என் மலர்
சிரியா
- அரசு நடத்தும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- அல் ஷராவுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று கூறினார்.
சிரியா நாட்டின் இடைக்கால அதிபராக முன்னாள் கிளிர்ச்சியாளர் குழுவின் தலைவர் அகமது அல் ஷரா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இடைக்கால அரசாங்கத்தின் ராணுவ நடவடிக்கை துறை செய்தி தொடர்பாளர் கர்னல் ஹசன் அப்துல் கானி அறிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள ஆயுதமேந்திய பிரிவுகள் கலைக்கப்படுவதையும் அவர் அறிவித்தார். அவை அரசு நிறுவனங்களில் ஒருங்கிணைக்கப்படும் என்றும், புதிய அரசியலமைப்பு வரைவு செய்யப்படும் வரை தற்காலிக சட்டமன்ற குழுவை அமைக்க அல் ஷராவுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அகமது அல் ஷரா கடந்த மாதம் அசாத்தை வீழ்த்திய தாக்குதலுக்கு தலைமை தாங்கிய இஸ்லாமிய முன்னாள் கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் தலைவர் ஆவார். அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆளும் கட்சியாக மாறியுள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இட்லிப் மாகாணத்தில் முன்னர் அது நடத்திய உள்ளூர் அரசாங்கத்தின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்துள்ளது.
அசாத்தின் வீழ்ச்சியுடன் முன்னாள் சிரிய ராணுவம் சரிந்த நிலையில், புதிய ஒருங்கிணைந்த தேசிய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளை உருவாக்க அல் ஷரா அழைப்பு விடுத்துள்ளார். எனினும், இடைக்கால நிர்வாகம் எவ்வாறு முன்னாள் கிளர்ச்சிக் குழுக்களை ஒன்றிணைக்க முடியும் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
- சிரியா அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
- இஸ்ரேலின் தாக்குதலின்போது சிரியாவில் ரிக்டர் அளவுகோலில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிரியாவில் அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு எதிராக நீண்ட காலமாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து 50 ஆண்டுக் கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆசாத் நாட்டை விட்டுச் சென்ற பிறகு அவரது ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். அதேசமயம், பிரதமர் முகமது காஜி ஜலாலி தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், புதிய தலைமையை கொண்டு வருவதற்காகவும் கிளர்ச்சிக் குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், சிரியா மீது இஸ்ரேல் நிலநடுக்க வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின்போது சிரியாவில் ரிக்டர் அளவுகோலில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
குண்டுவெடிப்பு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை பிடித்துள்ளதால் அதிபர் ரஷியாவுக்கு தப்பி ஓட்டம்.
- டமாஸ்கஸ் அருகில் உள்ள கிராமம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சீரியாவில் அதிபருக்கு எதிராக போராடிய கிளர்ச்சிக்குழு டாமஸ்கஸை பிடித்தது. இதனால் தலைநகரில் இருந்து அதிபர் பஷர் ஆசாத் தப்பியோடினார். ரஷியா அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் டமாஸ்கஸ் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் கொள்ளையர்கள் புகுந்து சூறையாடி வருகின்றனர். பெண்கள், சிறுவர்கள் என எல்லோரும் கண்ணில் பட்டதையெல்லாம் சுருட்டிக்கொண்டு ஓடுகிறார்கள். இதனால் கிளர்ச்சிக்குழு அந்த கிராமத்தில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
டமாஸ்கஸ் அருகில் உள்ள ஹுசைனியா கிராமம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் பறிகொடுத்த நபர் ஒருவர் கூறுகையில் "எங்களுடைய பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்படடன. என்னுடைய 25 வருட வீடு கொள்ளைக்கு உள்ளானது. அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை என்றால், வீட்டை தீ வைத்து கொளுத்துகின்றனர். வீட்டில் உள்ள எல்லாவற்றையும் கொள்ளையடித்து விடுகிறார்கள்" என்றார்.
மற்றொரு நபர் (பள்ளி முதல்வர்) "என்னுடைய வீடு கொள்ளைடிக்கப்பட்டது. என்னால் தடுக்க முடியவில்லை. செக் பாயிண்ட் அமைத்து கொள்ளையர்களை தடுப்போம் என கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அருகில் உள்ள கிராமத்தில் இருந்து அதிக அளவில் கொள்ளை அடிக்க இங்கே வருகிறார்கள்" என்றார்.
கொள்ளையடிக்கும் நபர்கள் வெடிகுண்டுகளை வீசி குடியிருப்புகளை தீ வைத்து கொளுத்தி வருவதாகவம் தெரிவித்துள்னர். இந்த குடியிறுப்புகள் முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தங்கிய இடமாகும்.
கொள்ளையடிக்கப்பட்ட இடத்திற்குச் சென்ற கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பல கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். பலர் கொள்ளையடித்த பொருட்களை கையில் வைத்துக் கொண்டு மறைந்து இருந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.
- அனைவரும் வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு திரும்பவுள்ளனர்.
- பாதுகாப்பு விஷயங்களை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சி அமைக்க உள்ளனர். இதன் காரணமாக அந்நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்நாட்டில் இருந்து 75 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு திரும்பவுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
மீட்கப்பட்டவர்களில் ஜம்மு காஷ்ரீரை சேர்ந்த 44 ஜைரீன்கள் அடங்குவர். இவர்கள் சைதா ஜைனாபில் சிக்கியிருந்தனர். சிரியாவில் சிக்கித் தவித்த இந்தியர்கள் கோரிக்கையை ஏற்கும் வகையில், அங்குள்ள பாதுகாப்பு விஷயங்களை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியர்களை மீட்கும் பணிகளை டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டன. முதற்கட்டமாக 75 பேர் மீட்கப்பட்டுள்ள போதிலும், சில இந்தியர்கள் சிரியாவில் உள்ளனர்.
சிரியாவில் உள்ள இந்தியர்கள் டமாஸ்கஸில் உள்ள தூதரகத்துடன் +963 993385973 என்ற உதவி எண்ணிலும், வாட்ஸ்அப்பிலும், மற்றும் hoc.damascus@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தொடர்பில் இருக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
- சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
- உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர்.
டமாஸ்கஸ்:
சிரியாவில் அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு எதிராக நீண்ட காலமாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து 50 ஆண்டு கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்கள் மற்றும் நீண்ட தூர ராக்கெட்டுகள் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்காமல் இருக்க வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் அரசு படைகள் வெளியேறிய பகுதிகளில் இஸ்ரேல் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை கைப்பற்றியுள்ளது.
வடக்கு சிரியாவில், அமெரிக்காவின் ஆதரவுடன் குர்திஷ் தலைமையிலான படைகளிடமிருந்து மன்பிஜ் நகரத்தை எதிர்க்கட்சி படைகள் கைப்பற்றியதாக துருக்கி கூறியது. கடந்த காலத்தில் சண்டையிட்ட ஆயுதக் குழுக்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதை இது காட்டுகிறது.
ஆசாத் நாட்டை விட்டுச் சென்ற பிறகு அவரது ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். அதேசமயம், பிரதமர் முகமது காஜி ஜலாலி தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், புதிய தலைமையை கொண்டு வருவதற்காகவும் கிளர்ச்சிக் குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
சிரியாவில் அரசாங்கம் இன்னும் செயல்பட்டு வருவதாகவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் பிரதமர் முகமது காஜி ஜலாலி கூறி உள்ளார்.
"அதிகார மாற்றம் சுமுகமாக இருக்கும் வகையில் பணியாற்றி வருகிறோம். பாதுகாப்பு நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளது. கிளர்ச்சியாளர்களுடன் அரசாங்கம் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. கிளர்ச்சிக் குழு தலைவர் அபு முகமது அல்-கோலானி என்று அழைக்கப்படும் அஹ்மத் அல்-ஷாராவை சந்திக்க தயாராக இருக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.
- மேற்கு நாடுகள் ரஷியா மீது பல தடைகள் விதித்திருந்தும் ஆசாத்தின் விஸ்வாசம் ரஷியா பக்கமே உள்ளது.
- துருக்கி HTS ஐ விரும்பாத போதிலும் சிரியாவில் உருவான கிளர்ச்சியை ஆதரித்து வருகிறது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் 2011 முதல் 13 ஆண்டுகளாக பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரிட்டனர். ஆனால் அவரை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற முடியவில்லை.
திடீரென கடந்த வாரத்தில் ஒரு சாதராண நாளில் தொடங்கி 13 நாட்களுக்கும் குறைவாக நீடித்த ஒரு தாக்குதலில், அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி தூக்கி எறியப்பட்டுள்ளது. அதிபர் ஆசாத் நாட்டை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இடம் பொருள் ஏவல் என்றால் அது மிகையாகாது.
இடம் பொருள் ஏவல்
'ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்' என்ற திருக்குறளே இங்கேயும் ஒர்க் அவுட் ஆகி உள்ளது.
கடந்த 2011 தொடங்கிய உள்நாட்டுப் போரில் அதிபர் ஆசாத்துக்கு பக்கபலமாக ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் கிளர்ச்சியை ஒடுக்க பேருதவியாக இருந்தது. கடைசியாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த சொற்ப அலெப்போ நகர் பகுதிகளையும் ரஷியா கைப்பற்றி 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஆசாத்துக்கு பரிசளித்தது ரஷியா. தற்போது மேற்கு நாடுகள் ரஷியா மீது பல தடைகள் விதித்திருந்தும் ஆசாத்தின் விஸ்வாசம் ரஷியா பக்கமே உள்ளது.

