடு, மனை வாங்கும் முயற்சி கைகூடும். சொத்துக்களுக்கு நல்ல வாடகை தாரர்கள் கிடைப்பார்கள். வெளிநாட்டு வேலை முயற்சி நிறைவேறும். பெண்களுக்கு கணவரின் பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும். தாயின் அன்பும் ஆசிர்வாதமும் தாய் வழிச் சொத்தும் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிக்காக வெளியூர், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள நேரும். தந்தை வழிச் சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினை இழுபறியாகும். தொழில் சார்ந்த விசயங்களில் அரசின் சட்ட திட்டங்களை கடைபிடிப்பது நல்லது. குல அல்லது இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட அனைத்தும் சுபமாகவே இருக்கும்.

    மிதுனம்

    நினைத்ததை நடத்தி முடிக்கும் வாரம். ராசியில் உள்ள வக்ர குருவிற்கு செவ்வாயின் நேரடி பார்வை உள்ளது. தன்னம்பிக்கை அதிகமாகும். தொழிலில் நிரந்தர தன்மை உண்டாகும். திறமையும் செயல் வேகமும் அதிகரிக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட முயல்வீர்கள். பொருளா தாரத்தில் சீரான, சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். புதிய கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும். வெளிநாடு செல்வதற்கான முயற்சி வெற்றியைத் தரும். சிலர் வேலை மாறுதலாகி வேறு இடம் செல்ல வேண்டி வரும். வீடு கட்டும் முயற்சி மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றத்தால் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூர்வீக சொத்து தொடர்பாக சகோதர, சகோதரி வகையில் நிலவிய மன உளைச்சல் அகலும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். வயோதிகர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு நீங்கும். திருமண முயற்சிகள் நிறைவேறும். விரும்பிய வரன் தேடி வரும். அரசியல் பதவியில் இருந்த முட்டுக் கட்டை விலகும். குல தெய்வ அருளுடன் சகல பாக்கியங்கள் நிறைந்த வாரமாக இருக்கும்.

    கடகம்

    விரயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசியில் வக்கிரம் பெற்று நிற்கும் உச்ச குரு பகவான் வக்ரகதியில் 12-ம் மிடமான விரய ஸ்தானத்திற்கு செல்கிறார். சற்று நிதானமாக செயல்படுவதால் பெரிய நன்மைகளை அடைய முடியும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்க்கவும். தேவையற்ற வெளியூர் பயணங்களையும் வெளி உணவுகளையும் தவிர்த்தல் நலம். பொருளாதாரத்தைப் பொறுத்த வரை இனி இல்லை என்ற நிலை இல்லை. பெற்றோருடன் ஏற்பட்ட மனத் தாங்கல் மாறும். ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் எதிரிகளை பிரமிக்க வைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய்க்கு சனி மற்றும் குரு பார்வை இருப்பதால் மெக்கானிக். இயந்திரப் பணியாளர்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பெரிய தொழில் முதலீடுகள், பங்குச் சந்தை முதலீடுகளைத் தவிர்த்தல் நலம். வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களிடம் நல்லாசி பெற அஷ்டம ராகுவின் தாக்கம் குறைந்து திருமண தடை அகலும்.

    சிம்மம்

    நல்ல மாற்றங்களும், வாய்ப்புகளும் தேடி வரும் வாரம். முக்கூட்டு கிரகங்களான சூரியன், புதன், சுக்கிரன் ராசிக்கு 4-ம்மிடமான சுகஸ்தானத்தில் சேர்ந்துள்ளார்கள். இதுவரை சுணங்கி கிடந்த யோசனைகள் விறுவிறுப்படையும். கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் நல்ல மாற்றங்கள் வரும். மண்மனை, பூமி, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உள்ளது. சொத்துக்களால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு அரசின் சலுகையால் இருப்பிடம் கிடைக்கும். வியாபாரத்தில் தனித்தன்மையுடன் மிளிர்வீர்கள். தொழிலில் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நேரம். சுய ஜாதகரீதியான தசா புத்தி சாதகமாக இருந்தால் நண்பர்கள் அல்லது வாழ்க்கைத் துணையுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் முயற்சியில் ஈடுபடலாம். உடன் வேலை பார்ப்பவர்களால் ஏற்பட்ட கவுரவக் குறைவு அகலும். குடும்ப பிரச்சினைகளை பேசித் தீர்க்க உகந்த காலமாகும். சிலருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டப் பொருள் கிடைக்கலாம். அல்லது பண வரவு அதிகரிக்கும். சுவாமி ஐயப்பனை வழிபட சங்கடங்கள் தீரும்.

