என் மலர்
வழிபாடு
- சித்த மயம் சிவமயம் என்பார்கள்.
- சித்தர்களில் முதன்மையானவர் அகத்தியர்.
"சித்த மயம் சிவமயம்" என்பார்கள். சிவனே முதன்மை சித்தராக கருதப்படுபவர். உலகில் சித்தர்கள் பல பேர் உள்ளனர். என்றாலும், நமது தமிழ் மரபின்படி பதினெண் சித்தர்கள் எனப்படும் 18 சித்தர்கள் தலையாய சித்தர்களாக கருதப்படுகின்றனர். அவர்களின் விபரம் வருமாறு:-

அகத்தியர்
18 சித்தர்களில் முதன்மை யானவராக கருதப்படுகிறார் அகத்தியர். இவரது குரு சிவபெருமான். சித்தர்களுக்கெல்லாம் தலைவர் என அறியப்படுகிறார். தமிழ் சித்த மருத்துவ முறைகளை இந்த உலகிற்கு அளித்த மகான். கடுமையான தவத்தின் வாயிலாக பல சித்திகளை பெற்றவர்.
தமிழ் இலக்கிய விதிமுறையான அகத்தியம் எனும் நூலை எழுதியவர். திருவனந்தபுரம் அனந்தசயன திருத்தலத்தில் சமாதியடைந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இவரது ஆயுட்காலம் 4 யுகம், 48 நாட்கள் ஆகும்.

போகர்
போகர் என்றாலே பழனிமலை முருகப்பெருமானது உருவ சிலையே நமது கண்முன் முதலில் தோன்றும். இவர் நவபாஷாணங்களை கொண்டு முருகப்பெருமானின் உருவ சிலையை செய்தவர். இவரது குரு அகத்தியர். ைவத்தியம் மற்றும் வேதியியலில் சிறந்து விளங்கியவர்.
போகர் 7 ஆயிரம்,போகர் 12 ஆயிரம், சப்த காண்டம் 7 ஆயிரம் போன்ற நூல்களை இயற்றி இவ்வுலகுக்கு அளித்தவர். முடிவில் பழனி மலையில் சமாதியடைந்தார். 300 ஆண்டுகள், 18 நாட்கள் இவரது ஆயுட்காலமாக சொல்லப்படுகிறது.

திருமூலர்
63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்கிறார் திருமூலர். இவரது குரு நந்தி தேவர். மூலன் என்ற இடையனின் உடலினுள் புகுந்து ஆண்டுக்கு ஒரு பாடல் என்ற வீதத்தில் 3 ஆயிரம் பாடல்களை பாடி 'திருமந்திரம்' எனும் நூலை இயற்றினார். இவர் சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலில் சமாதி கொண்டார். இவரது ஆயுட்காலம் 3 ஆயிரம் ஆண்டுகள், 13 நாட்கள் ஆகும்.

வான்மீகர்
வான்மீகர் நாரத முனிவரின் சீடராவார். ராமாயண இதிகாசம் எனும் பெரும் நூலை வழங்கியவர். திருவையாறு, எட்டுக்குடி எனும் ஊரில் சமாதியடைந்தார். இவர் 700 ஆண்டுகள் 32 நாட்கள் வாழ்ந்துள்ளார்.

தன்வந்திரி
காக்கும் கடவுள் திருமாலின் அம்சமாக போற்றப்படுகிறார் தன்வந்திரி. ஆயுர்வேத மருத்துவ முறையை இந்த உலகுக்கு அளித்தவர். வைத்தீஸ்வரன் கோவிலில் சமாதி அடைந்துள்ளார். இவர் வாழ்ந்த காலம் 800 ஆண்டுகள், 32 நாட்கள் ஆகும்.
இடைக்காடர்
இடைக்காடு எனும் ஊரில் வாழ்ந்தவர். இவரது குரு போகர், கருவூரார். இவரது பாடல்கள் உலக இயல்புகளை, நிலையாமையை உணர்ந்து இறைவனை எப்படி அடைவது என்பதை சொல்கிறது. தாண்டவக்கோனே, கோனாரே, பசுவே, குயிலே என பாடிய பாடல்கள், நாட்டுப்பாடல் மரபினை காட்டுகின்றன. இவர் திருவண்ணாமலையில் சித்தியடைந்தார். இவரது ஆயுட் காலம் 600 ஆண்டுகள், 18 நாட்கள் ஆகும்.

கமலமுனி
இவர் போகரிடம் சீடராய் இருந்து யோகம் பயின்று சித்தர்களில் ஒருவரானவர். இவரது குருக்கள் போகர், கருவூரார். 'கமலமுனி முந்நூறு என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளதாக தெரிகின்றது. இவரது ஆயுட் காலம் 4 ஆயிரம் ஆண்டுகள், 48 நாட்கள் ஆகும். இவர் ஆரூரில் சமாதியடைந்துள்ளார்.

கருவூரார்
தஞ்சை பெரிய கோவில் உருவாக பெரிதும் காரணமாக இருந்தவர் கருவூரார். இவர் போகரின் சீடர். கருவூரார் பூசா விதி எனும் நூலை எழுதியுள்ளார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள், 42 நாட்கள் ஆகும். இவர் கரூரில் சமாதியடைந்துள்ளார்.

கொங்கணர்
இவர் போகரின் சீடர். பல மகான்களை சந்தித்து ஞானம் பெற்றவர். கொங்கணர் கடைக்காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்டம் என பல நூல்களை இந்த உலகுக்கு வழங்கி உள்ளார். இவரது ஆயுட்காலம் 800 ஆண்டுகள், 16 நாட்கள் ஆகும். இவர் திருப்பதியில் சமாதியடைந்துள்ளார்.

கோரக்கர்
தத்தாத்ரேயர், மச்சமுனி, அல்லமா பிரபு ஆகியோர் கோரக்கரின் குருக்கள் ஆவர். மச்சமுனி அருளால் கோசாலையில் இருந்து அவதரித்தவர். அல்லமா தேவரிடம் போட்டியிட்டு தன்னைவிட மிஞ்சியவர் என்பதை உணர்ந்து அல்லாமா தேவரிடம் அருள் உபதேசம் பெற்றவர். போயூர் என்ற இடத்தில் சமாதி அடைந்தார். இவரது ஆயுட்காலம் 880 ஆண்டுகள், 32 நாட்கள் ஆகும்.

