என் மலர்tooltip icon

    வழிபாடு

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-22 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி காலை 9.42 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: அவிட்டம் பிற்பகல் 3.52 மணி வரை பிறகு சதயம்

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் அன்ன வாகனத்தில் புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் பூத வாகனத்தில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், திருஇந்துளூர் ஸ்ரீ பரிமளரங்கராஜ பெருமாள், திருச்சேறை ஸ்ரீ சாரநாதப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன அலங்கார சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் காலை சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருமஞ்சன அலங்கார சேவை. திருவட்டாறு ஸ்ரீ கேசவப் பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-சுகம்

    கடகம்-வரவு

    சிம்மம்-முயற்சி

    கன்னி-மாற்றம்

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- உதவி

    மகரம்-இனிமை

    கும்பம்-நட்பு

    மீனம்-பரிவு 

    • வருந்தும் உள்ளங்களுக்கெல்லாம் மருந்தாய் வருபவர் மகேசர் ஒருவரே.
    • விருத்தாச்சலம் அடுத்த இறையூரில் உள்ள தாகம்தீர்த்தபுரீஸ்வரர் கோவில்.

    கோவில் தோற்றம்


    வருந்தும் உள்ளங்களுக்கெல்லாம் மருந்தாய் வருபவர் மகேசர் ஒருவரே. மன உளைச்சலால் வாடுபவர்கள், ஒரு நொடி ஈசனை நினைத்தால் போதும். அவர்களுக்கு சிறந்த உபாயம் கிடைத்திடும். அப்படி ஒரு சிவாலயம்தான், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த இறையூரில் உள்ள தாகம்தீர்த்தபுரீஸ்வரர் கோவில்.

    சமயக் குரவர்கள் நால்வருள் முதன்மையானவரான திருஞானசம்பந்தர், சிதம்பரம், எருக்கத்தம்புலியூர், விருதாச்சலம், பெண்ணாகடம் ஆகிய திருத்தலங்களைத் தொழுது வணங்கி, பாடல் பாடியிருந்தார்.

    இதன்பிறகு திருநெல்வாயில் அரத்துறை என்னும் திருவட்டத்துறை திருத்தலத்தை தரிசிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் கொண்டார்.

    வழக்கமாக தன் தந்தையார் சிவபாதஇருதயர் தோளில் அமர்ந்து திருத்தலங்களை தரிசிக்கச் செல்லும் ஐந்து வயதே ஆன திருஞானசம்பந்தர், திருவட்டத்துறை அரத்துறைநாதரை தரிசிக்க, சூரியன் கடுமையான வெப்பத்தைப் பொழியும் கோடை காலத்தில், அடியார் கூட்டத்தோடு நடந்தே சென்றார்.

    நெடுந்தூரம் நடந்து வந்த காரணத்தால், குழந்தையான திருஞானசம்பந்தர் மிகவும் களைப்படைந்தார். இரவு நேரம் ஆனதால் இறையூர் என்னும் இந்த திருத்தலமான மாறன்பாடியில் தங்கினார். அவரோடு சிவனடியார்கள் பலரும் அங்கே தங்கினர்.

    அப்போது பெருங்கருணைக்கு சொந்தக்காரரான சிவபெருமான், அந்த பகுதியில் ஒரு நீரூற்றை உருவாக்கி, திருஞானசம்பந்தரின் தாகத்தையும், அவரோடு வந்திருந்த அடியார்களின் தாகத்தையும் தீர்த்தார்.

    அன்பிற்கினிய அன்னையான, அன்னபூரணியோ தனது செல்லப்பிள்ளைக்கு அன்னமிட்டு பசி நீக்கினாள். அடியார்களுக்கும் உணவளித்து, அவர்களின் அரும்பசியையும் போக்கினாள். தாகம் தீர்ந்து, பசியாறிய அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

    அப்போது திருஞானசம்பந்தரின் கனவில் தோன்றிய சிவபெருமான், அவரை திருவரத்துறைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அதோடு, முத்து (பல்லக்கு) சிவிகையும், முத்துக்குடையும், முத்துச்சின்னமும் அந்தணர்கள் மூலம் அளித்தருள்வதாக கூறி மறைந்தார்.

