என் மலர்
உக்ரைன்
- போா் குறித்து விவாதிப்பதற்காகக் கடந்த ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் சுவிட்சர்லாந்தின் முதல் உக்ரைன் அமைதி மாநாடு நடந்தது
- கடந்த மாநாட்டில் பங்கேற்ற இந்தியா அமைதித் தீர்மான கம்யூனில்[communique] சேராமல் தவிர்த்து விட்டது.
பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக போலாந்து சென்று அங்கிருந்து 7 மணி நேரம் ரெயில் பயணமாக நேற்று [ஆகஸ்ட் 23] உக்ரைன் சென்றடைந்தார். அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை தலைநகர் கீவ் -இல் சந்தித்த மோடி, போர் நிறுத்தம், இருநாட்டு உறவுகள் குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி இரண்டாவது உக்ரைன் அமைதி மாநாட்டை ஏற்று நடந்த பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றுவரும் போா் குறித்து விவாதிப்பதற்காகக் கடந்த ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் சுவிட்சர்லாந்தின் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் முதல் உக்ரைன் அமைதி மாநாடு நடந்தது. இதில் இந்தியா உட்பட சுமார் 100 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆனால் ரஷியா இதில் பங்கேற்காததால் மாநாடு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதற்கிடையே விரைவில் 2 வது மாநாட்டை நடத்த உக்ரைன் திட்டமிட்டு வருகிறது.
அந்த வகையில் தெற்கு நாடுகளில் ஒன்று இந்த 2 வது மாநாட்டை ஏற்று நடத்த வேண்டும் என்று விரும்புவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா, கத்தார், துருக்கி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுடனும் மாநாட்டை நடத்துவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்த ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியிடமும் இதுகுறித்து பேசியதாகத் தெரிவித்தார். இந்தியா மிகப்பெரிய நாடு, மிகப்பெரிய ஜனநாயகமாக உள்ளது. இருந்தாலும்கடந்த மாநாட்டில் பங்கேற்ற இந்தியா அமைதித் தீர்மான கம்யூனில்[communique] சேராமல் தவிர்த்து விட்டது. எனவே 2வது மாநாட்டை இந்தியா நடத்துவதில் சிக்கலும் இருக்கிறது என்று தெரிவித்தார்.
- புதின் நாட்டின் [ரஷியா] பொருளாதாரத்தை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்.
- உக்ரைனின் அமைதியைக் கருத்தில் கொண்டு ஜெலன்ஸ்கியின் வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது
உக்ரைனில் மோடி
பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக போலாந்து, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். போலந்தில் இருந்து 7 மணி நேர ரெயில் பயணத்திற்கு பிறகு நேற்று [ஆகஸ்ட் 23] உக்ரைன் சென்றடைந்தார் மோடி . உக்ரைனில், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை தலைநகர் கீவ் -இல் சந்தித்து பேசினார். ரஷியா உக்ரைன் போருக்கு இடையில் பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. போர் நிறுத்தம், இருநாட்டு உறவுகள் குறித்து மோடியும் ஜெலன்ஸ்கியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஜெலன்ஸ்கியின் வேண்டுகோள்
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, புதின் நாட்டின் [ரஷியா] பொருளாதாரத்தை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருக்கிறார். ரஷியா பிரதானமாக எண்ணெய் வளத்தில் இருந்துதான் பணம் பார்க்கிறது. அதைத்தவிர அவர்கள் நம்பிக்கை வைக்கும்படி வேறு எதுவும் இல்லை. இந்த எரிசக்தி ஆற்றல் ஏற்றுமதியில்தான் பிரதானமாக ரஷியா ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும் போருக்குப் பிறகு ரஷியா மீது மேற்குலகம் பொருளாதாரத் தடைகள் விதித்திருந்தாலும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இன்னும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் எரிசக்தியை ஏற்றுமதி செய்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய ஜெலன்ஸ்கி, ரஷியாவுடனான இந்த வர்த்தகத்தை இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிறுத்திக்கொண்டால் அது ரஷியாவுக்கு மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். இதன்மூலம் போர் நிறுத்தத்துக்கு ரஷியாவை சம்மதிக்க வைக்க முடியும் என்பதே ஜெலன்ஸ்கி வலியுறுத்தும் கூற்றாகும்.