ஆசாத்
இருப்பினும் ரஷியா தற்போது உக்ரைன் போரில் ஈடுபட்டு வருவதால் சிரியாவில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறம் ஈரான் இஸ்ரேலுடன் மோதிக்கொண்டு உள்ளது. ஆசாத்தின் இரண்டு கூட்டாளிகளும் திசைதிருப்பட்டிருக்கும் நிலையில் சிரியா எடுப்பார் கை பிள்ளையாக இருப்பது காத்திருந்த கிளர்ச்சியர்களுக்கு உறைத்துள்ளது
மேலும் முந்திய கிளர்ச்சியில் போராட்டக்காரர்களை ஒடுக்க ஆசாத்துக்கு முக்கிய உதவியாக இருந்த மற்றொரு அமைப்பு அண்டை நாடான லெபனானில் இயங்கி வந்த ஹசன் நஸ்ரல்லா தலைமையிலான ஹிஸ்புல்லா. ஆனால் தற்போது இஸ்ரேலுடனான மோதலில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டு பெரும் படைகளையும் ஹிஸ்புல்லா இழந்துள்ளது.
நவம்பர் 27 அன்று லெபனானில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் தங்களை சேதங்களில் இருந்து மீட்டுருவாக்கம் செய்து வரும் ஹிஸ்புல்லா இந்த முறை ஆசாத்துக்கு உதவி செய்யாமல் கை விரிந்துள்ளது.
ஊழல் - கொள்ளை
இதற்கிடையே சிரியாவிலும் உள்நாட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்டன. பெரிய அளவிலான ஊழல் மற்றும் அதிகாரிகளே கொள்ளையடித்த காரணத்தால் ராணுவ பீரங்கிகள் மற்றும் விமானங்களில் எரிபொருள் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குத் தகவல் வந்துள்ளது.
மேலும் பல சிரியர்கள் தங்கள் நாட்டு மக்களுடன் சண்டையிட விரும்பாததால் லெபனானுக்கு தப்பிச் சென்றதால் ராணுவ வீரர்கள் கையில் ஆயுதங்கள் இருந்தாலும் எந்த திசையிலும் இருந்து உதவி இல்லாமல் மன உறுதியை இழந்திருந்தது கிளர்ச்சியாளர்களுக்குச் சாதகமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
அல்-கோலானி
கிளர்ச்சிக் கூட்டணியின் முக்கிய தலைமையாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) அமைப்பு செயல்பட்டது. முந்தைய காலங்களில் அல்-கொய்தாவுடனான தொடர்பை பேணி வந்த அமைப்பே இந்த HTS .

