என் மலர்
வழிபாடு
- இன்று மாத சிவராத்திரி.
- திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-14 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திரயோதசி காலை 9.23 மணி வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: சுவாதி காலை 11.32 மணி வரை. பிறகு விசாகம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சுபகூர்த்த தினம். மாத சிவராத்திரி. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். திருமாவிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுபம்
ரிஷபம்-நற்செய்தி
மிதுனம்-சுகம்
கடகம்-நன்மை
சிம்மம்-செலவு
கன்னி-மேன்மை
துலாம்- சாந்தம்
விருச்சிகம்-ஆதாயம்
தனுசு- சாதனை
மகரம்-புகழ்
கும்பம்-பக்தி
மீனம்-உற்சாகம்
- பல மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
- மழை காரணமாக பலர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள முடியாக நிலை ஏற்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்து வரும் நிலையில், தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்திருக்கிறது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதன் காரணமாக, மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செயது வருகின்றனர்.
வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மற்ற நாட்களில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருக்கிறது. நேற்றைய தினம் இரவு 9 மணி நிலவரப்படி 63,242 பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். அவர்களில் ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் 10,124 பேர் வந்துள்ளனர்.
இந்தநிலையில் சபரி மலையில் இன்றும் பக்தர் கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட போது, வலிய நடைப் பந்தலில் 5 வரிசையில் மட்டும் பக்தர்கள் வரிசையில் இருந்தனர். அதிகாலை 5 மணிக்கு பிறகு வலிய நடைப்பந்தலில் பக்தர்கள் காத்து நிற்காமல் பதினெட்டாம் படி ஏறிச் சென்றனர்.
தமிழக பக்தர்கள் குறைவான அளவில் வருவதே சபரிமலையில் கூட்டம் இல்லாமல் இருக்க காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் பலர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள முடியாக நிலை ஏற்பட்டிருக்கிறது. மழை மற்றும் புயல் அச்சுறுத்தல் நீங்கியபிறகு தமிழகத்தில் இருந்து வழக்கம்போல் அதிக பக்தர்கள் சபரிமலைக்கு வரத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜாதகத்தில் லக்னத்துக்கு 3, 5, 9 இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் பித்ரு சாபம் இருக்கிறது.
- முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.
பித்ரு தோஷ நிவர்த்தி பூஜை முறையானது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சித்தர்களும், ரிஷிகளும் கடைபிடிக்கும் வழிபாட்டுமுறையாகும், இந்த தோஷம் ஒருசமயம் சிவனுக்கும் நிகரான அகத்தியர், கொங்கணர் போன்ற முனிவர்களையே தன் சித்திகளை அடையாவண்ணம் தடுத்ததாக வரலாறுகள் சொல்கின்றன.
ஜாதகத்தையும், நவகிரகங்களை நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.

முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் வேள்விகள் செய்து கோவில் கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்காது என்பது சித்தர்களின் வாக்கு.
நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.
நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம்.
நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் யாரைப் பார்த்தாலும் பித்ரு சாபம் இருக்கிறது. பித்ரு தோஷம் இருக்கிறது. பரிகாரம் செய்ய வேண்டும். 'எந்த ஜென்மத்தில் செய்த என்ன பாவமோ! இந்த ஜென்மத்தில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்! என்ற புலம்பலை நம்மில் பல பேர் பல பேரிடம் கேட்டிருப்போம்.

