என் மலர்
அமெரிக்கா
- இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- இந்தியாவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்ப்பு.
வாஷிங்டன்:
பிரதமர் மோடி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக கடந்த 10-ந்தேதி புறப்பட்டார்.
முதலில் பிரான்சுக்கு சென்ற அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பாரீசில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரானுடன் மோடி தலைமை தாங்கி னார்.
மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாட்டு தலை வர்களை சந்தித்து பேசி னார். 14-வது இந்தியா- பிரான்ஸ் தலைமை செயல் அதிகாரிகளின் மன்ற மாநாட்டில் பங்கேற்று பேசினார். பின்னர் பிரான்ஸ் அதிபர் மெக்ரானுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் தனது 3 நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அப்போது பிரான்ஸ் அதிபர் மெக்ரான் விமான நிலையத்துக்கு நேரில் சென்று மோடியை வழியனுப்பி வைத்தார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதற்கு அவரை தொலைபேசியில் மோடி தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.
தனி விமானம் மூலம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு இந்திய நேரப்படி இன்று அதிகாலை மோடி சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை அமெரிக்க உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள அதிபரின் விருந்தினர் மாளிகையான பிளேர் மாளிகைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது அங்கு மோடியை வரவேற்க அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏராளமானோர் திரண்டி ருந்தனர். அவர்கள் இந்திய-அமெரிக்க கொடிகளை அசைத்தபடி 'பாரத் மாதா கி ஜெய்', 'வந்தே மாதரம்' 'மோடி மோடி' என கோஷமிட்டு உற்சாகத்துடன் மோடியை வரவேற்றனர். அவர்களுடன் மோடி கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதுதொடர்பாக மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, வாஷிங்டனுக்கு சென்றடைந்தேன். அதிபர் டிரம்பை சந்தித்து இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய கூட்டாண்மையை கட்டி எழுப்ப ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நமது மக்களின் நலனுக்காகவும், நமது கிரகத்தின் சிறந்த எதிர்காலத்திற்காகவும் நமது நாடுகள் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும்.
கடும் குளிர் இருந்த போதிலும், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் எனக்கு மிகவும் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
பின்னர் பிரதமர் மோடி, பிளேர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார்.
இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பு இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளி யேற்றும் நடவடிக்கையை டிரம்ப் எடுத்து வருகிறார். சமீபத்தில் 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
எனவே சட்டவிரோத குடியேற்றம் குறித்து விவா திக்க உள்ளனர். அதேபோல் எக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவுக்கு இந்தியா அதிகளவில் எக்கு, அலுமினியம் ஏற்றுமதி செய்கிறது. இதையடுத்து அதன் மீதான வரி விதிப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும்.
இந்தியா மீது வரி சலுகை அளிக்கவும் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் இந்தோ-பசிபிக், உக்ரைன்-ரஷியா போர், மேற்கு ஆசியா நிலைமை குறித்தும் விவாதிக்கிறார்கள்.
மேலும் உலக பணக்காரரான எலான் மஸ்க்கை மோடி சந்திக்க உள்ளார். அதேபோல் பிரபல தொழில் அதிபர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே நெருங்கிய நட்பு உள்ளது. பல சந்தர்ப்பங்களில் மோடியை டிரம்ப் வெகுவாக பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது முறையாக அதிபராக பதவியேற்ற டிரம்ப், பல நாடுகள் மீது வரிகளை விதித்து வருகிறார்.
இந்த நிலையில் அவரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பு இரு நாடுகள் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் மேலும் ஒரு மைல்கல்லை அடையும் என்றும் இந்தியாவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- ரஷிய அதிபர் புதினுடன் சற்று முன் தொலைபேசி வாயிலாக பேசினேன்.
- ஆக்கப்பூர்வமாகவும் நீண்ட உரையாடலாகவும் இது இருந்தது என்றார்.
வாஷிங்டன்:
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அமெரிக்கா- ரஷியா சிறைக்கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக பேசினர்.
இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
ரஷிய அதிபர் புதினுடன் சற்று முன் தொலைபேசி வாயிலாக பேசினேன். ஆக்கப்பூர்வமாகவும் நீண்ட உரையாடலாகவும் இது இருந்தது.
உக்ரைன் விவகாரம், மத்திய கிழக்கு நாடுகள், எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, டாலரின் சக்தி என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோம்.
இரு நாடுகளின் பலம் மற்றும் பயன்கள் குறித்தும் இருவரும் உரையாடினோம். உக்ரைன் உடனான போரால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதை நிறுத்த வேண்டும் என்பதை இருவரும் முதலில் ஒப்புக்கொண்டுள்ளோம். இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளோம்.
அமெரிக்காவுக்கு புதினும், ரஷியாவுக்கு நானும் செல்ல ஒப்புக்கொண்டுள்ளோம். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
- சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் நலமுடன் இருக்கிறார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
- விண்வெளி வீரர்களை அழைத்துவர ஸ்பேஸ் எக்ஸிடம் அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார்.
வாஷிங்டன்:
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆய்வுக்காக விண்வெளி ஆய்வுமையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 10 நாளில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. தொழில்நுட்ப கோளாறால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
அவர்கள் அங்கு நலமுடன் இருக்கிறார்கள் என தெரிவித்த அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அவர்கள் விரைவில் பூமி திரும்புவார்கள் என குறிப்பிட்டது.
இதற்கிடையே, விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்பேஸ் எக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்டுக் கொண்டு வருவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் ராக்கெட் அனுப்ப உள்ளது என நாசா அறிவித்துள்ளது. மார்ச் 12-ம் தேதி இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என தெரியவந்துள்ளது.
இதன்மூலம் அவர்கள் மார்ச் மாத மத்தியிலேயே பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான் அதிபர் ஆனால் சுனிதா வில்லியம்சை மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- பல்வேறு நாடுகளில் நாங்கள் உடன்படாத சட்டங்கள் உள்ளன
- நான் பாகிஸ்தானுக்குச் செல்லப் போவதில்லை.
மத நிந்தனையில் ஈடுப்பட்டதற்காக கூறி பாகிஸ்தானில் தனக்கு மரண தண்டனை விதிக்கும் நிலை உருவானதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் சமூக ஊடகமான பேஸ்புக்கில் யாரோ ஒருவரின் மத நிந்தனை பதிவுக்காக தன் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி நடந்தாக அவர் தெரிவித்துள்ளார்.
பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மார்க் ஜுக்கர்பெர்க் பேசியதாவது, "பல்வேறு நாடுகளில் நாங்கள் உடன்படாத சட்டங்கள் உள்ளன. உதாரணமாக, பாகிஸ்தானில் ஒருவர் எனக்கு மரண தண்டனை பெற்றுத் தர முயன்றார்.
பேஸ்புக்கில் ஒரு நபர் நபிகள் நாயகத்தின் உருவம் என்று ஒன்றை வரைந்து பதிவிட்டார். அது தங்கள் கலாச்சாரத்தில் தெய்வ நிந்தனை என கூறி என் மீது வழக்குத் தொடரப்பட்டது. நான் பாகிஸ்தானுக்கு செல்லப் போவதில்லை, எனவே நான் அதைப் பற்றி அவ்வளவு கவலைப்படவில்லை" என்று தெரிவித்தார்.
பல்வேறு நாடுகளில் உள்ளூர் விதிமுறைகள் மற்றும் கலாச்சார விழுமியங்களை மதித்து நடந்தும் அதே நேரம் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வதும் சவாலானது என்று அவர் மேலும் .தெரிவித்தார்.
- சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
- ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலக பணக்காரருமாக எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிதாக அமைந்த டிரம்ப் அரசின் கீழ் அரசு செயல்திறன் துறை [DODGE] தலைவராக உள்ளார்.
