என் மலர்
அமெரிக்கா
- வீடு சிறியதாக இருந்த போதும் அதன் மாத வாடகை 2 ஆயிரம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.7 லட்சம்) என கூறுகிறார்.
- வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நியூயார்க் நகரிலேயே இதுதான் மிகச்சிறிய குளியலறையாக இருக்கலாம் என்று பதிவிட்டனர்.
உலகின் முக்கிய நகரங்களில் வீட்டு வாடகை மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள ஒரு மிகச்சிறய வீட்டிற்கு ரூ.1.7 லட்சம் வாடகை என இளம்பெண் பதிவு செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
எமிலி பொனானி என்ற பெண் இதுதொடர்பாக டிக்-டாக்கில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் லோயர் ஈஸ்ட் சைடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவரது வீடு இருப்பதை காட்டுகிறார். சுமார் 2.5 அடி முதல் 3 அடி வரை மட்டுமே இருக்கும் அந்த இடத்தில் மிகச்சிறிய குளியலறை மட்டுமே உள்ளது. வீடு சிறியதாக இருந்த போதும் அதன் மாத வாடகை 2 ஆயிரம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.7 லட்சம்) என கூறுகிறார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நியூயார்க் நகரிலேயே இதுதான் மிகச்சிறிய குளியலறையாக இருக்கலாம் என்று பதிவிட்டனர். மேலும் வாடகை வீடு தொடர்பான சவால்களை பற்றி பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டதால் எமிலியின் இந்த பதிவு விவாதத்தை ஏற்படுத்தியது.
- மனித மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல்
- சராசரியாக, ஆய்வு செய்யப்பட்ட மூளை மாதிரிகளில் சுமார் 7 கிராம் மைக்ரோபிளாஸ்டிக் இருந்துள்ளன
உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மனிதர்களுடைய மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது
நேச்சர் மெடிசின் என்ற ஆய்விதழில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பேசிய நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் ரீஜண்ட்ஸ் பேராசிரியரும் மருந்து அறிவியல் பேராசிரியருமான மாத்யூ காம்பன், "குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் மனித மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவது 50% அதிகரித்துள்ளது. சராசரியாக, ஆய்வு செய்யப்பட்ட மூளை மாதிரிகளில் சுமார் 7 கிராம் மைக்ரோபிளாஸ்டிக் இருந்துள்ளன. இது ஒரு பிளாஸ்டிக் ஸ்பூனில் எடைக்கு சமம் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "சிறுநீரகம் மற்றும் கல்லீரலை விட மூளையில் 7 முதல் 30 மடங்கு அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் உள்ளதாகவும் சராசரியாக 45 அல்லது 50 வயதுடைய சாதாரண நபர்களின் மூளை திசுக்களில் ஒரு கிராமுக்கு 4,800 மைக்ரோகிராம்கள் மைக்ரோபிளாஸ்டிக் இருந்தது என்றும் டிமென்சியா எனும் மராத்தி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் இதை விட 10 மடங்கு அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் இருந்ததாக" அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
- ரூ.45 லட்சம் கடன் வாங்கி அமெரிக்காவுக்கு அனுப்பினோம்.
- சட்ட விரோதமாக அனுப்பிய ஏஜென்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியேறிய வெளிநாட்டினர் விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், அமெரிக்காவில் ஆவணங்களின்றி சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 104 இந்தியர்கள் அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குருராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மதியம் தரை இறங்கியது.
இதில் பஞ்சாப், குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 104 பேர் வந்தனர். அவர்களிடம் அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக சென்றது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய பஞ்சாப்பின் ஹோஷியார்பூர் என்ற மாவட்டத்தை சேர்ந்த ஹர்விந்தர்சிங் கூறுகையில், அமெரிக்காவில் வேலைக்கான விசா தருவதாக ஒரு ஏஜென்டு கூறியதை நம்பி ரூ.42 லட்சம் கொடுத்தேன். கடைசி நிமிடத்தில் விசா கிடைக்கவில்லை.