முதலில் பித்ரு தோஷம், பித்ரு சாபம் என்றால் என்ன என்பதைப் பற்றிய சந்தேகத்தை தீர்த்துக் கொள்வோம். அதன்பின்பு இதற்கான பரிகாரத்தை பார்க்கலாம்.
ஒருவருடைய ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 3, 5, 9 ஆம் இடங்களில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் அவருக்கு கட்டாயம் பித்ரு தோஷம், பித்ரு சாபம் இருக்கிறது என்பதை குறிக்கிறது.
ராகு இருந்தால் அப்பா வழி முன்னோர்களால் பித்ரு சாபம். கேது இருந்தால் அம்மா வழி முன்னோர்களால் பித்ரு சாபம் இருக்கிறது என்பதை குறிக்கும்.
ஒவ்வொரு தலைமுறையிலும் தற்கொலைகளும், கொலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு தலைமுறையில் இயற்கையான மரணத்தை அடையாதவர்களின் ஆத்மா, மறுபிறவி அடையாமல் இந்த பூலோகத்திலேயே திரிந்து கொண்டிருக்கும். அந்த ஆத்மாவானது நான்காம் ஐந்தாம் தலைமுறையினரை பிடிக்கும்.
அதாவது நான்கு தலைமுறைக்கு முன்னாள் நடந்த அகால மரணத்திற்கான சாபத்தை, அனுபவிக்கப் போவது நான்கு தலைமுறைக்கு தள்ளியிருக்கும் சந்ததியினரே. அதாவது பாட்டன் பூட்டன் சொத்தோடு சேர்த்து, அந்த பாவங்களையும் சுமக்கப் போவது நான்காவது தலைமுறை தான்.
ஒருவருக்கு அப்பா வழியில் பித்ருதோஷம் இருக்கிறது என்றால் அப்பா உடன் பிறந்தவர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் பித்ரு தோஷம் இருக்கும் என்பதே உண்மை.
இந்த தோஷமானது நீங்கள் எவ்வளவுதான் நல்ல காரியத்தில் ஈடுபட்டாலும் அதற்கான பலனை உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கவே சேர்க்காது.

இந்த பித்ரு தோஷமானது நீங்க, 'விஜயாபதி' விசுவாமித்திர மகாலிங்க சுவாமி' திருக்கோவிலில் 'நவகலசயாகம்' செய்ய வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று நவகலச யாகத்தை குடும்பத்தோடு செய்தால், 100 நாட்களுக்குள் உங்கள் குடும்பத்திற்கு இருக்கும் நீண்டகால பிரச்சனையான பித்ரு தோஷம் நீங்கும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.
இந்த யாகத்தை செய்துவிட்டு வந்தாலும், அதன்பின்னர் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் உங்களது வீட்டின் அருகில் இருக்கும் பழமையான சிவாலயங்களுக்கு சென்று, 9 ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவேண்டும்.
இப்படியாக 12 அமாவாசை அன்றும் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு இருக்கும் பித்ரு தோஷம் நீங்கி, உங்களுடைய வாழ்க்கை வளமாக மாறும் என்பது நம்பிக்கைக்குரிய ஒன்று. பித்ரு தோஷத்தால் தவித்துக் கொண்டிருப்பவர்கள் விஜயாபதி தலத்தில் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.
இந்த தர்ப்பணத்தை செய்ய தவறியவர்கள், முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று ஆற்றங்கரையில் அல்லது தன் சொந்த வீட்டில் (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும்.
அப்படி செய்ய இயலாதவர்கள் விஜயாபதி தலத்துக்கு செல்லும்போது இத்தகைய பித்ரு பூஜைகள் செய்து பலன் அடையலாம்.
சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது அவ்வாறு செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தையும், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என புராணங்கள் கூறுகிறது.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம்.
- ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-13 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி காலை 7.27 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: சித்திரை காலை 9.07 மணி வரை பிறகு சுவாதி
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி மாலை ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-லாபம்
மிதுனம்-முயற்சி
கடகம்-உயர்வு
சிம்மம்-நன்மை
கன்னி-வரவு
துலாம்- வெற்றி
விருச்சிகம்-சுகம்
தனுசு- பயணம்
மகரம்-பெருமை
கும்பம்-நற்செய்தி
மீனம்-பாராட்டு
- குப்புற படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.
- தெற்கு திசையில் தலைவைத்து படுத்தால் - ஓங்குயிர்
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்கள் பல்வேறு பாடல்கள் பாடியுள்ளனர்.
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
மேலும் எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

கிழக்கு திசையில் தலைவைத்து படுத்தால் - உத்தமம்
தெற்கு திசையில் தலைவைத்து படுத்தால் - ஓங்குயிர்
மேற்கு திசையில் தலைவைத்து படுத்தால் - மத்திமம்
வடக்கு திசையில் தலைவைத்து படுத்தால் - மரணம்
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது. இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப்படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.

குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும்.
மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு ஜீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்
- ராமபிரான் யோக நித்திரை நிலையில் எழுந்தருளியுள்ளார்.
- ராமபிரானின் கைகளில் ஆயுதங்கள் ஏதுமில்லை.
கோவில் தோற்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள நெடுங்குணம் என்ற இடத்தில் ராமபிரான் மிக அரிதான திருக்கோலத்தில் யோக நித்திரை நிலையில் எழுந்தருளியுள்ளார்.

மகாபாரதத்தை இயற்றிய வியாசரின் மகன் சுகப் பிரம்ம மகரிஷி. இவர் கிளித் தலையும், மனித உடலும் கொண்டவர். ஒரு சமயம் சுகப் பிரம்ம ரிஷி, இத்தலத்தில் இருந்து ராமபிரானை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருந்தார்.
இலங்கையில் ராவணனை வதம் செய்து முடித்து திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில், வழியில் இத்தலத்தில் சுகப் பிரம்ம ரிஷியின் ஆசிரமத்துக்கு ராமபிரான் எழுந்தருளினார். சுகப்பிரம்ம மகரிஷி தான் பாதுகாத்து வைத்திருந்த அரிய சுவடி ஒன்றை, ராமனுக்கு வழங்கினார்.
சுகப் பிரம்ம ரிஷியிடம் இருந்து பெற்ற ஓலைச்சுவடியை அனுமனிடம் கொடுத்து அவற்றைப் படிக்குமாறு பணித்தார். அனுமனும் பத்மாசனத்தில் அமர்ந்து அதனைப் படிக்கலானார்.
அனுமன் வாசிக்க ராமபிரான் அதற்கு ஞான விளக்கம் தந்தார். பின்னர் சுகப் பிரம்ம மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று இந்தத் தலத்தில் ஒருநாள் தங்கினார் ராமபிரான்.

இத்தலத்தில் சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமனுக்கு சாஸ்திர விளக்கங்களை உபதேசித்த ராமன், அதே கோலத்தில் இங்கு எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.
ஐந்து நிலை ராஜகோபுரம் பிரமாண்டமான வடிவத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும் வலது புறம் கல்யாண மண்டபமும், இடப்புறம் பதினாறு கால் ஊஞ்சல் மண்டபமும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. வெளி திருச்சுற்றில் பலிபீடம், கொடிமரம், இரண்டாம் மதில், ஐந்து நிலை கோபுரம் காட்சி தருகின்றன.
கருவறையில் வலப்புறத்தில் லட்சுமணன் நின்ற கோலத்தில் வில் அம்போடு காட்சி தருகிறார். இடதுபுறத்தில் சீதாபிராட்டியார் அமர்ந்த திருக்கோலத்தில் வலது கையில் தாமரை ஏந்தி காட்சி தருகிறார். நடுவில் ராமபிரான் பத்மாசனத்தில் அமர்ந்து தனது வலது கரத்தினை சின்முத்திரை அமைப்பில் மார்பில் வைத்தபடி, கண்களை மூடி யோக நிலையில் காட்சி தருவது தனிச் சிறப்பு.
ராமபிரானின் கைகளில் ஆயுதங்கள் ஏதுமில்லை. ராமருக்கு எதிரில் அனுமன் பத்மாசனத்தில் அமர்ந்து தனது கரங்களில் பிரம்ம சூத்திர சுவடிகளை ஏந்தி வாசிக்கும் கோலத்தில் காட்சி தருவதும் வேறெங்கும் காண முடியாத அற்புதக் காட்சியாகும். இத்தலத்தின் உற்சவர் விஜயராகவப் பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியோடு காட்சி தருகிறார்.
அர்த்த மண்டபத்தின் வடப்புறம் உள்ள மேடை மீது விஷ்வக்சேனர், ஆளவந்தார் மற்றும் ஆழ்வார்கள் சிலாரூபத்தில் காட்சி தருகின்றனர். வெளி திருச்சுற்றின் வடமேற்கில் கிழக்கு நோக்கிய திசையில் செங்கமலவல்லி தாயார் சன்னிதி அமைந்துள்ளது.

