என் மலர்
வழிபாடு
- முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம்கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-11 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி நாளை விடியற்காலை 5.23 மணி வரை பிறகு துவாதசி.
நட்சத்திரம்: அஸ்தம் (முழுவதும்)
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம்கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-நட்பு
மிதுனம்-வரவு
கடகம்-பக்தி
சிம்மம்-வெற்றி
கன்னி-பரிசு
துலாம்- பாராட்டு
விருச்சிகம்-பொறுமை
தனுசு- பொறுப்பு
மகரம்-ஆதரவு
கும்பம்-புகழ்
மீனம்-போட்டி
- கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது.
- இணையதளம் வாயிலாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும்.
திருவண்ணாமலை:
மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது.
விழாவில், அன்னதானம் வழங்க விரும்பும் தனி நபர்கள், நிறுவன்ங் www.foscos.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இதுதவிர, திருவண்ணாமலை - செங்கம் சாலை, பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் இன்று முதல் வருகிற 4-ந்தேதி வரை நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்து அனுமதி பெறலாம்.
விண்ணப்பத்துடன் கடவுச் சீட்டு அளவு புகைப்படம் முகவரிக்காக ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட சான்றின் நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடம் நாள், நேரத்தில் மட்டுமே அன்ன தானம் வழங்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கக்கூடாது.
பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப் பாதையில் இருந்து 100 மீட்டர் உள்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய்த்தொற்று உள்ளவர்கள் அன்னதானம் சமைக்கவோ, வழங்கவோ அனுமதிக்கக் கூடாது.
வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். உணவுப் பொருள்கள் தரமானதாக, தூய்மையானதாக, கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும்.
இந்த வழிகாட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மேலும், விவரங்களுக்கு 044-237416, 9047749266, 9865689838 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சபரிமலைக்கு ரூ.41கோடியே 64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
- பக்தர்களை சன்னதிக்கு நேராக அனுப்ப சில மாற்றங்கள்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன்கோவிலில் மண்டல பூஜை கடந்த 16-ந்தேதி தொடங்கி யது. தினமும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு நேற்றுடன் 9 நாட்கள் ஆகும் நிலையில், 6 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். ரூ.41கோடியே 64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பக்தர்கள் வருகை மற்றும் வருமானம் அதிகம் என்று தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்யாமல் திரும்ப வேண்டிய அவசியம் இருக்காது என்றும், அதற்கான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யவும், தினமும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவதற்கும் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது.
கூடுதல் நேரம் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று பக்தர்களின் தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை செய்ய தேவசம்போர்டு தயாராகி வருகிறது. தற்போது பதினெட்டாம் படி ஏறும் பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னிதான பகுதியில் உள்ள மேம்பால பகுதியில் நடந்து செல்ல வேண்டும். கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில் பக்தர்கள் இந்த மேம்பால பகுதியில் வெகுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படும்.
இதனை மாற்றுவது குறித்து தேவசம்போர்டு பரிசீலனை செய்து வருகிறது. பதினெட்டாம் படி ஏறி வரும் பக்தர்களை, பாலத்தில் ஏறச்செய்யாமல் நேரடியாக சன்னதிக்கு முன்புறம் அனுப்புவதன் மூலம் பக்தர்கள் கூடுதல் நேரம் சாமியை தரிசிக்க முடியும். ஆகவே அந்த முறையை செயல்படுத்த தேவசம் போர்டு திட்டமிட்டு வருகிறது.
இதுதொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித் துள்ளார். அவ்வாறு பாலத்தில் ஏறிச் செல்லாமல் பக்தர்களை சன்னதிக்கு நேராக அனுப்பவதற்கு சில மாற்றங்களை செய்ய வேண்டும். அதனை செய்த பிறகு இந்த முறை அமல்படுத்தப்படலாம் என தெரிகிறது.
- கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
- மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-10 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: தசமி பின்னிரவு 3.17 மணி வரை பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: உத்திரம் மறுநாள் விடியற்காலை 4.01 மணி வரை பிறகு அஸ்தம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பன் கொலு தர்பார் காட்சி. மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை. திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1,008 சங்காபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் கோவிலில் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-நேர்மை
மிதுனம்-சிந்தனை
கடகம்-அனுகூலம்
சிம்மம்-உழைப்பு
கன்னி-சாதனை
துலாம்- வெற்றி
விருச்சிகம்-போட்டி
தனுசு- உறுதி
மகரம்-ஓய்வு
கும்பம்-கவனம்
மீனம்-நட்பு
- கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
- மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-10 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: தசமி பின்னிரவு 3.17 மணி வரை பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: உத்திரம் மறுநாள் விடியற்காலை 4.01 மணி வரை பிறகு அஸ்தம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பன் கொலு தர்பார் காட்சி. மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை. திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1,008 சங்காபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் கோவிலில் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-நேர்மை
மிதுனம்-சிந்தனை
கடகம்-அனுகூலம்
சிம்மம்-உழைப்பு
கன்னி-சாதனை
துலாம்- வெற்றி
விருச்சிகம்-போட்டி
தனுசு- உறுதி
மகரம்-ஓய்வு
கும்பம்-கவனம்
மீனம்-நட்பு
- சங்காபிஷேக தரிசனம் சங்கடங்களையெல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.
- நாளை கார்த்திகை 2-வது சோம வாரமாகும்.
கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில், சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். இந்த சங்காபிஷேக தரிசனம் நம் வாழ்வில் இதுவரை இருந்த சங்கடங்களையெல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு சோமவாரமும் சிவனாருக்கு மிகவும் விசேஷமான நாள். சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று அர்த்தம். சோமன் என்றும் சோமேஸ்வரர் என்றும் இதனால்தான் சிவனாருக்கு திருநாமம் அமைந்தது.
சோமன் என்றால் திங்கள். திங்கள் என்றால் சந்திரன். அந்த சந்திரனையே பிறையென சூடிக்கொண்டிருக்கிறார் சிவபெருமான்.

அதனால்தான், ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவனாரை வணங்குவதும் வழிபடுவதும் மிகுந்த விசேஷமானது என்றும் வியக்கத்தக்க பலன்களை வழங்கவல்லது என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதேபோல், சனிக்கிழமை வருகிற பிரதோஷமும் திங்களன்று வருகிற பிரதோஷமும் மகத்தானவை. மும்மடங்கு பலன்களை வழங்குபவை என்றும் தெரிவிக்கிறார்கள்.
எந்த மாதமாக இருந்தாலும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை, சிவனாருக்கு சிறப்பான நாள். சிவபெருமானை வழிபடுவதற்கு அற்புதமான நாள். அதிலும் குறிப்பாக, கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமை என்பது இன்னும் விசேஷத்துக்கு உரிய நாளாக போற்றப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) கார்த்திகை 2-வது சோம வாரமாகும்.
கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. இது இன்றைக்கு நேற்றைக்கு என்றில்லாமல், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடத்தப்படுகிற அற்புதமான பூஜை.
தமிழகத்தில் பெரும்பான்மையான சிவாலயங்களில் கார்த்திகை சோமவாரத்தில்... சிவனாருக்கு, சிவலிங்கத் திருமேனிக்கு சங்கு கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. 108 சங்கால் அபிஷேகம், 1008 சங்கால் அபிஷேகம் என்றெல்லாம் நடைபெறுகிறது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்சி திருவானைக்காவல் கோயில், திருச்சி திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், தஞ்சை பெரியகோயில், மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் முதலான பெரும்பான்மையான சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும்.
கார்த்திகை மாதத்தின் சோம வார நன்னாளில், சோமநாதருக்கு சோமேஸ்வரருக்கு தென்னாடுடைய சிவனாருக்கு குளிரக் குளிர சங்கால் அபிஷேகம் நடைபெறுவதை கண்குளிரத் தரிசியுங்கள். கவலைகளெல்லாம் இனி பறந்தோடும். துக்கங்களெல்லாம் இனி களையப்படும். சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்துவைப்பார் சிவனார்!

கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தைக் கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லறத்தாரும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள்.
தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. அந்த சங்குதான் மகாவிஷ்ணுவின் இடக்கையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு தெய்வமும் தங்களுக்கென்று தனித்தனியாக சங்குகளை வைத்திருப்பதாக ஆகமங்களும், புராணங்களும் விளக்குகின்றன.
மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என்ற எட்டு வகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாகக் கூறப்படுகிறது. அதில் வலம்புரி சங்குக்கு மட்டும் விசேஷ சக்தி இருப்பதாகச் சாஸ்திரங்கள் சொல்கின்றன.
எந்த வீட்டின் பூஜை அறையில் வலம்புரி சங்கு இருந்தாலும் அங்கு திருமகள் வாசம் செய்வதாக நம்பிக்கையாகும். அந்த இல்லம் லட்சுமி கடாட்சம் பெற்றுச் சிறந்த இல்லமாக விளங்கும்.