குதம்பை சித்தர்
இவர் அழுகுணி சித்தரின் சீடர். இவரது பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என அழைத்து பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்களில் தமக்கு தாமே உபதேசம் போல் அமைந்த பாடல் சிறப்பு பெற்றது. இவர் மாயவரத்தில் சமாதி அடைந்துள்ளார். இவரது ஆயுட்காலம் 1800 ஆண்டுகள், 16 நாட்கள் ஆகும்.

மச்சமுனி
மச்சமுனியின் குருக்கள் அகத்தியர், பிண்ணாக்கீசர், பசுண்டர் ஆவர். பிண்ணாக்கீசரிடம் சீடராக இருந்து உபதேசம் பெற்றவர். ஹத யோகம், தந்திர யோகம் குறித்த நூல்களை எழுதியுள்ளார். இவர் திருப்பரங்குன்றத்தில் சமாதியடைந்துள்ளார். இவரது ஆயுட்காலம் 300 ஆண்டுகள், 62 நாட்கள் ஆகும்.

பாம்பாட்டி சித்தர்
இவரது குரு சட்டைமுனி. 'ஆடு பாம்பே' என பாம்பை முன் நிறுத்தி பாடல்கள் பாடியதால் இவர் பாம்பாட்டி சித்தர் என அழைக்கப்படுகிறார். பாம்பாட்டி சித்தர் பாடல்கள், சித்தராரூடம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். இவர் மருதமலையில் சமாதியடைந்துள்ளார். இவரது ஆயுட் காலம் 123 ஆண்டுகள் 32 நாட்கள் ஆகும்.

பதஞ்சலி
இவர் ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்தவர். குரு நந்தி. வியாக்ர பாதருடன் தில்லையில் இருந்து சிவதாண்டவம் கண்டார். பதஞ்சலி யோக சூத்திரம் எனும் அற்புதமான நூலை இயற்றியுள்ளார். இவர் ராமேஸ்வரத்தில் சமாதி யடைந்துள்ளார். இவரது ஆயுட்காலம் 5 யுகம் 7 நாட்கள் ஆகும்.
- மகாவிஷ்ணுவின் தீவிர பக்தராக இருந்தவர் ராமானுஜர்.
- மிகச் சிறந்த சமூக சீர்த்திருத்தவாதி.
மகாவிஷ்ணுவின் தீவிர பக்தராக இருந்தவர், ராமானுஜர். இவர் சுமார் 120 ஆண்டு காலம் வாழ்ந்து, வைணவ சமயத்திற்காக தொண்டாற்றியவர். ராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே, அவருக்கு கோவில் கட்டி வழிபடும் அளவுக்கு, அவர் மீது பற்று கொண்டவர்கள் இருந்தனா். மிகச் சிறந்த சமூக சீர்த்திருத்தவாதியாக அந்த காலத்திலேயே திகழ்ந்தவர் இவர்.

ராமானுஜரின் மூன்று திருமேனிகள் சிறப்புக்குரியவை. அவை:-
தமர் உகந்த திருமேனி, தான் உகந்த திருமேனி, தானான திருமேனி. இந்த மூன்று திருமேனிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

தமர் உகந்த திருமேனி
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ளது, மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம். இங்கு சுமார் 12 ஆண்டுகள் தங்கியிருந்து சேவை புரிந்து வந்தார், ராமானுஜர். தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று, ராமானுஜர் புரட்சி செய்ததும் இந்த திருத்தலத்தில்தான்.
தன்னுடைய 80-வது வயதில், தன்னை ஏற்றுக்கொண்ட அடியவர்களுக்காக, தானே ஒரு சிற்பியை கொண்டு ஒரு சிலையை வடிக்கச் சொன்னார். ராமானுஜர் கைகூப்பி அனைவரிடமும் விடைபெறும் கோலத்தில் அந்தச் சிலை வடிக்கப்பட்டிருந்தது. அந்தச் சிலையில் தன்னுடைய தெய்வீக சக்தியை செலுத்தி, அதைத் தன்னுடைய சீடர்களிடம் ஒப்படைத்தார்.
அதன்பிறகே திருநாராயணபுரத்தில் இருந்து புறப்பட்டு திருவரங்கம் சென்றார். இந்த சிலையை 'தமர் உகந்த திருமேனி' என்பர். இன்றும் மேல்கோட்டையில் இந்த திருவுருவச் சிலையை வழிபாடு செய்யலாம்.

தான் உகந்த திருமேனி
இந்த திருமேனி நிறுவப்பட்டிருக்கும் திருத்தலம், காஞ்சிபுரம் அருகே உள்ள, ஸ்ரீபெரும்புதூர் ஆகும். ராமானுஜப் பெருமாள், தன்னுடைய இறுதி காலங்களில், அதாவது 120-வது வயதில் திருவரங்கத்தில் தங்கியிருந்தார்.
அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்த ராமானுஜரின் அடியவர்கள், அவரது திருவுருவச் சிலையை, ஸ்ரீபெரும்புதூரில் நிறுவ ஆசைப்பட்டனர். இதற்காக ராமானுஜரிடம் ஒப்புதல் கேட்கப்பட்டது. பின்னர் ராமானுஜரின் ஆலோசனைப்படி, அவர் உருவம் தாங்கிய செப்புச் சிலை ஒன்று செதுக்கப்பட்டது.
அந்த சிலையை தன் மார்போடு அரவணைத்து, அந்த சிலைக்குள் தன்னுடைய தெய்வீக ஆற்றலை செலுத்தினார், ராமானுஜர். இந்த சிலையே 'தான் உகந்த திருமேனி' என்று அழைக்கப்படுகிறது. ராமானுஜர், தாமாகவே உகந்து அளித்த திருமேனி இதுவாகும்.
அந்த சிலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் நிறுவப்பட்டு, ராமானுஜர் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். இந்த சிலையில் உள்ள விலா எலும்பு, காது மடல் போன்றவை, ராமானுஜரின் 120 வயது தோற்றத்தை தெளிவாக எடுத்துக் காட்டும் விதத்தில் இருக்கிறது.