    கன்னி

    தர்மம் தலைகாக்கும் நேரம். ராசி அதிபதி புதன் தனாதிபதி சுக்ரனுடன் சேருவது தர்மகர் மாதிபதி யோகம். மாற்றமும் ஏற்றமும் தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடக்கும். அதிர்ஷ்டம், போட்டி, பந்தயம் போன்றவை உங்களின் வருமானத்தை பெருக்கும். தொழில் போட்டிகளை தாண்டி தனி முத்திரை பதிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த அரசாங்கத் தடைகள் நீங்கும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள். குடும்ப உறவுகளிடம் இணக்கம் உண்டாகும். ஆனால் விரயாதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுவதால் வரவிற்கு மீறிய செலவுகளால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். வாடகை வீட்டுப் பிரச்சினையில் இருந்து விடுபட்டு சொந்தமாக அபார்ட்மென்ட் வாங்கி குடியேறுவீர்கள். உங்கள் மீது வெறுப்பை உமிழ்ந்த உயரதிகாரியின் மனநிலை மாறி ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பங்குதாரர், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்கும். பெண்கள் கணவரின் தொழில், உத்தியோக உயர்வால் நிம்மதி அடைவார்கள். தினமும் அபிராமி அந்தாதி படிப்பதால் கண்டகச் சனியால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    துலாம்

    வளர்ச்சிகள் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் சூரியன் மற்றும் புதனுடன் சேர்ந்துள்ளார். சனி பகவான் வக்ர நிவர்த்தியாகிறார். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து இருந்த நல்ல காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தைரியம், தன்நம்பிக்கை அதிகரிக்கும். மிகப்பெரிய வெற்றி கிடைக்கப் போகிறது. உங்களுக்கு இருந்த சிக்கல்கள் நீங்கி நல்ல நேரம் தொடங்கப்போகிறது. திருமணத்தடை அகன்று நல்ல வரன் பற்றிய தகவல் கிடைக்கும். அயல் நாட்டிலிருந்து தாயகம் திரும்ப முடியாமல் இருந்தவர்கள் வீடு திரும்புவார்கள். குடும்பத்தில் காரணமின்றி நடந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தன வரவு மட்டற்ற மகிழ்ச்சி தரும். கடன் தொல்லை குறையும். செவ்வாய்க்கும் சனிக்கும் சம்பந்தம் இருப்பதால் சிலருக்கு தொழில் கூட்டு பிரியும். அல்லது நம்பியவர்களால் ஏமாற்றம், மன வருத்தம் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் கவனம் தேவை. வரலாற்று புகழ்மிக்க ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். தினமும் லலிதா சகஸ்ர நாமம் படிப்பதால் எண்ணங்கள் ஈடேரும்.

    விருச்சிகம்

    நம்பிக்கைகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தனம், வாக்கு குடும்பஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்ப ஸ்தானத்திற்கு குரு மற்றும் சனி பார்வை கிடைப்பதால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளுடன் நிலவிய கருத்து வேறுபாடு, கடும் விரோத நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். உங்களின் செயல்பாடுகள் வெற்றியில் முடியும். நல்ல காரியங்கள் நடக்கக்கூடிய அறிகுறிகள் தென்படும். பணத்தட்டுப்பாடு படிப்படியாக குறையும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி அல்லது வராக்கடன்கள் வசூலாகும். பிள்ளைகளால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். தந்தையால் ஏற்பட்ட மன சஞ்சலம் விலகும். பூர்வீகச் சொத்துக்கள் முறையாக பிரிக்கப்படும். புதிய தொழில் முதலீடுகளை மனைவி பெயரில் முதலீடு செய்வது நல்லது. வெளிநாட்டுப் பயணங்கள் வெற்றி பெறும். 7.12.2025 அன்று இரவு 10.38 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் இனம்புரியாத கவலை குழப்பம் உண்டாகலாம். வேலையாட்களால், உடன் பணிபுரி பவர்களால் மன சங்கடம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நவகிரக செவ்வாயை வழிபடலாம்.

