என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருணகிரிநாதர்"

    • வேடன் உருவில் வந்த முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு வழிகாட்டியதாக கூறப்படுகிறது.
    • எந்த முருகன் கோவிலிலும் இல்லாத வகையில், நைவேத்தியமாக சுருட்டு படைக்கும் பழக்கம் இக்கோவிலுக்கு உண்டு.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, விராலிமலை முருகன் கோவில். மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலில் முருகப்பெருமான் வள்ளி - தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்.

    தல வரலாறு

    ஒரு காலத்தில் இந்தப் பகுதி குரா எனும் ஒரு வகை மரங்கள் நிறைந்த காடாக இருந்துள்ளது. ஒரு முறை வேடன் ஒருவன் வேட்டையாட வந்தபோது, வேங்கை ஒன்று அவன் கண்ணில் பட்டது. அவன், அதனை வேட்டையாட வேண்டும் என்பதற்காக விரட்டி சென்றான். அப்போது, அந்த வேங்கை வேகமாக ஓடி ஒரு குரா மரத்துக்கு அருகில் வந்ததும் காணாமல் மறைந்தது. இதனைக் கண்ட வேடன் ஆச்சரியப்பட்டான்.

    அப்போது, திடீரென்று அங்கு தோன்றிய மயிலும், விபூதி வாசனையும் அங்கே முருகப்பெருமான் சூட்சுமமாக இருப்பதை உணர்த்தியது. பிறகு, ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவ்விடத்தை ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு முருகனின் விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர் என்று கூறப்படுகிறது.

    ஒரு முறை அருணகிரி நாதர் திருச்சியில் உள்ள வயலூர் தலத்துக்கு வந்தார். அங்குள்ள முருகப்பெருமானை திருப்புகழ் பாடி விட்டு புறப்படும்போது, 'விராலிமலைக்கு வா' என்று முருகப்பெருமான் அசரீரியாக அழைத்தார். இதையடுத்து, விராலிமலையை நோக்கி பயணித்த அருணகிரிநாதருக்கு விராலிமலை முருகன் இருக்கும் இடம் புலப்படவில்லை. அப்போது வேடன் உருவில் வந்த முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு வழிகாட்டியதாக கூறப்படுகிறது. பின்பு அருணகிரிநாதர், விராலிமலை முருகப்பெருமானை வழிபட்டு அஷ்டமா சித்தி பெற்றார் என்கிறது தல புராணம்.

    அருணகிரிநாதர், திருப்புகழில் இத்தலத்து முருகப் பெருமானை 18 முறை மனமுருகிப் பாடியுள்ளார். வசிஷ்டரும், அவரது மனைவி அருந்ததி தேவியாரும் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது.

     

    கோவில் அமைப்பு

    கோவில் 207 படிகளுடன் மலை உச்சியில் அமைந்துள்ளது. கோவிலில் இடும்பன், மீனாட்சி சுந்தரேசுவரர், சந்தானக்கோட்டம், காசி விஸ்வநாதர் விசாலாட்சி ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. கருவறையில் முருகப்பெருமான், சுமார் பத்தடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி தருகிறார். இவர் ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன், வள்ளி - தெய்வானை சமேதராக கல்யாண திருக்கோலத்தில் அருள்புரிகின்றார். பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், அருணகிரிநாதர், சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னிதிகளும் உள்ளன.

    இந்த ஆலயத்தில் காற்றாடி மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. மலை அடிவாரத்தின் தென்பகுதியில் சரவணப் பொய்கை உள்ளது.

    விழாக்கள்

    கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்த சஷ்டித் திருவிழா (சூரசம்காரம்), கார்த்திகை தீபம், நவராத்திரி விழா, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்பட பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.

    குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், நேர்த்திக்கடனாக தங்களுக்கு குழந்தை பிறந்ததும் இங்கு வந்து ஆறுமுகனிடம் குழந்தையை கொடுத்து விடுவர். பின்பு குழந்தையின் தாய்மாமன் அல்லது சிற்றப்பன்மார்கள் மூலம் ஆறுமுகனிடம் தவிட்டைக் கொடுத்து, குழந்தையை பெற்றுக்கொள்கின்றனர்.