தானான திருமேனி
ராமானுஜர் தன்னுடைய 120-வது வயதில் பரமபத நிலையை எய்தினார். கி.பி. 1137-ம் ஆண்டு, தான் பிறந்த அதே பிங்கள வருடத்தில் மாசி மாதம் வளர்பிறை தசமியில், ஒரு சனிக்கிழமை நண்பகல் வேளையில் பத்மாசன நிலையில் அமர்ந்தபடி திருவரங்கத்தில் சமாதியானார்.
அதற்கு முன்பு வரை வசந்த மண்டபம் என்று அழைக்கப்பட்ட அந்த இடம், ராமானுஜரின் திருமேனியை, திருப்பள்ளிப்படுத்தியபிறகு, உடையவர் சன்னிதி என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள ராமானுஜரின் பூத உடலை, இன்றும் நாம் தரிசிக்க முடியும். இவரின் திருமேனியில் தலைமுடி, கை நகம் போன்றவற்றைக் கூட எளிதாக காண இயலும்.
திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள இந்த திருமேனியைத் தான் 'தானான திருமேனி' என்று அழைக்கிறோம். ஒவ்வொரு வருடமும் சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில், பச்சை கற்பூரம் மற்றும் சில மூலிகைகள் அரைத்து ராமானுஜரின் திருமேனியில் சாற்றுவார்கள்.
ஆயிரம் ஆண்டுகளாக ஸ்ரீராமானுஜர் திருமேனி பாதுகாக்கப்படுவது, இந்த முறையில்தான் என்கின்றனர் ஆன்மிகப் பெரியவர்கள். பெருமாளுக்கு அடியார்கள் அனைவரும் ஒன்றுதான் என்ற புரட்சிக் கருத்தினைக் கூறிய ஸ்ரீராமானுஜரை வணங்கினால், அந்த இறைவனின் அருளையும் சேர்த்தே பெறலாம்.
- அம்பாளை வழிபடும் சமயத்தை ‘சாக்தம்’ என்று அழைப்பார்கள்.
- மதுரையின் முக்கிய அடையாளமே, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் தான்.
சிவபெருமானை வழிபடுவது 'சைவம்', மகாவிஷ்ணுவை வழிபடுவது 'வைணவம்' என்று இருப்பதுபோல, அம்பாளை வழிபடும் சமயத்தை 'சாக்தம்' என்று அழைப்பார்கள். இந்த உலகத்தின் மூலமுதற்கடவுளாக விளங்குவது, ஆதிபராசக்தியே என்ற கொள்கை அந்த வழிபாட்டிற்குரியது.
அம்பாளின் மேன்மை அடங்கிய பல திருத்தலங்கள், தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

மதுரை மீனாட்சி
மதுரையின் முக்கிய அடையாளமே, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்தான். வைகை ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் 14 கோபுரங்களும், 5 நுழைவு வாசல்களும் கொண்டு பிரமாண்டமாக அமைந்த திருக்கோவில் இது.
சிவபெருமானின் திருவிளையாடல்கள் அனைத்தும் நடைபெற்ற இடம் மதுரை என்றாலும், இங்கு மீனாட்சியோடு இணைந்து சுந்தரேஸ்வரரும் கோவில் கொண்டுள்ளார் என்றாலும், இந்த ஆலயத்தின் அம்பாளுக்கே முதல் மரியாதை. தங்கத் தேர் உள்ள ஆலயங்களில், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்தில் கடம்ப மரமும், வில்வ மரமும் தல விருட்சங்களாக உள்ளன.

சமயபுரம் மாரியம்மன்
திருச்சியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சமயபுரம் என்ற ஊர். இங்குள்ள மாரியம்மன், ஊர் பெயரோடு சேர்த்து 'சமயபுரம் மாரியம்மன்' என்றே அழைக்கப்படுகிறார். கண்நோய் தீர்க்கும் சிறப்பு மிக்க தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. வேப்பிலை ஆடை தரிப்பது, தீச்சட்டி ஏந்தி அம்பாளை வழிபடுவது, கண்மலர் வாங்கி காணிக்கை செலுத்துவது போன்றவை, இங்கு முக்கியமான நேர்த்திக்கடன்களாக இருக்கின்றன.
மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் 'பூச்சொரிதல்' விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. அதே போல் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஆண்டு தோறும் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமையில், தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிப்பதைப் பார்க்க லட்சக் கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்த ஆலயத்தின் தல விருட்சம் வேம்பு.

கன்னியாகுமரி பகவதிதேவி
முக்கடல் சங்கமிக்கும், தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்த ஊர், கன்னியாகுமரி. இங்கு கடற்கரையோரமாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறாள், பகவதி அம்மன். இந்த அம்பாள் கொலுவிருக்கும் ஆலயம், 51 சக்தி பீடங்களில் 'குமரி சக்தி பீடம்' என்று அழைக்கப்படுகிறது. இது அம்பாளின் முதுகுப் பகுதி விழுந்த சக்தி பீடமாக கருதப்படுகிறது. உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்லும் சிறப்பு மிக்க ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது.
பரசுராமர், பகவதி அம்மனின் திரு உருவத்தை இந்த இடத்தில் அமைத்து வழிபட்டிருக்கிறார். இங்குள்ள அம்பாள், குமரிப் பெண்ணாக (திருமணமாகாத கன்னிப் பெண்ணாக) இருந்து அருள்புரிகிறார். பாணாசுரனை அழிப்பதற்காக, தேவி பராசக்தியே பகவதி அம்மனாக அவதரித்ததாக தல புராணம் சொல்கிறது.

காஞ்சி காமாட்சி
காஞ்சிபுரம் என்றாலே அங்கு வீற்றிருக்கும் காமாட்சி அம்மன்தான் அனைவரின் நினைவுக்கும் வருவார். அந்த அளவுக்கு பக்தர் களின் மனதில் இடம் பிடித்தவர், காமாட்சி தேவி. காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் அமைந்த இந்த ஆலயம், 51 சக்தி பீடங்களில் 'காமகோடி சக்தி பீடம்' என்று அழைக்கப்படுகிறது. இத்தல அம்பிகை, தங்க விமானத்தின் கீழ் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும், இந்த அன்னையே பிரதான சக்தி தேவியாவார். அதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில், தனியாக அம்பாள் சன்னிதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் தல விருட்சம் செண்பக மரம் ஆகும்.

