என் மலர்
வழிபாடு
- பக்தர்கள் வழக்கத்தை விட அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
- இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்தனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் தினமும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் பவானி, காவிரி கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி பரிகாரத் தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
மேலும் இங்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி வருகிறார்கள். அமாவாசை, பவுர்ணமி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் வழக்கத்தை விட அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
குறிப்பாக ஐப்பசி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை உள்பட ஒவ்வொரு மாத த்தில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் பலர் வந்து தங்கள் குடும்ப த்தில் இறந்த முன்னோ ர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடு தல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் இங்கு செய்யப்படுகிறது.
இதனால் பவானி கூடுதுறைக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், உள்ளூர், வெளியூர் என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்து பல்வேறு பரிகாரங்கள் செய்து வருகிறார்கள். அதே போல் கர்நாடகா, ஆந்திரா உள்பட வெளி மாநில பக்தர்கள் ஏராளமான வர்கள் வந்து புனித நீராடி பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) தை மாத அமாவாசை தினத்தை யொட்டி பவானி சங்கமே ஸ்வரர் கோவில் கூடுதுறை பின்பகுதியில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் கூடுதுறைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சேலம்,நாமக்கல், கரூர், கோவை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் காலை முதலே பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
இதை தொடர்ந்து அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் பல்வேறு பரிகார பூஜைகள் செய்து விட்டு சென்றனர். இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.
இதையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் தனி த்தனியாக குளித்து விட்டு பரிகார பூஜைகள் செய்தனர். தொடர்ந்து சங்கமேஸ்வரரை வழிபாடு செய்து விட்டு சென்றனர்.
தை அமாவாசை தின த்தை முன்னிட்டு அங்கு தற்காலிக இரும்பு தகர செட் அமைக்கப்பட்ட இடங்களில் இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்தனர்.
பவானி போலீசார் சிசி டிவி கேமராக்கள் பொரு த்தப்பட்டு குற்ற செயல்களை தடுக்கும் வகையில் பாது காப்பு பணியில் பவானி மற்றும் சித்தோடு, அம்மா பேட்டை, அந்தியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வரு கிறார்கள்.

இதேபோல் அம்மாபேட்டை காவிரி படித்துறையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.
மேலும் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். தொடர்ந்து அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கும் திதி கொடுத்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் திருமணம் ஆகாத இளம் பெண்கள், வாலிபர்கள் அதிகளவில் வந்து ஆற்றில் புனித நீராடி பரிகார பூஜைகள் செய்தனர். மேலும் பலர் பல்வேறு பரிகாரங்களையும் செய்து விட்டு சென்றனர்.
இதையடுத்து கொடுமுடி மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு சென்றனர். இதனால் அதிகாலை முதலே கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
இதே போல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் நகரின் பல பகுதிகளைில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் முன்னோ ர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பரிகார பூஜைகள் செய்து விட்டு சென்றனர்.
- மாதத்தின் மத்தியில் வரும் திதியாக அமாவாசை உள்ளது.
- 3 விதங்களில் முன்னோர் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்குரிய நாளாகும். அமாவாசை என்பது முன்னோர்கள் ஒன்று சேர்ந்து பூமிக்கு வரும் நாள் என்கின்றனர்.
மாதத்தின் மத்தியில் வரும் திதியாக அமாவாசை உள்ளது. தமிழ் மாதங்களில் பத்தாவது மாதமாக வரும் தை மாதத்தில் வரும் அமாவாசை மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கு மிகவும் ஏற்ற அமாவாசை நாளாக தை அமாவாசை கருதப்படுகிறது.
பித்ரு தோஷம் நீங்கி, ஆரோக்கியம், செல்வம், வெற்றி, மகிழ்ச்சி, அமைதி ஆகியவை கிடைப்பதற்கு வழிபட வேண்டிய நாளாகவும் தை அமாவாசை கருதப்படுகிறது.