எனவே, சங்கின் மகத்துவத்தை அனைவரும் அறிந்துகொண்டு, சோமவார திங்கட்கிழமையான நாளை விரதமிருந்து சிவாலயங்களில் நடைபெறும் சங்காபிஷேகத்தில் கலந்துகொண்டு எண்ணிலடங்கா பலன்களைப் பெறுவோம்.
- மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
- நேற்று 87 ஆயிரத்து 216 பேர் மலை ஏறியுள்ளனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த 15-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். இதனை அதிகரிக்க முடிவு செய்த போது, பக்தர்கள் கூட்டம் குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று பக்தர்கள் அதிக அளவில் சபரிமலை வந்தனர். இன்று காலை 7 மணிக்குள் 18 ஆயிரத்து 648 பக்தர்கள் புனித படிகளில் ஏறியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று 87 ஆயிரத்து 216 பேர் மலை ஏறியுள்ளனர். விடுமுறை தினமான இன்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் தரிசனம் செய்தவுடன் உடனடியாக திரும்பிச் செல்ல தொடங்குவதாகவும், சன்னிதானத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் வரும் நாட்களில் இந்த நெரிசல் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
- தங்கத்தை தோண்டி எடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
- தங்க இருப்பு சீனாவின் பொருளாதாரம் உயர்வதற்கு உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் மிகப்பெரிய தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பிங்ஜியாங் கவுண்டியில் வாங்கு தங்கச் சுரங்கம் உள்ளது.
தரையில் இருந்து 2 ஆயிரம் மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் அமைந்து உள்ள இந்த சுரங்கத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கம் குவிந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுரங்கத்தின் முக்கிய பகுதியில் உள்ள மொத்த தங்க இருப்பு தற்போது 300.2 டன்களை எட்டியுள்ள நிலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இருப்புகளில் 1,000 டன் தங்கம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 600 பில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7 லட்சம் கோடி) ஆகும். இந்த தங்கத்தை தோண்டி எடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
இது குறித்து ஹுனான் மாகாண புவியியல் நிறுவனத்தின் துணைத் தலைவர் லியு யோங்ஜுன் கூறும் போது, இந்த கண்டுபிடிப்பு சீனாவின் கனிம ஆய்வு உத்திக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றார்.
வாங்கு சுரங்கம் சீனாவின் மிக முக்கியமான தங்கச் சுரங்கங்களில் ஒன்றாகும். இங்கு கனிம ஆய்வுக்காக 2020-ம் ஆண்டு முதல், மாகாண அரசாங்கம் 100 மில்லியன் யுவான் (சுமார் ரூ. 115 கோடி) முதலீடு செய்து உள்ளது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்க இருப்பு சீனாவின் பொருளாதாரம் உயர்வதற்கு உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
சீன அரசு 2021-2025-ம் ஆண்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வளங்களின் உள்நாட்டு இருப்புக்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. கனிம ஆய்வுக்கான முதலீட்டை ஆண்டுக்கு ஆண்டு 8 சதவீதம் உயர்த்தி 110.5 பில்லியன் யுவானாக (சுமார் ரூ. 1.27 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- சமயபுரம், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் காலை பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-9 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: நவமி நள்ளிரவு 1.21 மணி வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: பூரம் நள்ளிரவு 1.37 மணி வரை. பிறகு உத்திரம்.
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப்பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-பாசம்
மிதுனம்-ஆதரவு
கடகம்-மாற்றம்
சிம்மம்-போட்டி
கன்னி-ஆதாயம்
துலாம்- சாதனை
விருச்சிகம்-பக்தி
தனுசு- பணிவு
மகரம்-லாபம்
கும்பம்-இன்பம்
மீனம்-நன்மை
- கோவிலில் சில சடங்குகள் செய்து உடைந்த கைவிரலை சீரமைக்கலாம் என தெரிவித்தனர்.
- இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பஞ்சலோக ராமர் சிலை உள்ளது.
இந்த ராமர் சிலையின் கைவிரல் ஒன்று திடீரென சேதமடைந்து துண்டித்து விழுந்தது. கோவிலில் சேதம் அடையும் சிலைகளை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளின் போது சீரமைக்க வேண்டும்.
அடுத்த கும்பாபிஷேகம் 2030-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதுவரை சாமி சிலையின் விரலை சீரமைக்க கூடாது. அது ஆகம விதியை மீறுவதாகும். துண்டிக்கப்பட்ட விரலை பொருத்த காத்திருக்க வேண்டும் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து உடைந்த ராமர் சிலையின் கைவிரல் தங்க கவசத்தால் மூடப்பட்டது. 2021-ம் ஆண்டு முதல் தங்க கவசம் பொருத்தப்பட்ட கைகளுடன் ராமர் சிலை உள்ளது. இந்த நிலையில் புதிதாக பதவி ஏற்ற அறங்காவலர் குழு முன்னிலையில் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது. அப்போது கோவிலில் சில சடங்குகள் செய்து உடைந்த கைவிரலை சீரமைக்கலாம் என தெரிவித்தனர்.