பொள்ளாச்சி மாசாணியம்மன்
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மாசாணியம்மன் கோவில். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் ஆனைமலை என்ற ஊராகும். உப்பாற்றின் வட கரையில் இருக்கிறது இந்த ஆலயம். மயானத்தில் சயன கோலத்தில் இருப்பவள் என்பதால் இந்த அன்னைக்கு 'மயானசயனி' என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே மருவி 'மாசாணி' என்றானதாக சொல்கிறார்கள்.
இங்கு மாசாணியம்மன், 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து, கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறார். ருதுவாகும் பெண்கள் சந்திக்கும் பல்வேறு வகையான உடல் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தெய்வமாக, மாசாணியம்மன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் தை மாதம் 18 நாட்கள் நடைபெறும் பெருவிழா சிறப்புமிக்கது.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-7 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சப்தமி இரவு 10.30 மணி வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 9.51 மணி வரை. பிறகு மகம்.
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை தலங்களில் சிறப்பு அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம் மாடவீதி புறப்பாடு. லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தாமதம்
ரிஷபம்-உறுதி
மிதுனம்-புகழ்
கடகம்-நன்மை
சிம்மம்-சுபம்
கன்னி-இரக்கம்
துலாம்- நட்பு
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- லாபம்
மகரம்-நற்செய்தி
கும்பம்-சாந்தம்
மீனம்-நிறைவு
- சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர் என்று பொருள்.
- சிந்தை தெளிந்து இருப்பவன் சித்தன் என்று கூறுவார்கள்.
சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர் என்று பொருள். அதாவது சிந்தை தெளிந்து இருப்பவன் சித்தன் என்று கூறுவார்கள். கடவுளைக் காண முயல்பவன் பக்தன் என்பது போல கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று கூறலாம். கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என முக்காலமும் உணர்ந்த அறிஞர்களே சித்தர்கள் ஆவார்.

உடலைக் கோவிலாகவும் உள்ளத்தை இறைவன் உறையும் ஆலயமாகவும் கருதி உலகப் பற்றற்று வாழ்பவர்கள் சித்தர்கள். இவர்கள் தங்களை உணர்ந்தவர்கள். இயற்கையை உணர்ந்தவர்கள். மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள். தன்னுன் உறையும் இறைவனை கண்டு அதனுடன் ஒன்றி தன் சக்தியையும் ஆற்றலையும் உலக மக்களின் நன்மைக்கு பயன்படுத்தும் வல்லமை படைத்தவர்கள்.
சித்தர்கள் அழியாப் புகழுடன் வாழும் சிரஞ்சீவிகள். பிரபஞ்ச ரகசியத்தை அறிந்த பிரம்ம ஞானிகள். எதிலும் எந்த வித பேதமும் காணாதவர்கள். ஆசை, பாசம், மோகம், பந்தம் போன்ற உலகப் பற்றை அறுத்தவர்கள். பல சித்திகளை, குறிப்பாக அஷ்டமா சித்திகளை பெற்றவர்கள்.
தமிழ் பாரம்பரியத்தில் எத்தனையோ சித்தர்கள் இருந்தாலும் கூட 18 சித்தர்களை குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்கள், அகத்தியர், போகர், திருமூலர், வான்மீகர், தன்வந்த்ரி, இடைக்காடர், கமலமுனி, கருவூரார், கொங்கணர், கோரக்கர், குதம்பை சித்தர், மச்சமுனி, பாம்பாட்டி சித்தர், பதஞ்சலி, இராமத்தேவர், சட்டைமுனி, சிவவாக்கியர், சுந்தரானந்தர் ஆகியோர்கள்.
அஷ்டமா சித்திகள்:
அஷ்ட என்றால் எட்டு என்று பொருள். அட்டாங்க யோகம் என்னும் எட்டு வகையான யோக நெறிகளை பற்றி வாழ்ந்தவர்கள் சித்தர்கள். அவை முறையே:
1. அணிமா 2. மகிமா 3. லகிமா 4. பிரார்த்தி 5. பிரகாமியம் 6. ஈசத்துவம், 7. வசித்துவம் 8. கரிமா
அணிமா:
அணுவைக் காட்டிலும் மிகச் சிறிய உருவில் உலவும் ஆற்றல் இந்த சித்தியினால் ஏற்படும்
மகிமா :
மலையினும் பெரிய உருவம் தாங்கி நிற்கும் ஆற்றல் இந்த சித்தியினால் ஏற்படும்.
லகிமா:
உடலைப் பாரமில்லாமல் லேசாகச் செய்து நீர், சேறு முதலியவற்றில் அழுந்திவிடாமல் காற்றைப் போல விரைந்து செல்லும் வல்லமை இந்த சித்தியினால் ஏற்படும்.
பிரார்த்தி:
நாம் விரும்புவனவற்றையும் நினைப்பவற்றையும் உடனே அவ்வாறே அடையும் வல்லமையைத் தருவது இந்த சித்தி.
பிரகாமியம்:
தம் நினைவின் வல்லமையால் எல்லாவற்றையும் நினைத்தவாறே படைக்கும் ஆற்றலைத் தருவது இந்த சித்தி.
ஈசத்துவம்:
அனைவரும் தம்மை வணங்கும்படியான தெய்வத் தன்மையை எய்தும்படிச் செய்வது இந்த சித்தி.
வாசித்துவம்:
உலகம் அனைத்தையும் தம் வயப்படுத்தி நடத்தும் ஆற்றலை பெற்றிருக்கச் செய்யும் இந்த சித்தி.
கரிமா:
ஐம்புலன்களும் நுகரும் இன்ப துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமலும் அவைகளுடன் சம்பந்தப் படாமலும் இருக்கும் வல்லமையை அளிக்கும் இந்த சித்தி.
- சித்தர்கள் கேட்ட வரங்களை கண்டிப்பாக வாரி வழங்குவார்.
- 27 நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த சித்தரை வணங்கலாம்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சித்தர்கள் இருக்கின்றனர். அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குரிய சித்தரை மனதார வணங்கி பிரார்த்தனை செய்தால் கட்டாயம் அந்த சித்தர்கள் கேட்ட வரங்களை கண்டிப்பாக வாரி வழங்குவார்.
அதன்படி, 27 நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த சித்தரை வணங்கலாம். மேலும், அந்த சித்தர்கள் எங்கு குடிகொண்டு உள்ளனர் என்பதை இங்கு விரிவாக காண்போம்.