அரசின் தேவையற்ற செலவுகளை கண்டுபிடித்து அதை நிறுத்தும் பணியை இத்துறை செய்து வருகிறது. பிந்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் யுஸ் - எய்ட் அமைப்பின் நிதியை DODGE ஆலோசனையின் பேரில் டிரம்ப் நிறுத்தினார்.
இதற்கிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல சமூக ஊடாகமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றி மஸ்க் நடத்திக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீது எலான் மஸ்கின் கண்கள் விழுந்துள்ளது. சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் உள்ளார். 2015 இல் ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.
ஆனால் 2018 கருத்து வேறுபாடு காரணமான அதிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழுவினர், ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர் கொடுத்த வாங்க எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழு நேற்று அந்நிறுவனத்திடம் ப்ரொபோஸ் செய்துள்ளது.
ஆனால் இதற்கு சாம் ஆல்ட்மேன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சாம் ஆல்ட்மேன், "வேண்டாம்.. நன்றி.. வேண்டுமானால் எக்ஸ் தளத்தை 9.74 பில்லியன் டாலருக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

- பாலஸ்தீனியர்களுக்குத் காசாவுக்குள் திரும்பிச் செல்லும் உரிமை இல்லை
- எதிர்காலத்திற்கான சிறந்த ரியல் எஸ்டேட் தளம் என்று காசாவை அவர் வர்ணித்தார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19 இல் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.
போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமைக்குள் விடுவிக்கவில்லை என்றால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஏற்க்கனவே காசாவை வாங்கி அமெரிக்காவுக்கு சொந்தமாக்குவேன் என்று டிரம்ப் கூறியிருந்தார். காசா அமெரிக்கா கட்டுப்பாட்டில் வந்த பிறகு அங்கிருக்கும் 20 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களுக்குத் காசாவுக்குள் திரும்பிச் செல்லும் உரிமை இல்லை என்றும் டிரம்ப் பரபரப்பை கிளப்பினார். எதிர்காலத்திற்கான சிறந்த ரியல் எஸ்டேட் தளம் என்று காசாவை அவர் வர்ணித்தார்.
சனிகிழமைக்குள் அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால் போர்நிறுத்தத்தை ரத்து செய்ய நேரிடும் என்று தெரிவித்தார். இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்றும் அதனால் அடுத்த கட்ட பயண கைதிகள் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் ஹமாஸ் அறிவித்ததை அடுத்து டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
டிரம்ப் பேசியதாவது, என்னைப் பொறுத்தவரை, சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் அனைத்து பணயக்கைதிகளும் திருப்பி அனுப்பப்படாவிட்டால் போர் நிறுத்தத்தை ரத்து ரத்து செய்யச் சொல்வேன். சிறிது சிறிதாக அல்ல, இரண்டு, மூன்று என்று அல்ல, மொத்தமாக அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். இல்லையெனில் எல்லாம் கைமீறி போகும். நான் என்ன சொல்கிறேன் என்பதை ஹமாஸ் பிறகு தெரிந்துகொள்ளும் என்று கூறினார்.
அமெரிக்கா காசாவை கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் பாலஸ்தீனியர்களை ஏற்றுக்கொள்ள மறுத்தால், நட்பு நாடுகளான ஜோர்டான் மற்றும் எகிப்துக்கு பில்லியன் கணக்கான டாலர் அமெரிக்க நிதியுதவியை நிறுத்துவதாகவும் டிரம்ப் அச்சறுத்தியுள்ளார்.
- லஞ்சம் கொடுத்து 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக FCPA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
- பிரதமர் மோடி நாளை மறுநாள் அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்திக்க உள்ளார்.