    தனுசு

    திருப்பு முனையான சம்பவங்கள் நடக்கும் வாரம். ராசியில் உள்ள பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய்க்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது. தொழில் வளர்ச்சியில் நிலவிய இடையூறுகள் அகலும். குடும்பத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் வருமானம் வரத்துவங்கும். தொழில் உத்தியோக ரீதியான சில நேர்மறை சம்பவம் ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை. சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது சிறப்பு. சிலருக்கு வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். காதல் திருமணம் கைகூடும். இந்த வாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபடுவதால் வெற்றி நிச்சயம் உண்டாகும். தடைபட்ட திருமணம் நடந்து முடியும். பொறுப்பு மிக்க பதவிகள் தேடி வரும். ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். 7.12.2025 அன்று இரவு 10.38 முதல் 10.12.2025 அன்று அதிகாலை 2.23 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் மாமனார் அல்லது மைத்துனர்கள் வழியில் மனக்கசப்புகள் ஏற்படலாம். உறவுகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும். சிவ வழிபாடு செய்வதன் மூலம் சிறப்பான பலனை அடைய முடியும்.

    மகரம்

    மாற்றமும் ஏற்றமும் தேடி வரும் வாரம். வக்ர நிவர்த்தி பெற்ற ராசி அதிபதி சனி பகவான் சகாய ஸ்தானத்தில் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எண்ணங்கள் ஈடேறும். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலர் புதிய தொழில் கிளைகள் திறக்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். படித்து முடித்தவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். விரய ஸ்தானத்தை சனி மற்றும் குரு பார்ப்பதால் சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தருவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி பணவரவும் சேமிப்பும் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.10.12.2025 அன்று அதிகாலை 2.23 முதல் 12.12.2025 அன்று பகல் 10.20 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகளில் தடை ஏற்படும். நெருங்கியவர்களிடையே மன வருத்தம் ஏற்படலாம். பண விவகாரங்கள் கவலை தரும். பொறுமையோடு இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட மிகுந்த நன்மைகள் உண்டாகும்.

    கும்பம்

    நன்மையும், மேன்மையும் உண்டாகும். வாரம். ராசியில் உள்ள ராகுவுக்கு குருவின் வக்கிர பார்வை உள்ளது. தொழில் முன்னேற்றம், உத்தியோக உயர்வு உண்டாகும். தொழில், உத்தியோகத்திற்காக அலைச்சல் மிகுந்த வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செய்ய நேரும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தைத் தேடுபவர்களுக்கு திறமை, முயற்சி, பொறுமை, உழைப்பு ஆகியவற்றால் வெற்றி பெரும் சூட்சமத்தை சனிபகவான் கற்றுக் கொடுப்பார். ஜென்ம ராகுவால் மனதில் அவ்வப்போது தேவையற்ற சில சந்தேகங்களும் கற்பனை பயமும் உண்டாகலாம். சில தம்பதிகள் குறுகிய காலம் தொழில், உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம். சிலரின் காதல் தோல்வியில் முடியும். பல் சீரமைப்பு செய்ய ஏற்ற காலம். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலர் விலை உயர்ந்த பொருளை ஆன்லைனில் வாங்கி ஏமாறுவார்கள். 12.12.2025 அன்று பகல் 10.20-க்கு சந்திராஷ்டம் ஆரம்பிப்பதால் கொடுக்கல், வாங்கலில் ஏமாற்றங்களைச் சந்திக்கலாம். மன உளைச்சலை தவிர்க்க அமைதியை கடைபிடிக்கவும். நவகிரகங்களை வழிபடவும்.

    மீனம்

    சாதகமான வாரம். 2, 9-ம் அதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் ஜென்மச் சனியால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். எதிரி, போட்டி பொறாமைகளை சமாளிக்கும் திறன் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தை முறையாக திட்டமிட்டு முழுமையாக செயல்படுத்தி வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். உத்தியோகத்தில் நிலவிய இடர்பாடுகள் குறையும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உருவாகும். தொழிலை விரிவுபடுத்த தேவையான கடன் உதவிகள் கிடைக்கும். வீடு மாற்றும் எண்ணம் நிறைவேறும். குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். உயர் கல்வி தொடர்பான முயற்சிகள் வெற்றி தரும். விவசாயிகளுக்கு மழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு பணியாளர்களால் அசவுகரியம் உண்டாகும். பெண்களுக்கு பிறந்த வீட்டு சொத்து உரிய முறையில் வந்து சேரும்.ஸ்ரீ ராமர் வழிபாட்டால் சுப செய்திகள் தேடி வரும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். சேமிக்க முற்படுவீர்கள். தொழிலில் லாபம்.