* அஸ்வினி - காலங்கி நாதர் சித்தர் இவரது சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய கோவில்களில் உள்ளது.
* பரணி -போகர் சித்தர் இவருக்கு பழனி முருகன் கோவிலில் தனி சமாதி உள்ளது.
* கார்த்திகை - ரோமரிஷி சித்தர் இவருக்கு ஜீவசமாதி இல்லை. (காற்றோடு காற்றாக கலந்து விட்டார் என கூறப்படுகிறது).
* ரோகிணி - மச்சமுனி சித்தர் இவர் ஜீவசமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.
* மிருகசீரிடம் - பாம்பாட்டி சித்தர் மற்றும் சட்டமுனி சித்தர். பாம்பாட்டி சித்தரின் ஜீவசமாதி சங்கரன்கோவிலில் உள்ளது. சட்டமுனி சித்தரின் ஜீவசமாதி ஸ்ரீரங்கத்தில் உள்ளது.
* திருவாதிரை - இடைக்காடர் இவரது ஜீவசமாதி திருவண்ணாமலையில் உள்ளது.
* புனர்பூசம் - தன்வந்தரி சித்தர் இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவசமாதி ஆனவர்.
* பூசம் - கமலமுனி சித்தர் இவர் ஜீவசமாதி திருவாரூரில் உள்ளது.
* ஆயில்யம்- அகத்தியர் சித்தர் இவரது ஒளிவட்டம் குற்றாலம் பொதிகை மலையில் உள்ளது.
* மகம் - சிவ வாக்கிய சித்தர் இவரது ஜீவசமாதி கும்பகோணத்தில் உள்ளது.
* பூரம் - ராமதேவ சித்தர் இவரது ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளிவந்து போகும் இடம் அழகர்மலை.
* உத்திரம் - காகபுஜண்டர் இவர் ஜீவசமாதி அடைந்த இடம் திருச்சி உறையூரில் உள்ளது.
* ஹஸ்தம் - கருவூரார் சித்தர் இவரது சமாதி கரூரில் உள்ளது. இவரது ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகும்.
* சித்திரை - புண்ணாக்கீசர் சித்தர் நண்ணாசேர் என்ற இடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது.
* சுவாதி - புலிப்பாணி சித்தர் இவரது சமாதி பழனிக்கு அருகில் உள்ள வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.
* விசாகம் - நந்தீசர் சித்தர் மற்றும் குதம்பை சித்தர் நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.
* அனுஷம் - வால்மீகி சித்தர் இவருக்கு எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.
* கேட்டை - பகவான் வியாசருக்கு உரிய நட்சத்திரம் இவரை நினைத்தாலே போதும். அந்த இடம் வருவார்.
* மூலம் - பதஞ்சலி சித்தர் இவர் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது.

* பூராடம் - ராமேதவர் சித்தர் இவரது ஜீவ ஒளியை அழகர்மலையில் தரிசிக்கலாம்.
* உத்திராடம் - சித்தபிரான் கொங்கணர் இவர் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் திருப்பதி ஆகும்.
* திருவோணம் - தட்சிணாமூர்த்தி சித்தர் இவர் சமாதி புதுச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.
* அவிட்டம் - திருமூலர் சித்தர் இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.
* சதயம் - கவுபாலர் சித்தர் இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார்.
* பூரட்டாதி - ஜோதிமுனி சித்தர் இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார்.
* உத்திரட்டாதி - டமரகர் சித்தர் இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டார் என்று வரலாறு கூறுகிறது. இவரை வீட்டிலேயே சிறு மணி ஓசையில் வரவழைத்து வணங்கலாம்.
* ரேவதி - சுந்தரானந்தர் சித்தர் இவரது ஜீவசமாதி கோவில் மதுரையில் உள்ளது.
எனவே, 27 நட்சத்திரக்காரர்களும் அவரவர்களுக்குரிய ஜீவசமாதி இடங்களுக்கு சென்று வணங்கினால் சித்தர்களின் அருளை முழுமையாக பெறலாம்.
- கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி இருந்தது.
- வடக்கு பொய்கைநல்லூரில் மஞ்சபத்து செட்டியார் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
வடக்கு பொய்கைநல்லூரில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு சிவநெறி வழுவாது, கடல் கடந்து கீழை நாடுகளுக்கு சென்று பெருவணிகம் செய்து வந்த மஞ்சபத்து செட்டியார் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
தம் குலத்தில் உதித்த கற்பில் சிறந்த பெண் ஒருத்தியை மணந்து இல்லறமாகிய நல்லறத்தை நடத்தி வந்த இந்த வணிகர் இவ்வூர் கடற்கரையில் வணிக நிலையம் ஒன்று அமைத்துக்கொண்டு கடல் வணிகத்தை சிறப்பாக நிகழ்த்தி வந்தார்.

இவ்வணிகரின் துணைவியார் தினமும் உணவு சமைத்து பாத்திரத்தில் வைத்து எடுத்துச் சென்று கடற்கரை அலுவலகத்தில் தம் கணவருக்கு அன்போடு உணவு படைத்து வரும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.
ஒருநாள் அம்மையார் தம் கணவருக்கு உணவு கொண்டு செல்லும்போது சிவனடியார் ஒருவர் எதிர்பட்டார். உடல் தளர்ந்து வாடிய முகத்தோடு எதிர்பட்ட அடியார் இந்த அம்மையாரை நோக்கி தம் பசி தீர உணவிடுமாறு வேண்டி நின்றார்.
மனம் இறங்கிய அம்மையார், சிறிதும் தாமதிக்காமல் கொண்டு வந்த இலையை அந்த இடத்திலேயே விரித்து தம் கணவருக்காக எடுத்து வந்த உணவை சிவனடியாருக்கு படைத்தார்.
பசித்துயர் தீர்த்த அடியார் அந்த அம்மையாருக்கு ஆசிகள் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார். அம்மையாரும் பாத்திரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு மீண்டும் உணவு கொண்டு வருவதற்காக தன் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினாள்.
சிவனடியார் அம்மையாரை தடுத்து இந்த பாத்திரங்களையும், இலையையும் எடுத்துக்கொண்டு உன் கணவரின் இருப்பிடம் சென்று அவனுக்கு உணவு படை என்று கூறி அங்கிருந்து அகன்றார்.
அம்மையாரும் அடியவர் சொன்னது போல் கணவரின் இருப்பிடம் சென்று, அவரின் முன்னே இலையை விரித்து பாத்திரங்களை திறந்தார். என்ன வியப்பு! பாத்திரங்களில் உணவு குறையாமல் எடுத்து வைத்தது போல் அப்படியே இருந்தது!
அம்மையாரோ நடந்தது எதையும் சிறிதும் வெளிக்காட்டாமல் கணவருக்கு உணவு படைத்தார். அதனை உண்ட கணவர் உணவு என்றும் இல்லாத அளவுக்கு சுவையாக இருப்பதை அறிந்து தம் துணைவியாரிடம் உண்மையை கூறுமாறு கேட்டார்.
அம்மையாரோ நடந்ததை நடந்தபடியே கணவருக்கு எடுத்துரைத்தார். இதனை கேட்டு வியந்து போன மஞ்சுபத்து செட்டியார் தன் மனைவியை அழைத்துக்கொண்டு சிவனடியாருக்கு உணவளித்த இடத்திற்கு விரைந்தார்.
அங்கே சிவனடியாரை காணவில்லை. மணல் வெளியில் 2 திருவடிகளின் சுவடுகள் மட்டுமே காணப்பட்டன. அருகில் உணவளித்த அவரின் துணைவியாரின் 2 அடிச்சுவடுகளும் காணப்பட்டன.