அல்-கோலானி
இந்த அமைப்பின் தற்போதைய தலைவரான அபு முகமது அல்-கோலானி திட்டத்தின் பேரிலேயே கடந்த வாரம் இந்த முழு அளவிலான தாக்குதல் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் கோலானி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

HTS
துருக்கியின் கை
துருக்கி HTS ஐ விரும்பாத போதிலும் சிரியாவில் உருவான கிளர்ச்சியை ஆதரித்து வருகிறது. எனவே தற்போதைய நடவடிக்கையில் துருக்கியின் பங்கு உள்ளதாகவும் அரசியல் அரங்கில் அனுமானங்கள் எழுந்துள்ளன. ஆனால் துருக்கி வெளியுறவு துணை அமைச்சர் நுஹ் யில்மாஸ் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

குஷியில் இஸ்ரேல்
பஷர் அல் அசாத் ஆட்சியின் வீழ்ச்சியில் மற்றொரு வெற்றியாளர் இஸ்ரேல். சிரியாவில் ஆட்சி மாற்றம் ஈரான், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்களை வழங்கிய பாதையைத் தடுத்துள்ளது.
ஏற்கனவே பலவீனமான ஹிஸ்புல்லாவை இப்போது இஸ்ரேல் அதிக பலத்துடன் அழிக்க முடியும். கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய விமானப்படை போர் விமானங்கள் சிரியா முழுவதும் அபாயகர ஆயுதங்கள் இருக்கும் இலக்குகளை அழித்து அவை கிளர்ச்சியாளர்கள் வசம் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மற்றொரு புறம் ரஷிய ஆதரவு ஆசாத்தை ஒழித்துக்கட்ட மேற்கு நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஊக்கமளித்து உதவியதாகவும் அரசியல் அரங்கில் கருத்து நிலவுகிறது.
- கதவருகே அவன் முகத்தை வைத்து கண்களை மூடிக்கொண்டு அவனை பலாத்காரம் செய்யும்படி ஒரு பெரிய கைதியிடம் கேட்பார்கள்
- கைதிகளின் கண்ணியம் மற்றும் நம்பிக்கையை சுவடே இல்லாமல் அழிப்பதே இந்த சித்திரவதையின் நோக்கமாகும்.
சிரியாவில் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உள்நாட்டு போர் 13 வருடங்கள் கழித்து வெற்றி பெற்றுள்ளது. தலைநகர் டமாஸ்கஸ் - ஐ நேற்று கைபற்றிய கிளர்ச்சியாளர்கள் வெற்றியை அறிவித்துள்ளனர்.
ஆசாத் குடும்பத்துடன் ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா இதே போன்றதொரு முடிவை எட்டினார்.
ஷேக் ஹஸீனாவின் ரகசிய சிறைகளாக கண்ணாடிகளின் வீடு திகழ்ந்து வந்த நிலையில் அவற்றில் சித்திரவதை செய்யப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டனர். history repeats itself என்ற கூற்றுக்கு இணங்க தற்போது வீழ்ந்துள்ள சிரியாவின் ஆசாத் அரசும் வீழ்ந்துள்ளது.

