என் மலர்
அமெரிக்கா
- அமெரிக்க எக்கு ஆலை திறன் பயன்பாடு குறைந்துள்ளது.
- பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்க அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதித்து வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இறக்குமதியாகும் எக்கு, அலுமினியம் போன்றவற்றுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
கனடா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு அதிகமான எக்கையும் அலுமினியத்தையும் இறக்குமதி செய்தது. இதனால் அந்த நாடுகள் இறக்குமதி செய்யும் எக்கு அலுமினியம் பொருட்களுக்கு இந்த கூடுதல் வரி விதிப்பால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
மெக்சிகோ, கனடாவில் இருந்து வரும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்போவதாகச் அறிவித்திருந்த டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு அந்த அறிவிப்பை நிறுத்தி வைத்தார். தற்போது இந்த புதிய வரிகளை அவர் அறிவித்திருக்கிறார்.
கூடுதல் வரி விதிப்பு குறித்து டிரம்ப் கூறும் போது, அவர்கள் எங்களிடம் வரி வசூலித்ததால், நாங்கள் அவர்களிடம் வரி வசூலிக்கிறோம் என்று தெரிவித்தார்.
கடந்த 2016 முதல் 2020 வரையிலான தனது முதல் பதவிக்காலத்தில், டிரம்ப் எக்கு மீது 25 சதவீத வரியையும், அலுமினியத்தின் மீது 10 சதவீதத்தையும் விதித்தார். ஆனால் பின்னர் கனடா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல வர்த்தக நாடுகளுக்கு வரியில்லா ஒதுக்கீட்டை அறிவித்தார்.
முன்னாள் அதிபர் ஜோபைடன் தனது ஆட்சிக்காலத்தில் இந்த ஒதுக்கீட்டை இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நீட்டித்தார்.
இதனால் சமீப ஆண்டுகளில் அமெரிக்க எக்கு ஆலை திறன் பயன்பாடு குறைந்துள்ளது. அரசின் பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மோசமான விஷயத்தை நான் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
- புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
வாஷிங்டன்:
ரஷியா-உக்ரைன் இடை யேயான போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே அமெரிக்க அதிபராக சமீபத்தில் பதவி யேற்ற டிரம்ப், ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார். இதற்காக ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் போரை முடி வுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க, ரஷிய அதிகாரிகள் பேசி வரு கின்றனர் என்று தெரி வித்தார். அதேபோல் டிரம்பின் முயற்சியை புதின் பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில் புதினுடன் தொலைபேசியில் பேசியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் பயணம் செய்தபோது தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினேன்.
போர்க்களத்தில் ஏற்படும் உயிரிழப்பு குறித்து புதின் கவலைப்படுகிறார். மக்கள் இறப்பதை நிறுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
இறந்த அனைவரும் இளைஞர்கள், அழகான வர்கள். அவர்கள் உங்கள் குழந்தைகளைப் போன்றவர்கள்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உறுதியான திட்டம் என்னிடம் இருக்கிறது. இது வேகமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்த போர் உக்ரைனில் மிகவும் மோசமாக உள்ளது. இந்த மோசமான விஷயத்தை நான் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிபர் டிரம்ப் பேட்டியில் தெளிவுபடுத்தி உள்ளார்.
- மனைவியுடன் அவருக்கு போதுமான பிரச்சினைகள் உள்ளன.
டியூக் ஆஃப் சசெக்ஸ் இளவரசர் ஹாரியின் குடியேற்ற நிலையை கேள்விக்கு உட்படுத்தும் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், இளவரசர் ஹாரியை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்துவதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிராகரித்து இருப்பதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
தி நியூயார்க் போஸ்ட்டுக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ஹாரி மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்று டிரம்ப் தெளிவுபடுத்தி உள்ளார்.
"நான் அதைச் செய்ய விரும்பவில்லை. நான் அவரை தனியாக விட்டுவிடுகிறேன். ஏற்கனவே அவரது மனைவியுடன் அவருக்கு போதுமான பிரச்சினைகள் உள்ளன. அவரது மனைவி மோசமானவர்," என்று டிரம்ப் நியூயார்க் போஸ்ட்டிடம் பேசும்போது கூறினார்.
