என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • இது என்னுடைய மகிழ்ச்சியான இடம். விண்வெளியில் இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன்.
    • நாங்கள் விண்வெளியில் இருந்து வாக்களிப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    அமெரிக்க வாழ் இந்திய விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளார். கடந்த ஜூன் 5-ந்தேதி தனியார் நிறுவனமான போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளி சென்றார். 8 நாட்களில் பூமிக்கு திரும்புவதாக இருந்தது. ஸ்டார்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக திரும்ப முடியாமல் போனது. இதனால் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்ப உள்ளார்.

    இந்த நிலையில் விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ மூலம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது "இது என்னுடைய மகிழ்ச்சியான இடம். விண்வெளியில் இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். 8 நாட்களில் பூமிக்கு திரும்பிய உடன் சில திட்டங்கள் வைத்திருந்தார். என்னுடைய தாயார் உடன் நேரம் செலவழிவிட வேண்டும் போன்ற திட்டங்கள் இருந்தது. குளிர்காலத்திற்கான திட்டங்கள் இருந்தது. ஆனால், எல்லாமே தற்போது விண்வெளி நிலையத்தில்தான். அதற்காக நாங்கள் தயாராகிவிட்டோம்.

    நாங்கள் எல்லோரும் அமெரிக்க குடிமகன்கள். அதனால் அதிபர் தேர்தலில் வாக்களிப்பது முக்கியமான பணி. இதற்கான பணியை நாசா எங்களுக்காக எளிதாக்கியுள்ளது. நாங்கள் விண்வெளியில் இருந்து வாக்களிப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது மிகவும் அருமையானது" என்றார்.

    • இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
    • அதிபர் ஜோ பைடனை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்தித்தார்.

    வாஷிங்டன்:

    இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

    இந்நிலையில், அதிபர் ஜோ பைடனை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது.

    ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிரான பாதுகாப்பில் உக்ரைனுக்கு தொடர்ந்து வலுவான ஆதரவு வழங்குதல், பிணைக்கைதிகளை விடுவித்தல் மற்றும் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர போர்நிறுத்த ஒப்பந்தம், சர்வதேச கப்பல் போக்குவரத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

    • ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படை 2011, மே 2-ம் தேதி சுட்டுக் கொன்றது.
    • ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் தெரிவித்தால் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்றது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடத்தின் மீதும், ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் அல்-கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 3,000 கொல்லப்பட்டனர்.

    இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-கொய்தா இயக்க தலைவரான ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தீவிரமாக தேடியது.

    10 ஆண்டு தேடுதல் வேட்டைக்கு பிறகு பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் 2011, மே 2-ம் தேதி சுட்டுக்கொன்றனர்.

    ஒசாமா மகன் ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது. அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பை குறிவைத்து அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹம்சா பின்லேடன் 2019-ம் ஆண்டில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.

    இந்நிலையில், ஒசாமா மகன் ஹம்சா பின்லேடன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தி மிர்ரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் தான் உள்ளான் என ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் எதிர்ப்பு ராணுவ அமைப்பான என்.எம்.எப். என்ற அமைப்பு தெரிவிக்கிறது.

    2021 ஆப்கானிஸ்தானில் அதிபர் ஆட்சி முடிவுக்கு வந்து தலிபான்கள் கைப்பற்றியபோது பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கான பயிற்சி மையம் அமைத்து 450 பாகிஸ்தானியர்கள் ஹம்சா பின்லேடனுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகின்றனர்.

    அவனது கட்டளையின் கீழ், அல்-கொய்தா மீண்டும் ஒருங்கிணைந்து வரும் காலங்களில் மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல்களுக்கு தயாராகி வருகிறது.

    ஒசாமா பின்லேடனுக்கு பிறகு அல்-கொய்தா விவகாரங்களை கவனித்து வரும் அய்மன் அல்-ஜவாஹிரியுடன் ஹம்சா பின்லேடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உங்கள் பூனையை என் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கிறேன்.
    • எலான் மஸ்கின் மகள் வில்சன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ்க்கு வாக்களிக்கப் போவதாக உலக புகழ்பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் தெரிவித்தார். இதையடுத்து, டெய்லர் ஸ்விஃப்ட்டின் இன்ஸ்டா பதிவை கிண்டலடிக்கும் விதமாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், "நீங்கள் வென்றுவிட்டீர்கள் டெய்லர், நான் உங்களுக்கு ஒரு குழந்தையை தருகிறேன், அதோடு உங்கள் பூனையை என் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கிறேன்" என்று பதிவிட்டார்.