மாதந்தோறும் அமாவாசை திதி வந்தாலும் தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. மற்ற அமாவாசைகளில் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தவறி இருந்தாலும், இந்த மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக முன்னோர் வழிபாட்டினை முறையாக மேற்கொள்ள வேண்டும் என சொல்லப்படுகிறது.

மற்ற அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிக்க இயலாதவர்கள் தை அமாவாசை அன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து சிறப்பு பூஜை (திதி) செய்வர்.
தை அமாவாசை என்பது தை மாதம் தொடங்கி, ஆனி மாதம் வரையிலான உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசையாகும். பித்ருதோஷம், பித்ரு சாபம் நீங்க வேண்டும் என்பவர்கள் தை அமாவாசையில் முன்னோர் வழிபாட்டினை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
ஒருவர் இறந்த பிறகு, அவரது ஆன்மாவானது உடலில் இருந்து பிரிந்து, பரலோக பயணத்தை தொடங்குகிறது. அப்படி செல்லும் ஆன்மா, முதலில் முன்னோர்களின் உலகமான பித்ருலோகத்தை அடையும். அவர்களின் கர்மாவிற்கு ஏற்ப அடுத்த பிறவியை எடுக்கும் வரை பித்ருலோகத்திலேயே தங்கி இருக்கும். இதற்கிடையில் பித்ருலோகத்தில் இருக்கும் போது ஆன்மாக்களுக்கு பசி, தாகம் ஏற்படும்.
ஆனால் உடல் இல்லாத நிலையில் இருப்பதால் அவர்களால் எதையும் சாப்பிட முடியாது. இதனால் தங்களுக்கு தேவையான உணவுகளை பெறுவதற்காக அவர்கள் முந்தைய வாழ்விடமான பூமிக்கு வருகிறார்கள்.

இங்கு அவர்களின் சந்ததிகள் முறையாக மந்திரங்கள் உச்சரித்து, சடங்குகளை செய்வது எள்ளும் தண்ணீரும் இறைப்பதன் மூலம் முன்னோர்களுக்கு தேவையான உணவும், தண்ணீரும் கிடைத்து அவர்களின் பசி நீங்கி, திருப்தி அடைகிறார்கள். இதனால் மனம் மகிழ்ந்து தங்களின் சந்ததிகளை அந்த ஆத்மாக்கள் வாழ்த்தி செல்கின்றன.
தை அமாவாசையில் மொத்தம் 3 விதங்களில் முன்னோர் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. தர்ப்பணம், திலா ஹோமம், பிண்ட தர்ப்பணம் ஆகியவை செய்யப்படுகின்றன. இவைகள் இறந்த போது செய்யப்படும் சிரார்த்த காரியங்களை போல் மிகவும் புனிதமானதாகும். நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கும் புனித தலங்களில் இவற்றை செய்வது மிகவும் விசேஷமானதாகும்.
- தை அமாவாசை தானம் கொடுப்பதற்கு சிறந்த நாள்.
- நெய் வழங்கி தானம் செய்தால், தீராத நோய்கள் அனைத்தும் தீரும்.
தை அமாவாசை தானம் கொடுப்பதற்கு சிறந்த நாள். இந்த நாளில் தானம் செய்வது மற்ற நாட்களை விட பல மடங்கு புண்ணியத்தை கொடுக்கும்.
இந்த நாளில் முன்னோரை நினைத்து உணவுப் பொட்டலம் தானம் செய்தால், நம் வீட்டில் இருந்த வறுமை நிலை மாறும். தனம், தானியம் பெருகும். கடன் பிரச்சனையில் இருந்து மீளலாம்.

வஸ்திர தானம் செய்து வேண்டிக்கொண்டால், நம் ஆயுள் அதிகரிக்கும். ஆரோக்கியம் அதிகமாகும். தீராத நோயெல்லாம் தீரும். வாழையடி வாழையென நம் சந்ததி செழித்தோங்கும்.