இந்த திருவிளையாடலை நிகழ்த்தி அருளியவர் சிவபெருமானே என உணர்ந்து மெய் சிலிர்த்தார் வணிகர். அங்கு தோண்டி பார்த்த போது தான் கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி இருந்தது தெரியவந்தது.
சிவனடியார் திருக்கோலத்தில் சிவபெருமானை காணும் பேறு பெற்ற தம் துணைவியாரின் தவத்தை எண்ணி மகிழ்ந்தார். தமக்கு அந்த காட்சி கிட்டவில்லையே என வேதனை அடைந்தார்.
இறைவன் இவ்வாறு சிவனடியார் திருக்கோலத்தில் எழுந்தருளி செட்டிகுல பெண்ணிடம் அமுது பெற்று உண்டது ஓர் ஐப்பசி மாதம் பரணி நாளாகும். எனவே, இந்த நாளே ஐப்பசி பரணி விழா நிகழும் நாளாக மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- 27 முகங்கள் கொண்ட ருத்ராட்ஷத்தை ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் அணியலாம்.
- ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு.
ருத்ராட்சம் பிறந்த கதை மிகவும் சுவாரசியமானது. திரிபுராசுரன் என்னும் அரக்கன் பிரம்மனிடம் பெற்ற வரத்தைக் கொண்டு தேவர்களை துன்புறுத்திக்கொண்டிருந்தான். தங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை தீர்க்க தேவர்கள் கையிலாயம் சென்று சிவபெருமான வேண்டினர்.

உடனே, தேவர்களின் சக்தியை ஒன்றினைத்து, மிகப்பெரிய வல்லமை படைத்த அகோரம் என்னும் ஆயுதம் ஒன்றை உருவாக்கி அவனை அழித்தார். அப்போது சிவபெருமானுக்கு ஏற்பட்ட பேரிரக்கத்தால், தன்னுடைய மூன்று கண்களையும் மூடினார்.
பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராட்ச மரமாக மாறியது. அந்த ருத்ராட்ச மரத்தில் இருந்து விழுந்த பழம் தான் ருத்ராட்சம் ஆகும்.
மேலும் புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வியர்வை என்றும் சில புராணங்கள் சொல்கின்றன.
ஒன்று முதல் இருபத்தி ஏழு முகங்கள் கொண்ட ருத்ராட்சத்தை ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் யார் வேண்டுமானலும் அணியலாம்.
பெண்கள் அணிவதற்கு சில வரையறைகள் உள்ளன. அதை முறையாக பின்பற்றி அணிந்து கொள்வது நலம்.
ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

சிலரெல்லாம் போகம் செய்யும் போது அணியக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.
ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்திர உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணிய வேண்டும்.
அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.
ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய மாதவிடாய் நாட்களில் கூட அணியலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது.
வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.
இன்றைக்கும் தரமான, பழமை வாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இருக்கிறது.

சீரான ரத்த ஓட்டம், கால் மறத்துப் போதல் போன்றவற்றுக்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
உடலுக்கு மினுமினுப்பைக் கொடுக்கும். ருத்ராட்சத்திற்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.
- ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-6 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி இரவு 9.51 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: பூசம் இரவு 8.38 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூ ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூல வருக்கு திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு. மடிப்பாக்கம் அடுத்த கீழ்க்கட்டளை பெரிய தெருவில் அமைந்துள்ள சக்திவேல் முருகன் கோவில் கும்பாபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-கடமை
மிதுனம்-தாமதம்
கடகம்-நன்மை
சிம்மம்-வரவு
கன்னி-உவகை
துலாம்- கடமை
விருச்சிகம்-சுபம்
தனுசு- உழைப்பு
மகரம்-நட்பு
கும்பம்-ஆதரவு
மீனம்-லாபம்
- சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு.
- நடை சாத்தப்பட்டிருந்தாலும் 18-ம் படியில் ஏற அனுமதி
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர்.
பக்தர்கள் கூட்ட நெரி சலில் சிக்காமல் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தேவசம்போர்டு இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தி இருக்கிறது.
அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலமாக 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அது மட்டுமின்றி குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னி தானத்தில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது மட்டும் நடைப்பந்தலில் கூட்டமாக இருக்கிறது.
மற்ற நேரங்களில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்காமல் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் நேரத்திலும் பக்தர்கள் பதினெட்டாம் படியில் ஏற அனுமதிக்கப்படுவதால் பதினெட்டாம்படி உள்ளிட்ட சன்னிதான பகுதியில் கூட்ட நெரிசல் என்பது இல்லை.
மேலும் ஒவ்வொரு நாளும் பக்தர்களின் வருகை அதிகரித்தபடி இருக்கிறது. இன்று காலை சபரிமலை பகுதியில் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத் தாமல் பக்தர்கள் மலை யேறிச் சென்றனர். மேலும் பதினெட்டாம் படி ஏறுவ தற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும் கொட்டும் மழையில் நனைந்தபடி நின்றனர்.
இந்தநிலையில் சபரி மலையில் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவை 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேர் என தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகி றார்கள்.
ஆனால் அதற்கு குறை வாகவே தினமும் பக்தர்கள் வருகிறார்கள். ஸ்பாட் புக்கிங் முறையில் தற்போது வரை அதிகபட்சமாக ஒரு நாளில் 5,982 பேரே பதிவு செய்து சன்னிதானத்துக்கு சென்றிருக்கிறார்கள்.
பதினெட்டாம்படியில் பக்தர்களை விரைவாக ஏறச் செய்தல், தரிசன நேரத்தை நீட்டித்தல் போன்ற நடவடிக்கைகளால் பக்தர்கள் நெரிசலில்லாத சுமூகமாக தரிசனத்தை பெற முடிந்தபோதிலும், பக்தர்களின் வருகை எதிர் பார்த்த அளவுக்கு இல்லை.
இதன் காரணமாக சபரி மலைக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதன் மூலம் கிடைக்கும் வருவாய் பாதித்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
மேலும் அரவணை மற்றும் அப்பம் உள்ளிட்ட பிரசாத விற்பனையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என தெரிகிறது.
இந்த காரணங்களுக்காக பக்தர்களின் வருகையை அதிகப்படுத்த ஆன்லைன் முன்பதிவை 80 ஆயிரமாக அதிகரிக்கவும், ஸ்பாட் புக்கிங்கை தொடர்ந்து 10 ஆயிரமாக தொடரவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது ஓரிரு நாளில் அமலுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
- வன தேவதைகளை சாந்தி செய்யவும் கருப்பு உடுத்துவது வழக்கம்.
- சனீஸ்வரன் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பரம அனுக்கிரகம் பெற்றவன்.
"கருப்பும் உடுத்து பம்பையில் முங்கி சபரிக்கு போகும் ஐயப்பன்மார்" என்கிற பாடலின் வாயிலாக ஐயன் ஐயப்பனுக்கு ஏற்ற, பிடித்தமான உடை கருப்பு என்பதை அறியலாம்.
பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் கருப்பு வேஷ்டி துண்டு அணிந்து தான் மலைக்கு வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வருவோர் கருப்பு நிற ஆடை மட்டும் அணிகின்றனர். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஐயப்ப ஸ்வாமியின் பரிவார தேவதையான ஸ்ரீ கருப்பஸ்வாமி ஸ்ரீ கருப்பாயி தேவி கருமை நிற ஆடை அணிபவர்கள். அவர்களின் வழி பின்பற்றி ஐயப்ப சாமிகளிடம் கருநிற ஆடை அணிகின்றனர்.
அடுத்து சபரிமலையில் யானைகள் அதிகம் உள்ளன. காட்டு யானைகள் பெருவழியில் அதிகம் நடமாடும். அவை வெள்ளை நிறம் கண்டால் சினம் கொண்டு பிளிரும். கருப்பு நிறம் கண்டால் வெகுண்டு எழாது. மற்றும் வன தேவதைகளை சாந்தி செய்யவும் கருப்பு உடுத்துவது வழக்கமாக உள்ளது.
மேலும் கருப்பு நிறம் சனீஸ்வர பகவானுக்கு ஏற்றது. யார் ஒருவர் சபரிமலைக்கு கருப்பு நிற உடை உடுத்தி சென்று ஸ்ரீ தர்ம சாஸ்தாவினை காண்கிறார்களோ அவர்களுக்கு 7½ நாட்டு சனியின் பாதிப்பு ஏதும் அறவே இருக்காது.
ஏன் என்றால் சனீஸ்வரன் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பரம அனுக்கிரகம் பெற்றவன். இது தொடர்பாக கூறப்படும் கதை வருமாறு:-
இந்த உலகையும் மற்ற எல்லா கிரகங்களையும் தன் கிரணங்களால் அனுகு கின்றவன் சூரிய பகவான். அவருக்கு உஷா என்ற மனைவி உண்டு.