ஹாரியின் விசா விவகாரம் தொடர்பான சட்ட சிக்கல்கள், குறிப்பாக போதைப் பொருள் பயன்பாடு குறித்து விசா நடைமுறைகளின் போதே ஹாரி தகவல் தெரிவிக்க மறுத்தது தொடர்பாக ஹெரிடேஜ் பவுன்டேஷன் சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.
- லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- அவர் ஒரு சிறப்பு அரசு ஊழியர் மட்டுமே என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DOGE என்ற துறை உருவாக்கப்பட்டு அதற்கு தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
விவேக் ராமசாமி தலைவர் பதவியிலிருந்து விலகிய நிலையில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்கு DOGE முழுமையாகச் சென்றுள்ளது. அரசு மற்றும் பொதுமக்களின் முக்கிய தரவுகளை அணுகும் சுதந்திரம் DOGE துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
டிரில்லியன் கணக்கான டாலர் சலுகைகள், மானியங்கள் மற்றும் வரி வசூலுக்கான அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது. மேலும் வகைப்படுத்தப்பட்ட (Classified material) முக்கியமான விவரங்கள், கோப்புகள், ஆவணங்கள், அதி ரகசிய வீடியோ, ஆடியோகளையும், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க செலவினங்களை ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர் முதல் 2 டிரில்லியன் டாலர் வரை குறைக்கும் திட்டத்தை மஸ்க் முன்மொழிந்தார். இதனையடுத்து "சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் தன்னிச்சையாகத் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்.

இதனால் டிரம்ப் அமெரிக்க அதிபரா அல்லது எலான் மஸ்க் அதிபரா என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. உலக பணக்காரர் ஒருவர் நினைத்தால் வல்லரசு நாட்டையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பது மஸ்க்- டிரம்ப் விஷயத்தில் புலனாவதைப் பலர் தெரிவித்து வருகின்றனர்.
ஏகபோக அதிகாரங்களை மஸ்க் பெற்றிருந்தாலும் தனது அனுமதி இன்றி மஸ்க் எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் ஒரு சிறப்பு அரசு ஊழியர் மட்டுமே என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் நாளுக்கு நாள் அமெரிக்க அரசில் மஸ்க்கின் பிடி இறுகிக்கொண்டே வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதை பிரதிபலிக்கும் விதமாக அமெரிக்காவின் பிரபல 'டைம்' இதழ் தனது அட்டைப்படத்தில் ஒரு சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
அதில் அமெரிக்க அதிபர் இருக்கையில் எலான் மஸ்க் அமர்ந்திருக்கிறார். மேலும் வாஷிங்க்டன் (தலைநகர்) மீது எலான் மஸ்க் தொடுத்துள்ள போர் என்று தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இந்த அட்டைப்படம் வைரலான நிலையில் இதற்கு டிரம்ப் பதிலளித்துள்ளார். ஆதாவது, டைம்ஸ் இதழ் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதே தனது தெரியாது என்று கேலியாக கூறியுள்ளார்.
- மோடி மற்றும் அவரது அரசாங்கத்தை சாவந்த் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
- குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றை அவர் கடுமையாக விமர்சித்தார்.
இந்திய-அமெரிக்க அரசியல்வாதி ஷாமா சாவந்த் விசா வழங்க மறுத்த மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் உள்ள தனது நோய்வாய்ப்பட்ட 82 வயதான தாயாரைப் பார்க்க 3 ஆவது முறையாக இந்திய விசா மறுக்கப்படுவதாக சாவந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது மோடி அரசாங்கத்தின் 'நிராகரிப்பு பட்டியலில்' [ரிஜெக்ட் லிஸ்ட்டில்] தான் இருப்பதாக தனக்குச் சொல்லப்பட்டதாக சாவந்த் கூறுகிறார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிறந்த சாவந்த் அமெரிக்க அரசியலில், குறிப்பாக சியாட்டில் நகர அரசியலில் பல ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
மும்பை பல்கலைக்கழகத்தில் பயின்று 1994 ஆம் ஆண்டு கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். பட்டப்படிப்புக்குப் பிறகு, சாவந்த் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். 2003 ஆம் ஆண்டு வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வரை பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

அமெரிக்காவில் சோசலிஸ்ட் ஆல்டர்நேட்டிவ் என்ற இடதுசாரி அரசியல் கட்சியில் சேர்ந்தார். அவர் 2014 முதல் 2024 வரை சியாட்டில் நகர சபையில் பணியாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தை சாவந்த் கடுமையாக விமர்சித்து வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றை அவர் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் தனது பெயரை மோடி அரசின் ரிஜெக்ட் லிஸ்டில் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் என்றும் நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்கவிடாமல் தடுக்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இதை கண்டித்து சியாட்டிலில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சாவந்த் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோவும் வெளியாகி உள்ளது.