தேன் வழங்கி நமஸ்கரித்து பிரார்த்தனைகள் செய்தாலும் மிகப்பெரிய புண்ணியம். சந்தான பாக்கியம் உண்டாகும். வீட்டில் பிள்ளைச் செல்வம் இல்லாத குறை நீங்கும். குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
தீபம் மற்றும் விளக்கு தானமாக வழங்கினால், நம்மிடம் பார்வைக் கோளாறுகள் நீங்கும். கண்ணில் உள்ள சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். அரிசியை தானமாகத் தந்து பிரார்த்தனை செய்துகொண்டால், நம் பாவங்கள் அனைத்தும் தொலையும். எவருக்கேனும் நெய் வழங்கி தானம் செய்தால், தீராத நோய்கள் அனைத்தும் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.
பால் தானமாக வழங்கினால், துக்கமெல்லாம் தீரும். நம் மனதில் இதுவரை இருந்த மனக்குழப்பமும் வருத்தமும் மறையும்.
தயிர் தானமாகக் கொடுத்தால், இந்திரிய முதலான சுகங்களைப் பெறலாம். இல்லத்தில் ஒற்றுமையும் அந்நியோன்யமும் நீடிக்கும்.
பழங்கள் தானமாக வழங்கினால் புத்தியில் தெளிவு பிறக்கும். மனக்குழப்பங்கள் அகலும்.

தங்கம் தானமாக வழங்கினால் குடும்பத்திலும் குடும்ப உறுப்பினர்களிடமும் உள்ள தோஷங்களும் திருஷ்டிகளும் விலகும். சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.
வெள்ளி தானமாகக் கொடுத்தால், மனதில் நீண்டகாலத் துயரங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். நெல்லிக்கனியை தானமாக வழங்கினால், ஞானமும் யோகமும் கிடைப்பது உறுதி.
தேங்காய் தானமாக வழங்கினால், எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.
- இன்று தை அமாவாசை. திருவோண விரதம்.
- திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-16 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அமாவாசை இரவு 7.21 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: உத்திராடம் காலை 9.20 மணி வரை பிறகு திருவோணம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று தை அமாவாசை. (ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்வது நன்று) திருவோண விரதம். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மனுக்கு வைர கிரீடம் சாற்றியருளல். திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேம். திருபெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபால கர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உற்சாகம்
ரிஷபம்-முயற்சி
மிதுனம்-தாமதம்
கடகம்-தெளிவு
சிம்மம்-பக்தி
கன்னி-நிம்மதி
துலாம்- நற்செயல்
விருச்சிகம்-இன்பம்
தனுசு- போட்டி
மகரம்-இயல்பு
கும்பம்-கவனம்
மீனம்-ஆக்கம்
- பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்வு நடந்தது.
- பம்பை உடுக்கையுடன் தாலாட்டு பாடல் பாடப்பட்டது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் , விருத்தாசலம் எருமனூர் சாலையில் உள்ள ஜெகமுத்துமாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் தை மாதம் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து யாத்திரை செல்வது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு பக்தர்கள் யாத்திரை செல்வதை முன்னிட்டு திருமணம், குழந்தை வரம் உள்ளிட்ட வேண்டுதல்களுடன் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.
இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்வு நடந்தது. முன்னதாக கோவிலில் ஜெகமுத்துமாரி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஜெகமுத்துமாரி அம்மனை பக்தர்கள் ஜங்ஷன் சாலை, பாலக்கரை, கடை வீதி, தென் கோட்டை வீதி வழியாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, கோவிலில் அமைந்துள்ள கலையரங்க மேடையில் அம்மன் எழுந்தருள, பம்பை உடுக்கையுடன் தாலாட்டு பாடல் பாடப்பட்டது.
தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்தில் தரையில் அமர்ந்து மண்சோறு உண்டனர். சில நாட்களில் பக்தர்கள் இருமுடி கட்டி சமயபுரத்திற்கு பயணமாக செல்ல உள்ளனர்.
- மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி கும்பாபிஷேகம்.
- ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டதாக இருக்கும்.
வடவள்ளி:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மருதமலை கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடந்து வரும் லிப்ட் அமைக்கும் பணி, மருதமலை அடிவாரத்தில் 160 அடி உயர கல்லால் ஆன சிலை வைக்கும் இடத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் 2,400 கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. குறிப்பாக தமிழ்க்கடவுள் முருகன் கோவில்கள் அதிகளவில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதுவரை 90 முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
60 முதல் 70 வயதுடைய மூத்த குடிமக்களை அறுபடை முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல இருப்பிட வசதி, போக்குவரத்து வசதியோடு ஏற்பாடு செய்துள்ளோம்.
பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை உள்ளிட்ட 7 முருகன் கோவில்கள் பெருந்திட்ட பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
மருதமலை முருகன் கோவிலில் முடி காணிக்கை மண்டபம், அன்னதான கூடம் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது. முருகன் கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளதால் அனைத்து புதிய வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மருதமலை கோவிலில் நடந்து வரும் லிப்ட் அமைக்கும் பணிகள் மே மாதத்தில் முடிந்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும்.
மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் 160 அடி உயர கல்லால் ஆன சிலை அமைக்கப்பட உள்ளது. இது ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டது. இதற்கான ஆய்வு நடந்து வருகிறது. முதலமைச்சரின் அனுமதியுடன் தமிழ்கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இது அமையும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் 11 கோவில்களில் முழு நேர அன்னதானம் வழங்கப்படுகிறது. 17 கோவில்களில் ஒரு நேர அன்னதானத்தை விரிவுபடுத்த இருக்கிறோம்.
தைப்பூசத்திற்கு கூடுதலாக அன்னதானம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அன்னதான பிரபுவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். அன்னதானம் வழங்குவது தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு ஒரு சில தினங்களில் நல்ல முடிவு எடுக்கப்படும்,
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கொடிமரம் வெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
- கொடியேற்றத்துக்காக 75 அடி உயர மூங்கில் மரம் வெட்டி எடுத்து வரப்பட்டது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வரும் அமாவாசையையொட்டி மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வெகுவி மரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி நாளை காலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடக்கிறது.
அதனை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோவில் முன்புள்ள கொடிக்க ம்பத்தில் குண்டம் திருவிழாவுக்கான கொடியேற்றப்படுகிறது.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 1 மணிக்கு மயான பூஜையும், 12-ந் தேதி காலை 10.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30க்கு மகா பூஜை நடக்கிறது.
13-ந் தேதி(வியாழன்) காலை 10.30 மணிக்கு குண்டம் கட்டுதல், மாலை 6.30 மணிக்கு சித்திரை தேர் வடம் பிடித்து இழுத்தல், இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் திரு விழா வருகிற 14-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஏராளமான விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளனர்.
15-ந் தேதி(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு கொடி இறக்குதல், 10.30 மணிக்கு மஞ்சள் நீராடல், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜையும், 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது.
முன்னதாக குண்டம் திருவிழாவையொட்டி, மாசாணியம்மன் கோவிலில் கொடியேற்றுவதற்காக, சர்க்கார்பதி வனத்தில் இருந்து கொடிமரம் வெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
100-க்கும் மேற்பட்டோர் வனத்திற்கு சென்று 75 அடி உயர மூங்கில் மரத்தை வெட்டி சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
- மகா சிவராத்திரி அடுத்த மாதம் 26-ந்தேதி வருகிறது.
- போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.
கோவை:
கோவையை அடுத்த மேற்குத்தொடர்ச்சிமலை பூண்டியில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இது தென்கயிலாயம் என்று பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது.