இந்தியா அரசின் முரண்
2022 ஆம் ஆண்டு உக்ரைன் போர் தொடங்கியதற்குப் பின் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு மேற்கு நாடுகள் தடை விதித்திருந்தன. இதனால் ஆசிய நாடுகளைக் கவர ரஷியா தங்களின் எண்ணெய் விலையை வெகுவாகக் குறைந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவில் இருந்து அதிக எண்ணெய்யை ஏற்றுமதி செய்யத் தொடங்கின. இந்தியா தொடர்ந்து இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது குறித்து மேற்கு நாடுகளும் இந்தியாவை விமர்சித்திருந்தன.

போர் தொடங்கிய பின்னர் இந்தியாவின் ரஷிய எண்ணெய் இறக்குமதி 41 சதவீதமாக உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் சீனாவை பின்னுக்குத் தள்ளி ரஷிய எண்ணெய்யை வாங்குவதில் இந்தியா முன்னுக்கு வந்தது. இந்த நிலையில்தான் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ரஷிய எண்ணெய்யை புறக்கணிக்க இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் மோடி உக்ரைனின் அமைதியைக் கருத்தில் கொண்டு ஜெலன்ஸ்கியின் வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பாரா? என்ற கேள்வி உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.
- பிரதமர் மோடி, கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை.
- போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி அஞ்சலி.
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் தோளில் கை போட்டு தனது அன்பை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.
அரசு முறை பயணமாக உக்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி, கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பிறகு, போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.
ரஷியா உடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
30 ஆண்டுகள் கழித்து உக்ரைன் சென்ற முதல் இந்திய பிரமதர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு ரெயில் மூலம் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார்.
- 1991-க்குப் பிறகு உக்ரைன் செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார்.
இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு பயணமாக போலந்து சென்றார். போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு ரெயில் மூலமாக உக்ரைன் புறப்பட்டார். இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை 11 மணியளவில் உக்ரைன தலைநகர் கீவ் நகர் சென்றடைந்தார்.
1991-ல் உக்ரைன சோவியத் யூனியனில் இருந்து பிரிந்தது. அதன்பின் இந்திய பிரதமர் உக்ரைன் செல்வது இதுவே முதன்முறையாகும்.
- ரஷியாவுக்குள் உக்ரைன் படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
- எல்லையில் இருந்து ரஷியா தாக்குதலை முறியடிக்க இந்த திட்டம் என முதலில் உக்ரைன் தெரிவித்திருந்தது.
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை ரஷியா இந்த போரில் வெற்றி பெற முடியவில்லை. மேற்கத்திய நாடுகள் உதவிகளுடன் உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 6-ந்தேதி திடீரென உக்ரைன் வீரர்கள் திடீரென ரஷியா எல்லையில் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்தது. சுமார் 70 குடியிருப்பு பகுதிகளை சுற்றி வளைத்துள்ளதாக தெரிவித்தது.
எல்லையில் இருந்து ரஷியா நடத்தும் தாக்குதலை நிறுத்துவதற்காகத்தான் இந்த முயற்சி. மற்ற நோக்கம் ஏதும் இல்லை என உக்ரைன் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இரு நாட்டு எல்லைக்குள் இடையில் ஒரு பாதுகாப்பான மண்டலத்தை உருவாக்குவதற்குதான் என முதன்முறையாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "தற்போது ஒட்டுமொத்த தற்காப்பு நடவடிக்கைதான் எங்களது முதன்மையான பணியாகும். முடிந்தவரை ரஷிய போர் திறனை அழித்து அதிகபட்ச எதிர்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது. குர்ஸ்க் பிராந்தியத்தில் எங்கள் செயல்பாடு, ரஷியாவில் ஒரு பாதுகாப்பான மண்டலத்தை உருவாக்குவது இதில் அடங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப்போருக்குப்பின் ரஷியா எல்லையில் ஒரு நாடு முதன்முறையாக ஊடுருவியுள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத ரஷியா, உக்ரைன் வீரர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
- ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியம் அருகே உள்ள எல்லையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் குவிப்பு.