அமெரிக்காவில் ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் அதானிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் அதானிக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

FCPA என்பது வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம் எனப்படுகிறது. இந்த சட்டம் அமெரிக்க நிறுவனங்களுக்கே பாதகமாக இருப்பதாக கூறியுள்ள டிரம்ப், புதிய சட்டத்தை உருவாக்க அமெரிக்க அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தற்போது பிரான்சில் இருக்கும் பிரதமர் மோடி நாளை மறுநாள் அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்திக்க உள்ள நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற நாடுகளில் வணிகத்தைப் பெறுவதற்காக வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான பல வழக்குகளும் இந்த FCPA சட்டத்தின்கீழ் பதிவாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
- பாலஸ்தீன மக்களை வெளியேற்றி காசாவை ரியல் எஸ்டேட் தளமாக உருவாக்குவோம் என்று டிரம்ப் பேசுகிறார்.
- போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியானது பாலஸ்தீன மக்களுக்காக மீண்டும் கட்டப்பட வேண்டும்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.
போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.
இந்நிலையில் காசாவை அமெரிக்கா வாங்க உள்ளதாக டிரம்ப் தெரித்துள்ளார். இது தொடர்பாக பேசிய டிரம்ப், "காசாவை வாங்குவதற்கும் சொந்தமாக்குவதற்கும் நான் உறுதிபூண்டுள்ளேன். அதை ஒரு ரியல் எஸ்டேட் தளம் என்று எண்ணிக்கொள்ளுங்கள். எனவே அதை மாற்றியமைக்க வேண்டும். ஹமாஸ் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் .
அவர்கள் [காசா மக்கள்] காசாவுக்குத் திரும்ப விரும்பவில்லை. அவர்கள் காசாவுக்குத் திரும்புவதற்கு ஒரே காரணம் அவர்களிடம் மாற்று வழி இல்லை என்பதுதான். அவர்களுக்கு பாதுகாப்பான பகுதியில் ஒரு வீட்டைக் கொடுக்க முடிந்தால் அவர்கள் திரும்ப விரும்பமாட்டார்கள்" என்று டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், காசாவை ரியல் எஸ்டேட் தளம் ஆக்குவோம் என்று டிரம்ப் அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "47000-த்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 111,000 பாலஸ்தீன மக்கள் காயமடைந்துள்ளனர். வலுக்கட்டாயமாக பாலஸ்தீன மக்களை வெளியேற்றி காசாவை ரியல் எஸ்டேட் தளமாக உருவாக்குவோம் என்று டிரம்ப் பேசுகிறார்.
போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியானது பாலஸ்தீன மக்களுக்காக மீண்டும் கட்டப்பட வேண்டும் மாறாக 'கோடீஸ்வர சுற்றுலாப் பயணிகளுக்காக' அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவில் மீண்டும் ஓர் விமான விபத்து அரங்கேறியது.
- விமானத்தின் லேண்டிங் கியர் செயலிழந்ததாக தகவல்.
அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் தனியார் ஜெட் விமானங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.
ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தின் விமான திட்டமிடல் மற்றும் அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளர் கெல்லி குஸ்டர் கூறும் போது, "நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தனியார் வணிக ஜெட் விமானத்தின் மீது மற்றொரு வணிக ஜெட் விமானம் மோதியது. டெக்சாஸின் ஆஸ்டினில் இருந்து வந்த வந்த ஜெட் விமானத்தின் தரையிறங்கும் கியர் செயலிழந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே மோதல் ஏற்பட்டது," என்று அவர் கூறினார்.
காயமடைந்தவர்களில் இருவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒருவர் மருத்துவமனையில் உள்ளார் என்று ஸ்காட்ஸ்டேல் தீயணைப்புத் துறையை சேர்ந்த டேவ் ஃபோலியோ தெரிவித்தார். மோதலில் உயிரிழந்த நபரின் உடலை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
"இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்" என்று ஃபோலியோ கூறினார். விபத்தைத் தொடர்ந்து ஓடுபாதை மூடப்பட்டுள்ளது.
- பேருந்து ஒன்று நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- விபத்து குறித்து குவாத்தமாலா ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிப்பு.
மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலா என்கிற நாட்டின் புறநகர்ப் பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர்.
