விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பாகூரில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
Published on

புதுச்சேரி:

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாகூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். கொம்யூன் செயலாளர் ஹரிதாஸ் முன்னிலை வகித்தார். தமிழ் மாநில துணைத்தலைவர் சுப்பிரமணி, புதுவை பிரதேச செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

பிரதேச பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கொம்யூன் செயலாளர் சரவணன், முத்துலிங்கம், செல்வராசு, முருகையன், வளர்மதி, கிளை கமிட்டி உறுப்பினர்கள் சாம்பசிவம், தனுசு, சக்திவேல், பூங்கா வனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஆண்டிற்கு ரூ.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். 200 நாட்கள் வேலையும் சம்பளமாக நாளொன்றுக்கு 600 ரூபாய் வழங்க வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. முன்னதாக பாகூர் சிவன் கோவில் அருகில் இருந்து ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com