- ரஷியா அதிகப்படியான வீரர்களை அப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருந்த போதிலும் இருநாடுகளுக்கு இடையில் போர் முடிவுக்கு வரவில்லை.
தற்போது ஊடுருவல், எல்லையைத் தாண்டி தாக்குதல் போன்றவை இல்லை. ஆனால் டிரோன் தாக்குதல் அதிகரித்துள்ளது. அடிக்கடி இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் உக்ரைனில் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியம் அருகே உக்ரைன் ராணுவ வீரர்கள் கடந்த நான்கு நாட்களாக குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தெரிந்ததும் ரஷியா உடனடியாக அங்கு படைகளை அனுப்பியுள்ளது. மேலும், ஆயுதங்களையும் அனுப்பி வைத்துள்ளது. உக்ரைன் திடீரென குர்ஸ்க் பிராந்திய எல்லையில் வீரர்களை குவித்துள்ளதால் ரஷியா அங்கு அவசர பிரகடனம் அறிவித்துள்ளது.
உக்ரைன் இது தொடர்பாக விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. இந்த நிலையில்தான் இன்று ரஷியா விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் கோஸ்டியன்டினிவ் பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த ஷாப்பிங் மால் மக்கள் நிறைந்த இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏவுகணை தாக்குதல் காரணமாக அப்பகுதியில் மேக அடர்ந்த கருப்பு நிறத்தில் காட்சியளித்தன.
மக்கள் வசிக்கும் இடத்தை குறிவைத்து மற்றொரு தாக்குல். இது ரஷியாவால் பயங்கரவாத தாக்குதல் என டொனெட்ஸ்க் பிராந்திய தலைவர் வேடிம் பிளாஷ்கின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உக்ரைனின் எல்லைத் தாண்டிய சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என ரஷியா தெரிவித்துள்ளது. குர்ஸ்க் பிராந்தியத்தில் செயல்பாட்டு நிலை மிகவும் மோசமாக உள்ளது என அப்பிராந்திய பொறுப்பு கவர்னர் அலெக்செய் ஸ்மிர்னோவ் தெரிவித்துள்ளார்.
- கீவ்வில் உள்ள மருத்துவமனை மீது ரஷிய ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
- இதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது.
கீவ்:
உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
ரஷியாவுக்கு எதிராகப் போரிடும் உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.
போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து ரஷியா சமீபத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. உக்ரைன் தலைநகர் கீவ், டினிப்ரோ, கிர்வி ரிஹ், சுலோவன்ஸ்க், கர்மட்ரோஸ் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே, தலைநகர் கீவ்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், ரஷிய தாக்குதலைத் தொடர்ந்து கீவ் நகரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் இருந்து புற்றுநோயுடன் போராடும் குழந்தைகளை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா நடத்திய குண்டுவீச்சு குழந்தைகள் மருத்துவமனையை கடுமையாக சேதப்படுத்தியது, இந்தக் கொடூர தாக்குதல் பல குடும்பங்களை பயமுறுத்தியது. ஏற்கனவே ஆபத்தான நோய்களுடன் போராடும் அவர்களின் குழந்தைகளையும் கடுமையாக பாதித்தது.