மனித கசாப்பு முகாம்
டமாஸ்கஸ், ஹமா மற்றும் அலெப்போவிற்கு அருகிலுள்ள அரசாங்க சிறைகளில் பல ஆண்டுகளாக சித்திரவதைகளை அனுபவித்த கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுத்துள்ளனர்.
இந்த சிறைச்சாலைகளில், மிகவும் பிரபலமானது 'சைட்னயா' [sednaya]. இது வெகுஜனத்தால் "மனித கசாப்பு கூடம்" [ human slaughterhouse] என்று குறிப்பிடப்படுகிறது.
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகளுக்கான Syrian Observatory இன் 2021 அறிக்கையின்படி, சிறைகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தூக்கிலிடப்பட்டும் வேறு வழிகளில் உயிரிழந்தும் உள்ளனர்.
இதில் மனித கசாப்பு கூடம் என்று அறியப்படும் சைட்னயாவில் மட்டுமே 30,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

2011 ஆம் ஆண்டு முதல் சைட்னாயாவில் நடத்தப்பட்ட கொலை, சித்திரவதை, காணாமல் ஆக்கப்படுத்தல் ஆகியவை பொதுமக்களுக்குக் கட்டுக்குள் வைக்க ஆசாத் அரசு மேற்கொண்ட அடக்குமுறையின் ஒரு பகுதியாகவும் அரசின் கொள்கையாகவுமே இருந்தது என்றும் சைட்னாயாவில் நடந்தவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது.
சைட்னயா
சைட்னயா ராணுவ சிறைச்சாலையில் சிவப்பு நிற மற்றும் வெள்ளை நிறம் கொண்ட இரண்டு தடுப்பு மையங்கள் இருந்ததாக அம்னெஸ்டி அறிக்கை கூறுகிறதது.
2011 இல் கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து கைது செய்யப்பட்ட பொதுமக்கள் ஒரு சிவப்பு கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ராணுவத்தினர் வெள்ளை கட்டிடத்தில் சிறை வைக்கப்பட்டனர்.
சிவப்பு கட்டிடத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் ரகசிய மரணதண்டனையில் கொல்லப்பட்டதாக அறிக்கை கூறுகிறது
டமாஸ்கஸின் அல்-கபூன் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள இராணுவக் கள நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படும்
சிறை அதிகாரிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் நாளை 'பார்ட்டி' என்று குறிப்பிடுகின்றனர்.
பார்ட்டி
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் சிவப்பு கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு அறைக்கு கொண்டு வரப்படுவார்கள், அங்கு அவர்கள் நள்ளிரவில் இரண்டு அல்லது மூன்று மணிநேரங்களில் கடுமையாக தாக்கப்படுகிறார்கள்.
அதன்பின் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு டெலிவரி டிரக்குகள் அல்லது மினிபஸ்களில் வெள்ளை கட்டிடத்திற்கு மாற்றப்படுகிறார்கள். அங்கு அடித்தளத்தில் உள்ள ஒரு அறைக்குள் இறுதியில் அவர்கள் தூக்கிலிடப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கை விவரிக்கிறது
இது வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை நடக்கும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், 20 முதல் 50 பேர் வரை தூக்கிலிடப்படுகிறார்கள். இந்த செயல்முறை முழுவதும், பாதிக்கப்பட்டவர்கள் கண்கள் மூடப்பட்டிருக்கும். மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்று மட்டும் கூறப்படும்.

அவர்களின் மரணதண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்பது அவர்களுக்குத் தெரியாது. உடல்கள் ஒரு டிரக்கில் ஏற்றப்பட்டு, திஷ்ரீன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் புதைகுழிகளில் புதைக்கப்படுகின்றன
செப்டம்பர் 2011 முதல் டிசம்பர் 2015 வரை சைட்னாயாவில் 5,000 மற்றும் 13,000 பேர் சட்டத்திற்கு புறம்பாக தூக்கிலிடப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சைட்னாயாவில் மரணதண்டனை செயல்முறை இரகசியமானது மற்றும் நேரடியாக அதிகாரிகளுக்கும் சிரியாவின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரியும். சிவப்பு கட்டிடத்தில் அவர்கள் அடிக்கப்படுவதை பார்க்கும் சாதாரண சிறைக் காவலர்களுக்கு நள்ளிரவில் வெள்ளை கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு கைதிகளுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி தெரியாது.
சித்ரவதை
சைட்னயாவில் உள்ள சிவப்பு கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விதவிதமான சித்திரவதைகள் நடக்கின்றன. வழக்கமாக கடுமையான அடித்தல் மற்றும் பாலியல் வன்முறை மூலம் அவர்கள் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
அவர்களுக்கு போதுமான உணவு, தண்ணீர், மருந்து, மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை மறுக்கப்படுகின்றன, இது தொற்றுநோய் மற்றும் நோய் பரவுவதற்கு வழிவகுத்தது. சித்திரவதை செஷன்களின்போது அமைதி கடைப்பிடிக்கப்படுகிறது. பல கைதிகள் தீவிர மனநோய்களுக்கு ஆளாகின்றனர் .
அதிகபட்ச உடல் மற்றும் உளவியல் துன்பங்களை ஏற்படுத்தும் வகையில் சைட்னயாவின் சித்திரவதை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. கைதிகளை அவமானப்படுத்தி அவர்களின்கண்ணியம் மற்றும் நம்பிக்கையை சுவடே இல்லாமல் அழிப்பதே இந்த சித்திரவதையின் நோக்கமாகும்.