- கடும் பனிப்பொழிவு காரணமாக விமான விபத்து நடந்ததாக தெரிகிறது.
- கடந்த 10 நாட்களில் 3-வது விமான விபத்து நடந்து உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உன லக்லீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு செஸ்னா 208பி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 10 பேர் பயணம் செய்தனர்.
பெரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம், புறப்பட்ட 40 நிமிடங்களில் ரேடாரில் இருந்து தொடர்பை இழந்து மாயமானது.
நார்டன் சவுண்ட் அருகே உள்ள மலைப்பகுதியில் விமானம் சென்றபோது கடும் பனிப்பொழிவு நிலவியது. அப்போது விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இதில் ஹெலிகாப்டர்கள், ஹெச்-130 ஹெர்குலஸ் விமானம் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால், மோசமான வானிலை காரணமாக, விமானத்தை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது.
நோம் நகரிலிருந்து தென்கிழக்கே சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் விமானம் காணாமல் போனதாக கடலோர காவல்படை தெரிவித்தது. இதையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது.
இந்த நிலையில் மாயமான விமானம் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. அந்த விமானம் அலாஸ்கா கடலில் உறைந்திருந்த பனியில் விழுந்து நொறுங்கி கிடந்தது. அதில் பயணித்த 10 பேரும் பலியாகி இருந்தனர். அவர்களது உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர்.
இதுகுறித்து அமெரிக்க கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் மைக் சலெர்னோ கூறும் போது, விமானத்தின் கடைசி சிக்னல் பகுதியில் மீட்புப் பணியாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் அறியப்பட்ட இடத்தைத் தேடிய போது விமானத்தின் நொறுங்கிய பாகங்களை கண்டுபிடித்தனர் என்றார்.
கடும் பனிப்பொழிவு காரணமாக விமான விபத்து நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
அமெரிக்காவில் கடந்த 10 நாட்களில் 3-வது விமான விபத்து நடந்து உள்ளது. கடந்த 29-ந்தேதி வாஷிங்டனில் நடுவானில் பயணிகள் விமானம்-ராணுவ ஹெலிகாப்டர் மோதி கொண்டதில் 67 பேர் உயிரிழந்தனர். 31-ந்தேதி பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் கீழே விழுந்த தில் 6 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DOGE என்ற துறை உருவாக்கப்பட்டது.
- சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் அறிவித்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DOGE என்ற துறை உருவாக்கப்பட்டு அதற்கு தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
விவேக் ராமசாமி தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்கு DOGE முழுமையாக சென்றுள்ளது. அரசு மற்றும் பொதுமக்களின் முக்கிய தரவுகளை அணுகும் சுதந்திரம் DOGE துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
டிரில்லியன் கணக்கான டாலர் சலுகைகள், மானியங்கள் மற்றும் வரி வசூலுக்கான அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது. மேலும் வகைப்படுத்தப்பட்ட (Classified material) முக்கியமான விவரங்கள், கோப்புகள், ஆவணங்கள், அதி ரகசிய வீடியோ, ஆடியோகளையும், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்க செலவினங்களை ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர் முதல் 2 டிரில்லியன் டாலர் வரை குறைக்கும் திட்டத்தை மஸ்க் முன்மொழிந்தார்.
