என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்கியது
Byமாலை மலர்8 Nov 2018 4:31 AM GMT (Updated: 8 Nov 2018 4:32 AM GMT)
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இத்தலத்தில் முருகன், அருணகிரிநாதருக்கு அஷ்டமசித்திகளை வழங்கி திருப்புகழ் பாட செய்துள்ளார். மேலும் இந்த கோவில் நாரதருக்கு பாவ விமோச்சனம் வழங்கிய தலமாகவும் விளங்கி வருகிறது.
இத்தனை சிறப்புமிக்க இத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்தாண்டும் கந்தசஷ்டி விழாவானது இன்று(வியாழக்கிழமை) காலை கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
இதனைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளிலும் நாகம், பூதம், சிம்மம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முருகன், சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், அன்று மாலை 6 மணிக்கு விராலிமலை கீழ ரதவீதியில் சூரசம்ஹாரமும் நடக்கிறது.
தொடர்ந்து முருகன் தங்க கேடயத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். 14-ந்தேதி மலைமேல் உள்ள முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
இத்தனை சிறப்புமிக்க இத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்தாண்டும் கந்தசஷ்டி விழாவானது இன்று(வியாழக்கிழமை) காலை கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
இதனைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளிலும் நாகம், பூதம், சிம்மம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முருகன், சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், அன்று மாலை 6 மணிக்கு விராலிமலை கீழ ரதவீதியில் சூரசம்ஹாரமும் நடக்கிறது.
தொடர்ந்து முருகன் தங்க கேடயத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். 14-ந்தேதி மலைமேல் உள்ள முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X