உடைந்து விழுந்த ராமர் சிலையின் கைவிரல் கொண்டுவரப்பட்டது. மீண்டும் சிற்பக் கலைஞர்கள் மூலம் பொருத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பழங்கால ராமர் சிலைக்கு மீண்டும் சக்திகளை கொண்டு வருவதற்கு சிறப்பு திருமஞ்சன பூஜைகள் செய்யப்பட்டன. 1000 ஆண்டு பழமையான ராமர் சிலையின் உடைந்த விரல் பொருத்தப்பட்டதால் ஏழுமலையான் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 63, 731 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 22,890 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3. 94 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று வாஸ்து நாள் (காலை 11.29 மணி முதல் 12.05 மணி வரை வாஸ்து செய்ய நன்று).
- திருஇந்துளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-8 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அஷ்டமி இரவு 11.45 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: மகம் இரவு 11.34 மணி வரை பிறகு பூரம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று வாஸ்து நாள் (காலை 11.29 மணி முதல் 12.05 மணி வரை வாஸ்து செய்ய நன்று). திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில், ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன அலங்கார சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருமஞ்சன அலங்கார சேவை. திருவட்டாறு ஸ்ரீ கேசவப் பெருமாள் திருமஞ்சன அலங்காரம். திருஇந்துளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உழைப்பு
ரிஷபம்-மேன்மை
மிதுனம்-நலம்
கடகம்-நன்மை
சிம்மம்-புகழ்
கன்னி-தெளிவு
துலாம்- பரிசு
விருச்சிகம்-லாபம்
தனுசு- போட்டி
மகரம்-ஓய்வு
கும்பம்-ஆதரவு
மீனம்-கடமை
- தற்போது ரோப்கார் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
- கண் மூடி அமர்ந்த நிலையில் காட்சி தரும் நரசிம்மர்.
சோளிங்கர் மலை மீது தவக்கோலத்தில் வருடத்தின் 11 மாதங்களும் கண் மூடி அமர்ந்த நிலையில் காட்சி தரும் நரசிம்மர் இந்த கார்த்திகை மாதத்தில் மட்டும் தனது கண்ணை திறந்து, தன்னை காண வரும் பக்தர்களை பார்த்த நிலையில் காட்சி கொடுக்கிறார்.
சோளிங்கர் மலையில் வெறும் 24 நிமிடங்கள் எவர் ஒருவர் இருந்து வழிபடுகிறாரோ அவருக்கு மோட்சம் கிடைக்கும் அளவிற்கு நரசிம்மர் அருளை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை. வெறும் 24 நிமிடங்கள் இருந்தாலே மோட்சம் தருவார் என்றால் அதிலிருந்தே இந்த யோக நரசிம்மரின் கருணையை தெரிந்து கொள்ளலாம்.

நினைத்ததும் அருள் தரும் நரசிம்மர்
திருமாலின் தசாவதாரங்களில் மிகவும் சிறப்பானதும், தனித்துவமானதுமான அவதாரம் நரசிம்ம அவதாரம் தான். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன், அசைக்க முடியாத பக்தி மற்றும் நம்பிக்கை உடைய பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு தெய்வம் ஓடி வரும் என்பதை உலகம் அறிய செய்த அவதாரம்.
நாளை என்ற சொல்லே தன்னிடம் கிடையாது என பக்தர்கள் வேண்டிய உடனேயே வந்து அருள் செய்ய கூடிய தெய்வமாக நரசிம்ம மூர்த்தி விளங்குகிறார். நரசிம்மர் எப்படி உக்கிர மூர்த்தியாக இரண்ய வதம் செய்தாரோ, அதை போல் பக்தர்களிடத்தில் கருணாமூர்த்தியாக இருக்கக் கூடியவர்.

தவக்கோலத்தில் காட்சி தந்த நரசிம்மர்
பெருமாள், தனது பக்தன் பிரகலாதனுக்காக, தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக வெளிப்பட்டு, இரண்யனை வதம் செய்த புராணம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பெருமாள் தனது பக்தனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த காட்சி அங்கு மட்டும் தானே நிகழ்ந்தது.