இதனையடுத்து "சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் தன்னிச்சையாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய பில் கேட்ஸ், "அமெரிக்கா தனது பட்ஜெட்டில் 1% க்கும் குறைவாகவே வெளிநாட்டு உதவிக்காக செலவிடுகிறது என்றாலும், இந்த நிதி லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறது. ஆகவே சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூலமாக மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் வளர்ச்சி நிதி நிறுத்தப்பட்டால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு வழிவக்கும்" என்று தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு, சுகாதாரத் திட்டங்கள் மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட உதவிகளை பல நாடுகளுக்கு சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் செய்து வருகிறது. USAID நிறுவனத்துடன் இணைந்து பில் கேட்சின் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பல்வேறு நாடுகளுக்கு உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- கொலம்பியா - பனாமா எல்லையில் 'டேரியன் கேப்' எனும் சதுப்பு நிலக் காடு அமைந்துள்ளது.
- 'VIP சுரங்கப்பாதை' என்று கூறப்படும் இந்த சுரங்கப்பாதைகள் மிகவும் குறுகியது,
ஆவணங்களின்றி சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருபவர்களை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
அவ்வாறு இந்தியாவைச் சேர்ந்த 18,000 இந்தியர்களை அமெரிக்கா கண்டறிந்துள்ளது. முதற்கட்டமாக 100க்கும் மேற்பட்டோரை ராணுவ விமானம் மூலம் அமெரிக்கா நாடுகடத்தியது. அவர்கள் பஞ்சாப் விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர். அவர்களின் கை கால்கள் விலங்கிடப்பட்டு அழைத்துவரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்காதது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

உலக வல்லரசான அமெரிக்காவில் பிழைப்பதற்காக பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களும் அந்நாட்டின் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர்.
இந்தியாவைச் சேர்ந்தவர்களும் சிறந்த வாழ்க்கையை தேடி இவ்வாறு சட்டவிரோதமாக அமெரிக்கா செல்கின்றனர். அதற்கு அவர்கள் பயணிக்கும் பாதை மிகவும் ஆபத்தானது. பல நாடுகளை கடந்த பின்னரே அமெரிக்காவை அடைய முடியும். குறிப்பாக கொலம்பியா - பனாமா எல்லையில் உள்ள 'டேரியன் கேப்' என்னும் சதுப்பு நிலக் காட்டை அவர்கள் கடக்க வேண்டும்.
இவ்வாறு சட்டவிரோதமாக எல்லைகளைக் கடக்கும் எந்த ஒரு பாதையும் 'டாங்கி ரூட்' [donkey route] என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை பஞ்சாபி மொழியில் இருந்து மருவிய ஒன்று. இந்த பாதையில் மக்களை காசு வாங்கிக்கொண்டு அழைத்துச் செல்ல முகவர்கள் செயல்படுகின்றனர்.
அமெரிக்காவிற்கோ அல்லது வேறு ஐரோப்பிய நாட்டிற்கோ நுழைய விரும்பும் இந்தியர்கள், சட்டப்பூர்வ வழியால் அவ்வாறு செய்ய முடியாத நிலையில், மற்ற நாடுகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய உதவும் இந்த முகவர்களுக்கு பெரும் தொகையை செலுத்துகிறார்கள்.
இந்தியக் குடிமக்களுக்கு, கயானா, பொலிவியா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் சுற்றுலா விசா எளிதாக கிடைக்கும். அதன்பின் இந்த பாதை வழியாக இந்தியர்கள் பெரும்பாலும் கொலம்பியாவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பனாமாவுடன் ஒப்பிடும்போது, கொலம்பியா, அமெரிக்க எல்லைக்கு அருகில் உள்ளது.
கொலம்பியா - பனாமா எல்லையில் உள்ள 'டேரியன் கேப்' என்னும் சதுப்பு நிலக் காடு, கரடு முரடான நிலப்பரப்பு, மாறுபட்ட தட்பவெப்பம், சிறுத்தைகள், பாம்புகள், ஏராளமான விஷ பூச்சிகள், வழிப்பறி கொள்ளையர்கள், உள்ளூர் ரவுடிகள் என பல்வேறு ஆபத்துக்களை உள்ளடக்கியது.
97 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த அடர்ந்த காட்டுப்பகுதியின் ஆபத்துகள் அனைத்திலுமிருந்து உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றிக்கொண்டு தப்பித்து, எட்டு முதல் பத்து நாட்களில் கோஸ்டாரிகா மற்றும் நிகரகுவாவை அடைவார்கள்.
