என் மலர்
வழிபாடு
- 4-ந்தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது.
- அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழா காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நேற்று இரவு தொடங்கியது.
இன்று பிடாரி அம்மன் உற்சவமும், நாளை விநாயகர் உற்சவமும் நடைபெற உள்ளன. 3 நாட்கள் நடைபெறும் எல்லை தெய்வ வழிபாட்டுக்குப் பிறகு மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் 4-ந்தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது. இதையடுத்து 10 நாள் உற்சவம் ஆரம்பமாகிறது.
6-ம் நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்கள் வீதி உலாவும் அன்று இரவு தங்கத் தேரோட்டமும் நடைபெறும். 7-ம் நாள் உற்சவத்தில் பஞ்ச ரத மகா தேரோட்டம் 10-ந் தேதி நடைபெறும்.
அன்று ஒரே நாளில் 5 தேர்கள் மாட வீதியில் வலம் வரும். ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு அடுத்த தேரின் புறப்பாடு இருக்கும். காலையில் தொடங்கும் மகா தேரோட்டம் நள்ளிரவு வரை நடைபெறும்.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கார்த்திகை தீபத் திருவிழா 13-ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.
மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தைக் காணலாம்.
முன்னதாக அருணாசலேவரர் கோவில் தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளத் தங்க கொடிமரம் முன்பு அர்த்த நாரீஸ்வரர் காட்சி தருவார்.
இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். இதையடுத்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெற்றதும் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறும்.
கார்த்திகை தீப திருவிழாவில் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது.
- சபரிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- மழையில் நனைந்தபடி சென்று சாமி தரிசனம்.
திருவனந்தபுரம்:
"பெஞ்சல்" புயல் காரணமாக தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கேரள மாநிலத்திலும் பல மாவங்டங்களில் பலத்த மழை பெய்கிறது.
நேற்று பல மாவட்டங்களில் கனமழை கொட்டிய நிலையில் இன்று வயநாடு, கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு "ரெட் அலார்ட்" விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் 204 மில்லிமிட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டயம், இடுக்கி, பத்தினம்திட்டா, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.
பத்தினம்திட்டா மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. அதிலும் சபரிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 2-வது நாளாக மழை பெய்தது.
கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அய்யப்ப பக்தர்கள் மலை யேறிச் சென்றார்கள். மேலும் சன்னிதானத்திலும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.
பலத்த மழை காரணமாக பம்பை ஆற்றில் நேற்றே தண்ணீர் வரத்து அதிக ரித்தது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் பம்பை ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் தண்ணீர் வரத்தை கண்காணிக்கும் பணியில் வருவாத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
கேரளாவில் மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.மலைப்பாங்கான பகுதி களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் அந்த பகுதி மக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
- ஆந்திரா முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது.
- திருப்பதிக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது.
திருப்பதி:
பெஞ்ஜல் புயல் காரணமாக ஆந்திரா முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. திருப்பதி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருப்பதியில் மழை மற்றும் குளிர்ந்த காற்று வீசுவதால் பக்தர்கள் மழையில் நனைந்தபடியும் குளிரில் நடுங்கியபடியும் தரிசனம் செய்தனர்.தொடர் மழையின் காரணமாக திருப்பதிக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது.
இதனால் நேற்று 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை முதல் பக்தர்கள் நேரடியாக இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் பக்தர்கள் 1 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். 1 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் திருப்பதி மலையில் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகிறது. மலைப் பாதையில் செல்லும் இடங்களில் அருவி போல தண்ணீர் கொட்டுகிறது.
மேகக் கூட்டங்களால் திருப்பதி மலை ரம்மியமாக காட்சி அளித்தது.
திருப்பதியில் நேற்று 67,496 பேர் தரிசனம் செய்தனர். 19,064 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.33 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- பைரவர் சிவனின் 64 திருஉருவத்தில் ஒருவர் ஆவார்.
- செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம்.
சிவனின் அம்சமான கால பைரவரை எந்தெந்த நாளில், 12 ராசியினர் வழிட்டுவது சிறப்பு, எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம்.
பைரவர் சிவனின் 64 திருஉருவத்தில் ஒருவர் ஆவார். சொர்ண கால பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்
பைரவரின் சன்னதி ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் இருக்கும். அவர் ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தார் என்பதால், ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி தினம் மிகுந்த விசேஷமாக பார்க்கப்படுகிறது.

பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம் ஆகும்.
பைரவர் விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும். இத்தகைய சிறப்பு மிக்க பைரவரை 12 ராசிக்காரர்கள் அதற்குரிய கிழமைகளில் வழிபட்டால், சிறந்த பலனை அடையலாம்.

ஞாயிற்றுக்கிழமை
சிம்ம ராசியினர் ஞாயிற்றுக் கிழமையில் வழிபடுவதால், திருமணம் கைகூடும். இந்த கிழமையில் சிம்ம ராசி உள்ள ஆண்கள், பெண்கள் இருவரும் ராகு காலத்தின் போது அர்ச்சனை, ருத்ராட்ச அபிஷேகம் செய்து வடை மாலை சாற்றி வழிபட்டால், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.
திங்கட்கிழமை
கடக ராசியினர் திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பிட்டு, நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால், கண் சம்பந்தமாள நோய்கள் குணமாகும்.
செவ்வாய்க்கிழமை
மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் செவ்வாய்க் கிழமையில் பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம். செவ்வாய்க் கிழமைகளில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம்.
புதன்கிழமை
மிதுனம், கன்னி ராசியினர் புதன் கிழமைகளில் பைரவரை வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். புதன்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி வாங்கும் யோகம் கிடைக்கும்.