    பொழுதும் விடிந்தது. கண் விழித்தார் திருஞானசம்பந்தர். திருவரத்துறையில் இருந்து முத்துச்சிவிகை (பல்லக்கு), முத்துக்குடை மற்றும் ரிஷப முத்திரை பதித்த முத்துச்சின்னம் ஆகியவற்றை அந்தணர்கள் மூலம் அனுப்பிவைத்தார் அரத்துறைநாதர்.

    இதைக்கண்டு திருஞானசம்பந்தருடன் இருந்த அடியார்கள் அனைவரும் அகம் மகிழ்ந்தனர். குளிர்ச்சியான கடல் முத்துக்கள் பதித்த முத்துக் குடையை கையில் ஏந்திய திருஞான சம்பந்தர், முத்துப் பல்லக்கில் ஏறி அமர்ந்தார். அடியவர்கள் முத்துச் சின்னம் ஏந்தியபடி சம்பந்தரை சுமந்தபடி, சிவகோஷத்துடன் அரத்துறை நோக்கி புறப்பட்டனர்.

    முருகப்பெருமானைப் பற்றி பல்வேறு பாடல்கள் இயற்றிய அருணகிரிநாதர், கந்தக்கடவுளே மீண்டும் சம்பந்தராய் அவதரித்ததாக பல பாடல்களில் எடுத்துரைத்துள்ளார். அப்படிப்பட்ட திருஞானசம்பந்தருக்கு, சீர்காழியில் அன்னை பார்வதி பாலூட்டினாள்.


    ஈசனோ, அந்த பிஞ்சுக் குழந்தையின் பாதம் நோகாமல் இருக்க இறையூர் தலத்தில் முத்துக்களால் ஆன பொருட்களை அளித்து அருள்புரிந்தார்.

    நடு நாட்டின் பாடல் பெற்ற தலமான பெண்ணாகடத்திற்கும், திருவட்டத்துறைக்கும் இடையே அமைந்துள்ளது, இந்த இறையூர் திருத்தலம். இந்த ஊரை பெரிய புராணத்தில் சேக்கிழார், 'மாறன்பாடி' என்று குறிப்பிடுகிறார்.

    திருஞானசம்பந்தர் வைப்புத் தலமாக பாடிய நான்கு 'பாடி'களில் ஒன்றாக திகழ்கிறது இறையூர் (மாறன்பாடி) திருத்தலம். எதிர்கொள்பாடி, திருமழப்பாடி, திருவாய்ப்பாடி ஆகியவை மற்ற மூன்று தலங்களாகும். இறையூர் திருத்தலமானது, வெள்ளாறு எனப்படும் நீவாநதியின் வடகரையில் அமைந்துள்ளது.

    ஆலய அமைப்பு

    கிழக்கு நோக்கிய இந்த ஆலயம் தோரண வாயிலுடன் அமைந்துள்ளது. ஆலயத்தின் வெளியே கணபதி தனிச்சன்னிதி கொண்டுள்ளார். விதானத்தின் மேலே, சம்பந்தருக்கு முத்துச்சிவிகை, முத்துக்குடை மற்றும் முத்துச்சின்னம் ஆகியவற்றை சிவபெருமான் அருளிய சுதைச் சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. எதிரே திருஞானசம்பந்தர் தனிச் சன்னிதியில் கையில் பொற்றாளத்துடன் கற்சிலையாக காட்சி தருகிறார்.

    ஆலயத்தின் உள்ளே சென்றால் நேராக நந்தி, பலிபீடம் உள்ளன. அதைக் கடந்து மகா மண்டபம், அர்த்த மண்டபம் இருக்கின்றன. அடுத்ததாக அமைந்த கருவறையில், கருணைக் கடலான தாகம்தீர்த்தபுரீஸ்வரர், சதுர வடிவ ஆவுடையாரின் நடுவே பச்சைக் கல்லால் ஆன லிங்கத் திருமேனியராக காட்சி தருகிறார்.

    இவரை மனமுருக வழிபட்ட பின்னர், மீண்டும் மகா மண்டபம் வந்தால், அங்கே தென்புறமாக அன்னபூரணி அம்மன் வீற்றிருக்கிறார். நான்கு கரங்களைக் கொண்ட இந்த அன்னை, தன் மேல் இரு கரங்களில் பாசம், அங்குசம் ஏந்தியும், கீழ் இரு கரங்களை அபய- வரத ஹஸ்த முத்திரை காட்டியும் அருள்பாலிக்கிறார்.