    எலான் மஸ்கின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வரிசையில், எலான் மஸ்கின் மகள் வில்சன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இது குறித்த பதிவில் அவர், "நானும் அந்த பதிவை பார்த்தேன். அதில் நான் எதையும் சேர்க்க விரும்பவில்லை. இது மிகவும் வெளிப்படையானது, என்பதை நீங்கள் பார்க்கவில்லை என்றால், நீங்கள் பிரச்சனையின் ஒரு அங்கமாக இருக்கின்றீர்கள். மக்கள் உங்களிடம் அப்படி பேசுவதை அனுமதிக்க வேண்டாம். இது அருவருப்பாக உள்ளது."

    "கமலா ஹாரிஸ்-ஐ டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரிப்பதற்கு இதை விட சிறந்த சமயம் எதுவும் இருக்க முடியாது. தேர்தலில் ஸ்விஃப்டீஸ் வாக்களிப்பதை காண காத்திருக்கிறேன். நீலத்திற்கு ஓட்டுப்போடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

    • அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
    • பதவியை பயன்படுத்தி சீனாவுக்கு உளவு பார்த்ததும் இதற்கு லஞ்சமாக ரூ.41 லட்சம்வரை (50 ஆயிரம் அமெரிக்க டாலர்) மற்றும் பரிசுகளை பெற்றதும் தெரியவந்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் யூக் சிங்க். சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கில் பிறந்து அமெரிக்கவில் குடியேறினார். அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

    இந்தநிலையில் அலெக்சாண்டர் பணியில் இருந்தபோது அமெரிக்கா ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை ரகசியங்களை சீனாவுக்கு கசிய விட்டதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அலெக்சாண்டர் தன்னுடைய பதவியை பயன்படுத்தி சீனாவுக்கு உளவு பார்த்ததும் இதற்கு லஞ்சமாக ரூ.41 லட்சம்வரை (50 ஆயிரம் அமெரிக்க டாலர்) மற்றும் பரிசுகளை பெற்றதும் தெரியவந்தது.

    இதனையடுத்து சீனாவுக்கு உளவு பார்த்த அலெக்சாண்டருக்கு அமெரிக்கா கோர்ட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

    • உள்ளே வருபவர்கள் வளர்ப்பு பூனைகளையும் நாய்களையும் கொன்று சாப்பிடத் தொடங்கி உள்ளனர்.
    • உரிமையாளர்களுடன் சோபாவில் அமர்ந்து டிவியில் பார்த்துக்கொண்டிருந்தது கோல்டன் ரெட்ரீவர் நாய்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றனர். சுமார் 1 மணிநேரம் 45 நிமிடங்கள் நீடித்த இந்த விவாதத்தில் நாட்டிலும் சர்வதேச அளவிலும் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து காரசாரமாக விவாதித்தனர். அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து குடியேறுபவர்களின் மீதான வெறுப்பு டிரம்ப்பின் முன்வைக்கும் அரசியலில் பிரதானமானது.

    2017 முதல் 2021 வரை அவர் அதிபராக இருந்தபோது குடியேற்றம் மீதான கடுமையான போக்கை அவர் கடைபிடித்தார். இந்நிலையில் கமலா ஹாரிஸுடன் நடந்த விவாதத்திலும் டிரம்ப்பின் குடியேற்றவாசிகள் மீதான வெறுப்பு வெளிப்பட்டுள்ளது. விவாதத்தின்போது பேசிய டிரம்ப், ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஸ்ப்ரிங்பீல்ட் -இல் குடியேற்றவாசிகள், மக்களின் வளர்ப்பு நாய்களை கொன்று சாப்பிடுகின்றனர். [அமெரிக்கா] உள்ளே வருபவர்கள் வளர்ப்பு பூனைகளையும் நாய்களையும் கொன்று சாப்பிடத் தொடங்கி உள்ளனர். இதுதான் தற்போது இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்று பேசியிருந்தார்.