இந்த உஷா விஸ்வகர்மாவின் மகள் ஆவாள். இந்த விஸ்வகர்மா தான் தேவலோகத்து தேவர்களின் ஆணைப்படி பல கட்டிடங்களையும், சிற்ப வேலைப்பாடுகளையும் செய்பவர். தேவலோக சிற்பி ஆவார்.
இன்றும் விஸ்வகர்மா வகுப்பினர் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதை காணலாம். சூரியன்- உஷா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். 2 பேர் மகன்கள். ஒரு மகள்.
1. வைவஸ்வத மனு - மகன்,
2. எமதர்ம ராஜன் - மகன்,
3. யமுனா தேவி - மகள்.
எனவே தான் யமுனா நதி கருப்பாக உள்ளது. (யமதர்ம ராஜனின் சகோதரி என்பதால்).
சூரியனின் வெப்பத்தை அவரது மனைவியான உஷா தேவியால் கூட தாங்க இயலவில்லை. இங்கு உஷா தேவியினை மக்களாகவும் கருதி சிந்திக்க வேண்டும்.
"வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள்" எனவே உஷா தேவி தன் நிழலை உருவமாக்கி "சாயா தேவி"என்று மாறினாள். "சாயா"என்றால் நிழல் என்றும் பொருள் வரும். சூரியனை விட்டுவிட்டு விஸ்வகர்மாவாகிய தன் தந்தையிடம் உஷா சென்றுவிட்டாள்.
இந்த சூரியன் மனைவியாகிய சாயாதேவி தன் கணவரிடமும், உஷா தேவியின் குழந்தைகளிடமும் பிரியமாக நடந்து கொண்டாள்.
நாளடைவில் இந்த சாயா தேவிக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன.
1. சாவர்ணி மனு - மகன்
2. ச்ருத கர்மா - மகன்
3. பத்ரை - மகள்
தனக்கு குழந்தைகள் பிறந்ததும் சாயாதேவி உஷா தேவியின் குழந்தைகளை வெறுக்கத் தொடங்கினாள். குழந்தைகளிடம் கடுமையாகவும் நடந்து கொண்டாள். இதனால் எமதர்மன் மிகவும் துன்பத்திற்கு ஆளானான்.
ஒரு சமயம் எமதர்மன் காலை தூக்குவதை கண்ட "சாயா தேவி" தன்னைத்தான் உதைக்க வருவதாக எண்ணி அவன் கால் எழுகக்கடவது என சாபமிட்டாள்.

தாய் சாபமிடுவதை கண்ட எமன் சந்தேகமுற்றான். நல்ல தாய் தன் மகனை ஒருக்காலும் சபிக்கமாட்டாள். தன் சந்தேகத்தினை சூரிய பகவானான தந்தையிடம் கூறினான்.
சினம் கொண்ட சூரியன் உண்மையினை கூறும்படி கட்டளையிட்டார். சாயா தேவியும் தான் உஷா தேவி அல்ல என்ற உண்மையினை ஒத்துக்கொண்டாள்.
சூரிய பகவானும் எமதர்ம ராஜனை பூலோகம் சென்று தாயின் நோய் தீர்க்கும் தயாவான தத்துவனாகிய ஸ்ரீ தர்ம சாஸ்தாவினை நோக்கி தவம் செய்து சாப விமோசனம் பெற வழிகாட்டினார்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதனை உணர்ந்த எமன் பூலோகம் வந்து தவம் இருந்து வேண்டினார்.
அவனது தவ வலிமையினைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றினார். சாப விமோசனம் தந்து எமலோகத்திற்கு அதிபதியாக்கினார்.
இப்படிப்பட்ட உயர்ந்த நிலையினை ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் அனுகிரகத்தினால் எமன் கிடைக்கப்பெற்றதனை அறிந்த ஸ்ரீ சாயா தேவியின் இளைய மகனாகிய "ச்ருத கர்மா" தானும் பூலோகம் வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தாவை காலையும் மாலையும் பூஜை செய்து வழிபட்டான்.
பின்னர் கடும் தவம் மேற்கொண்டு சகல வரங்ளையும் அருளும் ஸ்ரீ தர்ம சாஸ்தாவினையே தியானம் செய்து வந்தான். அவனது அன்பு கலந்த பக்தியினால் மகிழ்ந்த ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றி அவனுக்கு சூரிய மண்டலத்தில் கிரக நிலையினை அருளினார்.
அவன் மெதுவாக நகர்வதால் (அவன் சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும்) "சனீஸ்வரன்"என்ற பெயரும் சூட்டினார். வாரத்தின் கடைசி நாளையும் அவன் பெயரில் அழைக்க அருள் பாலித்தருளினார்.