பின்னர் டெல்லியில் இருந்து கத்தார் சென்றேன். பின்னர் அங்கிருந்து பிரேசில் சென்றேன். அதன்பிறகு டாக்சி மூலம் கொலம்பியா, பனாமா சென்றேன். அதன்பிறகு நடந்தே மெக்சிகோ எல்லை நோக்கி புறப்பட்டேன். அப்போது என்னுடன் மேலும் சிலரும் படகில் வந்தனர்.
4 மணி நேர கடல் பயணத்தில் எங்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். நாங்கள் உயிர் பிழைத்தோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
தாராப்பூர் கிராமத்தை சேர்ந்த சுப்பால்சிங் கூறுகையில், நாங்கள் கடல் வழியாக சுமார் 15 மணி நேரம் பயணம் செய்தோம். பின்னர் பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட மலைகள் வழியாக 45 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்றோம்.
இந்த பயணத்தின்போது வழியில் பலர் சடலங்களை கண்டோம் என்றார். இந்த தகவல்களை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட பஞ்சாப்பை சேர்ந்த குர்ப்ரீத் சிங் குடும்பத்தினர் கூறுகையில், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து ரூ.45 லட்சம் கடன் வாங்கி அவரை 6 மாதத்திற்கு முன்பு அமெரிக்காவுக்கு அனுப்பினோம்.
கடனை அடைக்க முடியாமல் தற்போது வீட்டை இழந்து விட்டோம். அரசு உதவி செய்தால் மட்டுமே எங்களால் உயிர் வாழ முடியும் என்றனர்.
இதேபோல ஆகாஸ்திப்சிங் என்ற வாலிபர் அமெரிக்காவுக்கு செல்ல ரூ.60 லட்சம் வரை செலவு செய்து ஏமாந்ததாக கூறினர்.
அமெரிக்காவுக்கு அனுப்புவதற்காக வாலிபர்களிடம் ரூ.60 லட்சம் வரை கட்டணம் பெற்று சட்ட விரோதமாக அனுப்பிய ஏஜென்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை முடிவில் சட்ட விரோதமாக வாலிபர்களை அமெரிக்காவுக்கு அனுப்பிய ஏஜென்டுகள் கைது செய்யப்படுவார்கள் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
- கடும் கண்டனங்களையும் எதிர்கொண்டு வருகின்றன.
- பெண்கள் விளையாட்டுகளில் போட்டியிட தடை.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்றது முதல் டொனால்டு டிரம்ப் பல்வேறு உத்தரவுகளை தொடர்ச்சியாக பிறப்பித்து வருகிறார். மேலும், இவரது பல்வேறு கருத்துக்கள் மற்றும் நிர்வாக ரீதியிலான முடிவுகள் உலக அளவில் அதிர்வலைகளையும், கடும் கண்டனங்களையும் எதிர்கொண்டு வருகின்றன.
இந்த வரிசையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் திருநங்கைகளுக்கு எதிரான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி அமெரிக்காவில் திருநங்கைகள் பெண்கள் விளையாட்டுகளில் போட்டியிடுவதைத் தடை செய்து உத்தரவிட்டுள்ளார்.
"பெண்களுக்கான விளையாட்டுகளில் இருந்து ஆண்களை விலக்கி வைப்பது" உத்தரவு ஒருவர் பிறக்கும் போது ஒதுக்கப்படும் "பாலினம்" என்பதை மட்டும் கடைபிடிக்க வேண்டும் என்று அமெரிக்க கூட்டாட்சி நிதியுதவி பெறும் நிறுவனங்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறது.
இது தொடர்பான உத்தரவில் கையெழுத்திட்ட பிறகு பேசிய டிரம்ப், "இந்த நிர்வாக உத்தரவின் மூலம், பெண்கள் விளையாட்டு மீதான போர் முடிந்துவிட்டது" என்று கூறினார்.
முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்து இருந்தார்.
- ஆலோசகர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
- ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவோம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும்போது, ஈரான் என்னைக் படுகொலை செய்தால் அதை அழிக்க வேண்டும் என்று எனது ஆலோசகர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
அங்கு எதுவும் மிஞ்சாது. அணு ஆயுதங்களை உருவாக்கும் விவகாரத்தில் ஈரானுக்கு எதிராக அதிகபட்ச அழுத்தம் கொள்கையை மீண்டும் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்.
ஈரானுக்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகள் கொள்கையை மீண்டும் அமல்படுத்தும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். இது எனக்கு மிகவும் எரிச்சலூட்டும் ஒன்று.
எல்லோரும் நான் கையெழுத்திட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது ஈரானுக்கு மிகவும் கடினமானது. இதை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை என்று நம்புகிறேன்.
நான் அதை செய்வதில் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் நாம் வலுவாக இருக்க வேண்டும். ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவோம், அனைவரும் ஒன்றாக வாழலாம் என்றார்.
- பால்ஸ்தீன நகரமான காசாவை அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியுள்ளார்.
- இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவுக்கு சென்றுள்ள்ளார்.
கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
முன்னதாக ஜெனீவா காலநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். பல்வேறு வளரும், பின்தங்கிய நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த யுஎன்- எய்ட் நிதியை நிறுத்தினார்.
இந்நிலையில் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) உட்பட ஐக்கிய நாடுகள் (ஐநா) சபையின் பல்வேறு அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பான நிர்வாக உத்தரவில் நேற்று அவர் கையெழுத்திட்டார். மேலும் பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா. நிவாரண அமைப்பு (UNRWA) நிதியையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) செய்லபாடுகள் குறித்த மறுஆய்வுக்கும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஐ.நா. அமைப்புகளுக்குள் "அமெரிக்க எதிர்ப்பு" இருப்பதாக கருதப்படுவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை செயலாளர் வில் ஷார்ஃப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவுக்கு சென்று நேற்று டிரம்பை சந்தித்ததும் பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா. நிவாரண அமைப்பு (UNRWA) நிதியை டிரம்ப் நிறுத்திவைத்துள்ளது தற்செயலானது அல்ல.

UNRWA ஹமாஸ் அமைப்பினருக்கு அடைக்கலம் வழங்குகிறது என நேதன்யாகு ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அதனை UNRWA திட்டவட்டமாக மறுத்தது. இதைத்தொடர்ந்து 2024 இல் அமெரிக்கா UNRWA நிதியை தாற்காலிகமாக நிறுத்தியது. இந்நிலையில் டிரம்ப் தற்போது அந்த தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
13 மாதகால போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 62 ஆயிரம் பேர் உயிரிழந்த காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளுக்குள் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை நோக்கி மீண்டும் திரும்பி வருகின்றனர்.

லட்சக்கணக்கானோருக்கு மருத்துவ உதவிகளும் மனிதாபினான உதவிகளும் தேவைப்படும் சூழலில் UNRWA நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. பால்ஸ்தீன நகரமான காசாவை அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தற்போது முட்டை விலை 7.08 அமெரிக்க டாலராக உள்ளது.
- முன்பு இருந்த விலையை விட 7 மடங்கு அதிகம்.
அமெரிக்காவில் முட்டை பற்றாக்குறை இருந்து வருகிறது. பறவை காய்ச்சல் காரணமாக லட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டதால் முட்டைக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஒரு டஜன் பெரிய முட்டைகள் தற்போது 7.08 அமெரிக்க டாலராக உள்ளது. இது 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலையை விட 7 மடங்கு அதிகம் என்று அமெரிக்க வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பென்சில்வேனியாவில் ஒரு விநியோக மையத்தில் இருந்து ஒரு லட்சம் முட்டைகளை கும்பல் ஒன்று திருடி சென்றுள்ளது. இதன் மதிப்பு 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். (இந்திய மதிப்பில் ரூ.34 லட்சம்) ஆகும். இந்த திருட்டு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காசாவை கைப்பற்றுவதாக அமெரிக்க அதிபர் அறிவிப்பு.