    ஒற்றை சுற்றுடைய சிறிய ஆலயமான இங்கே, தென்மேற்கில் கணபதி, மேற்கில் வள்ளி- தெய்வானை உடனாய சுப்பிரமணியர் சன்னிதிகள் உள்ளன. திருமாலுக்கும், வாயு பாகத்தில் கஜலட்சுமிக்கும் சன்னிதி இருக்கிறது.

    தென் சுற்றில் நால்வர்களை தரிசிக்கலாம். ஈசான திசையில் நவக்கிரகங்கள், சனி பகவான், பைரவர் வீற்றிருக்கிறார்கள். தல விருட்சமாக பலா மரம் உள்ளது. தல தீர்த்தமாக ஆலயத்தின் எதிரே, சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட தான்தோன்றி தீர்த்தம் காணப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மகம் அன்று, சம்பந்தருக்கு முத்துக்களால் ஆன பொருட்களை வழங்கி, அவருக்கு அபிஷேக- அலங்காரம் செய்து, பல்லக்கில் வைத்து திருவரத்துறைக்கு செல்லும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

    அன்றைய தினம் சிவனடியார்களுக்கு அன்னதானம் வெகு விமரிசையாக நடந் தேறும். இத்தல இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம் செய்து, புதிய ஆடைகள் சாத்தி, வாசனை மலர்களாலும், வில்வத்தாலும் அர்ச்சனை செய்தால், மனத்துயரம் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சி குடியேறும்.

    இந்த ஆலயமானது, தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் சாலையில் சுமார் 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இறையூர் திருத்தலம். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமநத்தத்தில் இருந்து சுமார் 23 கிலோமீட்டரில் விருத்தாச்சலம் செல்லும் சாலையில் இவ்வூர் இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருக்கார்த்திகை தினம் அன்று மொத்தம் 27 விளக்குகள் ஏற்றப்படவேண்டும்.
    • ஐந்து முகம் ஏற்றினால், சகல நன்மையும், ஐஸ்வரியமும் பெருகும்.

    கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வதால் ஏராளமான பலன்கள் குடும்பத்துக்கு கிடைக்கும். இதனால் தெய்வ சக்தி அதிகரிப்பதுடன், அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம்.


    வெள்ளி, தங்கம், பஞ்சலோகம் என எந்த விளக்கையும் ஏற்றலாம். ஆனாலும், மண்ணில் செய்யப்பட்ட அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது கூடுதல் மகிமையாகும்.

    கார்த்திகை மாதத்தில், அகல் விளக்கேற்றி வழிபாடு செய்யும்போது, செல்வ வளம் பெருகும். ஏனெனில் இதன் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும், நெய் அல்லது எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்வதாக ஐதீகம்.

    அதேபோல, தீபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி என முப்பெருந்தேவியர் உறைந்துள்ளனர்.

    தீபம் ஏற்றும்போது, சூரிய உதயத்திற்கு முன்பாகவே ஏற்றிவிட வேண்டும். குறிப்பாக, பிரம்ம முகூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் விளக்கேற்றுவதால், புண்ணியம் சேரும்.

    மாலை வேளைகளில் 6 மணிக்கு வீட்டின் வாசலில் 2 அகல் விளக்குகளை ஏற்றுவதால், குடும்பத்திற்கு புண்ணியம் கிடைக்கும். முன்வினைப் பாவங்களும் நீங்கும். திருமணத் தடைகளும் விலகிவிடும்.

    கார்த்திகை மாதங்களில் தீபங்களின் எண்ணிக்கையையும் கணக்கில் கொள்ள வேண்டும். முக்கியமாக, கோலமிடப்பட்ட வாசலில் 5 அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.


    திண்ணையில் 4 அகல் விளக்குகளும், மாடங்களில் 2 அகல் விளக்குகளும், நிலைப்படியில் 2 அகல் விளக்குகளும், நடையில் 2, முற்றத்தில் 4 அகல் விளக்குகளும் ஏற்ற வேண்டும்.

    தினமும் விளக்கேற்ற முடியாவிட்டாலும், துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய இந்த 3 தினங்களிலாவது கண்டிப்பாக தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    விளக்கேற்றும்போது, ஒரு முகம் ஏற்றினால், நினைத்த செயல்கள் நடக்கும் என்பார்கள். இரண்டு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும். மூன்று முகம் ஏற்றினால், புத்திரதோஷம் நீங்கும்.