மேலும் அந்த சனிக்கிழமையினையே தனக்கு உகந்த நாளாக ஏற்று ஐயப்பன் அருள் செய்தார். இதற்கு பிரிதி உபகாரமாக சனிபகவானும் யார் ஒருவர் கருப்பு நிற உடை உடுத்தி சனிக்கிழமை தோரும் விரதம் இருந்து சபரிமலை வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா சொரூபமாகிய ஐயப்பனை அன்புடன் வேண்டுகிறார்களோ அவர்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்க மாட்டேன் என கூறினார்.
எனவே தான் சபரிமலைக்கு கருப்பு நிற உடை அணிந்து வரும் பக்தர்களுக்கு 7½ சனியின் தாக்கம் கடுமையாக இருப்பதில்லை.
- பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்.
- கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வழக்கமாக விரதமிருந்து வரும் பக்தர்கள் மற்றும் கன்னி ஐயப்பமார்கள் அதிகளவில் வருவதே இதற்கு காரணம்.
தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும்போது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை செய்துகொடுப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகும்.
அதனை வெற்றிகரமாக மேற்கொள்ள திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்துகிறது.
அதே நேரத்தில் யாத்திரை வரக்கூடிய பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் அறிவித்து வருகிறது. சபரிமலை யாத்திரையில் பக்தர்கள் கடை பிடிக்கவேண்டிய விஷயங்களை இந்த ஆண்டும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-

செய்ய வேண்டியவை
* பக்தர்கள் மலை ஏறும் போது 10 நிமிட நடைக்கு பிறகு 5 நிமிடம் ஓய்வெடுங்கள்.
* மரக்கூட்டம், சரம்குத்தி, நடைபந்தல் - பாரம்பரிய பாதையை பயன்படுத்தி சன்னிதானம் செல்லவும்.
* பதினெட்டாம்படியை அடைய வரிசை முறையை பின்பற்றவும்.
* திரும்பும் பயணத்திற்கு நடைபந்தல் மேம்பாலத்தை பயன்படுத்தவும்.
* சிறுநீர் கழிப்பதற்கும், உடல் கழிவுகளை அகற்றுவதற்கும் கழிவறைகளை பயன்படுத்துங்கள்.
* சன்னிதானத்தில் நிலவும் கூட்டத்தின் நிலையை கண்டறிந்து, பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லுங்கள்.
* டோலியை பயன்படுத்தும் போது, தேவசம் கவுண்டரில் மட்டும் பணம் செலுத்தி ரசீதை வைத்துக் கொள்ள வேண்டும்.
* பாதுகாப்பு சோதனைச்சாவடிகளில் உங்களை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்துங்கள்.
எந்த உதவிக்கும் காவல்துறையை அணுகவும்.
* சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.
* உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே உண்ணக்கூடிய பொருட்களை வாங்கவும்.
* பம்பை, சன்னிதானம் மற்றும் மலையேற்ற பாதைகளை சுத்தமாக வைத்திருங்கள்.
* ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தவும்.
* கழிவுப் பெட்டிகளில் மட்டுமே கழிவுகளை இடுங்கள்.
* தேவைப்பட்டால், மருத்துவ மையங்கள் மற்றும் ஆக்சிஜன் பார்லர்களின் வசதிகளை பெறவும்.
* குழந்தைகள், வயது முதிர்ந்தோர், மாளிகாபுரம் (பெண்கள்) முகவரி மற்றும் தொடர்பு எண்கள் கொண்ட அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிடப்பட வேண்டும்.
* குழுக்கள் அல்லது உடன் வந்த நண்பர்களிடமிருந்து தனிமை படுத்தப்பட்டால், பக்தர்கள் காவல் உதவி நிலையங்களில் புகார் செய்யலாம்.

செய்ய கூடாதவை
* கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
* பம்பை, சன்னிதானம் மற்றும் யாத்திரை செல்லும் வழியில் புகைபிடிக்க வேண்டாம்.
* மது அல்லது போதை பொருட்களை உட்கொள்ள வேண்டாம்.
* வரிசையில் குதிக்க வேண்டாம். வரிசையில் இருக்கும்போது அவசரப்பட வேண்டாம்.
* ஆயுதங்கள் அல்லது பிற வெடிபொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்.
* அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களை மகிழ்விக்க வேண்டாம்.
* கழிப்வறைக்கு வெளியே சிறுநீர் கழிக்காதீர்கள். கழிவறைக்கு வெளியே உடல்களை சுத்தம் செய்யாதீர்கள்.
* எந்தவொரு சேவைக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம்.
* எந்த உதவிக்கும் காவல்துறையை அணுக தயங்க வேண்டாம்.
* குப்பை தொட்டிகளை தவிர வேறு எங்கும் குப்பைகளை வீசக்கூடாது.
* பதினெட்டாம்படியில் தேங்காய் உடைக்க வேண்டாம்.
* பதினெட்டம்பாடியின் இருபுறமும் ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர வேறு எங்கும் தேங்காய் உடைக்க வேண்டாம்.
* புனித படிகளில் ஏறும் போது பதினெட்டாம்படியில் மண்டியிட வேண்டாம்.
* நடைப்பந்தல் மேம்பாலத்தை தவிர வேறு எந்த பாதையையும் திரும்பப் பயணத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.
* மேல் திருமுட்டம் அல்லது தந்திரிநாடு எங்கும் ஓய்வெடுக்க வேண்டாம்.
* நடைபந்தல் மற்றும் கீழ் திருமுட்டம் ஆகியவற்றில் விரிகளுக்கு (தரையில் பாய்கள்) பாதைகளை பயன்படுத்த வேண்டாம்.
பாதுகாப்பு
* பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
* ஆயுதங்கள் அனுமதிக்கப்பட வில்லை.
* சன்னிதானத்தில் சமையல் எரிவாயு, அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. அப்படி தீ எரித்தால் தீயை உபயோகித்த உடனே அணைக்க வேண்டும்.
* பதினெட்டாம் படியில் ஏறும் முன் உங்களையும், உங்கள் பொருட்களையும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்துங்கள்.