வியாழக்கிழமை
தனுசு, மீன ராசியினர் பைரவரை வியாழக்கிழமைகளில் வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக பைரவருக்கு வியாழக் கிழமையில் விளக்கேற்றி வழிபட்டால் பில்லி சூனியம் விலகும் என்பது ஐதிகம்.
வெள்ளிக்கிழமை
ரிஷபம், துலாம் ராசியினர் வெள்ளிக்கிழமை அன்று கால பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம். வெள்ளிக் கிழமை மாலையில் வில்வ இலையாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும்.
சனிக்கிழமை
மகரம், கும்ப ராசியினர் சனிக்கிழமையன்று பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம். சனி பகவானுக்கு பைரவர் தான் குரு ஆவார். இதனால் அஷ்டமசனி, ஏழரை சனி அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லதே நடக்கும் என்பது ஐதிகம். மேலும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச திபம் ஏற்றி வழிபட்டால் காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி நல்லவை வந்து சேரும்.
- சிவன் கோவில்களில் கார்த்திகை மாத சிறப்பு சோமவார அபிஷேகம்.
- கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-17 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பிரதமை நண்பகல் 1.06 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: கேட்டை மாலை 4.36 மணி வரை பிறகு மூலம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சந்திர தரிசனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்தியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1008 சங்காபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ அராளகே சியம்மன் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேதஸ்ரீ மகாலிங்கசுவாமி கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதரவு
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-பாசம்
கடகம்-நற்செயல்
சிம்மம்-பாராட்டு
கன்னி-வெற்றி
துலாம்- கவனம்
விருச்சிகம்-ஆர்வம்
தனுசு- சுகம்
மகரம்-நலம்
கும்பம்-பயணம்
மீனம்-கீர்த்தி
- கடந்த ஆண்டை விட ரூ.15.89 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.
- அப்பம், அரவணா விற்பனை மூலம் ரூ.32 கோடி வருவாய் வந்துள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது.அன்றைய நாள் முதல் தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை வந்து செல்கின்றனர்.
முதலில் சில நாட்கள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் படிப்படியாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தேவசம் போர்டு செய்துள்ளது.
சீசன் தொடங்கிய 12 நாட்களில் சபரிமலைக்கு 9 லட்சத்து 13 ஆயிரத்து 437 பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3 லட்சத்து 59 ஆயிரத்து 515 அதிகம். இது போல வருவாயும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் ரூ.47.12 கோடி வருவாய் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு ரூ.63.01 கோடியாக வருவாய் உள்ளது. 12 நாட்களில் கடந்த ஆண்டை விட ரூ.15.89 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது. அப்பம், அரவணா விற்பனை மூலம் ரூ.32 கோடி வருவாய் வந்துள்ளது.
- சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-16 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அமாவாசை நண்பகல் 12.19 மணி வரை. பிறகு பிரதமை.
நட்சத்திரம்: அனுஷம் பிற்பகல் 3.23 மணி வரை. பிறகு கேட்டை.
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், காஞ்சீபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் தலங்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப்பெருமாள் ஸ்ரீவிபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. வைத்தீஸ்வரன் கோவில் அலங்காரகருக்கும், ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதரவு
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-பாசம்
கடகம்-நற்செயல்
சிம்மம்-பாராட்டு
கன்னி-வெற்றி
துலாம்- கவனம்
விருச்சிகம்-ஆர்வம்
தனுசு- சுகம்
மகரம்-நலம்
கும்பம்-பயணம்
மீனம்-கீர்த்தி
- இன்று சர்வ அமாவாசை.
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-15 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி காலை 11.03 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம்: விசாகம் நண்பகல் 1.39 மணி வரை பிறகு அனுஷம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர், திலதர்ப்பணப்புரி, திருவெண்காடு கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜப் பெமாள், திருச்சேறை ஸ்ரீ சாரநாதப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்ட பதி திருமஞ்சன அலங்கார சேவை. திருவட்டாறு ஸ்ரீ கேசவப் பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷணழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-ஆதாயம்
மிதுனம்-ஆர்வம்
கடகம்-ஆதரவு
சிம்மம்-நட்பு
கன்னி-புகழ்
துலாம்- கவனம்
விருச்சிகம்-உதவி
தனுசு- பொறுமை
மகரம்-லாபம்
கும்பம்-பொறுப்பு
மீனம்-போட்டி
- கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.
- குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை அழைத்துச்சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப் பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்து வரும் நிலையில், தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சபரி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்காக சபரி மலையில் இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாக, மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செயது வருகின்றனர்.
வாரத்தின் இறுதி நாட்க ளான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மற்ற நாட்களில் அதிகாலை நடை திறக்கப்படும் நேரத்தில் மட்டும் சில மணி நேரம் பக்தர்கள் கூட்டம் இருக்கிறது. மற்ற நேரங்களில் கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.
இந்தநிலையில் சபரிமலைக்கு வரும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனத்துக்கு வரிசையில் காத்து நிற்பதை தவிர்க்கும் விதமாக, அவர்களுக்கு சிறப்பு வாயில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அவர்கள் பதினெட்டாம்படி ஏறிய பிறகு சன்னதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வாயில் வழியாக முதல் வரிசையை அடைந்து சாமி தரிசனம் செய்யலாம்.
குழந்தைகள் தங்களின் பெற்றோரில் ஒருவரை தங்களுடன் இந்த வழியில் அழைத்துச்சென்று சாமி தரிசனம் செய்யலாம். இந்த சிறப்பு வாயிலை பயன்படுத்தி இன்று ஏராளமான பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்தார்கள்.
- பணரீதியான பிரச்சனைகள் தீர 8 சனிக்கிழமை வழிபட வேண்டும்.
- ஜீவசமாதி வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிட கூடாது.
* தங்களது நியாயமான பிரச்சனைகள் தீர திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் இவ்வாறு 8 திங்கட்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்ய வேண்டும்.
* குலதெய்வம் தெரியாதவர்கள், குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளானவர்கள், குலதெய்வ வழிபாட்டை மறந்தவர்கள், குல தெய்வத்தை அறியாமல் இருந்து, அதனால் கஷ்டப்படுபவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும். இப்படி 8 செவ்வாய்க் கிழமைகளுக்கு தொடர்ந்து ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.

* வேலைக்குப் போய்க்கொண்டிருப்பவர்கள் மற்றும்சுயதொழில் செய்பவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய விரும்புவோர், புதன் கிழமைகளில் மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 8 புதன் கிழமைகளுக்குச் செய்து வர, நல்ல பொருளாதாரத் தன்னிறைவை அடைய முடியும்.
* தனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தகுந்த குருவைத் தேடுபவர்கள், வியாழக்கிழமைகளில் மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி 8 வியாழக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது.
* பணரீதியான பிரச்சனைகள் இருப்போர், பண நெருக்கடியில் இருப்பவர்கள் அதிலிருந்து மீள வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது.
* பண நெருக்கடி, தொழில் மந்தநிலை, குடும்பப் பிரச்சனைகள் என எல்லாவிதமான பிரச்சனைகளும் தீர விரும்புவோர் சனிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்துவர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 8 சனிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்துவிட்டாலே போதுமானது.
* நீண்டகாலமாக வழக்குடன் போராடிக்கொண்டிருப்பவர்கள் ஞாயிறு மாலை 5 முதல் 7 மணிக்குள் மேற்கூறியவாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 8 ஞாயிற்றுக் கிழமைகளுக்கு வழிபாடு செய்தால் போதுமானது.
* இந்த ஜீவசமாதி வழிபாடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தியாக வேண்டும். இது ரொம்ப முக்கியம். முட்டை, முட்டை கலந்த கேக், பரோட்டா என மறைமுக அசைவ உணவுகளையும் தவிர்த்துவிட்டே இந்த ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும்.