    நான்கு முகம் ஏற்றினால் பசு, பூமி, செல்வம் சேரும். சர்வ பீடை நிவர்த்தி ஆகும். ஐந்து முகம் ஏற்றினால், சகல நன்மையும், ஐஸ்வரியமும் பெருகும். அதேபோல விளக்கின் திசையையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    குடும்பத்திலுள்ள துன்பங்கள், இன்னல்கள் நீங்க வேண்டுமானால் கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றலாம். கடன் தொல்லை தீர வேண்டுமானால், மேற்கு திசையிலும், திருமணத்தடை நீங்க வேண்டுமானால் வடக்கு திசையிலும் விளக்கேற்றலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.

    திருக்கார்த்திகை தினம் அன்று வீட்டு முற்றத்தில் 4, சமையலறையில் 1, நடையில் 2, பின்கட்டில் 4, திண்ணையில் 4, மாட குழியில் 2 , நிலைப்படியில் 2, சாமி படத்துக்கு கீழே 2, வெளியே யம தீபம் ஒன்று, கோலமிடும் இடத்தில் 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றப்படவேண்டும். இந்த 27 விளக்குகள் என்பது நட்சத்திரங்களை குறிப்பதாகும்.

    கார்த்திகை மாதத்தின் 30 நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    • இன்று சஷ்டி விரதம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-21 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பஞ்சமி காலை 11.14 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: திருவோணம் மாலை 4.50 மணி வரை பிறகு அவிட்டம்

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சஷ்டி விரதம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் புறப்பாடு. திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் பூத வாகனத்திலும், இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும் பவனி வரும் காட்சி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படை வீடு, ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாட வீதி புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதர் உற்சவம் ஆரம்பம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாராட்டு

    ரிஷபம்-பணிவு

    மிதுனம்-மேன்மை

    கடகம்-தாமதம்

    சிம்மம்-உதவி

    கன்னி-ஆதரவு

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-பக்தி

    தனுசு- நன்மை

    மகரம்-அமைதி

    கும்பம்-பரிசு

    மீனம்-ஜெயம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விநாயகர் தடைகளை அகற்றுபவர்.
    • பிள்ளையார் சுழி போட்டு செயலை தொடங்கு பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.

    முன்பெல்லாம் ஓலைச் சுவடியில்தான் நம்மவர்கள் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தார்கள். அந்த வகையில் `உ' என்ற எழுத்தை எழுதும் போது, ஓலைச்சுவடியின் வலிமையும், எழுத்தாணியின் கூர்மையும் தெரிந்து விடும்.

    செம்மை இல்லாத ஓலைச்சுவடி கிழிந்துவிடும். இதன் காரணமாகவே எழுதத் தொடங்குவதற்கு முன்பாக 'உ' என்ற எழுத்தை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர் என்பது அறிவுப்பூர்வமான கருத்து.

    இதற்கு ஆன்மிகக் கருத்தும் சொல்லப்படுகிறது. தமிழ் உயிர் எழுத்துகளில், 'உ'கரம் என்ற எழுத்து முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த எழுத்து விநாயகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இதனை 'பிள்ளையார் சுழி என்றும் சொல்வார்கள்.


    விநாயகர் தன்னுடைய தாய், தந்தையரான உமையாள், உமையவனை துணையாகவும், முதன்மையாகவும் கொண்டிருக்கும் வகையில் சுருக்கமாக 'உ'என்ற எழுத்தை உருவாக்கியதாக சொல்வதுண்டு.

    விநாயகர் தடைகளை அகற்றுபவர். எனவே நம்முடைய காரியங்கள் அனைத்தும் தடைகள் இன்றி வெற்றிபெறுவதற்காக, விநாயகரைத் தொடர்ந்து நாமும் அவருடைய 'உ' என்ற பிள்ளையார் சுழியை பயன்படுத்தி வருகிறோம்.

    'உ' என்ற எழுத்தானது ஒரு சிறிய வட்டத்தில் தான் தொடங்கும். வட்டம் என்பதற்கு தொடக்கமும் இல்லை... முடிவும் கிடையாது. இறைவன் தொடக்கமும், முடிவும் இல்லாதவர் என்பது இதனைக் குறிக்கிறது.