    எந்த முருகன் கோவிலிலும் இல்லாத வகையில், நைவேத்தியமாக சுருட்டு படைக்கும் பழக்கம் இக்கோவிலுக்கு உண்டு. ஒரு சமயம் கருப்பமுத்து என்ற பக்தர், பெருங்காற்று, மழைக்கு இடையில் வீட்டுக்கு செல்ல முடியாமல் குளிரில் நடுங்கி நின்றார். அப்போது அவருக்கு அருகில் நின்ற ஒருவர் குளிருக்கு இதமாக இருக்கும் என சுருட்டு ஒன்றை கொடுத்துள்ளார். பின்பு இருவரும் ஆற்றை கடந்து செல்லும்போது, அருகில் இருந்த நபரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர் கோவிலுக்கு சென்று பார்த்தபோது, அங்கு முருகப்பெருமானுக்கு முன்பாக சுருட்டு இருப்பதைகண்டு, தம்மோடு வந்தது முருகப்பெருமான் என்பதை உணர்ந்து கொண்டார். அதன்பின்பு தான் கோவிலில் சுருட்டு படைக்கும் வழக்கம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.

    கோவில், காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திருச்சியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையில் இருந்து வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

    • திருப்புகழில் சிங்கார வேலனைப் போற்றிப் புகழ்கிறார் அருணகிரிநாதர்.
    • திருப்புகழில் சிக்கல் சிங்கார வேலவரின் சிறப்புகளும், சிக்கல் தலத்தின் பெருமைகளும் கூறப்படுகின்றன.

    சிக்கல் சிங்காரவேலவர் கோவில் முருகப் பெருமானின் அறிவிக்கப்படாத 7-ம் படைவீடாகப் போற்றப்படுகிறது.

    விஸ்வாமித்திரர், அகத்தியர், கார்த்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.

    'கன்னல் ஒத்த மொழிச் சொல்' எனத் தொடங்கும் திருப்புகழில் சிக்கல் சிங்கார வேலவரின் சிறப்புகளும், சிக்கல் தலத்தின் பெருமைகளும் கூறப்படுகின்றன.

    'அற்ப குணம் படைத்தவர்கள் பக்கம் என் மனதை செலுத்தவிடாமல், இயல், இசை, நாடகம் என்று முத்தமிழில் விருப்பம் கொண்டவனாக விளங்கும் நீ, எனக்கு அருள் புரிவாயாக!

    அரக்கர்களின் தலைகளை பூமியில் உருளச் செய்யும் வீரம் கொண்டவனே!

    கொடிய பாம்பின் விஷத்தைப் போன்ற மனம் கொண்ட சூரனை, வெற்றி காண வேலாயுதத்தை உடையவனே! செம்மை குணம் கொண்ட பெரியோரின் உள்ளத்தில் வீற்றிருக்கும் சிக்கல் சிங்கார வேலவரே!'

    - என்று தனது திருப்புகழில் சிங்கார வேலனைப் போற்றிப் புகழ்கிறார் அருணகிரிநாதர்.

    இங்கு வரும் பக்தர்கள், 'சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் போர் முடித்து சிக்கல் தவிர்க்கின்ற சிங்கார வேலவனை நித்தம் பாடுவோம்' என்று கூறியும், திருப்புகழைப் பாடியும் தங்கள் வழிபாட்டை நிறைவு செய்கின்றனர்.

    • மிகப்பெரும் பணக்காரராக திகழ்ந்த இவர், எப்போதும் விலைமாது வீடே கதி என்று கிடந்தார்.
    • முருகப்பெருமான் அவரை தம் கைகளில் ஏந்தி காப்பாற்றினார்.

    திருவண்ணாமலையில் வாழ்ந்தவர் அருணகிரிநாதர்.

