என் மலர்
அமெரிக்கா
- ஐ.நா.சபையின் 79-வது பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
- அப்போது, மனித குலத்தில் வெற்றி நமது கூட்டு பலத்தில் உள்ளது என்றார்.
நியூயார்க்:
நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 79-வது பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியஉரையாதாவது:
மனித குலத்தின் ஆறில் ஒரு பங்கினரின் குரலை இங்கு பதிவுசெய்ய நான் வந்துள்ளேன்.
இந்தியாவில் 25 கோடி மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டுள்ளோம்.
நிலையான வளர்ச்சியை வெற்றிகரமாக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்துக் காட்டியுள்ளது.
எங்களின் அனுபவத்தை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.
மனித குலத்தின் வெற்றி நமது கூட்டு பலத்தில் உள்ளது. போர்க்களத்தில் அல்ல.
உலகின் அமைதி, வளர்ச்சிக்கு உலகளாவிய அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியம்.
ஒருபுறம், பயங்கரவாதம் உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
மறுபுறம், சைபர், கடல் மற்றும் விண்வெளி ஆகியவை மோதலின் புதிய வடிவமாக உருவாகி வருகின்றன.
இந்த எல்லாப் பிரச்சனைகளிலும் உலகளாவிய நடவடிக்கை உலகளாவிய லட்சியத்துடன் பொருந்த வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.
தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாட்டிற்கு, சமநிலை ஒழுங்குமுறை தேவை.
இறையாண்மையும் ஒருமைப்பாடும் அப்படியே இருக்கும் உலகளாவிய டிஜிட்டல் ஆளுகையை நாங்கள் விரும்புகிறோம்.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஒரு பாலமாக இருக்க வேண்டும், தடையாக இருக்கக்கூடாது.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரே பூமி ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம் என்பது உறுதி என தெரிவித்தார்.
- Dear World" என்று தலைப்பிடப்பட்ட அந்த குறிப்பைப் பெயர் தெரியாத ஒருவரின் வீட்டு வாசலில் பெட்டியில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார் ரயான்.
- பெட்டியைத் திறக்காமல் வீட்டின் உரிமையாளர் தற்போது அதைப் போலீசிடம் ஒப்படைத்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது முறை நடந்த கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 12 ஆம் தேதி பென்சில்வேனியா மாநாட்டில் மேத்யூவ் என்று இளைஞன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிர் பிழைத்த டிரம்ப் மீது கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி புளோரிடா கோல்ப் மைதானத்தில் வைத்து கொலை முயற்சி நடந்தது.
டிரம்ப் நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் மர்ம நபர் ஒருவர் ஏ.கே.47 துப்பாக்கியால் டிரம்பை நோக்கி வேலி வழியாகக் குறிபார்த்துக்கொண்டு இருந்தார். இதை கண்ட டிரம்ப்பின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதையடுத்து அந்த மர்ம நபர் அங்கிருந்து காரில் தப்பி சென்றார். எனினும் சற்று நேரத்துக்குள்ளாக போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் அவர் மீதான விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ரயானின் காரில் டிரம்ப் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்த கையால் எழுதிட அட்டவணை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது தாக்குதல் குறித்த குறிப்பையும் எழுதி வைத்துள்ளார் ரயான். "Dear World" என்று தலைப்பிடப்பட்ட அந்த குறிப்பைப் பெயர் தெரியாத ஒருவரின் வீட்டு வாசலில் பெட்டியில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார் ரயான்.
அந்த பெட்டியைத் திறக்காமல் வீட்டின் உரிமையாளர் தற்போது அதைப் போலீசிடம் ஒப்படைத்துள்ளார். அந்த பெட்டியில் துப்பாக்கி குண்டுகளும், இருப்பு பைப் உள்ளிட்ட பிற பொருட்களும் இருந்துள்ளது. மேலும் அதில் இருந்த குறிப்பில், டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சி இது.
ஆனால் நான் தோற்றுவிட்டேன். என்னால் முடித்தவரை எனது முழு சக்தியைப் பயன்படுத்தி இதை செய்து முடிக்க நான் முயற்சி செய்தேன். இப்போது இந்த வேலையே செய்து முடிக்க வேண்டியது உங்களின் பொறுப்பு. இந்த வேலையைச் செய்து முடிபவருக்கு நான் 150,000 டாலர்கள் [ சுமார்1.25 கோடி ருபாய்] தருகிறேன் என்று ரயான் எழுதி வைத்துள்ளார். இந்த பெட்டி இருந்த வீட்டில் வசித்து வந்தவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- வில்சன் தனது மின்சார பயன்பாட்டைக் கண்காணிக்க ஒரு சாதனத்தை வாங்கினார்.
- அந்த நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டு, வில்சனிடம் மன்னிப்பு கேட்டது.
அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள வாகவில் (Vacaville) என்ற நகரத்தில் வசிக்கும் ஒருவர், 18 ஆண்டுகளாக தனது அண்டை வீட்டாரின் கட்டணத்தை செலுத்தி வந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனி (Pacific Gas & Electric Company) (PG&E) வாடிக்கையாளர் கென் வில்சன் தனது மின்சாரக் கட்டணம் அதிகரித்து வருவதை கவனித்தார். அதனால் அவர் தனது மின் நுகர்வை குறைக்க நடவடிக்கை எடுத்தார். அந்த முயற்சிகளால் மாற்றம் ஏற்படுத்தாததால், அவர் மேலும் விசாரிக்க முடிவு செய்தார்.
வில்சன் தனது மின்சார பயன்பாட்டைக் கண்காணிக்க ஒரு சாதனத்தை வாங்கினார். மேலும் அதன் பிரேக்கர் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் அவரது மீட்டர் தொடர்ந்து இயங்குவதை கண்டுபிடித்தார். வில்சன் பின்னர் இந்த பிரச்சனை பற்றி பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனியை தொடர்பு கொண்டு, ஆய்வுக்கு ஒருவரை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.
அவர்களது விசாரணையில், வாடிக்கையாளரின் அபார்ட்மெண்ட் மீட்டர் எண்ணிற்கு மற்றொரு அபார்ட்மெண்டிற்கான மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கண்டறியப்பட்டது, ஒருவேளை 2009-ம் ஆண்டு முதல் இருக்கலாம் என்று பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் கம்பெனி தெரிவித்தது.
அந்த நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டது மற்றும் ஏற்பட்ட சிரமத்திற்கு வில்சனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
- இந்தியா-பாலஸ்தீன இரு தரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர்.
- பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து தமது ஆதரவை நல்கும் என உறுதி அளித்தார்.
குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். நியூயார்கில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாற்றினார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
அப்போது இந்தியா-பாலஸ்தீன இரு தரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர்.

மேலும் இந்த சந்திப்பின்போது காசாவின் மனிதாபிமான நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த பிரதமர், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து தமது ஆதரவை நல்கும் என உறுதி அளித்தார். காசா-இஸ்ரேல் இடையேயான போரில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மோடியுடன் இருப்பதையே ஜோ பைடன் மறந்து விட்டார்.
- வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு 81 வயது ஆகிறது. அவர் வயது மூப்பு காரணமாக மறதியால் அவதிப்படுகிறார். அந்த குறைபாட்டால், ஜனாதிபதி தேர்தலில் இருந்தும் அவர் விலக வேண்டியதாகி விட்டது. பிற நாட்டு தலைவர்களின் பெயரை அவர் மாற்றிக் கூறுவதும், அச்சிட்ட உரையில் அதை வெள்ளை மாளிகை அதிகாரிகள் திருத்துவதும் வழக்கம்.
இந்நிலையில், அமெரிக்காவில் டெலவர் மாகாணத்தில் 'குவாட்' மாநாடு நடந்தது. பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய, ஜப்பான் பிரதமர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி பேசிக்கொண்டிருந்த ஜோ பைடன், பிரதமர் மோடியை அறிமுகப்படுத்த வேண்டிய நேரத்தில், அவரது பெயரை மறந்து விட்டார்.
''அடுத்து யாரை நான் அறிமுகப்படுத்த வேண்டும்?'' என்று மைக்கில் கேட்டார். சிறிது இடைவெளி விட்ட பிறகும் அவருக்கு நினைவுக்கு வரவில்லை. ''அடுத்து யார்?'' என்று ஒரு ஊழியரை கேட்டார்.
ஜோ பைடன் சார்பில் அந்த ஊழியர், பிரதமர் மோடியை பேச அழைத்தார். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் 'வைரல்' ஆகி வருகிறது.
''பிரதமர் மோடியுடன் இருப்பதையே ஜோ பைடன் மறந்து விட்டார். ஒட்டுமொத்த உலகமும் நம்மைப்பார்த்து சிரிக்கிறது'' என்று அமெரிக்கர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கிண்டலாக பதிவு செய்துள்ளார்.
- நான் முதலமைச்சராக வருவேன் என்று நினைக்கவே இல்லை.
- மக்கள் எனக்கு பதவி உயர்வு அளித்து என்னை பிரதமராக்கினர்.
பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து பேசினார். இதையடுத்து நியூயார்க் சென்ற பிரதமர் மோடி அங்கு நாசா கொலிசியம் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த இந்தியாவின் முதல் பிரதமரான தன்னால் நாட்டிற்காக உயிரைக் கொடுக்க முடியாது, ஆனால் நிச்சயமாக நாட்டிற்காக வாழ முடியும்.