சைட்னயாவில் இருந்து வெளியே வந்த கைதிகள்
கைது செய்யப்பட்டபோது உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்த கைதி ஒருவர், சைடன்யாவில் தங்களுக்கு என்ன நடந்தது என எந்த கைதியும் கூற முன்வர மாட்டார்கள். அந்த அளவுக்கு அவமானகரான செயல்களை அவர்கள் சந்தித்துள்ளனர் என்று தெரிவிக்கிறார்.
காவலர்கள் , அனைவரையும் எங்கள் ஆடைகளை களைந்துவிட்டு ஒவ்வொருவராக குளியலறைக்குச் செல்லச் சொல்வார். நாங்கள் குளியலறைக்குச் செல்லும்போது, அவர்கள் ஒரு சிறிய வயது வாலிபனை தேர்ந்தெடுத்து அவனை கதவருகே நிற்கச் சொல்வார்கள்.
கதவருகே அவன் முகத்தை வைத்து கண்களை மூடிக்கொண்டு அவனை பலாத்காரம் செய்யும்படி ஒரு பெரிய கைதியிடம் கேட்பார்கள்.. இது தங்களுக்கு நடந்ததென்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஆனால் அது அடிக்கடி நடந்தது. மற்றும் இதை செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட கைதிகள் யாரும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்று அந்த கைதி கூறுகிறார்.
சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு மத்தியில், கிளர்ச்சிப் போராளிகள் சைட்னயா உள்ளிட்ட சிறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, கைதிகளை விடுவித்துள்ளனர். சைட்னாயாவிலிருந்து ஒருவர் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. கிளர்ச்சியாளர்கள் அவரது குடும்பத்தைப் பற்றி அவரிடம் கேட்கும்போது அவர் குழப்பமடைந்து பேசுவதற்கு சிரமப்படுவது பதிவாகி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளும் சிறையில் இருந்து வெளிவந்துள்ளனர்.
இதற்கிடையே ரஷியா தப்பிச் சென்ற ஆசாத்தின் அதிபர் மாளிகை சூறையாடப்பட்ட நிலையில் அங்குள்ள சுரங்கப்பாதை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
- சிரியாவின் கடலோரப் பகுதியை நோக்கிச் சென்ற விமானம் திடீரென யு-டர்ன் செய்துள்ளது
- ஆட்சி கவிழ்ப்பு மீண்டும் ஐஎஸ்ஐஎஸ் ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் என ஜேக் சல்லிவன் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற உள்நாட்டு போர்
2011 இல் ஒடுக்கப்பட்ட உள்நாட்டு போர் ஒரு வாரத்திற்கு முன் மீண்டும் புத்துயிர் பெற்றது. வடக்கு அலெப்போவை கடந்த வாரம் சனிக்கிழமை கிளர்ச்சியர்கள் கைப்பற்றினர். ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையில், பல கிளர்ச்சிப் குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் அசாத்தின் படைகள் திணறியதால் ஹமா, தாரா, ஹோம்ஸ் ஆகிய நகரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்தன. கடைசியாக இன்று தலைநகர் டமாஸ்கஸ் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படும் ரஷியாவின் கடற்படை விமான தளங்கள் அமைத்துள்ள கடலோர பகுதிகளுடன் டமாஸ்கஸ் தொடர்பை கிளர்ச்சியாளர்கள் துண்டித்துள்ளனர். அதிபர் ஆசாத் நாட்டை விட்டு விமானம் மூலம் தப்பியோடியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொல்லப்பட்டாரா அசாத்?
கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் கடந்த வாரம் தொடங்கியதில் இருந்து அசாத் பொதுவில் தோன்றவில்லை. சிரிய தலைவரின் மனைவி அஸ்மா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளும் எங்கு உள்ளார்கள் என்று தெரியவில்லை. இரண்டு மூத்த இராணுவ அதிகாரிகள், அசாத் டமாஸ்கஸில் இருந்து ஒரு விமானத்தில் ஏறி, ஒரு அறியப்படாத இடத்திற்குச் சென்றதாகக் கூறியுள்ளனர்
கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸைக் கைப்பற்றியதாகக் கூறப்படும் நேரத்தில், சிரியன் ஏர் விமானம் நகரின் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது என்று விமான கண்காணிப்பு சேவையான Flightradar24 தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் சிரியாவின் கடலோரப் பகுதியை நோக்கிச் சென்ற விமானம் திடீரென யு-டர்ன் செய்து எதிர் திசையில் பறந்து ரேடாரில் இருந்து மறைந்தது.