    ஆனால் டிரம்ப் கூறியதற்கு எந்த விதமான ஆதரங்களும் இல்லை என்றும் இணையத்தில் பரவிய வதந்திகளை டிரம்ப் உண்மை போல பேசி வருவதாகவும் கண்டனங்கள் எழுந்தன. டிரம்ப் மீண்டும் மீண்டும் பேசியதையே பேசி வருவதாக கமலா ஹாரிஸும் விவாதத்தின்போது தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் டிரம்ப் நாய்களை குடியேற்றவாசிகள் கொன்று சாப்பிடுவதாக விவாதத்தில் பேசுவதை தனது உரிமையாளர்களுடன் சோபாவில் அமர்ந்து டிவியில் பார்த்துக்கொண்டிருந்த கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்று அங்கிருந்து எழுந்து சோபவின் பின்னால் ஒளிந்துகொண்டு பயத்தில் வெலவெலத்து நிற்பதை அந்த உரிமையாளர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து  இந்த  வீடியோ இணையத்தில் சுமார் 14 மில்லயன் பார்வைகளையும் தாண்டி வைரலாகி வருகிறது. நாயின் ரியாக்ஷனை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் டிரம்பை கலாய்த்து வருகிறனர். இதற்கிடையே குடியேற்றவாசிகள் நாய்களை சாப்பிடுவதாக டிரம்ப் கூறிய கருத்துக்கு வெள்ளை மாளிகையும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • கமலா ஹாரிஸ்க்கு எதிராக நான் வெற்றி பெற்றதை கருத்துக்கணிப்பு தெளிவாக காட்டுகிறது.
    • இதனால் அவர் உடனடியாக 2-வது விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை நேருக்கு நேர் விவாதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மேலும் ஒரு விவாதத்தில் சந்திக்க கமலா ஹாரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், டொனால்டு டிரம்ப், அதிபர் தேர்தல் முடியும் வரை கமலா ஹாரிஸ் உடன் நேருக்குநேர் விவாதம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் கமலா ஹாரிஸின் வேண்டுகோள் செவ்வாய்க்கிழமை விவாதத்தில் அவர் தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டுகிறது. அதை சரி செய்வதற்கான மீண்டும் ஒரு விவாதத்தை எதிர்நோக்குகிறார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    செவ்வாய்க்கிழமை விவாதத்தின்போது பொருளாதாரம், குடியேற்றம், கருக்கலைப்பு தடை ஆகியவற்றை பற்றி இரண்டு பேரும் காரசார விவாதம் நடத்தினர். ஒரு கட்டத்தில் அமெரிக்காவை சீர்குலைத்தவர். சீனாவுக்கு அமெரிக்காவை விற்றவர் என டொனால்டு டிரம்ப்-ஐ கமலா ஹாரிஸ் கடுமையாக சாடினார்.

    அதேவேளையில் கமலா ஹாரிஸ் ஒரு மார்சிஸ்ட். அவர் இஸ்ரேலை வெறுக்கிறார் என டிரம்ப் குற்றம்சாட்டினார்.

    • ஜேரட் ஐசக்மேன் உள்ளிட்ட 4 பேர் புளோரிடா விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளி புறப்பட்டுச் சென்றனர்.
    • விண்வெளி பயண வரலாற்றில் இதுவரை யாரும் செல்லாத உயரத்திற்குச் சென்று புதிய சாதனை படைத்தனர்.

    வாஷிங்டன்:

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கும், பிரபல தொழிலதிபர் ஜேரட் ஐசக்மேனும் இணைந்து பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் போலரிஸ் டான் எனப்படும் தனியார் விண்வெளி பயண திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.

    இத்திட்டத்தின்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் ஜேரட் ஐசக்மேன் உள்ளிட்ட 4 பேர் புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    இந்நிலையில், டிராகன் விண்கலம் புறப்பட்ட 15 மணி நேரத்தில் சுமார் 1,400 கி.மீ. உயரத்திற்குச் சென்று, 50 ஆண்டுகால விண்வெளி பயண வரலாற்றில் இதுவரை யாரும் செல்லாத உயரத்திற்குச் சென்று புதிய சாதனை படைத்தனர்.