யோக ராமர் திருக்கோவிலின் நேர் எதிரே சஞ்சீவி அனுமன் சன்னிதி உள்ளது. இந்த அனுமன் சன்னிதியில் இரட்டை ஆஞ்சநேயர் காட்சி தருவதும் ஒரு அபூர்வ அமைப்பாகும்.
இத்தலத்தில் சக்கரத்தாழ்வார் சன்னிதி, கல்யாண வேங்கடேசப் பெருமாள் சன்னிதி முதலான சன்னிதிகளும் அமைந்துள்ளன. இத்தலத்தின் திருச்சுற்று மண்டபத்தின் வடக்குப்பகுதியில் விகனசர் சன்னிதி உள்ளது.
விகனசர் தன் பின்னிரு கரங்களில் ஆழியும் சங்கும் கொண்டும், முன் வலக்கரத்தினை சின் முத்திரையில் வைத்தும், முன் இடக்கரம் அஸ்த முத்திரையும் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்தின் தீர்த்தம் சுகர் தீர்த்தம். இது சூரிய தீர்த்தம் என்றும் வழங்கப்படுகிறது.

ஆடி மாதத்தில் பவித்ரோத்ஸவமும், வைகாசி மாதத்தில் கருடசேவை, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி விழாவும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள யோகராமரை தரிசிப்பவர்களுக்கு ஞானம் கைகூடும். இல்லறம் செழிக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
வந்தவாசியில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் உள்ளது, நெடுங்குணம் திருத்தலம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-12 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி (முழுவதும்)
நட்சத்திரம்: அஸ்தம் காலை 6.35 மணி வரை பிறகு சித்திரை
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராமர் காலை திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர் வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் காலை அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் திருப்புளிங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மன் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-ஊக்கம்
மிதுனம்-நலம்
கடகம்-புகழ்
சிம்மம்-லாபம்
கன்னி-பெருமை
துலாம்- கவனம்
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- கீர்த்தி
மகரம்-குழப்பம்
கும்பம்-இரக்கம்
மீனம்-இன்பம்
- பாரம்பரிய வழக்கப்படி பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- தேங்காய்களை கொப்பரை தொழிலாளர்கள் சட்ட விரோதமாக சேகரிக்க தடை.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களது வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்து வருகிறது. கேரள ஐகோர்ட்டும் பக்தர்கள் வசதிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் ஆர்க்கிட் மலர்கள் மற்றும் இலைகளை அலங்காரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று தேவசம் போர்டுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
பாரம்பரிய வழக்கப்படி பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவற்றை தினமும் மாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், எஸ்.முரளி கிருஷ்ணா ஆகியோர் உத்தர விட்டு உள்ளனர்.

மேலும் பக்தர்கள் உடைக்கும் தேங்காய்களை கொப்பரை தொழிலாளர்கள் சட்ட விரோதமாக சேகரிப்பதை தடுக்க சன்னிதானம் நிர்வாக அதிகாரி மற்றும் தேவசம் விஜிலென்ஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
- திருப்பதியில் நேற்று 63, 637 பேர் தரிசனம் செய்தனர், 24,016 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10 முதல் 19-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது.
வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் வெங்கய்ய சவுத்ரி கூறியதாவது:-
வைகுண்ட ஏகாதசி ஜனவரி 10 முதல் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி நடைபெறும் 10 நாட்களும் சாதாரண பக்தர்களும் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்வதற்காக விஐபி பிரேக் தரிசனம், ஏழை குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோருக்கான சிறப்பு ஆர்ஜித தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் வைகுண்ட ஏகாதசி நாட்களில் அன்னதான பிரசாத கூடத்தில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதியில் நேற்று 63, 637 பேர் தரிசனம் செய்தனர், 24,016 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.20 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- சூரியனுடன் ராகு அல்லது கேது அல்லது சனி அல்லது மாந்தி இருப்பது பிதுர் தோஷம்.
- கன்றுடன் கூட பசுவை தானம் செய்ய வேண்டும்.
ஜோதிடர்கள் சில நேரங்களில் நமது ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கிறது, அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். என்ன காரணம் தெரியுமா?
சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதத்தில் பிறந்தோருக்கும், மாத பிறப்புக்கு முன்பின் 15 நாழிகையில் பிறந்தோருக்கும் பிதுர்தோஷம் உண்டாகிறது.

