search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "agricultural workers"

    • வீட்டுத்தோட்ட பயிர் விதைகள் மற்றும் எளிய பண்ணை கருவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
    • காய்கறி, கீரை, பழங்கள் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்ப டுத்தும் நோக்கத்துடன் கேரளா மாநிலம் திருச்சூரில் அமைந்துள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக தாவர மரபணு மண்டல நிலையத்தின் சார்பாக வீட்டுத்தோட்ட பயிர் விதைகள் மற்றும் எளிய பண்ணை கருவிகள் வழங்கும் முகாம் நடை பெற்றது.

    இம்முகாமில் முதன்மை விஞ்ஞானி மற்றும் தலை வர் கே.பிரதீப் முன்னிலை வகித்து அழிய கூடிய தாவரங்களை பாதுகாத்தல் மற்றும் தேசிய மரபணு வங்கி குறித்து தெரிவித்தார். ஈரோடு மாவட்ட விதைச்சா ன்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம் கலந்து கொண்டு அங்ககச்சான்றின் முக்கிய த்துவம் மற்றும் வீட்டுத் தோட்ட காய்கறி பயிரிடும் முறைகள், பயிர் மேலா ண்மை மற்றும் பாதுகாப்பு முறைகள், நச்சு இல்லாத காய்கறி, கீரை, பழங்கள் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

    மேலும் முதன்மை விஞ்ஞானி லதா பராம்ப ரியமிக்க விதைகளை சேகரித்தல் மற்றும் சேமித்தல் குறித்து தெரிவி த்தார். இப்பயிற்சியில் திருமலைசாமி, வெங்க டேசன், பெருந்துறை விதைச்சான்று அலுவலர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இம்முகாமில் 110 விவ சாயம் மற்றும் விவ சாயம் சார்ந்த தொழிலாளர்க ளுக்கு காய்கறி விதைகள், பழச்செடி, கீரை விதைகள், கடப்பாரை, மண்வெட்டி, கொத்து மற்றும் ரப்பர் கூடை வழங்கப்பட்டது. முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேலு மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் ராதா மாரியப்பன் ஆகியோர் நன்றி கூறினர்.

    வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் குழந்தான் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். 

     வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிக்கும் உரிமையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். பேரூராட்சி மற்றும் நகராட்சிகளிலும் திட்டப் பணிகளை செயல்படுத்த மத்திய அரசு சட்ட திருத்தம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். 

    இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலர் தனசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலர் தம்பிராஜா உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
    ×