கோஸ்டாரிகா மற்றும் நிகரகுவாவிலிருந்து, இந்தியர்கள் குவாத்தமாலா வழியாக மெக்சிகோவின் தெற்கு எல்லையை அடைகிறார்கள். இங்கிருந்து, அவர்கள் மெக்சிகோவிற்குள் நுழைந்து பின்னர் அமெரிக்காவிற்குள் நுழைகிறார்கள்.

கடந்து செல்லும் நாடுகளில் அரசியல் சூழ்நிலை, வானிலை, மனித கடத்தல் மற்றும் பிற குற்ற வழிகளைக் கருத்தில் கொண்டு, 'டாங்கி ரூட்' வழியாக அமெரிக்காவை அடைய இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையிலான எல்லைப் பகுதிகளுக்கு அருகில் பல சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
'VIP சுரங்கப்பாதை' என்று கூறப்படும் இந்த சுரங்கப்பாதை மிகவும் குறுகியது, இருண்டது, பூச்சிகள், பாம்புகள் நிரம்பியது. இது மெக்சிகோவின் சியுடாட் ஜுவாரெஸை அமெரிக்க மாகாணமான டெக்சாஸின் எல் பாசோவுடன் இணைக்கிறது.
இதைப் பயன்படுத்த கார்டெல்களுக்கு 6,000 டாலர்கள்(ரூ.5.25 லட்சத்திற்கு மேல்) கொடுக்க வேண்டும். கார்டெலுக்குப் பணத்தைச் செலுத்தியவுடன், பயணிப்பவர்களுக்கு ஒரு குறியீடு வழங்கப்படுகிறது. இது மெக்சிகோவில் உள்ள பிற கார்டெல்கள் மற்றும் போலீஸ் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க பயன்படுகிறது. இதன்மூலம் அவர்கள் அமெரிக்காவிற்குள் எளிதாக நுழைய முடியும்.
- ஜனநாயக கட்சி தலைமை வகிக்கும் 22 மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
- விசா பெற்று கிரீன் கார்டுகளுக்காக காத்திருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு நிம்மதியளிக்கும்.
டிரம்ப் உத்தரவு:
கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் பல்வேறு தடாலடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குறிப்பாக அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை டிரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டார்.
பிப்ரவரி 19 முதல் இந்த தடை நடைமுறைக்கு வரும்என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் உள்ளிட்ட 22 ஜனநாயக கட்சி தலைமை வகிக்கும் மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதைத்தொடர்ந்து டிரம்பின் உத்தரவுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் சியாட்டில் நீதிமன்றத்திலும் இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதி, அரசியலமைப்புடன் டிரம்ப் "கொள்கை விளையாட்டுகளை" விளையாடுகிறார். தனிப்பட்ட நலனுக்காக சட்டத்தின் ஆட்சியைத் அவர் மதிப்பிழக்க செய்ய முயல்கிறார் என்று கண்டித்தார். டிரம்பின் உத்தரவுக்கு காலவரையின்றி தடை விதித்து உத்தரவிட்டார். முன்னதாக மேரிலாந்து நீதிமன்றமும் இதே தீர்ப்பை வழங்கியிருந்தது.
இந்த தீர்ப்பு அமெரிக்காவில் விசா பெற்று கிரீன் கார்டுகளுக்காக காத்திருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.
குடியுரிமை பிறப்புரிமை:
1868-ல் இயற்றப்பட்ட சட்டவிதியின்படி பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலையைப் பொருட்படுத்தாமல், அமெரிக்காவில் பிறக்கும் எந்த ஒரு குழந்தைக்கும் அமரிக்க குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் அமெரிக்காவில் பிறந்த குழந்தை குடியுரிமை பெற, குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அமெரிக்க குடிமகனாக, சட்டப்பூர்வ நிரந்தர குடியேறியாக (கிரீன் கார்டு வைத்திருப்பவர்) அல்லது அமெரிக்க ராணுவத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று டிரம்பின் உத்தரவு குறிப்பிடுகிறது.