இதனால் பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் சிகிச்சையை எங்கு தொடர்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக, 2 வயது மகனின் பெற்றோர் கூறுகையில், கடுமையான லிம்போபிளாஸ்டிக் லுகேமியா நோய்க்காக ஜூன் தொடக்கத்தில் இங்கு வந்தோம். ஐரோப்பாவில் உள்ள சிறந்த மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று என்பதால் இங்கு சிகிச்சை பெற முடிவு செய்தோம். ஆனால் தற்போது நடைபெறும் தாக்குதலால் எங்கு செல்வது என தெரியவில்லை என குறிப்பிட்டார்.
- நேற்றைய தினம் உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 41 பேர் பலியாகினர்.
- உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் உலகின் கொடூரமான குற்றவாளியோடு மாஸ்கோவில் இன்று கட்டித் தழுவியுள்ளார்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து இன்று [ஜூலை 9] நடக்கும் 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி நேற்று ரஷியா சென்றார். பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பில் மோடியை புதில் காட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்தினார். நேற்றைய தினம் அதிபர் புதினுடன் தேநீர் விருந்தில் அவரது இல்லத்தில் வைத்து மோடி உரையாடினார். பின்னர் மோடிக்கு முக்கிய பகுதிகளை புதின் சுற்றிக் காட்டினார்.

சிறிது நேரம் கோல்ப் வண்டியில் இருவரும் பயணித்தனர். அதனபின் புதின் ஏற்பாடு செய்த இரவு விருந்தில் அவருடன் மோடி உணவருந்தினார். அதைத்தொடர்ந்து இன்று நடக்கும் மாநாட்டில் மோடி கலந்துகொள்கிறார். இந்நிலையில் மோடி ரஷியா சென்றுள்ளது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றைய தினம் உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 41 பேர் பலியாகினர். உக்ரைனின் குழந்தைகள் மருத்துவமனை மீதும் ரஷியா நேற்றைய தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில் நேட்டோ கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு பயணித்துக்கொண்டிருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷிய பயங்கரவாதிகள் இந்த தாக்குதளுக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்று தெரிவித்தார்.


இதற்கிடையில், மோடியின் ரஷிய பயணம் குறித்து ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில், 'இது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் உலகின் கொடூரமான குற்றவாளியோடு மாஸ்கோவில் இன்று கட்டித் தழுவியுள்ளது அமைதிக்கான முயற்சிகள் மீது விழுந்த பெருத்த அடியாக உள்ளது' என்று தெரிவிட்டுள்ளார். கடந்த மாதம் இத்தாலியில் நடந்த ஜி 7 மாநாட்டில் மோடியும் ஜெலன்ஸ்கியும் சந்தித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

- உக்ரைனிலேயே மிகப்பெரிய குழந்தைகள் மருத்துமனையான இதில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர்
- இந்த தாக்குதலில் மருத்துவமனையில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 87 படுகாயமடைந்த்துள்ளனர்
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள பிரதான குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனிலேயே மிகப்பெரிய குழந்தைகள் மருத்துமனையான இதில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். தாக்குதல் நடந்த சில நொடிகளுக்கு பிறகு தங்களின் குழந்தைகளை கையில் ஏந்தியபடி தாய்மார்கள் வெளியே ஓடி வந்தனர்.

இந்த தாக்குதலில் மருத்துவமனையில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 87 படுகாயமடைந்த்துள்ளனர் என்றும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் மருத்துவமனையில் டயாலிசிஸ் பகுதி உட்பட 5 யூனிட்டுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. மருத்துவமனை ஊழியர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் என பலர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று உக்ரைனின் பல்வேறு நகரங்களின் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 170 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மருத்துவமனை பிரச வார்டுகள், குழந்தைகள் நர்சரிகள், மக்கள் வசிக்கும் வீடுகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. நேட்டோ கூத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுகொண்டிருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள செய்தியில், ரஷிய தீவிரவாதிகள் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

- உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கடந்த மே மாதம் முதல் உக்ரைன் தலைநகர் கார்கிவ் மீது ரஷியா தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளது.