சுயராஜ்ஜியத்திற்காக (சுய ஆட்சி) என் உயிரைக் கொடுக்க முடியவில்லை. ஆனால், சு-ராஜ் (நல்லாட்சி) மற்றும் வளமான நாட்டிற்காக என் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாக நான் முடிவு செய்துள்ளேன்.
நான் முதலமைச்சராக வருவேன் என்று நினைக்கவே இல்லை, ஆனால் நான் அதைச் செய்தபோது குஜராத்தின் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தேன்.
அப்போது மக்கள் எனக்கு பதவி உயர்வு அளித்து என்னை பிரதமராக்கினர். ஆனால், நாடு முழுவதும் பயணம் செய்து நான் கற்றுக்கொண்டதுதான் எனது ஆட்சி மாதிரியை வலுவாக மாற்றியது. இந்த மூன்றாவது தவணையில் நான் மூன்று மடங்கு பொறுப்புடன் முன்னேறி வருகிறேன் என்றார்.
- குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
- அதிபர் தேர்தலுக்கான பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
அதிபர் தேர்தலுக்கான பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் செய்தியாளர் ஒருவருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நீங்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், 2024-ல் வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் முயற்சியில் தோல்வி அடைந்தால் 2028-ல் மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவேன் என நினைக்கவில்லை என தெரிவித்தார்.
- இந்தியா தற்போது வாய்ப்புகளுக்காக காத்திருப்பது இல்லை.
- இந்தியா புதிய அமைப்புகளை உருவாக்கி முன்னோக்கிச் செல்கிறது என்றார்.
வாஷிங்டன்:
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நியூயார்க் சென்றார். அங்கு நாசா கொலிசியம் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா தற்போது வாய்ப்புகளுக்காக காத்திருப்பது இல்லை. வாய்ப்புகளை உருவாக்குகிறது.
இந்தியா யாரையும் பின்பற்றிச் செல்வது இல்லை. புதிய அமைப்புகளை உருவாக்கி முன்னோக்கிச் செல்கிறது.
உலகில் நான் எங்கு சென்றாலும் ஒவ்வொரு தலைவரும் புலம்பெயர்ந்த இந்தியர்களைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.
இந்த 2024-ம் ஆண்டு முழு உலகிற்கும் முக்கியமானது. ஒரு பக்கம் சில நாடுகளுக்கிடையே மோதலும் போராட்டமும் நடக்க, மறுபக்கம் பல நாடுகளில் ஜனநாயகம் கொண்டாடப்படுகிறது. இந்த ஜனநாயகக் கொண்டாட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாக உள்ளன.
இந்தியாவில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் நடந்த தேர்தல் மனித வரலாற்றில் இதுவரை நடந்த மிகப்பெரிய தேர்தல். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட கிட்டத்தட்ட இரு மடங்கு வாக்காளர்கள் இந்தியாவில் உள்ளனர். இந்திய ஜனநாயகத்தின் இந்த அளவைப் பார்க்கும்போது நாம் இன்னும் பெருமையாக உணர்கிறோம்.
நான் எனக்கென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்திருந்த காலமும் இருந்தது. ஆனால் விதி என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தது.
நான் முதலமைச்சராக வருவேன் என நினைக்கவில்லை. நான் குஜராத்தில் அதிக காலம் முதல்வராக இருந்தேன். அதன்பின், மக்கள் என்னை பதவி உயர்த்தி பிரதமராக்கினர். சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் இந்தியப் பிரதமர் நான்தான்.
கோடிக்கணக்கான இந்தியர்கள் சுதந்திரப் போராட்டத்துக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்.
இந்தியாவுக்காக சாக முடியாது, ஆனால், நாட்டிற்காக வாழலாம். சுயராஜ்ஜியத்துக்காக என்னால் என் உயிரைக் கொடுக்க முடியவில்லை, ஆனால் நல்லாட்சி மற்றும் வளமான இந்தியா ஆகியவற்றிற்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தேன்.
ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் பார்க்கிறோம். இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன என தெரிவித்தார்.
- பாரதி நமக்குக் கற்றுத் தந்ததை மறக்கவே முடியாது.
- எங்கு சென்றாலும் அனைவரையும் குடும்பமாக ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.
வாஷிங்டன்:
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நியூயார்க் சென்றார். அங்கு நாசா கொலிசியம் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
உலகைப் பொறுத்தவரை ஏ.ஐ. என்பது செயற்கை நுண்ணறிவைக் குறிக்கிறது.
ஆனால் என்னைப் பொறுத்தவரை ஏஐ என்பது அமெரிக்கா-இந்தியாவை குறிக்கிறது.
இது உலகின் புதிய ஏஐ சக்தி. இங்குள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு எனது வணக்கம்.
நீங்கள் இந்தியாவை அமெரிக்காவையும், அமெரிக்காவை இந்தியாவையும் இணைத்துள்ளீர்கள்.