அமெரிக்க வாழ் இந்தியர்கள்:
டிரம்பின் உத்தரவு அமலுக்கு வந்தால் அமெரிக்க வாழ் இந்தியர்களை அதிக அளவில் பாதிக்கும். அமெரிக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 4.8 மில்லியனுக்கும் அதிகமான இந்திய-அமெரிக்கர்கள் வாழ்கின்றனர்.
அதில் கணிசமானோர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்கள். எனவே டிரம்பின் உத்தரவு அமலுக்கு, தற்காலிக வேலை விசாவில் இருக்கும் (எச்-1பி விசா உள்ளிட்டவை) அல்லது கிரீன் கார்டுகளுக்காகக் காத்திருக்கும் இந்தியர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இனி தானாகவே அமெரிக்கக் குடியுரிமையைப் பெற முடியாத நிலையை உருவாக்கும் அபாயம் நிலவியது. ஆனால் தற்போது டிரம்பின் உத்தரவுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தடையால் இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
- சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
- அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கடந்த மாதம் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறார்.
அந்த வரிசையில் தான் தற்போது சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேலை குறிவைத்து தொடர் விசாரணைகளை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து இருப்பதன் மூலம் தனது அதிகாரத்தை நீதிமன்றம் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னதாக பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்காவில் வைத்து அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அமெரிக்காவின் புதிய உத்தரவு காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு உதவியதாகக் கருதப்படும் எவருக்கும் எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் பிறப்பித்துள்ளது.
பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வருகைக்குப் பிறகு இந்த தடை உத்தரவுகள் வெளியாகி உள்ளன. இவை வெளிப்படையாகவே அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
முன்னதாக காசாவை கையகப்படுத்தி பாலஸ்தீனியர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப திட்டம் கொண்டிருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்தார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் அல்ல. இது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
- ஜனவரி 2024 நிலவரப்படி, சுமார் 7,000 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இருந்தன.
- தினமும் 4 முதல் 5 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் செயலிழந்து வருகின்றன.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மூலம் இணைய தள வசதியை வழங்கி வருகிறது. இந்த செயற்கைக்கோள்கள் புவி வட்டப்பாதையில் ஒரு குறிப்பட்ட தொலைவில் நிலைநிறுத்தப்படும். ஜனவரி 2024 நிலவரப்படி, சுமார் 7,000 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இருந்தன.
இந்நிலையில், ஜனவரி மாதத்தில் மட்டும் 120க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் செயலிழந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்து தீப்பற்றி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமும் நான்கு முதல் ஐந்து ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழைந்து எறிந்துவிடுவதாக வானியலாளர் ஜொனாதன் மெக்டோவல் பதிவிட்டுள்ளார்.
- வீடு சிறியதாக இருந்த போதும் அதன் மாத வாடகை 2 ஆயிரம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.7 லட்சம்) என கூறுகிறார்.
- வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நியூயார்க் நகரிலேயே இதுதான் மிகச்சிறிய குளியலறையாக இருக்கலாம் என்று பதிவிட்டனர்.
உலகின் முக்கிய நகரங்களில் வீட்டு வாடகை மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள ஒரு மிகச்சிறய வீட்டிற்கு ரூ.1.7 லட்சம் வாடகை என இளம்பெண் பதிவு செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
எமிலி பொனானி என்ற பெண் இதுதொடர்பாக டிக்-டாக்கில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் லோயர் ஈஸ்ட் சைடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவரது வீடு இருப்பதை காட்டுகிறார். சுமார் 2.5 அடி முதல் 3 அடி வரை மட்டுமே இருக்கும் அந்த இடத்தில் மிகச்சிறிய குளியலறை மட்டுமே உள்ளது. வீடு சிறியதாக இருந்த போதும் அதன் மாத வாடகை 2 ஆயிரம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.7 லட்சம்) என கூறுகிறார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நியூயார்க் நகரிலேயே இதுதான் மிகச்சிறிய குளியலறையாக இருக்கலாம் என்று பதிவிட்டனர். மேலும் வாடகை வீடு தொடர்பான சவால்களை பற்றி பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டதால் எமிலியின் இந்த பதிவு விவாதத்தை ஏற்படுத்தியது.