    தற்போது 700 கி.மீ. உயரத்தில் புவி சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வரும் டிராகன் விண்கலத்தில் இருந்து ஜேரட் ஐசக்மேன் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் பொறியாளர் சாரா கில்லி ஆகியோர் வெளியேறி வந்து ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடையை மேற்கொண்டனர்.

    அப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்துள்ள கவச உடைகள் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறதா என்பதை அவர்கள் பரிசோதனை செய்தனர்.

    மொத்தம் 5 நாட்கள் பயணத்தின் 3-வது நாளான இன்று ஸ்பேஸ் வாக் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், மீதம் உள்ள நாட்களில் 30 வகையான பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளோம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • 2001 தாக்குதல் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • டிரம்ப் 2024 என எழுதப்பட்ட தொப்பியை அணிந்ததால் அனைவரும் ஆச்சர்யம்.

    2001-ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இரட்டை கோபுரத்துடன், பென்டகன் உள்ளிட்ட இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் 9/11 தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஷாங்க்ஸ்வில்லி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பின் டிரம்ப் 24 என எழுதப்பட்ட தொப்பியை அணிந்திருந்தார்.

    2001 சம்பவத்தின்போது தீயணைப்பு வீரர்களின் பங்கை குறிப்பிட்டு பேசினார். அவர்கள் துரிதமாக செயல்பட்டு ஏராளமானவர்களின் உயிர்களை காப்பாற்றியதை நினைவு கூர்ந்தார். மற்றவர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக ஏராளமான வீரர்கள் தங்களுடைய உயிர்களை தியாகம் செய்தனர். இந்த சம்பவத்தின்போது அனைத்து தரப்பில் இருந்தும் அரசியல் வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக நாட்டு மக்கள் நின்றனர். அதேபோல் தற்போதுதம் நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

    அரசியல் கலத்தில் டொனால்டு டிரம்ப்-ஐ கடுமையாக விமர்சித்து வரும் ஜோ படைன், அவரது தொப்பியை அணிந்திருந்தது அங்கிருந்தவர்கள் புருவங்களை உயர்த்த செய்தது.

    இது தொடர்பாக டொனால்டு டிரம்பிற்கு பிரசாரம் மேற்கொண்ட ஜோ பைடனுக்கு நன்றி என டிரம்ப் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக ஒளிபரப்பாளர் பியர்ஸ் மோர்கன், "ஜோ பைடன் வெறும் டொனால் டிரம்ப் தொப்பியை வைத்தது வெறும் ஜோக் அல்ல. அவர் உண்மையிலேயே செய்தார்" எனத் தெரிவித்துள்ளார்.

    டொனால்டு டிரம்பியன் வார் ரூம் (War Room) ஆதரவுக்கு நன்றி ஜோ எனப் பதிவிட்டுள்ளது.

    டொனால்டு டிரம்பிற்கு எதிரான நேரடி விவாதத்தின்போது ஜோ பைடன் திணறினார். இதனால் அவர் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகி கமலா ஹாரிஸை பரிந்துரைத்தார். தற்போது கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் டிரம்பை எதிரித்து போட்டியிடுகிறார். இந்திய நேரப்படி நேற்று காலை நடைபெற்ற விவாதத்தில் டொனால்டு டிரம்ப்- கமலா ஹாரிஸ் கலந்து கொண்டனர். இதில் கமலா ஹாரிஸ்க்கு அதிக ஆதரவு கிடைத்தது.

    • தலைமை நிர்வாக அதிகாரியுடன் தகாத உறவில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
    • இருவரும் தகாத உறவில் ஈடுபட்டதன் மூலம் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை மீறியதாக நார்ஃபோக் சதர்ன் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

    தலைமை நிர்வாக அதிகாரியுடன் தகாத உறவில் ஈடுபட்டதற்காக இந்திய வம்சாவளி வழக்கறிஞர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

    நார்ஃபோக் சதர்ன் கார்ப்பரேஷனின் தலைமை சட்ட அதிகாரியான நபனிதா நாக், தனது முதலாளியின் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் ஷாவுடன் தகாத உறவில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