ஜாதகத்தில் சூரியனுடன் ராகு அல்லது கேது அல்லது சனி அல்லது மாந்தி இருப்பது பிதுர் தோஷம் என்று சொல்வார்கள். இவர்களுடன் குரு அல்லது புதன் சம்பந்தம் எனில் குலதெய்வ கோபமும் உண்டு என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
வீட்டில் பராமரிப்பு இல்லாமல் பெரியோர்கள் இறந்து விட்டார்கள் என்றாலோ துர் மரணங்களால்" விஷம், தற்கொலை போன்ற காரணங்களால் இறந்திருந்ததாலோ அந்த காரணம் வருங்கால சந்ததியினருக்கு பிதுர் தோஷமாக உருவெடுத்து வந்து அவர்தம் நல்வாழ்வுக்கு தடையாக வந்தடையும் " என்பது ஆன்றோர் கூற்று.
எனவே அதற்கு தோஷப் பரிகாரமாக காசியில் பித்ரு சிரார்த்தம், அல்லது ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் அல்லது கன்றுடன் கூட பசுவை தானம் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்ய இயலாது எனில் தினமும் காலையில் குளித்து சூரியனை நமஸ்காரம் செய்து பின்னர் கீழ் உள்ள சுலோகத்தை பொருளுணர்ந்து கூறிவிட்டு தூய்மையான இடத்தில் நீர் விட்டு காகத்திற்கு அன்னமிட வேண்டும். தினமும் இவ்வாறு செய்தால் பித்ருக்கள் மனமகிழ்ச்சியுடன் ஆசி வழங்குவார்கள் என்பதால் தோஷம் நீங்கப் பெற்று நல்வாழ்வு பெறுவது கண்கூடாக காணும் உண்மை.

பித்ரு சுலோகம்:
ஓம் நம: பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவே மயாய ச ஸுகதாய ப்ரசன்னாய ஸுப்ரீதாய மகாத்மனே"
"என் பிறப்பிற்குக் காரணமான முன்னோர்களே! தெய்வீக சக்தி பெற்றவர்களே! உங்கள் ஆசியால் எங்களுக்கு நல்வாழ்வும் மகிழ்ச்சியும் உண்டாகட்டும். நல்லவர்களால் போற்றப்படும் உங்களை வணங்குகிறோம்" என்பது இந்த சுலோகத்தின் பொருள்.
மானிட அவதாரம் எடுத்து வந்த ராம பிரான் ராமேஸ்வரத்தில் தனது தந்தை தசரதருக்கு" பிதுர் சிரார்த்தம் "செய்து வழிபட்டார். அது மானிட கடமைகளில் ஒன்று என்பதை வலியுறுத்தியுள்ளார்.
எனவே நாமும் ஸ்ரீராமபிரான் வழிநின்று நமது ஜென்ம கடன் தீர்த்து நல்வாழ்வு பெற்று சுபிட்சமாக வாழ்வோம்.
- பாட்னாவிலிருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கயா.
- இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் புனித தலமாகத் திகழ்கிறது.
கயா செல்லாமல் காசி யாத்திரை நிறைவு பெறாது என்பார்கள்.
புராண காலத்தில் கயாசுரன் என்பவன், பிரம்மனை நோக்கி கடுமையான தவம் புரிந்தான். அவன் முன்பாக தோன்றிய பிரம்மன், "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு கயாசுரன், "தேவர்கள் அனைவரையும் வெல்லும் வரம் எனக்கு வேண்டும்" என்ற வரத்தைக் கேட்டு பெற்றான்.

இதையடுத்து தேவர்கள் அனைவரையும் வென்ற கயாசுரன் அவர்களை துன்புறுத்தினான். இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று தஞ்சமடைந்தனர். இதையடுத்து கயாசுரனுடன் போரிட்ட சிவபெருமான், அவனை காசியில் வைத்து சூலத்தால் குத்தி, அவனது தோலை உரித்ததாக புராணத்தில் உள்ளது.
இன்னொரு புராணத்தின் படி, கயாசுரனால் துன்பப்பட்ட தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தனர். கயாசுரன் இருப்பிடம் சென்ற விஷ்ணு, "உனக்கு தேவையான வரத்தை தருகிறேன். தேவர்களை துன்புறுத்துவதை நிறுத்து" என்றார்.