அதிபர் சென்ற விமானம் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் கிளம்பியுள்ளன. ரேடாரில் இருந்து மறைய ஒருவேளை டிரான்ஸ்பாண்டர் அணைக்கப்பட்டிருக்கலாம் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ரஷியா மற்றும் ஈரானுக்கு நெருக்கமாக இருந்த ஆசாத் மாஸ்கோ அல்லது தெஹ்ரானுக்கு சென்றிருக்கலாம் என்று ஒரு தரப்பு கூறுகிறது. இதற்கிடையே சிரியாவின் பிரதமர் முகமது காசி அல்-ஜலாலியை கிளர்ச்சி அமைப்பு ஹோட்டலில் சிறைவித்துள்ளது. பிரதமர் அலுவலகத்திலிருந்து ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலுக்கு அவர் அழைத்துச் செல்லப்படும் வீடியோ ஒன்று இதை உறுதிப்படுத்துகிறது.

ரஷியா சொல்வது என்ன?
சிரியாவின் அதிபர் பஷர் அல்-அசாத், அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, பதவியை விட்டு விலகியுள்ளார் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அசாத் இப்போது எங்கே இருக்கிறார் என்று அமைச்சகம் கூறவில்லை.
அவர் வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ரஷியா பங்கேற்கவில்லை என்றும் சிரியாவில் உள்ள ரஷ்யாவின் ராணுவ தளங்கள் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தற்போது அவர்களுக்கு கடுமையான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் மாஸ்கோ சிரியாவின் கிளர்ச்சிக் குழுக்களுடனும் தொடர்பில் இருப்பதாகவும், வன்முறையை கைவிடுமாறும் அனைத்து தரப்பினரையும் ரஷிய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா சொல்வது என்ன?
இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்தில் எழுதியுள்ள அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் டொனல்டு டிரம்ப், சிரியாவில் குழப்பம், ஆனால் அது எங்கள் நண்பன் அல்ல. அமெரிக்கா இதில் எதுவும் செய்யக்கூடாது. இது எங்கள் சண்டை அல்ல. நடப்பது நடக்கட்டும் [LET IT PLAY] என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே சிரியாவில் நடப்பதை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சிரியாவில் நடந்துள்ள இந்த ஆட்சி கவிழ்ப்பு அங்கு மீண்டும் ஐஎஸ்ஐஎஸ் [பயங்கரவாதிகள் அமைப்பின்] ஆதிக்கம் அதிகரிக்க வழிவகுக்கலாம் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
- 50 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டதால் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
- நாங்கள் இந்த நாளுக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறோம்
2011 இல் ஒடுக்கப்பட்ட உள்நாட்டு போர் ஒரு வாரத்திற்கு முன் மீண்டும் புத்துயிர் பெற்றது. வடக்கு அலெப்போவை கடந்த வாரம் சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையில், பல கிளர்ச்சிப் குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் ஆசாத்தின் படைகள் திணறியதால் ஹமா, தாரா, ஹோம்ஸ் ஆகிய நகரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ந்தன.
கடைசியாக இன்று தலைநகர் டமாஸ்கஸ் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படும் ரஷியாவின் கடற்படை விமான தளங்கள் அமைத்துள்ள கடலோர பகுதிகளுடன் டமாஸ்கஸ் தொடர்பைக் கிளர்ச்சியாளர்கள் துண்டித்துள்ளனர். அதிபர் ஆசாத் நாட்டை விட்டு விமானம் மூலம் தப்பியோடியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 50 ஆண்டுகளாக அவரது குடும்பமே சிரியாவில் ஆட்சியில் இருந்து வந்தது.
இந்நிலையில் டமாஸ்கஸ் உட்பட நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் திரண்டு 50 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டதால் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கிளர்ச்சியாளர்களுடன் மக்கள் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

கொடுங்கோலன் அசாத் வெளியேற்றப்பட்டதாக அறிவித்த கிளர்ச்சியாளர்கள், டமாஸ்கஸ் நகருக்கு நாங்கள் சுதந்திரத்தை அறிவிக்கிறோம் என்று முழங்கினர்.
இன்று அதிகாலை சூரிய உதயத்தின்போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கிளர்ச்சியாளர்கள் கொண்டாடும் படங்களை அந்நாட்டின் AFP டிவி வெளியிட்டுள்ளது.