- பாலஸ்தீனியர்கள் வேறு நாடுகளுக்கு செல்ல டிரம்ப் வலியுறுத்தல்.
காசா பகுதியை அமெரிக்கா கைப்ற்றிக் கொள்ளும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். மேலும், கையகப்படுத்தும் காசா பகுதியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்திற்கு பிறகு அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிபர் டிரம்ப் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்த பிறகு பேசிய அதிபர் டிரம்ப், "அமெரிக்கா காசா பகுதியை எடுத்துக் கொண்டு, அங்கு ஒரு வேலையை செய்ய உள்ளது. நாங்கள் அதற்கு உரிமம் கொள்வோம். அங்குள்ள வெடிக்காத வெடிகுண்டுகளை பாதுகாப்பாக அகற்றுவோம். நலப்பரப்பை சீர்ப்படுத்துவோம்."
"இடிந்துபோன கட்டிடங்களை அகற்றுவோம். பொருளாதார வளர்ச்சியை கொண்டுவந்து, எண்ணற்ற வேலைவாய்ப்பை உருவாக்குவோம். அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுப்போம்," என்று கூறினார்.
போரால் பாதிக்கப்பட்ட காசாவில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேறி எகிப்து அல்லது ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
- அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது.
- வருமாய் இழப்பை ஈடுக்கட்ட மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிறுத்த DODGE முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DODGE என்ற துறை உருவாக்கப்பட்டு அதற்கு தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
விவேக் ராமசாமி தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்கு DODGE முழுமையாக சென்றுள்ளது. அரசு மற்றும் பொதுமக்களின் முக்கிய தரவுகளை அணுகும் சுதந்திரம் DODGE துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

டிரில்லியன் கணக்கான டாலர் சலுகைகள், மானியங்கள் மற்றும் வரி வசூலுக்கான அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது. மேலும் வகைப்படுத்தப்பட்ட (Classified material) முக்கியமான விவரங்கள், கோப்புகள், ஆவணங்கள், அதி ரகசிய வீடியோ, ஆடியோகளையும், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்க செலவினங்களை ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர் முதல் 2 டிரில்லியன் டாலர் வரை குறைக்கும் திட்டத்தை மஸ்க் முன்மொழிந்தார்.
"சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் தன்னிச்சையாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும் எலான் மஸ்க் ஒரு சிறப்பு அரசு ஊழியராக வகைப்படுத்தப்பட்டுள்ளார்.
திறமையற்றவர்கள் எனக் கூறி லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஆலோசனையை அரசுக்கு DODGE வழங்கியுள்ளது.
அரசின் வருமாய் இழப்பை ஈடுக்கட்ட மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிறுத்த DODGE முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் பரவலான அச்சம் மக்களை தொற்றியது.
'அமெரிக்க அரசின் அதிகாரத்தின் மீது தனது கட்டுப்பாட்டை எலான் மஸ்க் அசாதாரண வேகத்தில் இறுக்கி வருகிறார்' என ஜனநாயகக் கட்சியினரும் அரசியல் அறிஞர்களும் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தன்னை மீறி மஸ்க் எதுவும் செய்யமுடியாது என்று டிரம்ப் உத்தரவாதம் அளித்துள்ளார்.

நேற்று இதுகுறித்து பேசிய அவர், "எலோனால் எங்கள் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்ய முடியாது, செய்யவும் மாட்டார். பொருத்தமான விஷயங்களில் நாங்கள் அவருக்கு ஒப்புதல் அளிப்போம்; அப்படி இல்லாத விஷயங்களில் நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவில் நான் இருந்த மூன்றாவது நாளே என் தோலில் சொறி ஏற்பட்டது, என் கண்கள் மற்றும் தொண்டையை எரியச் செய்தது.