    வட்டத்தைத் தொடர்ந்து, வளைந்து பின் நேர் கோடு செல்லும். இதனை 'ஆர்ஜவம்' என்பார்கள். இதற்கு 'நேர்மை' என்று பொருள். 'வாழ்க்கையில் வளைந்து கொடு, அதே சமயம் நேர்மையை கைவிடாதே' என்பதே இதன் தத்துவம். பிள்ளையார் சுழி போட்டு செயலை தொடங்கு பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.

    • தசரத மகாராஜாவின் இறந்த தினம் வந்தது.
    • சீதாதேவி, தசரத மகாராஜாவுக்கு சிரார்த்தம் செய்து வைத்தாள்.

    ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும், 14 ஆண்டுகள் வனவாச காலத்தில் ஒவ்வொரு இடமாக சென்று கொண்டே இருந்தனர். அப்போது ராமபிரானின் தந்தையான தசரத மகாராஜாவின் இறந்த தினம் வந்தது.

    இந்த காலகட்டத்தில் ராமரும், லட்சுமணனும் கயா பகுதியில் இருந்தனர். தந்தைக்கு சிரார்த்தம் செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்து வருவதற்காக, ராமரும், லட்சுமணரும் வனத்தின் அடர்ந்த பகுதிக்குச் சென்றனர். அவர்கள் வருவதற்கு கால தாமதம் ஆனது.


    அந்த காலத்தில் யாருக்காக சிரார்த்தம் செய்கிறோமோ, அவர்கள் நேரடியாக வந்து உணவை சாப்பிட்டு விட்டுச் செல்வார்கள். ராமரும், லட்சுமணரும் வர தாமதமான சமயத்தில், தசரத மகாராஜா வந்துவிட்டார்.

    அவர் சீதாதேவியிடம், "எனக்கு மிகவும் பசிக்கிறது" என்று கூற, சீதாதேவியும் உணவை தயார் செய்து தசரதருக்கு அளித்தார். அதற்கு கயாவில் உள்ள ஒரு வேதியரும் மந்திரம் சொல்லி நடத்திக் கொடுத்தார். இதையடுத்து தசரத மகாராஜா மகிழ்ச்சியுடன் பித்ருலோகம் திரும்பிச் சென்றார்.

    அதன்பிறகுதான் ராமரும், லட்சுமணரும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் சீதாதேவி, தசரத மகாராஜா வந்ததைப் பற்றியும், அவருக்கு சிரார்த்தம் சொல்லி உணவிட்டதையும் கூறினார்.

    ராமர், "இதை எப்படி நம்புவது?" என்று கேட்க, அதற்கு சீதாதேவி, சிரார்த்தம் செய்து வைத்த வேதியரை சாட்சியாக அழைத்தாள். அந்த வேதியரோ, 'பெண் சிரார்த்தம் செய்து முடித்துவிட்டாள் என்று சொன்னால் தவறாகிவிடும்' என்று தயங்கி, "நான் சிரார்த்தம் செய்யவில்லை" என்று கூறிவிட்டார்.

    உடனே சீதாதேவி, பல்குனி நதியை சாட்சியாக அழைத்தாள். பல்குனி நதியோ, "வேதியர் சொல்வது சரிதான். நான் இந்த பெண் சிரார்த்தம் கொடுத்ததைப் பார்க்கவில்லை" என்று கூறிவிட்டது.

    சீதாதேவி இப்போது அக்னியை சாட்சியாக அழைத்தாள். அக்னி, 'நானும் பார்க்கவில்லை' என்று கூறியது. அடுத்ததாக பசுவை சாட்சிக்கு அழைத்தாள், சீதாதேவி. பசுவோ, 'அக்னி பகவானே 'நான் பார்க்கவில்லை' என்று நழுவி விட்டார்.

    நான் பார்த்ததாக சொன்னால், அது சரியாக இருக்காது' என்று கருதி, அதுவும் "நான் பார்க்கவில்லை" என்று சொன்னது.


    அப்பொழுது அங்கிருந்த அட்சய வடத்தை (ஆலமரம்) சீதாதேவி சாட்சியாக அழைக்க, அட்சய வடம் "சீதாதேவி, தசரத மகாராஜாவிற்கு உணவிட்டது சத்தியம்.. சத்தியம்.. சத்தியம்.." எனக் கூறியது.