* யார் எந்த ஊரில் இருக்கிறார்களோ, அந்த ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் இந்த வழிபாடுகளை முடிக்கலாம்.
* துக்கம், பிறப்பு முதலியவற்றால் தொடர்ந்து 8 வாரங்கள் செய்ய முடியாவிட்டாலும், விட்டு விட்டு செய்தாலும் போதுமானது. அதே சமயம் 8 வாரத்துக்கு மேல் இந்த ஜீவ சமாதி வழிபாடுகளை பின்பற்றக் கூடாது.
* நாம் நமது வீட்டில் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால், பத்துமுறை ஜபித்தமைக்கான பலன்கள் கிடைக்கும்.
- பஞ்சவனேசுவர ஆலயங்களில் இதுவும் ஒன்று.
- பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.
கோவில் தோற்றம்

திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரு பாடல்பெற்ற தலங்கள் உண்டு. ஒன்று சென்னை திருவள்ளூர் அருகிலும், மற்றொன்று சீர்காழிக்கு அருகிலும் உள்ளது. எனவே திருவள்ளூர் அருகில் இருப்பதை 'வடதிருமுல்லைவாயில்' என்றும், சீர்காழி அருகில் உள்ளதை 'தென்திருமுல்லைவாயில்' என்றும் குறிப்பிடுவர்.
தேவாரப் பாடல் பெற்ற 276 தலங்களில் தென்திருமுல்லைவாயில் திருத்தலமானது, சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 7-வது தலமாகும். இத்தல இறைவன் 'முல்லைவனநாதர்', இறைவி 'அணிகொண்ட கோதையம்மை' என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆலயத்தின் தல விருட்சமாக முல்லைக்கொடி உள்ளது. இங்கே பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.

தலவரலாறு
கரிகால்சோழனின் பாட்டன் முதலாம் கிள்ளி வளவன், சரும நோயால் மிகவும் வேதனையுற்றான். நோய் தீர அரண்மனை வைத்தியர்கள் தீர்த்த யாத்திரையுடன் கூடிய இறை வழிபாட்டை மேற்கொள்ளுமாறு ஆலோசனை கூறினர்.
அதன்படி இவ்வாலயத்திற்கு கடல் நீராடுவதற்காக மன்னன் வந்தான். அக்காலகட்டத்தில் இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகள் நிறைந்திருந்தது. மன்னனும் பரிவாரங்களும் வந்த குதிரையின் குளம்பில் முல்லை கொடிகள் சுற்றிக்கொண்டன. இதனால் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தும்படி மன்னன் உத்தரவிட்டான்.
இதையடுத்து காவலர்கள் அந்தப் பணியில் ஈடுபட்டனர். மன்னனும் தன் வாளால் சில முல்லைக்கொடிகளை வெட்டினான். அப்போது ஓரிடத்தில் வாள் பட்டு, ரத்தம் பெருக்கெடுத்தது. இதனால் மன்னனும், மற்றவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
ரத்தம் வந்த இடத்தில் முல்லைக் கொடிகளை அகற்றி பார்த்தபோது, அங்கே சிவலிங்கம் ஒன்று இருப்பதையும், அதில் இருந்து ரத்தம் கசிவதையும் கண்டு மன்னன் அதிர்ந்தான். ஏற்கனவே சரும நோயால் அவதிப்படும் நிலையில், சிவலிங்கத்தை வேறு வாளால் வெட்டி விட்டோமே என்று மன்னன் கலக்கம் கொண்டான்.
இதற்கு பரிகாரமாக தன்னைத் தானே வாளால் வெட்டிக்கொள்ள முயன்றான், மன்னன். அப்போது சிவபெருமான் ரிஷப வாகனத்தில் அவனுக்கு காட்சி கொடுத்து அருளினார். மன்னனின் சரும நோயும் அகன்றது.
இதையடுத்து அவ்விடத்தில் சுயம்பு லிங்கத்தைக் கொண்டே ஒரு ஆலயத்தை அமைக்க மன்னன் முடிவெடுத்து, அந்தப் பணியை சிறப்பாக முடித்தான். அதுவே சீர்காழி அருகே உள்ள தென்திருமுல்லைவாயில் முல்லைவனநாதர் திருக்கோவிலாகும்.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயத்தில், பல்வேறு மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தைப் பற்றி திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தேவாரம் பாடியிருக்கிறார்கள்.