- இந்தியாவின் தலைவர்கள் காற்றின் தரத்தை ஒரு தேசிய அவசரநிலையாக ஏன் அறிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.
அமெரிக்காவைச் சேர்ந்த 47 வயது தொழிலதிபர் பிரையன் ஜான்சன். மூளை செயல்பாட்டைக் கண்காணித்து பதிவு செய்யும் சாதனங்களை உருவாக்கும் கெர்னல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
வயதை குறைக்கும் [de -ageing] முயற்சியில் கோடிகளை செலவழித்து கவனம் பெற்றவர். இவர் சமீபத்தில் இந்தியா வந்திருந்த நிலையில் டெல்லியில் நிகில் காமத் நடத்தும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஆனால் டெல்லி காற்று மாசுபாடு தாங்காமல் ஆளை விட்டால் போதும் என்று நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே எழுந்து சென்றார். இந்நிலையில் அதுகுறித்து நீண்டதொரு எக்ஸ் பதிவை அவர் எழுதியுள்ளார்.

அதில், இந்தியாவில் இருந்தபோது, மோசமான காற்றின் தரம் காரணமாக இந்த பாட்காஸ்டை சீக்கிரமாகவே முடித்துவிட்டேன். நிகில் காமத் ஒரு அன்பான தொகுப்பாளராக இருந்தார். நான் அங்கு மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டேன். பிரச்சனை என்னவென்றால், நாங்கள் இருந்த அறைக்குள் வெளிப்புறக் காற்று உள்ளே வந்தது. அதை நான் கொண்டு வந்த காற்று சுத்திகரிப்பானால் சுத்திகரிக்க முடியவில்லை.
உள்ளே, காற்றின் தரம் AQI 130 ஆகவும், PM2.5 75 µg/m³ ஆகவும் இருந்தது, இது 24 மணி நேரத்தில் 3.4 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம்.
இந்தியாவில் நான் இருந்த மூன்றாவது நாளே, காற்று மாசுபாடு என் தோலில் சொறி ஏற்படுத்தி, என் கண்கள் மற்றும் தொண்டையை எரியச் செய்தது.
காற்று மாசுபாடு இந்தியாவில் மிகவும் இயல்பாக பார்க்கப்படுகிறது. அதன் எதிர்மறை விளைவுகள் பற்றிய அறிவு இருந்தாலும், யாரும் அதை பொருட்படுத்துவதில்லை. இந்த காற்றால் பிறப்பிலிருந்தே குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். யாரும் முகமூடியையும் அணிவதில்லை. அது எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.

புற்றுநோய்களை குணப்படுத்துவதை விட காற்றின் தரத்தை சுத்தம் செய்வதன் மூலம் இந்தியா அதன் மக்களின் ஆரோக்கியத்தை பேண முடியும் என்பதை சான்றுகள் காட்டுகின்றன.
இந்தியாவின் தலைவர்கள் காற்றின் தரத்தை ஒரு தேசிய அவசரநிலையாக ஏன் அறிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது முழு நாட்டிற்கும் மிகவும் மோசமானது.
நான் அமெரிக்காவுக்குத் திரும்பியபோது எல்லா இடங்களிலும் உடல் பருமனானவர்களைக் கண்டேன். 42.4% அமெரிக்கர்கள் உடல் பருமனாக உள்ளனர். நான் எப்போதும் அவர்களை சுற்றி இருந்ததால், நான் பெரும்பாலும் அதைப் பற்றி மறந்துவிட்டேன். ஆனால் இந்தியா சென்று திரும்பியதும் அது எனக்கு உறைத்தது.
உடல் பருமன் நீண்ட கால காற்று மாசுபாட்டை விட மோசமானது. அமெரிக்கத் தலைவர்கள் உடல் பருமனை தேசிய அவசரநிலையாக ஏன் அறிவிக்கவில்லை? என்றும் தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.
- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
- அமெரிக்க இராணுவ விமானங்களின் தொலைதூர இலக்கு இந்தியா.
அமெரிக்காவில் எவ்வித ஆவணங்களும் இன்றி சுமார் 11 மில்லியனுக்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறிவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
அந்த வகையில் தனது கடுமையான நிலைப்பாட்டை செயல்படுத்தும் வகையில், அமெரிக்க இராணுவ விமானம் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தவர்களை நாடு கடத்தத் தொடங்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பெயர் தெரிக்க முடியாத அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் பேசும் போது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களுடன் C-17 விமானம் இந்தியாவுக்குப் புறப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
குடியேறிகளை நாடு கடத்தும் அமெரிக்க இராணுவ விமானங்களின் மிகத் தொலைதூர இலக்கு இந்தியா தான். டெக்சாஸ், எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட குடியேறிகளை நாடு கடத்துவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இதுவரை, இராணுவ விமானங்கள் குவாத்தமாலா, பெரு மற்றும் ஹோண்டுராஸுக்கு குடியேறிகளை அனுப்பி வைத்துள்ளன.
குடியேற்றம் குறித்த அவசர அறிவிப்பின் ஒரு பகுதியாக டிரம்ப் கடந்த வாரம் நாடுகடத்தல் நடவடிக்கைகளைத் தொடங்கினார். இதுவரை லத்தீன் அமெரிக்காவிற்கு ஆறு விமானங்கள் புறப்படுள்ளன. இதில் நான்கு மட்டுமே குவாத்தமாலாவில் தரையிறங்கியது. இரண்டு அமெரிக்க C-17 சரக்கு விமானங்களை தரையிறங்க கொலம்பியா அனுமதிக்க மறுத்தது. பிறகு, டிரம்புடனான மோதலைத் தொடர்ந்து குடியேறிகளை அழைத்துச் செல்ல அதன் சொந்த விமானங்களை அனுப்பியது.
"வரலாற்றில் முதல் முறையாக, சட்டவிரோத வெளிநாட்டினரைக் கண்டுபிடித்து, இராணுவ விமானங்களில் ஏற்றி, அவர்கள் வந்த இடங்களுக்கு அவர்களைத் திருப்பி அனுப்புகிறோம்," என்று டிரம்ப் கடந்த மாதம் செய்தியாளர்களிடம் கூறினார்.
- கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை.
- பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கனடா மற்றும் மெக்சிகோ பொருட்களுக்கு வரி விதிக்கும் நடைமுறையை ஒருமாதத்திற்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இவரது அறிவிப்பு உலகளவில் வர்த்தக போர் ஏற்படும் அச்சத்தை தூண்டியது. இந்த நிலையில், மெக்சிகோ பிரதிநிதி கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.
அதில் அமெரிக்க - மெக்சிகோ எல்லைக்கு 10 ஆயிரம் துருப்புகளை அனுப்புவதாக மெக்சிகோ ஒப்புக் கொண்டது. இதைத் தொடர்ந்து தான் வரி விதிக்கும் நடைமுறையை ஒருமாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இதே போல் கனடாவும் வரி விதிப்பை ஒத்திவைக்கும் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது.
மிகவும் நட்புரீதியான உரையாடலுக்கு பிறகு எதிர்பார்க்கப்பட்ட வரிகளை ஒரு மாத காலத்திற்கு உடனடியாக இடைநிறுத்த ஒப்புக்கொண்டதாக அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் எனும் சமூக வலைதள பதிவில் தெரிவித்தார்.
தற்போதைக்கு ஒரு மாத காலத்திற்கு வரி விதிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையில் ஒப்பந்தம் எட்டுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"எங்கள் உறவு மற்றும் இறையாண்மைக்கு மிகுந்த மரியாதையுடன் அதிபர் டிரம்புடன் நல்ல உரையாடல்" என்று ஷீன்பாம் கூறினார்.