உடனே கயாசுரன், "பாவங்களைப் போக்கும் அனைத்து தீர்த்தங்களையும் விட, நான் உயர்ந்த தீர்த்தமாக இருக்க வேண்டும். அதற்கு என் புனிதமான உடலை தொடுபவர்கள் அனைவரும் மோட்சத்திற்குச் செல்ல வேண்டும்" என்ற வரம் கேட்டான். மகாவிஷ்ணுவும் அந்த வரத்தை அருளினார்.
அதன்படி கயாசுரனின் உடல், புனிதமானதாக மாறியது. பாவம் செய்பவர்கள் அனைவரும், கயாசுரனின் உடலை தொட்டு மோட்சத்திற்குச் செல்லத் தொடங்கினர்.
இதைக் கண்ட எமதர்மன், "இது என்ன அநியாயமாய் இருக்கிறது. பாவம் செய்பவர்கள் அனைவருமே மோட்சத்துக்கு செல்வர் என்றால், நரக தண்டனை யார்தான் அனுபவிப்பது" எனக் கேட்டு விஷ்ணு பகவானிடம் முறையிட்டார்.
உடனே விஷ்ணு பகவான் பிரம்மனை அழைத்து "நீ கயாசுரனிடம் சென்று 'உன் உடல் புனிதமானது. ஆகவே அதைக் கொண்டு யாகம் செய்ய விரும்புகிறோம். எனவே யாகம் செய்ய உன் உடலைத் தர வேண்டும்' என்று கேள்" என்றார்.
பிரம்மனும் அப்படியே கயாசுரனிடம் கேட்க, அவனும் தன்னுடைய உடலைக் கொடுத்தான். அவனின் உடல் மீது தேவர்கள் புடை சூழ அமர்ந்து, பிரம்மன் வேள்விளைத் தொடங்கினார். வேள்வி முடியப்போகும் தருவாயில், கயாசுரனின் தலை அசைய ஆரம்பித்தது.

பிரம்மனின் உத்தரவுப்படி, கயாசுரனின் தலை மீது ஒரு கல்லை எடுத்து வைத்தார், எமதர்மன். அப்போதும் கயாசுரனின் தலை அசைவது நிற்கவில்லை. அனைவரும் மகாவிஷ்ணுவை வேண்டினர்.
அப்போது மகாவிஷ்ணு அங்கு தோன்றி, தன் கதாயுதத்தால் கயாசுரனின் தலை அசையாதபடி தடுத்து நிறுத்தினார். மேலும் கயாசுரனிடம் "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார்.
அதற்கு கயாசுரன், "நான் கேட்பது பழைய வரம்தான் என்றாலும், அதையே எனக்கு தந்தருள வேண்டும். இந்த இடம் என் பெயரால் வழங்கப்பட வேண்டும். இங்கு வந்து யார் ஒருவர் தன் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தாலும், அவர்கள் செய்த பாவங்கள் விலகி, முக்தி கிடைக்க வேண்டும்" என்றான்.

விஷ்ணு பகவானும் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என வரம் கொடுத்ததாக சொல்வார்கள். இந்த புராண நிகழ்வு ளின் காரணமாகவே, இங்குள்ள பல்குனி நதியும், விஷ்ணு பாதமும், அட்சய வடமும் புனிதமானதாக கருதப்படுகிறது.

பாட்னாவிலிருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, கயா. ஒரு காலத்தில் வரலாற்று ரீதியாக புகழ்பெற்ற மகத பேரரசின் ஒரு பகுதியாக இருந்த இந்த நகரம், பல்குனி நதியின் ஓரத்தில் அமைந்துள்ளது. இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் இது ஒரு புனித தலமாகத் திகழ்கிறது.
- 28-ந்தேதி பிரதோஷம்.
- 30-ந்தேதி அமாவாசை.
26-ந்தேதி (செவ்வாய்)
* சுமார்த்த ஏகாதசி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* சமநோக்கு நாள்.
27-ந்தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* வைஷ்ணவ ஏகாதசி.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமாலுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
28-ந்தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* சமநோக்கு நாள்.
29-ந்தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
30-ந்தேதி (சனி)
* அமாவாசை.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தல்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
1-ந்தேதி (ஞாயிறு)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
2-ந்தேதி (திங்கள்)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம். திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.