இந்த கோவிலின் அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக உள்ள 7 மலைகளை கடந்து அங்கு சுயம்புவடிவில் காட்சி தரும் சிவனை தரிசிக்க, ஆண்டுதோறும் பக்தர்கள் மலையேறி செல்வது வழக்கம்.
வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மே மாதம் இறுதி வாரம் வரையிலும் வனத்துறையினர் அனுமதி அளிப்பார்கள்.
மேலும் மகாசிவராத்திரி மற்றும் சித்ராபவுர்ணமி நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்து, 7 மலைகளில் ஏறி சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்தாண்டுக்கான மகா சிவராத்திரி அடுத்த மாதம் 26-ந்தேதி வருகிறது. இதனையொட்டி வெள்ளியங்கிரி மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக, வனத்துறையினர் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
இதில் வருகிற பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் மே மாதம் இறுதிவரையிலும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை. எனவே அதுபோன்ற பொருட்களை கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
வெள்ளியங்கிரி கோவில் மற்றும் மலையேறும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.
- 29-ந்தேதி தை அமாவாசை.
- 2-ந்தேதி சதுர்த்தி விரதம்.
28-ந்தேதி (செவ்வாய்)
* மதுரை செல்லத்தம்மன் ரத உற்சவம்.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலையில் நாச்சியார் திருக்கோலக் காட்சி, இரவு யானை வாகனத்தில் புறப்பாடு.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
29-ந்தேதி (புதன்)
* தை அமாவாசை.
* மதுரை மீனாட்சி அம்மன், வைர கிரீடம் சாற்றியருளிய காட்சி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திரு விழா தொடக்கம்.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக் கினியானில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
30-ந்தேதி (வியாழன்)
* திருவாவடுதுறை, திருமொச்சியூர் தலங்களில் சிவபெருமான் பவனி.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
31-ந்தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தெப்ப உற்சவம் ஆரம்பம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
1-ந்தேதி (சனி)
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் காலை தங்கச் சப்பரத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி,
* சூரியனார்கோவிலில் சிவபெருமான் திருவீதி உலா.
* திருவானைக்காவல் சிவபெருமான் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
2-ந்தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* சதுர்த்தி விரதம்.
* கழுகுமலை முருகப்பெருமான், திருவிடைமருதூர் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
* மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு.
* காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் விழா தொடக்கம்.
* மேல்நோக்கு நாள்.
3-ந்தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* சஷ்டி விரதம்.
* திருப்புடைமருதூர் சிவபெருமான் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத் திலும் பவனி.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி வீதி உலா.
* சமநோக்கு நாள்.
- கன்னி தெய்வங்களை வழிபட்டால், சுமங்கலிகளின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.
- தை மாதங்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.
தென் மாவட்டங்களில் கன்னி தெய்வங்களை வணங்கும் வழக்கம், தொன்று தொட்டு இருந்து வருகிறது. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த பெண் குழந்தை, பூப்புனித நீராட்டுக்கு முன்போ அல்லது திருமணத்துக்கு முன்போ கன்னியாக மறைந்தால், அவரை குடும்பத்தினர் வழிபடும் பண்பாடு நெடுங்காலமாக உள்ளது.
குடும்ப தலைவரின் உடன்பிறந்த சகோதரியாகவோ அல்லது மகளாகவோ பிறந்து மறைந்த கன்னிப்பெண்களை தலைமுறை தலைமுறையாக வழிபடுகின்றனர்.

கன்னி தெய்வங்களை வழிபட்டால், சுமங்கலிகளின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக கன்னி தெய்வங்களுக்கு ஆடி மற்றும் தை மாதங்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.
அதிலும் அந்த மாதங்களில் வரும் செவ்வாய்க் கிழமை, கன்னி தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாட்களாக சொல்லப் படுகிறது. அந்த நாளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி கன்னி தெய்வத்தை வழிபடுவது வழக்கம்.