உங்கள் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு போட்டி இல்லை. நீங்கள் ஏழு கடல்களுக்கு அப்பால் வந்திருக்கலாம்.
ஆனால் எந்தக் கடலும் உங்களை இந்தியாவிலிருந்து தூரமாக்கும் அளவுக்கு ஆழம் கொண்டிருக்கவில்லை.
பாரதி நமக்குக் கற்றுத் தந்ததை மறக்கவே முடியாது. எங்கு சென்றாலும் அனைவரையும் குடும்பமாக ஏற்றுக்கொள்கிறோம்.
பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வது, பன்முகத்தன்மையை வாழ்வது என்பது நம் நரம்புகளில் உள்ளது என தெரிவித்தார்.
- ஆயுதமேந்திய மர்ம நபர்கள் இன்று காலை 11 மணியளவில் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்
- ஒரே வருடத்தில் 403 துப்பாக்கிசூடு சம்பவங்களில் சுமார் 12,416 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம் கொத்து கொத்தாக மக்களின் உயிர்களைப் பறித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அலபாமா மாகாணத்தில் இன்று நடத்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் டசன் கணக்கான மக்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆயுதமேந்திய மர்ம நபர்கள் நேற்று இரவு 11 மணியளவில் பிரம்பிங்கம் [Birmingham] மாவட்டத்தில் உள்ள பைவ் பாயிண்ட்ஸ் [Five Points] பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நடைபாதையில் குண்டடிபட்டு மயக்கமாகக் கிடந்த இரண்டு ஆண்கள் மற்றும் பெண்ணை பார்த்துள்ளனர். மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் குண்டடிபட்ட மற்றொரு நபர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடும் பணியில் போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.

அமெரிக்காவில் இந்த வருடம் மட்டும் இதுபோன்ற 403 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் [mass shootings] பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வன்முறைகளில் இந்த ஒரே வருடத்தில் சுமார் 12,416 பேர் உயிரிழந்துள்ளதாக கன் வயலன்ஸ் ஆர்கைவ் [GVA] என்ற அமைப்பின் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
- இரண்டாவது விவாதத்தை வரும் ஆக்டொபர் 23 ஆம் தேதியன்று ஏற்பாடு செய்ய சிஎன்என் தொலைக்காட்சி முன்வந்துள்ளது.
- கமலா ஹாரிஸுடன் மீண்டும் விவாதிக்க துணிச்சல் இல்லாமல் டிரம்ப் பின்வாங்கியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
இருவரும் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி ஏபிசி தொலைக்காட்சி ஏற்பாடு செய்த நேருக்கு நேர் விவாதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் கமலா ஹார்ஸ் டிரம்புடன் காரசாரமான விவாதங்களை நடத்தி பாராட்டுகளைப் பெற்றார். இந்த விவாதத்துக்குப் பின்னர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரிட்டுள்ளதாக சர்வே கூறுகிறது.
இந்த நிலையில் மேலும் ஒரு விவாதத்தில் இருவரும் கலந்துகொள்வார்களா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ஆனால் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தல் முடியும் வரை கமலா ஹாரிஸ் உடன் நேருக்குநேர் விவாதம் கிடையாது ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையில் இரண்டாவது விவாதத்தை வரும் ஆக்டொபர் 23 ஆம் தேதியன்று ஏற்பாடு செய்ய சிஎன்என் தொலைக்காட்சி முன்வந்துள்ளது.

இந்த விவாதத்தில் பங்கேற்க கமலா ஹாரிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.மிச்சிகனில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய கமலா ஹாரிஸ், டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன் என கூறினார் எனவே டிரம்ப் விவாதத்தை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஏற்கனவே மிகவும் தாமதம் ஆகிவிட்டது. சில மாகாணங்களில் வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது, எனவே மீண்டும் விவாதம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஜோ பைடனுடன் விவாதிக்கும்போது தைரியமாகப் பேசிய டிரம்ப், கமலா ஹாரிஸுடன் மீண்டும் விவாதிக்க துணிச்சல் இல்லாமல் பின்வாங்கியுள்ளார் என்று ஜனநாயகவாதிகள் டிரம்பை சமூக வலைதளங்களில் கிழித்தெடுத்து வருகின்றனர்.
- சமந்தாவின் அண்ணன் டேவிட்டின் திருமணம் அமெரிக்காவில் நடந்து முடிந்தது.
- சமந்தா அண்ணனுக்கு நெட்டிசன்கள் திருமண வாழ்த்து.
நடிகை சமந்தாவின் அண்ணன் டேவிட்டின் திருமணம் அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. அண்ணனின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திருமண நிகழ்வில் சமந்தா தனது தாயார் நினெட் பிரபு மற்றும் அப்பா, அண்ணனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதனையடுத்து சமந்தாவின் அண்ணனுக்கு நெட்டிசன்கள் திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






