என் மலர்
அமெரிக்கா
- மும்பைக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் 166 பேர் சுட்டுக்கொலை செய்தனர்.
- தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் சம்பவத்தின்போது சுட்டுக்கொலை செய்தனர்.
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட கனடா தொழில் அதிபரான தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம்தேதி பாகிஸ்தானில இருந்து கடல் வழியாக மும்பையில் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களைக் குறி வைத்துத் தாக்குதலை நடத்தினர்.
பல இடங்களில் நான்கு நாட்கள் வரை நீடித்த இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் 166 கொலை செய்யப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012-ல் துாக்கிலிடப்பட்டான்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனடாவை சேர்ந்த தஹாவூர் ராணாவை இந்தியா தேடிவந்தது. இதற்கிடையே ராணாவை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராணாவை இந்தியாவிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளித்தது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றம் ஒப்பந்தம்படி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
- அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், உக்ரைனின் மார்ட்டா கோஸ்ட்யுக் உடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, உக்ரைனின் எலினா ஸ்விட்னிலோவாவை 7-5, 6-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், பிரான்ஸ் வீரர் கேல் மான்பில்ஸ் உடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 6-4, 6-7 (5-7), 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இன்று நடைபெற்ற ரவுண்டு 16 போட்டியில் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி அடைந்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் முன்னணி ஜோடியான இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, பிரான்சின் ஆர்தர் பில்ஸ்- சிலியின் நிகோலஸ் ஜேரியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 4-6, 7-6 (7-5), 10-8 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியது.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இன்று நடைபெற்ற போட்டியில் அமெரிக்க வீராங்கனை தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காப், கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவா உடன் மோதினார்.
இதில் கோகோ காப் 4-6, 6-2, 4-6 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். கோகோ காப் நடப்பு சாம்பியனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், அமெரிக்காவின் ஜாக் டிராபர் உடன் மோதினார்.
இந்தப் போட்டியில் சிட்சிபாஸ் 6-3 4-6, 7-5 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- லாஸ் ஏஞ்சல்சில் அவரது வீட்டில் உள்ள நீச்சல் குளத்திலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
- லாஸ் ஏஞ்சல்சின் கேட்டமைன் ராணி [Ketamine Queen] என்று அழைக்கப்படும் போதைப்பொருள் விற்பனையாளர் ஜாஸ்வீன் சங்கா
மேத்யூ பெர்ரி
அமெரிக்காவின் பிரபலத் தொலைக்காட்சித் தொடரான பிரண்ஸ் [FRIENDS] தொடரில் நடித்த தொலைக்காட்சி நடிகர் மேத்யூ பெர்ரி (Matthew Perry) சாண்ட்லர்[Chandler] கதாபாத்திரத்தின் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.
54 வயதான மேத்யூ கடந்த ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்சில் அவரது வீட்டில் உள்ள நீச்சல் குளத்திலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது ரத்தத்தில் கேட்டமைன் [ketamine] எனப்படும் போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக இருந்தது பின்னர் நடந்த பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

கேட்டமைன் என்றால் என்ன?
மனநலம் சார்ந்த பிரசனைகளுக்கு கேட்டமைன் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மனஉளைச்சல் மற்றும் மனப் பதற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்த மேத்யூ அதை குணப்படுதவுவதற்காக கேட்டமைன் உட்கொளள்ளத் தொடங்கியுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் கேட்டமைனுக்கு அடிமையாகி உள்ளார்.