    இருவரும் தகாத உறவில் ஈடுபட்டதன் மூலம் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை மீறியதாக நார்ஃபோக் சதர்ன் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

    இந்நடவடிக்கையானது "நிறுவனத்தின் தலைமைச் சட்ட அதிகாரியுடன் தகாத உறவில் ஈடுபட்டதன் மூலம் ஷா நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதாக, நடந்துகொண்டிருக்கும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஷாவின் விலகல் நிறுவனத்தின் செயல்திறன், நிதி அறிக்கை மற்றும் செயல்பாடுகளின் முடிவுகளுடன் தொடர்பில்லாதது" என்று நார்ஃபோக் சதர்ன் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமைச்சர் அமித்ஷா ராகுல் காந்தியின் இடஒதுக்கீடு நீக்கம் குறித்த கருத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.
    • 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்.

    பாகுபாடு இல்லாத இந்தியா உருவாகும் போது இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும் என்று பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் தெரிவித்தார்.

    நாட்டில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசிய ராகுல் காந்தி, காங்கிரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான முகத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் பா.ஜ.க. இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, நாட்டின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது என்பதை ராகுல் காந்திக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராகுல் காந்தியின் இடஒதுக்கீடு நீக்கம் குறித்த கருத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

    இந்நிலையில் தனது கருத்தை யாரோ தவறாக புரிந்துகொண்டு தன்னை இடஒதுக்கீட்டுக்கு எதிரானவனாக சித்தரிக்க முயல்கின்றனர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இடஒதுக்கீடு நீக்கம் குறித்த தனது கருத்துக்கு தற்போது விளக்கம் அளித்துள்ள ராகுல், நான் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன், நான் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் அல்ல. 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும். இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க வேண்டும் என நான் பலமுறை கூறி வருகிறேன்.நான் ஒருபோதும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருந்ததில்லை. என்று தெரிவித்துள்ளார்.

    • கமலா- டொனால்டு டிரம்ப் இடையே ABC நியூஸ் ஏற்பாடு செய்த நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது.
    • கமலா ஹாரிஸுக்கு டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவு அளித்துள்ளது பற்றி டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் அனல் பறக்கும் பிரச்சாரங்களாலும் விவாதங்களாலும் சூடு பிடித்து வருகிறது. ஆட்சியில் உள்ள ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் காண்கிறார்.

    நேற்றைய தினம் கமலா- டொனால்டு டிரம்ப் இடையே ABC நியூஸ் ஏற்பாடு செய்த நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. இதில் டிரம்புடன் காரசாரமாக எதிர்வாதம் செய்து கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல பாப் இசைப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் தான் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்கப்போவதாகத் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தான் நம்பும் உரிமைகளுக்கு ஆதரவாக கமலா ஹாரிஸ் போராடி வருவதால் அவருக்கு வாக்களிக்கப் போவதாக அவர் பதிவிட்ருந்தார். இதனால் டென்ஷனான உலக பணக்காரருக்கு டிரம்ப் ஆதரவாளருமான எலான் மஸ்க், நான் உங்களுக்கு குழந்தை தருகிறேன், உங்களது பூனையை பார்த்துக்கொள்கிறேன் என்று காட்டமாக தெரிவித்திருந்தார் .

    இந்நிலையில் கமலா ஹாரிஸுக்கு டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவு அளித்துள்ளது பற்றி டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. Fox & Friends என்ற நேர்காணலில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், நான் டெய்லர் ஸ்விஃப்ட் ரசிகன் ஒன்றும் இல்லை, அவர் [டெய்லர்] மிகவும் முற்போக்கான ஒருவர், எப்போதும் அவர் ஜனநாயகவாதிகள் பக்கமே நின்றுள்ளார். அதற்கான விலையை அவர் நிச்சயம் செலுத்துவார் என்று துன்று தெரிவித்துள்ளார். மேலும் டெய்லர் ஸ்விஃப்ட் ஐ விட தனக்கு ஆதரவளிக்கும் பிரிட்னி மஹோம்ஸ் ஐ தான் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். பிரிட்னி மஹோம்ஸ் முன்னாள் கால்பந்து பிரபலமும் டெய்லர் ஸ்விஃப்ட் இன் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×