    இதனால் ராமரும், லட்சுமணரும் மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து சீதாதேவி, வேதியரை நோக்கி "நீங்கள் சிரார்த்தம் செய்துவைத்து விட்டு, நான் செய்யவில்லை என்று கூறியதை ஏற்க முடியாது. எனவே நீ எப்போதும் பசியுடனேயே இருப்பாய்" என்று சபித்தாள்.


    அதேபோல் பல்குனி நதியை நோக்கி, "நீ இன்றில் இருந்து வறண்டு போவாய்" என்றும், அக்னியிடம், "நீ இன்று முதல் நல்லவற்றை மட்டுமின்றி, அசுத்தங்களையும் எரிப்பாய்" என்றும், பசுவை நோக்கி "இன்றுமுதல் உன்னை யாரும் பூஜிக்க மாட்டார்கள்" என்றும் சாபமிட்டாள்.

    ஆனால் அட்சய வடத்தைப் பார்த்து, "இனி உன் நிழலில் யார் ஒருவர் முன்னோருக்காக சிரார்த்த பிண்டம் வைக்கிறார்களோ, அவர்களின் 10 தலைமுறையினரும் மோட்சம் செல்வார்கள்" என்று வரம் அருளினாள்.


    வேதியர், அக்னி, பல்குனி நதி, பசு ஆகிய நால் வரும், சீதாதேவியிடம் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தினர். ராமரும் அவர்களுக்கு அருள்செய்யும்படி சீதாதேவியிடம் கூறினார். எனவே சீதாதேவி "யாரும் வருந்தவேண்டாம். வேதியரே.. கயா தலத்தில் கயாவாலி வேதியர்களுக்கு யார் அன்னம் கொடுக்கிறார்களோ, அவர்களின் வம்சத்தில் பஞ்சம் என்பதே இருக்காது.


    அக்னியே.. அனைத்து தேவ காரியங்களிலும் நீ இன்றி எதுவும் நடக்காது. பல்குனி நதியே.. நீ வறண்டு போனாலும், உன்னை நினைத்து யார் சங்கல்பம் செய்கிறார்களோ, அவர்களுக்கு கங்கையில் குளித்த பலன் கிடைக்கும்.

    பசுவே, உன் முன்பாக நின்று யாரும் உன்னை பூஜிக்க மாட்டார்கள். ஆனால் உன் பின்புறத்தை பூஜிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும்" என்று வரம் அருளினாள்.

    • சீதையால் மணலில் பிடிக்கப்பட்ட மணல் லிங்கம்தான், மூலவராக இருக்கிறது.
    • 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில், ராமாயணத்துடன் தொடர்புடையது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தை தரிசிக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்வதைக் காண முடியும்.

    இங்கே சீதையால் மணலில் பிடிக்கப்பட்ட மணல் லிங்கம்தான், மூலவராக இருக்கிறது. ராவணனை வதம் செய்த ராமபிரான், தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக இங்கே லிங்கம் அமைத்து வழிபட்டதாக ராமாயணம் சொல்கிறது.


    காசிக்கு நிகராக வைத்து போற்றப்படும் இந்த ஆலயம், சீதையின் சிறப்புக்கும் பெயர் பெற்றது. ராவணனிடம் இருந்து மீட்கப்பட்ட சீதை, தன்னுடைய கற்பை நிரூபிப்பதற்காக அக்னி பிரவேசம் நடத்தினார்.

    அந்த அக்னியின் சூட்டை, அக்னி பகவானாலேயே தாங்க முடியவில்லையாம். எனவே அவர் ராமேஸ்வரம் கடலில் மூழ்கி தன்னுடைய உடல் வெப்பத்தைத் தணித்துக் கொண்டதாக தல வரலாறு சொல்கிறது. இதன் காரணமாகவே, ராமேஸ்வரம் கடலை 'அக்னி தீர்த்தம்' என்று அழைக்கிறார்கள்.


    காசி லிங்கம்

    ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும் வகையில், ராமேஸ்வரத்தில் வைத்து சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்ய நினைத்தார், ராமபிரான். அதற்காக காசியில் இருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டு வரும்படி அனுமனை பணித்தார்.