குவாத்தமாலா நகரில் பேருந்து ஒன்று நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், 30 பேர் உயிரிழந்தனர். மேலும், உயிர் பிழைத்தவர்கள் பலர் பேருந்தில் சிக்கிக்கொண்டதாக தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்து குறித்து குவாத்தமாலா ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்து, மீட்பு முயற்சிகளுக்கு உதவ நாட்டின் ராணுவம் மற்றும் பேரிடர் நிறுவனத்தை நியமித்தார்.
மேலும், "இதயத்தை உடைக்கும் செய்திகளைக் கேட்டு விழித்தெழுந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவர்களின் வலி எனது வலி," என்று அரேவலோ குறிப்பிட்டிருந்தார்.
- சிறப்பு அரசு பிரதிநிதியாக எலான் மஸ்க் நியமிக்க முடிவு.
- பல நூறு மில்லியன் டாலர் முறைகேடுகளை விரைவில் கண்டுபிடிப்போம்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனுக்கு பட்ஜெட்டில் ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அதிபராக இருந்த ஜோபைடன் 895 பில்லியன் டாலரை ஒதுக்கியிருந்தார்.
இந்தநிலையில் பென்டகனுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இதையடுத்து அதிபர் டிரம்ப் பென்டகனில் நடந்துள்ள நிதி முறைகேட்டை கண்டறிவதற்காக, சிறப்பு அரசு பிரதிநிதியாக எலான் மஸ்க்கை நியமிக்க முடிவு செய்துள்ளார்.
கல்வித்துறையை ஆய்வு செய்யுமாறு எலான் மஸ்க்கிடம் கூறுவேன். அதன்பிறகு, ராணுவத்தில் ஆய்வு செய்ய சொல்வேன். பென்டகனில் நடந்த பல நூறு மில்லியன் டாலர் முறைகேடுகளை விரைவில் கண்டுபிடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே எதிர்க்கட்சியினர், அரசின் ரகசியங்களை எலான் மஸ்க்கிடம் ஒப்படைக்கும் முடிவு ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல்வேறு தரப்பினரும் டிரம்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
பென்டகனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள பல்வேறு நிறுவனங்களில், எலான் மஸ்க்கின் நிறுவனங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க எக்கு ஆலை திறன் பயன்பாடு குறைந்துள்ளது.
- பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்க அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதித்து வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இறக்குமதியாகும் எக்கு, அலுமினியம் போன்றவற்றுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
கனடா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு அதிகமான எக்கையும் அலுமினியத்தையும் இறக்குமதி செய்தது. இதனால் அந்த நாடுகள் இறக்குமதி செய்யும் எக்கு அலுமினியம் பொருட்களுக்கு இந்த கூடுதல் வரி விதிப்பால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
மெக்சிகோ, கனடாவில் இருந்து வரும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்போவதாகச் அறிவித்திருந்த டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு அந்த அறிவிப்பை நிறுத்தி வைத்தார். தற்போது இந்த புதிய வரிகளை அவர் அறிவித்திருக்கிறார்.
கூடுதல் வரி விதிப்பு குறித்து டிரம்ப் கூறும் போது, அவர்கள் எங்களிடம் வரி வசூலித்ததால், நாங்கள் அவர்களிடம் வரி வசூலிக்கிறோம் என்று தெரிவித்தார்.
கடந்த 2016 முதல் 2020 வரையிலான தனது முதல் பதவிக்காலத்தில், டிரம்ப் எக்கு மீது 25 சதவீத வரியையும், அலுமினியத்தின் மீது 10 சதவீதத்தையும் விதித்தார். ஆனால் பின்னர் கனடா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல வர்த்தக நாடுகளுக்கு வரியில்லா ஒதுக்கீட்டை அறிவித்தார்.
முன்னாள் அதிபர் ஜோபைடன் தனது ஆட்சிக்காலத்தில் இந்த ஒதுக்கீட்டை இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நீட்டித்தார்.
இதனால் சமீப ஆண்டுகளில் அமெரிக்க எக்கு ஆலை திறன் பயன்பாடு குறைந்துள்ளது. அரசின் பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