வீட்டின் கன்னி மூலையான தென்மேற்கு திசையில், கன்னி தெய்வ வழிபாடு நடத்தப்படுகிறது. இறந்த கன்னிப் பெண்ணின் வயதுக்கு ஏற்ப அவருக்கான ஆடையை எடுத்து வைக்கின்றனர்.
சிறுமி என்றால் அதற்கு ஏற்ற ஆடைகளும், இளம்பெண்ணுக்கு பாவாடை சட்டை தாவணியும், திருமண வயதுடைய பெண்ணுக்கு சேலை, சட்டையும் வாங்கி வைத்து வணங்குகின்றனர்.
இரவு நேரத்தில் கன்னி தெய்வத்தை வணங்கத் தொடங்குகிறார்கள். இளநார் பெட்டி ஒன்றில் மஞ்சள் கிழங்கு, சிற்றாடை அல்லது சேலை, கண்ணாடி, சீப்பு, வளையல் வைத்து, பிச்சிப்பூ அல்லது மரிக்கொழுந்து படைத்து, சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி, முற்றத்தில் நீர் தெளித்து கன்னியை வரவேற்று வழிபடுகிறார்கள்.
இந்த நார்பெட்டிக்கு 'கன்னிப்பெட்டி' என்று பெயர். கன்னிப்பெட்டியை வைத்தவுடன் அந்த குடும்பத்தில் உள்ள பூப்படைந்த பெண்ணுக்கு அருள் வந்து மூச்சிரைக்கும். அவரிடம் தங்களது குறைகளை முறையிட்டு தீர்க்குமாறு குடும்பத்தினர் வேண்டுவர்.
தன்னை மறக்காமல் வழிபட்டால் துயரத்தைப் போக்கி குடும்பத்தை தழைத்தோங்கச் செய்வதாக அவரிடம் இருந்து அருள்வாக்கு கிடைக்கும். பின்னர் கன்னி மூலையில் உயரமான இடத்தில் இளநார் பெட்டியை வைத்துவிடுவார்கள்.
கன்னி தெய்வ வழிபாடு குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர்க்கும் ஒரு நிகழ்வாகும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் படையல் தயார் செய்ய வேண்டும். பணியாரம், அதிரசம் என இனிப்பு பலகாரம், கன்னிகளுக்கு மிகவும் பிடிக்கும்.
எனவே படையலில் பணியாரம், அதிரசம் என இனிப்பு வகைகள் கண்டிப்பாக இடம் பெறும். அதன்பிறகு வடை - பாயசத்துடன், அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.
குடும்ப தலைவி அனைவருக்கும் பரிமாறி விட்டு, தானும் ஒரு இடத்தில் இலையைப் போட்டு அனைவருடன் அமர்ந்து சாப்பிடுவார். இந்த சமபந்தி விருந்து, கன்னி வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வழிபாட்டிற்காகவே வருடத்துக்கு ஒரு முறை குடும்பத்தினரை ஒன்று சேர்த்து விடுகிறாள், கன்னி தெய்வம்.
அந்த தெய்வமானவள், 'தன் வீட்டில் அண்ணன்- தம்பி என்று உறவு முறைகள் அனைவரும் ஒன்றாக நின்று தம்மை வணங்க வேண்டும்' என ஆசைப்படுவாள். அப்படி வணங்கும்போது மனம் குளிர்ந்து அவர்களுக்கு வேண்டிய வரம் கொடுப்பாள்.

ஒரு வீட்டில் கன்னி தெய்வம் துடியாக இருக்கிறாள் என்றால், அவ்வீட்டில் செய்வினை கோளாறு நீங்கிவிடும். பேய் - பிசாசு அண்டாது. நோய் நொடிகள் தீர்ந்து விடும்.