    ஆனால் அவர் வருவதற்கு தாமதமானதால், மணலில் லிங்கம் செய்து தன் தவத்தை மேற்கொண்டார். பின்னர் அனுமன் கொண்டு வந்து சிவலிங்கமும் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவே 'காசி லிங்கம்' என்று அழைக்கப்படுகிறது.

    மணல் லிங்கம்

    காசியில் உள்ள விஸ்வநாதருக்கு இணையாக வைத்து போற்றப்படுவது, ராமேஸ்வரத்தில் உள்ள மணல் லிங்கம். இந்த மணல் லிங்கத்தை, சீதாதேவி தன்னுடைய கையால் செய்திருக்கிறார். அனுமன் காசியில் இருந்து சிவலிங்கம் கொண்டு வர தாமதம் ஏற்பட்டதால், இந்த மணல் லிங்கத்தை சீதாதேவி செய்தார்.

    இந்த மணல் லிங்கம்தான், ராமேஸ்வரம் ஆலயத்தின் பிரதான லிங்கமாகவும், ராமநாதசுவாமி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த மூலவர் லிங்கம், இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது.


    உப்பு லிங்கம்

    இந்த ஆலயத்தில் அதிசயம் நிறைந்த உப்பு லிங்கம் ஒன்று உள்ளது. இந்த லிங்கத்திற்கு தனிக் கதையே உள்ளது. ஒரு முறை இவ்வாலயத்திற்கு வந்த சிலர், இங்கு மூலவராக உள்ள லிங்கம் மணலால் செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்படி மணலில் செய்யப்பட்டிருந்தால், அபிஷேகம் செய்கையில் கரைந்து போயிருக்கும் என்ற தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

    அந்த நேரத்தில் அங்கே அம்மனின் பக்தரான பாஸ்கரராய சுவாமிகள் இருந்தார். அவர், மூலவர் லிங்கமானது மணலால் செய்யப்பட்டதுதான் என்று உறுதிபடக் கூறினார். அது கரையாமல் இருப்பதற்கு, சீதாதேவியின் தெய்வீக சக்தியே காரணம் என்றும் கூறினார்.

    மேலும் அதை மெய்ப்பிக்க ஒரு வேலையும் செய்தார். அதாவது தர்க்கம் செய்த சிலரிடம் உப்பு வாங்கி வரச் சொல்லி, அந்த உப்பில் ஒரு சிவலிங்கத்தை செய்தார். அந்த சிவலிங்கத்தின் மீது எத்தனை குடம் தண்ணீர் வேண்டுமானாலும் ஊற்றும்படி, பாஸ்கரராய சுவாமிகள் கூறினார்.

    தர்க்கம் செய்தவர்கள் அவ்வாறே செய்தனர். ஆனால் உப்பு லிங்கம் கொஞ்சம் கூட கரையவில்லை. அப்போது பாஸ்கரராய சுவாமிகள், "அம்பாளின் பக்தனும், சாதாரண மனிதனுமான என்னால் செய்யப்பட்ட உப்பு லிங்கத்தையே, இவ்வளவு குடம் தண்ணீர் ஊற்றியும் கரைக்க முடியவில்லை.

    இந்த ஆலயத்தில் மூலவராக இருக்கும் மணல் லிங்கம், மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமரின் மனைவி சீதாதேவியால் செய்யப்பட்டது. அது கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் உள்ளது" என்று கேட்டாராம். ராமேஸ்வரம் கோவிலில் உள்ள இந்த உப்பு லிங்கத்தை 'வஜ்ராயுத லிங்கம்' என்றும் அழைப்பர். இவரை வழிபட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.


    ஸ்படிக லிங்கம்

    ராமேஸ்வரம் கோவில் கர்ப்பக்கிரகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்திற்கு தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரை பாலாபிஷேகம் நடைபெறும்.