டமாஸ்கஸ் அதிபர் மாளிகை கைவிடப்பட்ட நிலையில் மாளிகைக்குள் கிளர்ச்சியாளர்கள் சுற்றி வரும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
மாளிகையில் உள்ள அசாத்தின் தந்தை ஹபீஸின் சிலையை கிளர்ச்சியாளர்கள் இடித்துத் தள்ளினர். முன்னதாக இலங்கை மற்றும் வங்கதேசத்திலும் ஆட்சி கவிழ்ந்த பின் அதிபர் மாளிகை சூறையாடப்பட்டது ஒப்புநோக்கத்தக்கது.
AFP தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஒரு டமாஸ்கஸ் வாசி, "நான் இந்த தருணத்தில் வாழ்கிறேன் என்று என்னால் நம்ப முடியவில்லை என்று கண்ணீர் மல்க டமாஸ்கஸ் குடியிருப்பு வாசி தெரிவித்தார்.
நாங்கள் இந்த நாளுக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறோம், நாங்கள் சிரியாவிற்கு ஒரு புதிய வரலாற்றைத் தொடங்குகிறோம் என்று தெரிவித்தார்.
கடந்த வாரம் தாக்குதல் தொடங்கியதிலிருந்து, 111 பொதுமக்கள் உட்பட குறைந்தது 826 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையால் 370,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
- அதன்பின் நடந்த ரத்தக்களரியில் 500,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- தாரா மக்கள் நடத்திய போராட்டங்களில் போலீஸ் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுகிறது.
ஆசாத் ஆட்சியின் வீழ்ச்சி
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 50 ஆண்டுகளாக அவரது குடும்பமே சிரியாவில் ஆட்சியில் இருந்தது.
இதற்கிடையே அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார பிரச்சனைகள், சர்வாதிகாரப் போக்கு ஆகியவற்றை எதிர்த்து கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது. ரஷியாவின் உதவியுடன் அப்போது தனது ஆட்சியை ஆசாத் காப்பற்றிக்கொண்டார்.

அதிபர் பஷர் அல் ஆசாத்
உலக சக்தியான ரஷியாவின் உதவியுடன் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் அமைதியின்மை தொடரவே செய்தது. அதன் விளைவாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையில், பல கிளர்ச்சிப் குழுக்கள் முக்கிய நகரங்களையும் கடைசியாக டமாஸ்கஸ் உட்பட அலெப்போ, ஹமா, தாரா உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளனர். அதிபர் ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
'எஜாக் எல் டோர், யா டாக்டர்'
2011 ஆம் ஆண்டு சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஒரு இளைஞனின் 14 வயது பள்ளிச் சிறுவனின் புரட்சிகரமான செயல் நாட்டின் தலைவிதியையே மாற்றியமைத்துள்ளது.2011 சிரியா உள்நாட்டு போரின் பிறப்பிடமாக விளங்கும் தாரா நகரத்தில் இந்த கதை தொடங்குகிறது.
நாடு முழுவதும் மக்கள் மனதில் அடக்கி வைத்திருந்த எதிர்ப்பு சிறுவனின் கிராஃபிட்டி ஓவியமாக முதல் வடிவம் பெற்றது. தாரா நகரை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் மௌவியா சியாஸ்னே, அதிபர் ஆசாத் உடைய புகைப்படத்தைப் பள்ளி சுவரின் கிராஃபிட்டி ஓவியமாக வரைந்து அவரின் மருத்துவ பட்டத்தை குறிப்பிட்டும் வகையில் ['எஜாக் எல் டோர், யா டாக்டர்'] ['இது உங்களின் முறை டாக்டர்'] என்று எழுதுகிறான். இது உள்ளூர் காவல்துறையினரின் கண்ணில் படவே, மௌவியாவும் அவனது நண்பர்களும் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.

26 நாட்கள்
ஆசாத்தின் முகபாரத் [ரகசிய போலீஸ்] அவர்களைக் காவலில் வைத்து 26 நாட்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்துகிறார்கள். தாரா மக்கள் மத்தியில் இந்த செய்தி காட்டுதீ போல் பரவி கோபத்தை ஏற்படுத்துகிறது. சிறுவர்களை விடுதலை செய்யவேண்டி அவர்களின் பெற்றோர்களும், தாரா மக்கள் பலரும் நடத்திய போராட்டங்களில் போலீஸ் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுகிறது.
26 நாட்கள் சித்திரவதைக்குப் பின்னர் விடுதலையான சிறுவர்களின் படங்கள் சிரியா முழுவதும் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. தாராவில் மட்டுமின்றி சிரியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மார்ச் 15, 2011 சிரியா முழுவதும் "எதிர்ப்பு தினம்" அனுசரிக்கப்படுகிறது. இது பின்னர் நாடு தழுவிய இயக்கமாக மாறுகிறது. அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

கிளர்ச்சி > போராட்டம்
எதிர்த்து பேசுவோரைச் சிறையில் அடைத்தனர் அவ்வாறு அடைக்கப்பட்ட எண்ணற்றோரைச் சித்திரவதைக்கு உட்படுத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் ஆயுதங்களை ஏந்தி கிளர்ச்சியாளர்களாக மாறுகின்றனர்.
அதன்பின் நடந்த ரத்தக்களரியில் 500,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 13 மில்லியனுக்கும் அதிகமான சிரியர்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.
ரஷியாவின் உதவியால் அப்போது தப்பிய ஆசாத் ஆட்சி தற்போது கடந்த வாரம் திடீரென புத்துயிர் பெற்ற கிளர்ச்சியால் ஒரே வாரத்தில் வீழ்ந்துள்ளது. இதனால் நேற்று வரை கிளர்த்தியாளர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் இனி ஆட்சியாளர்கள் என்று குறிப்பிடப்படுவார்கள்.

- ஆசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கிளர்ச்சியாளர்கள் சூளுரை.
- துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாக தெரிவித்தனர்.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆன் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்தது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கினர்.
ஆசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் இன்று காலை, சிரியா தலைநகர் டமாஸ்கஸ்-க்குள் நுழைந்ததை பகிரங்கமாக அறிவித்தனர். தலைநகரில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் முழுவதும் கிளர்ச்சியாளர்கள் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதன் மூலம் ஆசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி சிரியாவில் முடிவுக்கு வந்தது. கிளர்ச்சியாளர்கள் குழு டமாஸ்கஸ்-ஐ நுழைந்ததை அடுத்து பஷார் அல் ஆசாத் நாட்டை விட்டு விமானத்தில் தப்பியோடி விட்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும், அவர் எங்கு சென்றுள்ளார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
சிரிய அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் தூக்கி எறியப்பட்ட நிலையில், அந்நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை சிரிய அரசு தொலைக்காட்சி மூலம் கிளர்ச்சியாளர்கள் குழு வீடியோ வெளியிட்டு அறிக்கை ஒன்றை ஒளிபரப்பியது.
இந்த அறிக்கையை படித்த நபர், டமாஸ்கஸ்-ஐ ஆசாத்-இடம் இருந்து விடுவிக்கப்பட்டதை நாங்கள் அறிவிக்கிறோம். உலகம் முழுக்க இடம்பெயர்ந்த மக்களே, சுதந்திர சிரியா உங்களுக்காக காத்திருக்கிறது, என்று தெரிவித்தார்.

கடந்த பத்து நாட்களுக்குள் சிரியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்ட கிளர்ச்சியாளர் குழு இன்று காலை தலைநகர் டமாஸ்கஸ்-ஐ கைப்பற்றிய நிலையில், சிரியா அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். இதனை சிரிய பிரதமர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து தொடர்ந்து பேசிய சிரிய பிரதமர் முகமது காசி ஜலாலி, "அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு தன் கையை நீட்ட தயாராக இருக்கிறது. அரசு தன் செயல்பாடுகளை இடைநிலை அரசாங்கத்திற்கு மாற்றவும் தயாராக இருக்கிறது. நான் என் வீட்டில் இருக்கிறேன், நான் வெளியேறவில்லை. இதற்குக் காரணம் நான் இந்த நாட்டை சேர்ந்தவன்." ," என்று கூறினார்.
மேலும், பணியை தொடர தனது அலுவலகத்திற்கு செல்வதாக கூறிய அவர், பொது சொத்துக்களை சிதைக்க வேண்டாம் என்று சிரிய குடிமக்களுக்கு கோரிக்கை விடுத்தார். ஆசாத் தப்பியோடினாரா என்பது பற்றி தகவல்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
சிரியாவில் பஷார் அல் ஆசாத்-இன் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து டமாஸ்கஸ் நகரில் பொது மக்கள் வெளியே வந்து மசூதிகளில் பிரார்த்தனை செய்தும், சதுரங்களில் கொண்டாடவும் செய்தனர். இதோடு "கடவுள் பெரியவர்" என்றும் பஷார் அல் ஆசாத் எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.
சிலர் தங்களது காரின் ஹாரன்களை ஒலித்தனர். சில பகுதிகளில், கொண்டாட்டத்தின் அங்கமாக துப்பாக்கி குண்டுகளும் முழங்கின.
- சிரியாவை விட்டு வெளியேறியதாக தகவல்.
- பஷார் ஆசாத் விமானத்தில் புறப்பட்டதாக ரமி அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
சிரிய அதிபர் பஷார் ஆசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக சிரிய எதிர்க்கட்சி போர் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். சிரிய தலைநகருக்குள் நுழைய தொடங்கியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்த நிலையில், அதிபர் பஷார் ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை டமாஸ்கஸ்-இல் இருந்து பஷார் ஆசாத் விமானத்தில் புறப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் ரமி அப்துர் ரஹ்மான் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சிரிய கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ்-க்குள் நுழைந்துவிட்டதாக கூறியதைத் தொடர்ந்து அப்துர் ரஹ்மானின் கருத்துக்கள் வெளியாகி உள்ளன. தலைநகரில் வசிப்பவர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பு சத்தங்களை கேட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிரிய அரசாங்கத்திடம் இருந்து இதுவரை அறிவிப்பு எதுவும் இல்லை.