சூழ்ச்சியில் சிக்கிய மேத்யூ
இதனைப் பயன்படுத்தி இரண்டு மருத்துவர்களுடன் சேர்ந்து மேத்யூவின் உதவியாளர் அவருக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்பில் கேட்டமைன் போதைப் பொருளைத் தொடர்ந்து வழங்கி பணம் பறித்து வந்துள்ளனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக மேத்யூவின் உதவியாளர், அந்த இரண்டு மருத்துவர்கள் உட்பட 5 பேர் போலீசில் சிக்கியுள்ளனர்.
கேட்டமைன் ராணி
இவர்களுள் முக்கியமானவர் லாஸ் ஏஞ்சல்சின் கேட்டமைன் ராணி [Ketamine Queen] என்று அழைக்கப்படும் போதைப்பொருள் விற்பனையாளர் ஜாஸ்வீன் சங்கா [41 வயது] . ஹாலிவுட் பிரபலங்களும் பணக்காரர்களும் வாழும் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரில் ஜாஸ்வீன் சங்கா போதைப்பொருட்களை சப்பளை செய்து வந்துள்ளார்.

போதை சாம்ராஜ்யம்
மேத்யூவுக்கு அதிக கேட்டமைன் டோஸ்களை ஜாஸ்வீன் கொடுத்திருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சங்காவின் குடியிருப்பில் 79 பாட்டில்களில் திரவ கேட்டமின்கள், 2000 மெத் மாத்திரைகள், கோகைன்கள் ஆகியவை பிடிபட்டுள்ளன.
எரிக் பிளெமிங் என்ற இடைத்தரகர் மூலம் மேத்யூவுக்கு சங்கா கேட்டமின்களை விற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. ஒரு குப்பி கேட்டமின் 12 டாலர்கள் என்று இருந்த நிலையில் மெத்தியூவிடன் ஒரு குப்பி கேட்டமினை 1000 டாலர்கள் வரை இந்த கும்பல் ஏமாற்றி விற்றுள்ளது.
- அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் இத்தாலி வீரர் முசெட்டி 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முதல் சுற்று போட்டிகள் முடிந்து தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று நடந்த 2வது சுற்றில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபோ உடன் மோதினார்.
இந்தப் போட்டியில் தியாபோ 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இத்தாலி வீரர் முசெட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.
கடந்த மாதம் நடைபெற்ற குரோசியா ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முசெட்டி தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று நடந்த முதல் சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், பிரான்சின் வர்வரா கிரசிவாவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஸ்வியாடெக் 6-0, 6-7 (8-10), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று நடந்த முதல் சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், செக் நாட்டு வீரர் ஜிரி லெஹெகாவை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் மெத்வதேவ் 6-7 (2-7), 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்புக்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
- 'ஸ்டேயிங் அலைவ்' என்ற பாடலுக்கு டிரம்பும் அவரும் நடனம் ஆடும் வீடியோவை மஸ்க் பகிர்ந்துள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்புக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் டிரம்பை நேர்காணல் செய்தார். உலகம் முழுவதிலும் நேரலையில் நடைபெற்ற இந்த நேர்காணலை சுமார் 13 லட்சம் பேர் கேட்டனர்.
இந்நிலையில், மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் அவரும் டொனால்டு டிரம்பும் நடனமாடுவது போன்ற AI வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "எங்களை வெறுப்பவர்கள் இதனை AI என்று சொல்லக்கூடும்" என்று அவர் கிண்டலடித்துள்ளார்.
இந்த AI வீடியோவில் 'பீ கீஸ்' என்ற கிளாசிக் மியூசிக் ஆல்பத்தின் 'ஸ்டேயிங் அலைவ்' என்ற பாடலுக்கு மஸ்க்கும் டிரம்பும் நடனம் ஆடுகின்றனர்.
அண்மையில், பேஷன் ஷோவில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக சிரிப்பூட்டும் வித்தியாசமான கெட்டப்பில் நடந்து வரும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் மஸ்க் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் குரோசியா வீராங்கனை டோனா வெகிக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று நடந்த முதல் சுற்றில் குரோசிய வீராங்கனை டோனா வெகிக், அமெரிக்காவின் ஆஷ்லின் குருகருடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஆஷ்லின் 5-7, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் குரோசிய வீராங்கனை வெகிக் தொடரில் இருந்து வெளியேறினார்.