    • இன்று சதுர்த்தி விரதம். திருவோண விரதம். சுபமுகூர்த்த தினம்.
    • திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் உற்சவம் ஆரம்பம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-20 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தி நண்பகல் 12.24 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: உத்திராடம் மாலை 5.27 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சதுர்த்தி விரதம். திருவோண விரதம். சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் உற்சவம் ஆரம்பம். சிம்மாசனத்தில் பவனி. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர், தேரெழுந்தூர் ஸ்ரீ ஞான சம்பந்தர் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம், வழிபாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-நிறைவு

    மிதுனம்-பாசம்

    கடகம்-முயற்சி

    சிம்மம்-ஓய்வு

    கன்னி-சிந்தனை

    துலாம்- செலவு

    விருச்சிகம்-சாதனை

    தனுசு- திடம்

    மகரம்-ஆதரவு

    கும்பம்-உறுதி

    மீனம்-உதவி

    • யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெறுகிறது.
    • தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும், தீபக்காட்சியும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு திருவிழா இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, நாளை (வியாழக்கிழமை) காலை கொடியேற்றம் நடக்கிறது.

    தொடர்ந்து, விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் பரிவாரங்களுடன் மலைக்கோவிலில் இருந்து உற்சவ மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு யாகசாலை பூஜை, சுவாமி வீதிஉலா திக் பந்தனம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    அதனைத் தொடர்ந்து, 8 நாட்கள் படிச்சட்டத்தில், ஆட்டுக்கிடா வாகனம், பஞ்சமூர்த்திகள் சப்பரம், யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை தினத்தன்று (13-ந்தேதி) காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும், தீபக்காட்சியும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    பின்னர், 14-ந்தேதி படிச்சட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரியும், இரவு அவளோ அவரோஹணம் படிச்சட்டத்தில் சுவாமி புறப்பாடும், 15-ந்தேதி இரவு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி யதாஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவிலின் இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் சிவகுமார், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
    • 10 நாட்கள் காலை, இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் வருகிற 13-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந் தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து பிடாரி அம்மன், விநாயகர் உற்சவம் நடந்தது.

    இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடந்தது. அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 6.25 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.

    முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கொடிமரத்தின் அருகே அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதனை தொடர்ந்து 10 நாட்கள் காலை இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.

    வருகிற 10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீபம் 13-ந்தேதி ஏற்றப்படுகிறது.

    13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருள்வார். அப்போது 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    13-ந்தேதி முதல் 11 நாட்களுக்கு மலை உச்சியில் அண்ணாமலையார் ஜோதிப்பிழம்பாக காட்சி தருவார். கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளன.

    இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம் ஆரம்பம்.
    • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.

    3-ந் தேதி (செவ்வாய்)

    • சுவாமிமலை முருகப் பெருமானுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

    • திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    • கீழ்நோக்கு நாள்.

    4-ந் தேதி (புதன்)

    • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம் ஆரம்பம்.

    • பழனி ஆண்டவர் விழா தொடக்கம்.

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    • திருப்பதி ஏழுமலையான் சகசர கலசாபிஷேகம்.

    • கீழ்நோக்கு நாள்.

    5-ந் தேதி (வியாழன்)

    • முகூர்த்த நாள்.

    • திருப்பரங்குன்றம் ஆண்டவர் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.

    • மிலட்டூர் விநாயகப் பெருமான் பவனி.

    • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    • மேல்நோக்கு நாள்.

    6-ந் தேதி (வெள்ளி)

    • சஷ்டி விரதம்.

    • சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

    • மேல்நோக்கு நாள்.

    7-ந் தேதி (சனி)

    • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.

    • திருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகனத்தில் பவனி.

    • திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், திருவரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    • திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    • மேல்நோக்கு நாள்.

    8-ந் தேதி (ஞாயிறு)

    • திருவண்ணாமலை அண்ணாமலையார் ரிஷப வாகனத்தில் பவனி.

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    • மேல்நோக்கு நாள்.

    9-ந் தேதி (திங்கள்)

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் 108 சங்காபிஷேகம், 1008 கலசாபிஷேகம்.

    • சுவாமிமலை முருகப் பெருமான் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.

    • திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார்.

    • கீழ்நோக்கு நாள்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
    • முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-18 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவிதியை நண்பகல் 1.21 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: மூலம் மாலை 5.23 மணி வரை பிறகு பூராடம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஓய்வு

    ரிஷபம்-சாதகம்

    மிதுனம்-ஜெயம்

    கடகம்-சுகம்

    சிம்மம்-கவனம்

    கன்னி-நட்பு

    துலாம்- உதவி

    விருச்சிகம்-முயற்சி

    தனுசு- பணிவு

    மகரம்-முயற்சி

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-மாற்றம்

    ×