search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "viralimalai murugan temple"

    • விராலிமலையில் உள்ளது பிரசித்தி பெற்ற முருகன் கோவில்.
    • தேரோட்டம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

    விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி முருகன் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் அங்குள்ள கொடிமரத்தில் காப்பு கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. இதனால் கோவிலின் அடிவாரத்தில் உள்ள தேரை தூய்மை செய்யும் பணி நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து தூய்மை செய்யும் பணி முடிந்து தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    அதன்பின்னர் அலங்காரம் செய்யும் பணிகள் தொடங்கியது. மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வைகாசி விசாகத்திற்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி படிகளில் ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய ஏதுவாக வெயிலின் தாக்கம் பாதங்களில் தெரியாதவாறு படிகளில் கூலிங் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து மண்டகபடிதாரர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இத்தலத்தில் முருகன், அருணகிரிநாதருக்கு அஷ்டமசித்திகளை வழங்கி திருப்புகழ் பாட செய்துள்ளார். மேலும் இந்த கோவில் நாரதருக்கு பாவ விமோச்சனம் வழங்கிய தலமாகவும் விளங்கி வருகிறது.

    இத்தனை சிறப்புமிக்க இத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்தாண்டும் கந்தசஷ்டி விழாவானது இன்று(வியாழக்கிழமை) காலை கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

    இதனைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளிலும் நாகம், பூதம், சிம்மம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முருகன், சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், அன்று மாலை 6 மணிக்கு விராலிமலை கீழ ரதவீதியில் சூரசம்ஹாரமும் நடக்கிறது.

    தொடர்ந்து முருகன் தங்க கேடயத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். 14-ந்தேதி மலைமேல் உள்ள முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

    விராலிமலை முருகன் கோவில் மலைக்கு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் நேரடியாக செல்லும் வகையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
    புதுக்கோட்டை:

    வருவாய்த்துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் 509 பயனாளிகளுக்கு ரூ.76 லட்சம் மதிப்பீட்டிலும், விராலிமலையில் 301 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விராலிமலை மலங்குளம் ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட உள்ளது. இதேபோல் விராலிமலை சந்தை ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. விராலிமலை முருகன் கோவில் மலைக்கு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் நேரடியாக செல்லும் வகையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விராலிமலை சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மணப்பாறை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. திருச்சியில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் மயில், நாகம், பூதம், யானை, சிம்மம், குதிரை போன்ற பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன் தினம் முருகன், வள்ளி-தெய்வானையுடன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் விராலூருக்கு சென்றார். பின்னர் நேற்று அதிகாலை அங்கிருந்து விராலிமலைக்கு வந்தார். அதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகன், வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.


    சிறப்பு அலங்காரத்தில் முருகன், வள்ளி-தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    தொடர்ந்து காலை 10 மணிக்கு புதுக்கோட்டை திருக்கோவில்கள் செயல் அலுவலர் ராமராஜா, விராலிமலை தாசில்தார் செல்வவிநாயகம் ஆகியோர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது கூடிநின்ற திரளான பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து முருகனை வழிபட்டனர். பின்னர் 11.15 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.

    இதில் விராலிமலை, புதுக்கோட்டை, இலுப்பூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி ஆங்காங்கே பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து, மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையில் ஏராளமான போலீசார் செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து இன்று மதுரை சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. நாளை விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.
    ×