தற்போது சில குடும்பத்தினர், கன்னி தெய்வத்துக்கு கோவில் கட்டியும் வழிபாடு நடத்தி வருகிறார்கள். கன்னி வழிபாடு செய்ய முடியாத சிலர், கேரள மாநிலம் திரு வனந்தபுரத்தில் உள்ள பரசுராமர் கோவிலில் இருக்கும் கன்னி தெய்வத்தை வழிபடுகின்றனர். அங்குள்ள நெல்லி மரத்தை வணங்கிய பின்னர், கன்னியின் வயதுடையவர்களுக்கு அன்னதானம் வழங்குகின்றனர்.
- பித்ரு லோகம் புறப்படும் முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும்.
- தர்ப்பணம் செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில், முன்னோர்களை வழிபடும் வழக்கம் நம்மிடையே உள்ளது. ஆனாலும் ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
ஆடி அமாவாசை அன்று பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்பட்டு வரும் நம்முடைய முன்னோர்கள், மகாளய அமாவாசையில் நம் வீட்டு வாசலில் உணவுக்காக நின்று, நாம் படைக்கும் உணவுகளையும், நாம் கொடுக்கும் தர்ப்பணத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
பின்னர் அவர்கள் தை அமாவாசையில் மீண்டும் பித்ருலோகம் புறப்பட்டுச் செல்வதாக ஐதீகம். அதனால்தான் ஆடி, மகாளயம், தை அமாவாசைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தை அமாவாசை அன்று, பித்ரு லோகம் புறப்படும் முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும். எனவே அன்றைய தினமும் நீர்நிலைகளில், நம்முடைய முன்னோர்களுக்கு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள்.
'பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூட கருணை காட்ட முடியாது' என்கிறது கருட புராணம். மறைந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தை யுடன் செய்யும் காரியம் என்பதால் இது 'சிரார்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.
எனவே தை அமாவாசை திதியன்று ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையல் வைத்து, தர்ப்பணம் செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகியோருக்கு நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய, மிக முக்கிய கடமையாக இது இருக்கிறது. சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், தண்ணீா், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும்.
இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அவை உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக நம்பிக்கை நிலவுகிறது.

இந்த தர்ப்பணமானது பித்ருக்களுக்கு ஏதேனும் குறைகள், கோபங்கள் இருந்தால், அவர்களின் மனதை குளிரச் செய்து, நம் குடும்பத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காதபடி காக்கும் என்கிறார்கள். பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான், ஸ்ரீராமரிடம் கூறி இருக்கிறார்.
அதனால்தான், வனவாச காலத்தில் இருந்த போது தன் தந்தைக்குச் செய்ய முடியாத தர்ப்பணத்தை, சீதையை மீட்டு வந்தபிறகு, ராமேஸ்வரத்தில் வைத்து ராமபிரான் செய்தாா் என்கிறது புராணங்கள்.
தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதன்பின் வீட்டிற்கு வந்து, முன்னோர்களின் படத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை சூட்ட வேண்டும்.
படத்திற்கு முன்பாக முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களுக்குப் பிடித்த உணவுகளை படைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும். தை அமாவாசைக்கு முன்தினம் கோதுமை தவிடு, அகத்திக்கீரை ஆகியவற்றை ஊறவைத்து, அதை அமாவாசை அன்று பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, வீட்டில் வழிபாடு செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது.
தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. கிழக்கு திசை பார்த்தபடி அமர்ந்துதான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
- இன்று போதாயன அமாவாசை.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-15 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி இரவு 8.09 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம்: பூராடம் காலை 9.20 மணி வரை பிறகு உத்திராடம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று போதாயன அமாவாசை. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் ரதோற்சவம். திருமொச்சியூர் சூரிய நயினார்கோவில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திரு நறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத் தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-உதவி
மிதுனம்-உவகை
கடகம்-ஜெயம்
சிம்மம்-குழப்பம்
கன்னி-பரிசு
துலாம்- பரிசு
விருச்சிகம்-புகழ்
தனுசு- அமைதி
மகரம்-ஓய்வு
கும்பம்-கவனம்
மீனம்-உழைப்பு