ஆலய அமைப்பு
இந்த கோவில் முகப்பில் ஏற்கனவே இருந்த கல்ஹாரத்தின் மீது, சமீப குடமுழுக்கின்போது கட்டப்பட்ட ஒரு சிறிய நிலை கோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்தில் சிவசக்தி சமேதராய் ரிஷபாரூடரும், அவரின் இருபுறங்களிலும் விநாயகர் மற்றும் வள்ளி - தெய்வானை உடனாய முருகப்பெருமானும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.
ஆலயத்திற்குள் நுழைய கொடி மரத்து மண்டபம் உள்ளது. மிகப்பெரிய அந்த மண்டபத்துள் பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தியம்பெருமான் இடம்பெற்றுள்ளனர். அதனை அடுத்து மகாமண்டபம், அதற்கு செல்லும் வழியின் அருகில் இருபுறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர்.
மகாமண்டபத்தில் இருந்து அர்த்த மண்டபம் செல்லும் வழியில் துவாரபாலகர்கள் காவல்புரிய, அர்த்த மண்டபத்தை அடுத்த கருவறையில் மிகப்பெரிய திருமேனியினராய் முல்லைவன நாதர் சுயம்புலிங்கமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவரின் மீது வாள் பட்ட அடையாளம் காணப்படுகிறது.
சுவாமி சன்னிதிக்கு வடபுறத்தில் தனி சன்னிதியில், அணிகொண்ட கோதை அம்மன் அருள்கிறார். சுவாமியின் கருவறை கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரரும், அம்பாள் கருவறை கோட்டத்தில் துர்க்கா பரமேஸ்வரியும் உள்ளனர்.
பிரகாரச் சுற்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள எட்டு சன்னிதிகளில் முறையே விநாயகர், நால்வர், அப்பூதி அடிகள், பெருமாள், மதுரபாஷினி, தல வரலாற்று சிற்பம், வள்ளி தெய்வானை உடனாய முருகப்பெருமான், கஜலட்சுமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பிரகார வடக்குச்சுற்றில் வசந்த மண்டபமும், கிணறும், ஈசானிய திக்கில் நவக்கிரகங்கள் மற்றும் பைரவரும், ஆலய வாசலின் உட்புறம் சூரியன் மற்றும் சந்திரனும் உள்ளனர்.
இக்கோவிலின் கிணற்றில் கங்கை ஊற்றெடுப்பதாக நம்பப்படுகிறது. பஞ்சவனேசுவர ஆலயங்களில் இதுவும் ஒன்று. சிதம்பரம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, பல்லவனேசுவரம் ஆகியவை மற்ற நான்கு தலங்கள் ஆகும்.
சூரிய கிரகண நாள், அமாவாசை ஆகிய தினங்களில் இத்தல இறைவனை, முன்னோர்களை நினைத்து மோட்ச தீபம் ஏற்றி பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்து வழிபட்டால், செல்வச் செழிப்பும், நிம்மதியும் வந்துசேரும். அதோடு முக்தியும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.
சிவாலயங்களுக்கு உரிய அனைத்து வார, பட்ச, மாதாந்திர பூஜைகளும் இங்கு நடைபெறுகின்றன. அதோடு சித்திரை புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, மார்கழி நடராஜர் வழிபாடு, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நிகழ்வுகளும் விமரிசையாக நடக்கின்றன.
இரண்டு காலை பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயமானது, தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில், கிழக்கு கடற்கரை ஓரத்தில் தென்திருமுல்லைவாயில் இருக்கிறது.
- இருமுடி கட்டி முடித்ததும் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் வழங்கலாம்.
- ‘சாமியே சரணம்’ என்றபடி தேங்காயில் நெய்யை நிரப்ப வேண்டும்.
* சபரிமலையையும், அங்கே வீற்றிருக்கும் ஐயப்பனையும் நினைத்தால், உடனே நம் நினைவுக்கு வரும் முதல் விஷயம் இருமுடி.
* ஐயப்பன் வழிபாட்டில் இருமுடி மிகவும் புனிதமானது. தனது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கி மனம் உருகி ஐயப்பனை வேண்டும் பக்தர்கள், ஐயப்பனின் திருமேனி அபிஷேகத்துக்குரிய நெய்யையும், பூஜை பொருட்களையும் கட்டி சுமந்து செல்லும் பையைத்தான் 'இருமுடி' என்கிறோம்.