ரஷியா உக்ரைன் இடையிலான போர் கடந்த 3 வருடங்களாக நடந்து வரும் நிலையில் இந்த போரில் ஏராளமான உயிரிழப்புகளும் உக்ரைன் பகுதிகளில் பலத்த சேதங்களும் ஏற்பட்டுள்ளது. மேற்கு நாடுகளின் உதவியுடன் இந்த போரில் உக்ரைன் ஈடுபட்டுள்ளது. ரஷியாவுக்கு வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.

உக்ரைனை கைப்பற்றுவது தங்களின் நோக்கம் இல்லை என்று கூறும் புதின் மேற்கு நாடுகளால் உக்ரைன் வழியாக தங்களுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் கார்கிவ் பகுதியில் உள்ள ஸ்டெபோவா நோவோசெலிவ்கா [Stepova Novoselivka] iமற்றும் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நோவோபோக்ரோவ்ஸ்கே [Novopokrovske] ஆகிய இரண்டு கிராமங்களை கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆனால் உக்ரைன் ராணுவம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேற்கூறப்பட்ட பகுதிகளில் ரஷிய ராணுவத்தின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் உக்ரைன் தலைநகர் கார்கிவ் மீது ரஷியா தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு படையெடுத்தபோது உக்ரைன் விண்ணப்பம் செய்தது.
- பேச்சுவார்த்தை தொடங்கிய போதும், முடிவடைய ஆண்டுகள் பல எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனின் பெரும் பகுதியை பிடித்துக் கொள்ள நினைக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போது உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷியாவின் படையெடுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள உக்ரைன், தங்களை ஐரோப்பிய யூனியனுடன் சேர்த்துக் கொள்ள கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது உக்ரைனை ஐரோப்பிய யூனியனில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. அனால இந்த பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடைய ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொள்ளம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மையால் "இது வரலாற்று தினம். ஐரோப்பிய யூனியனில் எங்கள் நாட்டின் கூட்டணி "புதிய அத்தியாயம்" எனத் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் (சுழற்சி முறையில் ஐரோப்பிய யூனியனின் தலைவர் பதவியை ஒரு நாடு ஏற்கும்) வெளியுறவுத்துறை மந்திரி ஹட்ஜா லஹ்பிப் "இது எங்கள் அனைவருக்கும் ஒரு வரலாற்று தருணம். மேலும் எங்கள் உறவில் ஒரு மைல்கல்" எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை தவிர்த்து மால்டோ நாடும் ஐரோப்பிய யூனியனில் இணைய விண்ணப்பித்துள்ளது. துருக்கி இணைவதற்கான பேச்சு வார்த்தை இரண்டு தசாப்தத்திற்கு மேலாக முடிவில்லாம் நீண்டது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இடையில் சரக்கு போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெறும். வரிவிதிப்பு, எனர்ஜி, சுற்றுச்சூழல், நீதித்துறை உரிமை, பாதுகாப்பு போன்றவற்றில் ஐரோப்பிய யூனியனின் 35 கொள்கைகளுக்கு ஏற்ப அதில் உள்ள நாடுகள் தங்களுடைய சட்டங்களை கொண்டு வர வேண்டும்.
- மின்சார உற்பத்தி கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.
- இன்று 8 ஏவுகணை மற்றும் 13 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் இன்னும் நீடித்து வருகிறது. உக்ரைனின் மின்சார கட்டமைப்புகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி சேதப்படுத்தி வருகிறது. தற்போது உக்ரைன் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷியா பார்வை உள்ளது.
அந்த நகர் மீது தொடர்ந்து தாக்குதலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயம் அடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். மக்கள் வசிக்கும் கட்டடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இடைவிடாமல் எரிசக்தி மற்றும் மின்சாரம் உற்பத்தி கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் மின்சார உற்பத்தி திறனை இழந்துள்ளது. 16 ஏவுகணைகள் மற்றும் 13 டிரோன்கள் மூலம் எரிசக்தி மீது 8 தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.