    ரிஷபம்

    சகோதரர்களின் ஒத்துழைப்பு உண்டு. கடன்பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் தனித்திறமை வெளிப்படும்.

    மிதுனம்

    பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் விரயங்கள் ஏற்படும். நண்பர்கள் வாயிலாக நல்ல தகவல் கிடைக்கும்.

    கடகம்

    வாட்டங்கள் அகன்று வருமானம் கூடும் நாள். உடல் நலனில் கவனம் தேவை. வீடு மாற்றம் உறுதியாகலாம். உத்தியோகத்தில் பணியாளர்களின் ஆதரவு உண்டு.

    சிம்மம்

    வரவை விடச் செலவு கூடும். குடும்பத்தினர்கள் உங்கள் செயலில் குறை கண்டுபிடிப்பர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள்.

    கன்னி

    சந்தோஷமான நாள். கல்யாண முயற்சி கைகூடும். பழைய வாகனத்தைக்கொடுத்து விட்டுப் புதிய வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோக உயர்வு உண்டு.

    துலாம்

    சொந்த பந்தங்களால் வந்த துயர் மறையும் நாள். குடும்பச்சுமை கூடும். பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.

    விருச்சிகம்

    கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை. உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லையுண்டு.

    தனுசு

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்தமுயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

    மகரம்

    தனவரவு தாராளமாக வந்து சேரும். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.

    கும்பம்

    புதிய வாகனம் வாங்கப் போட்ட திட்டம் கைகூடும். அலைபேசி வழியில் உத்தியோகம் பற்றிய நல்ல செய்தி வந்து சேரும். தொழிலில் லாபம் உண்டு.

    மீனம்

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். வீட்டை விரிவு செய்து கட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் அகலும்.

    • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
    • சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-21 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திருதியை இரவு 11.23 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : திருவாதிரை காலை 10.41 மணி வரை பிறகு புனர்பூசம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    காஞ்சிபுரம், இருக்கன்குடி, சமயபுரம், தஞ்சை புன்னைநல்லூர் அம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி பவனி வரும் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.

    ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனகமாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் முருகப் பெருமான் திருவீதியுலா.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-வெற்றி

    கடகம்-பயணம்

    சிம்மம்-உண்மை

    கன்னி-திடம்

    துலாம்- உறுதி

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- லாபம்

    மகரம்-நன்மை

    கும்பம்-நிறைவு

    மீனம்-தெளிவு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் செய்யும் நாள். செலவுகள் கூடும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    ரிஷபம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுமாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. பண நெருக்கடி உண்டு.

    மிதுனம்

    யோகமான நாள். சொத்துப் பிரச்சனை சுமூகமாக முடியும். அரசுவழிக் காரியங்களில் அனுகூலம் உண்டு. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு கிட்டும்.

    கடகம்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். அரைகுறையாக நின்ற வீட்டுப் பராமரிப்புப் பணியைத் தொடருவீர்கள்.

    சிம்மம்

    சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத்தகவல் வந்து சேரும் நாள். மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    கன்னி

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத் தொழிலைத் தனித்தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் ஆதரவு கிடைக்கும்.

    துலாம்

    புகழ்மிக்கவர்களின் பழக்கம் ஏற்படும். வருமோ, வராதோ என நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கலாம் உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    விருச்சிகம்

    முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர் பகை உருவாகலாம். உத்தியோகத்தில் பணியாளர்களால் பிரச்சனை ஏற்படும். வரவை விடச் செலவு கூடும்.

    தனுசு

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு ஏற்ற பணிகளைச் செய்து முடிப்பீகள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    மகரம்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களைத் தேடி வந்து உதவி செய்வார்.

    கும்பம்

    இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரும்.

    மீனம்

    நினைத்தது நிறைவேறும் நாள். பாக்கிகள் வசூலாகிப் பணவரவைப் பெருக்கும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர்.

    ×