* இருமுடியை கோவிலில் வைத்தும் கட்டலாம், வீடுகளில் வைத்தும் கட்டலாம். வீடுகளில் வைத்து இருமுடி கட்டும் போது, அந்த ஐயப்பனே அங்கு வாசம் செய்வதாக ஐதீகம்.
* இருமுடி கட்டும் நாளில் வீட்டை சுத்தப்படுத்தி ஐயப்பன் படத்தை மலர்களால் அலங்காரம் செய்து, படத்தின் முன்பு நெய் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
* இருமுடி கட்டுவதற்காக வரும் குருசாமியை வாசலில் பாதபூஜை செய்து வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும். குருசாமி வந்ததும் பூஜைகளை தொடங்குவார். அப்போது ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடல்களை பாடுவார்கள்.

* இருமுடி கட்டிக்கொள்ளும் ஐயப்ப பக்தர், குருசாமியின் அருகில் ஐயப்பன் படத்திற்கு முன்பு அமர்ந்து இருக்க வேண்டும். தேங்காயில் நெய் நிரப்பத் தொடங்கும் போது, நமது பிரார்த்தனைகளோடு 'சாமியே சரணம்' என்றபடி தேங்காயில் நெய்யை நிரப்ப வேண்டும். வீட்டில் யாராவது நெய் நிரப்ப விரும்பினால் அவர்களும் தேங்காயில் நெய் நிரப்பலாம்.
* நெய் நிறைந்ததும் அதை மூடி சந்தனம், குங்குமம் பூசி ஒரு சிறிய பையில் வைப்பார்கள். அதற்குள் காணிக்கை பணமும், அன்னதானத்துக்கு சிறிதளவு அரிசியும் வைக்கப்பட்டு இருக்கும். மற்றொரு சிறு பையில் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.
அதில் மஞ்சள் பொடி, பன்னீர், தேன், சந்தன வில்லைகள், குங்குமம், விபூதி, ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, முந்திரி, கற்கண்டு, அச்சு வெல்லம், அவல், பொரி, கடலை, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம்பழம், வெற்றிலை - பாக்கு, பாசிப்பருப்பு, வளையல், கண்ணாடி, சீப்பு, ரவிக்கை துணி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
* முன் முடியில் (இருமுடியில் முன்பக்கம் இருக்கும் கட்டு) நெய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வைத்து கட்டப்படும். பின் முடிக்குள் சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பும் போது பதினெட்டாம் படி அருகில் உடைக்கவும், வீட்டின் முன்பு உடைக்கவும் இரண்டு தேங்காய்களும் மற்றும் மாலை அணிந்தவருக்கு தேவையான பொருட்களும் வைத்து கட்டப்பட்டிருக்கும்.
* வசதி வாய்ப்புகள் இல்லாத முன் காலத்தில், இருமுடியின் பின்முடியில் சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் வழியில் சாப்பிடுவதற்கு தேவையான உணவு பொருட்களையும் சுமந்து சென்றிருக்கிறார்கள்.

* இருமுடி கட்டி முடித்ததும் வீட்டில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் வழங்கலாம். இருமுடி கட்டை குருசாமி தூக்கி நமது தலையில் வைக்கும் போது அவரது பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்.

* தலையில் இருமுடியை சுமந்ததும் வீட்டு வாசலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பி பார்க்காமல் தலையில் இருமுடி கட்டும், மனதில் ஐயப்பன் நினைவுமாக புனித யாத்திரையைத் தொடங்க வேண்டும்.
* இதனால் ஆண்டு தோறும் வீடுகளில் சகல ஐஸ்வரியமும் அதிகரித்து ஆண்டவனின் அருளும் நிறைகிறது.