அந்த நரசிம்ம மூர்த்தியின் கோலத்தை தரிசிக்க தேவர்கள், முனிவர்கள் என பலரும் ஆர்வம் கொண்டு ஆங்காங்கே தவம் செய்தனர். அப்படி தவம் செய்த முனிவர்களையும், தேவர்களையும் காலகேய அசுரர்கள், கும்போதர அசுரர்கள் என அசுர கூட்டங்கள் பலவிதமாக துன்புறுத்தி வந்தன.
இதனால் ஆஞ்சநேயரிடம் தனது சங்கையும், சக்கரத்தையும் கொடுத்து அசுரர்களை வதம் செய்யும் படி அனுப்பி வைத்தார் நரசிம்மர்.
அசுரர்கள் அழிந்த பிறகு சப்த ரிஷிகளும், தேவர்களும், ஆஞ்சநேயரும் கேட்டுக் கொண்டதன் படி அவர்கள் தவம் செய்த அதே மலை மீது, தவம் செய்யும் நிலையில் யோக நரசிம்மராக திருக்காட்சி கொடுத்தார். தேவர்களும், ரிஷிகளும் தரிசித்த அதே கோலத்தில் இன்றளவும் சோளிங்கர் மலை மீது யோக நரசிம்மராக பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.
கண் திறக்கும் நரசிம்மர்
ராணிபேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சோளிங்கர் மலை மீது தவக்கோலத்தில் வருடத்தின் 11 மாதங்களும் கண் மூடி அமர்ந்த நிலையில் காட்சி தரும் நரசிம்மர், இந்த கார்த்திகை மாதத்தில் மட்டும் தனது கண்ணை திறந்து, தன்னை காண வரும் பக்தர்களை பார்த்த நிலையில் காட்சி கொடுக்கிறார்.
தாயாரிடம் கோரிக்கை
நரசிம்மர் வீற்றிருக்கும் இந்த மலைக்கோவிலை அடைய 1305 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். அருகில் அமைந்துள்ள சிறிய மலையில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தரும் ஆஞ்சநேயரை தரிசிக்க 406 படிகள் ஏறி செல்ல வேண்டும்.

ரோப்கார்
தற்போது ரோப்கார் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி 1000 பக்தர்கள் மலைக்கு செல்லலாம். தற்போது ஏராளமான பக்தர்கள் ரோப்காரில் சென்று நரசிம்மரை தரிசித்து வருகின்றனர்.
இந்த தலத்தில் பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை தாயாரிடமும், ஆஞ்சநேயரிடமும் சொன்னால் போதும் அவர்கள் நரசிம்மரிடம் நமது வேண்டுதலை சேர்த்து விடுவார்கள் என்பது நம்பிக்கை.
கடிகாசலம்
108 திவ்ய சேதங்களில் ஒன்றாக திகழும் இந்த தலத்திற்கு கடிகாசலம் என்றொரு பெயரும் உண்டு. ஒரு நாளிகை அல்லது கடிகை என்பது 24 நிமிடங்களை குறிக்கும்.
24 நிமிடங்கள் இருந்தால் போதும்
இந்த தலத்தில் 24 நிமிடங்கள் எவர் ஒருவர் இருந்து வழிபடுகிறாரோ அவருக்கு மோட்சம் கிடைக்கும் அளவிற்கு நரசிம்மர் அருளை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை.

ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தரிசனம்
நரசிம்மர் கண் திறந்திருக்கும் கார்த்திகை மாதமான 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் விஷேச சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் 3-வது ஞாயிற்றுக்கிழமை மிகவும் விஷேசமானதாக கருதப்படுகிறது. அன்று ஏராளமான பக்தர்கள் மலையில் குவிந்து நரசிம்மரை தரிசனம் செய்து வருகின்றனர்.
கற்கண்டு, வெல்லம், வாழைப்பழம், தயிர்சாதம் நைவேத்தியமாக படைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். சில பக்தர்கள் வேட்டி-சேலையும் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
மனவளர்ச்சி குன்றியவர்கள், பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதி இருப்பவர்கள், யோக நரசிம்மரை வழிபட்டால் விரைவில் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தாம்பத்ய பிரச்சனை, குழந்தையின்மை, திருமணத்தடை நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது.
கேட்ட வரத்தை அள்ளி தருபவராக நரசிம்மர் அருள்பாலித்து வருகிறார். நரசிம்மர் கண் திறந்திருக்கும் இந்த கார்த்திகை மாதத்தில் சோளிங்கர் மலைக்கு சென்று நரசிம்மரை தரிசித்து, அவரின் அருளை பெறலாம்.