    மிகப்பெரும் பணக்காரராக திகழ்ந்த இவர், சொகுசு பேர் வழியாக இருந்தார்.

    எப்போதும் விலைமாது வீடே கதி என்று கிடந்தார்.

    இதனால் செல்வம் எல்லாம் கரைந்தது.

    ஒரு கட்டத்தில் சகோதரி திருமணத்துக்காக வைத்திருந்த நகைகளையும் விற்று விலைமாதர்களிடம் செலவழித்து விட்டார்.

    தவறான பழக்கம் காரணமாக அவர் குஷ்ட நோயால் பிடிக்கப்பட்டார்.

    செல்வத்தையும் இழந்து, உடல் நலமும் பாதிக்கப்பட்டதால் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    திருவண்ணாமலை கோவிலுக்கு சென்ற அவர் வல்லாள மகாராஜா கோபுரத்தில் ஏறி கிழே குதித்தார்.

    ஆனால் முருகப்பெருமான் அவரை தம் கைகளில் ஏந்தி காப்பாற்றினார்.

    அவரது குஷ்ட நோயை குணப்படுத்தி அருளிய முருகப்பெருமான், இனி தம்மை புகழ்ந்து பாடும்படி பணித்தார்.

    அருணகிரிநாதரின் நாக்கில் ''முத்தை தரு'' என்று எழுதி பதிகங்கள் பாட உத்தர விட்டார்.

    அதன் பிறகு அருணகிரிநாதர் சுவாமிகள் முருகனை புகழ்ந்து ஏராளமான பதிகங்கள் பாடினார்.

    இதனால் இத்தலம் முருகனின் புகழ்பாடும் தலமாகவும் அமைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் இப்படி முருகப்பெருமானின் சிறப்பான சன்னதி இல்லை.

    அறுபடை வீடுகளில் நடக்கும் அனைத்து திருவிழாக்களும் இத்தலத்து முருகன் சன்னதியில் நடத்தப்படுகிறது.

    தைப்பூசத்தன்று பக்தர்கள் 1008 காவடி எடுத்து ஆடி வருவது கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

    இதற்காக 1008 காவடிகளும் ஆண்டுதோறும் திருவண்ணாமலை தலத்திலேயே தயாரிக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இப்படி காவடிகள் தயாரிக்கப்படுவதில்லை.

    • வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டியவர் அருணகிரிநாதர்.
    • வேலானது இருளினை அகற்றக் கூடிய சுடரொளிகளான தீ.

    கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவுப்படுத்துகின்றது.

    எனவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறைபொருளாக அமைந்துள்ளது.

    வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று பொருதவீரன், துங்கவடிவேலன், ப்ரசண்ட வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும் அருணகிரியார் காலம் முதல் முருகனது வேல் புதிய கோணத்தில் செல்வாக்குப் பெறலாயிற்று, ஆழ்ந்த முருகபக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு, வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.


    வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின் சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார்.

    வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமான அருணகிரியார் வேலானது இருளினை அகற்றக் கூடிய சுடரொளிகளான தீ, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடிய குறியீடெனக் குறிப்பிட்டுள்ளார்.

    வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானது, தமிழகத்தில் முருகனைச் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதைத் தெளிவுப்படுத்துகின்றது. இன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம், மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகிய இடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது.

    திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ள முருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவ சுடர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வெகு தொலைவு வரை முருகன் கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.

    மேலும் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை. இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாக உள்ளன.

    தமிழகத்தில் சுந்தரவேல், சக்திவேல், கதிர்வேல், கனகவேல், வடிவேல், குமரவேல், கந்தவேல், ஞானவேல், வேலப்பன், வேல்ச்சாமி, வேலன், வேலாயுதம் போன்ற பெயர்கள் ஆண்களுக்கு அதிகமாகச் சூட்டப்பட்டுள்ளதைக் பார்க்கும் போது வேலின் பெருமையை உணரலாம்.

    ×